Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3061
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46793
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/01/25 in Posts

  1. ஐபிஎல் 2025 இன் 13வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், நிக்கொலஸ் பூரனையும் அயூஷ் படோனியையும் தவிர எவரும் 40 க்கு மேல் ஓட்டங்கள் எடுக்காததாலும், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது. பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது. இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள். பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள். http www. Lusan .com.
  3. "புதிய ஆரம்பம்" யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர். அப்படியான சூழல் காலம் செல்லச் செல்ல மாற்றம் அடைந்து கொண்டு வந்தது. என்றாலும் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளைச் செய்வதும் தொடர்கிறது. இந்த யாழ்ப்பாண சூழலில் தான், நெல் வயல்களின் அமைதிக்கும் பனை மரங்களின் ஓசைகளுக்கும் மத்தியில் காவியா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த காவியாவின் நாட்கள், வாழ்வதற்கான போராட்டத்தால் நிரம்பி நிறைந்தது. அவளது பெற்றோர் முழு நேரம் வயல்களில் உழைத்தும் சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டினார்கள், அதே சமயம் காவியா தங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னேற்ற வாழ்க்கையைக் கனவு கண்டாள். அது தனக்கும் தன் சமூகத்துக்கும் ஒரு 'புதிய ஆரம்பம்' தரும் என்று திடமாக நம்பினாள். பாகுபாடு மற்றும் கஷ்டங்களை தன் சமூகமும், தன் குடும்பமும் எதிர்கொண்ட போதிலும், காவியா அந்த தலைவிதியை மாற்றுவதற்கான கடுமையான உறுதியுடன் இருந்தாள். அதற்கு கல்வியே அவளுடைய நம்பிக்கையின் விளக்காக இருந்தது. "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கல்வியின் முன்னுரிமை பற்றி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 'நான்கு பிரிவுகளில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்' என்ற பொன்னான வாசகம் அவள் மனதில் ஒரு தெம்பைக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, "மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு" என்ற திருவள்ளுவரின் 'உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்கா விட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்ற வரை விட ஒருபடி தாழ்வே' என்ற அறிவுரை அவளை மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும், அவள் தனது கிராம பள்ளியை அடைய தூசி நிறைந்த மண் பாதைகளில் வெறுங்காலுடன் நடந்தாள். அவளுடைய அறிவுப் பசி மற்றும் அவளுடைய அர்ப்பணிப்பு இவைகளைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தனக்கு கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தாள். அவள் மனதில் பதிந்த, எப்படியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற அவா, அவளுக்குள் ஏற்படுத்திய தைரியம், வெற்றியின் கதைகளை திறந்து அவளது அபிலாஷைகளைத் தூண்டத் துணையாகத் நின்றது. "காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” 2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறிய 'சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம்' பொதுவுடமைக் கருத்தை அவள் முணுமுணுக்காத நாள் ஒன்றும் இல்லை. ஒரு நாள், காவியாவின் திறனை உணர்ந்த, ஒரு நல்ல உள்ளம் கொண்ட அவளின் வகுப்பு ஆசிரியை, அவள் மேல் விசேட கவனம் செலுத்த தொடங்கினார். இந்த ஆசிரியையின் வழிகாட்டலாலும் அவர் கொடுத்த ஊக்கத்தாலும், காவியா தனது படிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மிகவும் சிறந்து விளங்கினாள். அதனால் அவளது கல்வித் திறமை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பயணச் சீட்டாக அமைந்தது. தளராத உறுதியுடன் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, காவியா கொழும்பில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவுக்கு, முழு உதவித்தொகையைப் பெற்று படிக்கச் சென்றாள். தன் கிராமத்தையும், தன் வீட்டின் பரிச்சயத்தையும் விட்டுவிட்டு, இந்தப் புதிய அத்தியாயத்தை கொஞ்சம் நடுக்கத்துடனும், ஆனால் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொண்டாள். பல்கலைக்கழக வாழ்க்கையில் பல சவால்கள் அங்கும் சந்திக்க நேரிட்டாலும் காவியா, அவ்வற்றை எல்லாம் தாண்டி, அவள் இதயத்தில், நெடுஞ்செழியன், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் விதைத்த விதைகளின் வேர்களில் இருந்து வலிமையைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் விரைவில் அவளது பேராசிரியர்கள் மற்றும் சகாக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. "புதிய ஆரம்பம்" ஒன்று அவளைக் மறைத்துக் கொண்டு இருந்த சாதி என்ற முகில்களைக் கிழித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தது. என்றாலும் பொன்னம்பலம் இராமநாதன், செல்லப்பா சுந்தரலிங்கம் போன்ற படித்த தலைவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களை அவள் மறக்கவில்லை. எனவே தனது புதிய ஆரம்பத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக தந்திரமாக எடுத்து வைத்தாள். ஆகவே தன்னைத் திடப்படுத்தவும், தன்னை சூழ்ந்து இருப்பவர்களை தயார் படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், காவியா சமூக செயல்பாட்டின் மீதான தனது ஆர்வத்தை தனக்குள் பெருக்கினாள். எனவே ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். இது இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு வரை சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளின் தடைகளைத் தாண்டிப் பரவி, பலரைத் அது தூண்டியது. உயர்தரத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, காவியா ஒரு புதிய நோக்கத்துடன் தனது யாழ்ப்பாணத்துக்கு திரும்பினாள். அவள் தனது கடமை நேரம் தவிர, நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு பயிற்சி கல்லூரி நிறுவி, அந்த குழந்தைகளுக்கு மேல் அதிகமான கற்றலுக்கான உதவி வழங்கி, அவர்களின் அறியாமையின் சங்கிலிகளை உடைத்து அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோலை வழங்கும் 'புதிய ஆரம்பத்தை' ஏற்படுத்தினாள். இது, இந்த அவளுடைய கதை யாழ்ப்பாணத்தின் குடாநாட்டில் மட்டும் இன்றி, இலங்கை முழுவதும் எதிரொலித்து, எண்ணற்ற இளம் உள்ளங்களின் இதயங்களில் நம்பிக்கையின் தீப்பொறிகளைப் பற்றவைத்தது. காவியாவின் விடாமுயற்சி மற்றும் வெற்றியின் கதை சமூக மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாறி, "புதிய ஆரம்பம்" இலங்கையில், குறிப்பாக தமிழர் சமூகத்தில் தோன்றியது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது "புதிய ஆரம்பம்" மட்டுமே!. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. 🤣............... எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கேள்வி மனதுக்குள் இருந்தது, அண்ணா............ அதை எப்படி வெளியால் கேட்பது என்று கொஞ்சம் சங்கோஜமாகவும் இருந்தது............. கோஷான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன் என்றும் சொல்லியிருந்தார்.............🤣.
  5. ஆறு நாம் லண்டன் வந்து ஒரு வாரம் வரையில் அவர்கள் வீட்டில் இருக்க வரவில்லை. அவர்களைக் கூட்டிவந்தவரிடம் கேட்டால் அவர்கள் சுண்ணாகத்தில் சகோதரி வீட்டில் இருந்தார்களாம். அடுத்த கிழமை வருவார்கள் என்கிறார். வீட்டில் ஆட்கள் இருக்கவேண்டும் என்றுதானே வாடகைக்குக் குடுத்தது. இதென்னடா இவர்கள் என்கிறேன். எல்லாத்துக்கும் நுணுக்கம் பாக்காதை. அவர்கள் வருவார்கள்தானே என்று மனிசன் வக்காலத்து வாங்குகிறார். இரண்டு வாரங்கள் செல்ல எல்லோரும் பொருட்களையும் லாண்ட் மாஸ்டரில் கொண்டுவந்து வந்து இறங்குகிறார்கள். ஒரு ஓட்டோவும் நிற்க உங்கள் கணவர் ஓட்டோ ஓடுபவரோ என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்லை. எமது தேவைக்காக வைத்திருக்கிறோம் என்கிறார். அதன்பின் ஒரு மாதம் எந்தப் பிரச்சனையும் இன்றிப் போகிறது. அதன்பின் ஒருவாரம் மீண்டும் ஒருவரையும் காணவில்லை. தொலைபேசியில் மகளை அழைத்தால் வெப்பம் காரணமாக விடுமுறையில் கண்டி, நுவரெலியா சென்றிருக்கிறார்களாம். நீ வாடகைக்குக் கொடுத்தால் அவர்கள் ஒரு இடமும் போகக் கூடாதா என்கிறார் கணவர். தாய் சுண்ணாகத்தில் ஒரு கடையில் வேலை செய்வதாகவும் மகளும் கணவனும் இல்லாதபடியால் இங்கு தனிய இருக்கப் பயந்து மீண்டும் தமக்கை வீட்டில் போய் இருக்கிறாராம். மகளும் கணவனும் வந்தபின் மீண்டும் என் வீட்டில் வந்து இருப்பார் என்கிறார் அவர்களை அழைத்து வந்தவர். மீண்டும் இரு வாரங்களில் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. பின் ஒரு மாதத்தின் பின்னர் தாயும் மகனும் மட்டும் இருக்க மகளையும் கணவரையும் ஓட்டோவையும் காணவில்லை. மக்களுக்குப் போன் செய்தால் போன் போகவில்லை. அவர் என் இலக்கத்தை புளொக் செய்துவிட்டாரோ என எண்ணி அவரின் தொலைபேசி இலக்கத்தை மச்சாளிடம் கொடுத்து போன் செய்து பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் சிம்மை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மச்சாள். அவர்களைக் கூட்டி வந்தவருக்கு போன் செய்து தாயின் தொலைபேசி இலக்கத்தை வாங்கித் தரும்படி கேட்க அவவுக்கு தொலைபேசி இல்லையாம் என்கிறார். இரண்டு வாரங்களில் தாயையும் சின்ன மகனையும் கூடக் காணவில்லை. மீண்டும் கூட்டி வந்தவருக்கே போன் செய்து என்ன பிரச்சனை என்கிறேன். மருமகன் மகளுக்கு அடித்ததில் மாமியார் ஏசிவிட்டாராம். மருமகன் கோபித்துக்கொண்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு வேறு வீடு சென்றுவிட்டாராம் என்று கூற, என்னடா தலைவலி மீண்டும் என்று யோசனை அதிகரிக்கிறது. கடைசி வீடும் வளவும் மிச்சம் இருக்கும்தானே. கவலைப்படாதை என்று சிரிக்கிறார் மனிசன். ஊரிலிருந்து வந்து இப்ப நான்கு மாதங்கள்தான். உடனே திரும்ப போவது செலவு. நடப்பது நடக்கட்டும். கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன். சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார். இருந்தாற்போல் தொலைபேசி அழைப்புக் கேட்க, வந்தவர்கள் யாரினதோ போன் என நான் நினைக்க, அம்மா உங்களுக்கு போன் என்று கத்தியபடி பொடியன் தாயிடம் போனைக் கொண்டுவந்து கொடுக்கிறார். கொஞ்சம் வயசானவர் போலிருந்த ஒருவர் “இந்த நல்ல வீட்டில இருக்க உங்களுக்கு வருத்துது” என்று கூறுகிறார். நல்ல கறிவேப்பிலை என்று மரத்தை மேலால் முறித்துக்கொண்டு ஒருவர் வர மற்றவர் ஒரு கட்டு வேப்பிலையை வெட்டிக்கொண்டு வந்து தன் மோட்டார் சயிக்கிளில் வைத்துக்கட்ட வீட்டின் மற்றப் பக்கத்தில் ஒரு ஐம்பது தேங்காய்களாவது உரித்த தென்னம் பொச்சுகள் குவிக்கப்பட்டிருக்கு. உடனே நான் வீடு எடுத்துத் தந்தவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி அவர்களை இனி இருக்கவிட முடியாது. அவர்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லச் சொல்லுங்கள் என்கிறேன். ஒரு வாரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல, கொஞ்சம் தள்ளி இருக்கும் ரதி அக்கா என்று சொன்னேன் தானே. அவர் போன் செய்கிறார். “என்ன நிவேதா உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எழும்பிவிட்டார்கள் போலிருக்கே” “எப்பிடித் தெரியும் அக்கா” “நான் உங்கள் வீட்டடியால் போகேக்குள்ள லாண்ட் மாஸ்டரில் சாமான்கள் ஏத்தினபடி போச்சினம்” “ஓமக்கா அது பெரிய பிரச்சனை. வீட்டில இருக்காமல் தேங்காய் பிலாக்காய் மட்டும் ஆய்ந்தால் .......... “அப்ப இனி ஆரை இருத்தப்போறியள்” “அதுதான் அக்கா என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இரண்டு பேரிட்டைச் சொல்லியிருக்கிறன். நீங்களும் ஆரன் இருந்தால் சொல்லுங்கோ” “நான் ஆரையன் கேட்டுப் பாக்கிறன். திறப்பு இப்ப ஆரிட்டை இருக்கு? “அந்தச் சனத்தைக் கூட்டிவந்த எங்கடை ஊர் பெடியன் தான் மச்சாளிட்டைக் குடுத்துவிட்டிருக்கு” “நீங்கள் எப்ப வாறியள்? “இப்ப உடனே வேலையில லீவு சொல்லிவிட்டு வரமுடியாதக்கா. ஐந்து மாதத்துக்கு முன்னம்தானே வந்தது” “ஒரு இரண்டு மாதம் வேணுமென்டால் நான் அப்பப்ப எட்டிப் பாக்கிறன்.அதுக்குள்ள நீங்கள் வரப்பாருக்கோ. ஆரன் நல்லவை அம்பிட்டால் உங்களுக்குச் சொல்லுறன்” “மிக்க நன்றி அக்கா. அப்ப அந்தத் தம்பியை திறப்பைக் கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கச் சொல்லுறன்” எனக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி. தானே உதவுவதாகக் கூறுகிறார் என்கிறேன் மனிசனிடம். ஆரும் சும்மா வந்து மற்றவைக்கு உதவ முன்வரமாட்டினம். அதுவும் சிலோனில. ஏதோ திட்டத்தோடதான் ரதி அக்கா தான் பாக்கிறன் எண்டு சொல்லுறா என்கிறார் மனிசன். உங்களுக்கு எப்பவும் சந்தேகம்தான். யேர்மனியில இருக்கிற அவவின் சொந்தக்காரர் எல்லாம் நல்ல சனங்கள் தானே. அவ என்ன காணியைத் தன்ர பெயரில மாத்தி எழுதவா போறா? சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேறை வழி இல்லை இப்ப. பேசாமல் இருங்கோ என்கிறேன். ஏதோ நீயும் அவையும் பட்டபாடு என்று சொன்னதோடு அவர் எதுவும் கதைக்கவில்லை. அந்த எலெக்ரீசியன் தம்பியை திறப்பை மச்சாளிடம் வாங்கிவந்து கொடுக்கமுடியுமா என்று கேட்க, சம்மதிக்கிறார். மச்சாளிடம் ஒரு வெளிக் கதவுச் சாவியும் பட அறைச் சாவியையும் மட்டும் கொடுக்கும்படி கூறுகிறேன். அதன்பின் கமராவில் அப்பப்ப பார்ப்பதும் அக்காவுடன் வைபரில் கதைப்பதுவுமாகப் போகிறது. ஒருநாள் அக்காவின் கணவர் சென்று பார்த்துவிட்டு எல்லாக் கன்றுகளுக்கும் தண்ணீர் போகவில்லை என்கிறார். அடுத்த நாளே சொட்டுநீர் பாசனம் செய்தவருக்கு போன் செய்ய, தான் நாளை சென்று பார்க்கிறன் என்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு என்னக்கா இது சில லைனை கழற்றி வீட்டிருக்கு. சிலதை பூட்டி வீட்டிருக்கு. ஆரும் சின்னப் பெடியள் வீட்டில இருந்தவையோ என்று கேட்கிறார். நான் ஓம் என்கிறேன். அவர்தான் கழட்டிப் பூட்டி விளையாடியிருக்கிறார். மீண்டும் அவர் இரண்டு மணிநேரம் நின்று எல்லாவற்றையும் சரி செய்கிறார். ஒரு வாரம் செல்ல ரதி அக்கா போன் செய்கிறார். “நிவேதா ஒரு எனக்குத் தெரிந்த பெடியன் இருக்கிறார். அவரைக் கேட்டனான். அவர் வீடு வந்து பாக்கிறன் எண்டவர்” “தனிப் பெடியன் எண்டா பிரச்சனை அக்கா. அந்தப் பெடியன் வேலைக்குப் போறவரோ” “ஓம் ஒரு பால் கொம்பனியில வேலை செய்யிறவர்” “அவருக்கு வீடு வாசல் இல்லையோ” “சிறிய தாயோடைதான் இருக்கிறார், மற்றச் சகோதரங்களோட பிரச்சனை. அதுதான் உங்கட வீட்டை இருக்க ஓம் என்டிறார். நீங்கள் பயப்பிடாதைங்கோ. நான் பாத்துக்கொள்ளுறன். ஆள் முதல் வந்து இருக்கட்டும். நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு ஓகே எண்டால் தொடர்ந்து இருக்கட்டும்” “அவரின் போன் நம்பரை போட்டுவிடுங்கோ அக்கா” “அவருக்கு ஸ்மாட் போன் இல்லை. மற்ற போன் தான் இருக்கு” இந்தக் காலத்தில ஸ்மாட் போன் இல்லாத பெடியனா? நம்பவே முடியேல்லை அக்கா” “நீங்கள் வரேக்கை ஒண்டைக் கொண்டுவந்து குடுங்கோவன்” “உதெல்லாம் சரிவராதக்கா” நானே ஐந்து ஆண்டுகளா ஒரு போனை வச்சிருக்கிறன்” “சரி நீங்கள் முதல் வாங்கோவன்” சரி அக்கா என்கிறன். இரண்டு வாரங்கள் அந்தப் பெடி ஸ்கூட்டியில் வருவதும் போவதுமாக இருக்க, ஒருநாள் பார்த்தால் நான் வாங்கி வைத்த 25 மீட்டர் கோஸ் பைப்பை எடுத்து வீட்டு கேற்றடியில் கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, அவரின் இலக்கத்துக்கு போன் செய்தால் போன் றிங் போனாலும் அவர் எடுக்கவில்லை. பின்னர் ரதி அக்காவுக்கு போன் செய்து சொட்டுநீர் பாசனம் செய்திருக்கு. பிறகு எதுக்கு உந்தப் பெடியன் பைப்பைப் பிடித்துத் தண்ணீர் விடுகிறார் என்று கேட்க, தான் அவனுக்குச் சொல்லுறன் என்கிறா அக்கா. இனிமேல் பைப் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ என்கிறேன். அடுத்த வாரம் பார்த்தால் எம் வளவில் இரண்டு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க, பார்த்த எனக்குப் பகீர் என்கிறது. உடனே ரதி அக்காவுக்குப் போன் செய்ய, அவர் இரண்டு மாடுகள் வளர்க்கிறார். அதுதான் கொண்டுவந்து கட்டியிருக்கிறார் என்கிறா. அக்கா என்னைக் கேட்காமல் எதுக்கு வளவிலை மாடுகளைக் காட்டச் சொன்னீர்கள்? எனக்கு கன்றுகள் முக்கியம். பார்த்துப் பார்த்துக் கன்றுகளை நட்டிருக்கிறன். உடனடியா மாடுகளை வெளியேற்றச் சொல்லுங்கோ என்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ மாடுகளை எங்கள் வளவில கொண்டுவந்து கட்டச் சொல்லுறன் என்கிறா. அடுத்த நாளில் இருந்து மாடுகளைக் காணவில்லை ஆயினும் உவர் என் வளவுக்கு ஏற்ற ஆள் இல்லை என்று மனம் அடித்துக் கூற, வேறு வழியில்லை. நாம் ஊருக்குப் போகத்தான் வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர். வேலை செய்யும் இடத்திலும் எனக்குப் பதிலாக வேலை செய்ய ஒருவரும் இல்லை என்று முதலாளி மறுக்க வேறு வழியின்றி யோசனையுடன் இரண்டு மாதங்கள் ஓடிப்போக, இனி நீர் விடுமுறையில் செல்வதனால் செல்லலாம் என்கிறார் முதலாளி.
  6. இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும். இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது. மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும். என்ன கொடுமை சரவணா? இப்படி பல சைக்கோ. சுத்தம் என்ற பெயரில் கணவன் மனைவியை கொடுமைப் படுத்துவதும் மனைவி கணவனை கொடுமைப் படுத்துவதும் கெளரவமாக நடக்கிறது. இதற்குள் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். முறைப்பாடுகளை செய்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்.
  7. இந்த திரியில் பல சாத்தான்கள் வேதம் ஓதி இருக்கின்றன .... இங்கு யாழ்களத்தில் கருத்து எழுதும் சக கருத்தாளர்களை மிக கேவலமான முறையில் வசைபாடியும் தாங்கள் அறிவு மிகுந்தவர்கள் மற்றவர்கள் யாபேரும் அறிவற்றவர்கள் என்ற தொனியிலும் ஒரு ஆதிக்க வெறியில் மிதந்தவர்கள் ....... யாழ் பல்கலைகழகத்தில் தங்கள் சகோதரனுக்கு புத்தி கூறுகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பதோ .... ஆதிக்க சிந்தனை என்பதோ ... அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் அடிப்படை எண்ணமோ திடீரெனெ யாருக்கும் வருவதில்லை. அவை எல்லாம் உள்ளேயே இருக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தலை கவசத்தை தூக்கி சொந்த முகத்தை காட்டி விடுகிறார்கள் அவ்வளவுதான். அவ்வளவு நாகரீமான பண்பான சமூக யாழ்பாணத்து மக்கள் இருந்து இருப்பின் அவ்வளவு சாதி கொடுமைகளும் எப்படி அரங்கேறின? இதே யாழ் பல்கலைக்கு பல தடைகளை தாண்டி தகுதி பெற்று வந்த கீழ்சாதி மாணவர்கள் (குறிப்பாக மாணவிகள்) வாடகைக்கு வாசித்த வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு ... சக மாணவர்களின் சொல்லாடல்கள் மன அழுத்தம் கொண்டு இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு சென்று இருகிறார்கள். இன்றுகாலைதான் "புதிய ஆரம்பம்" என்று கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்கள் எழுதி இந்த யாழ்களத்தில் பதிந்த கதையை வாசித்தேன். பல நினைவுகள் எனக்கு அதை வாசிக்கும்போது வந்து சென்றது அந்த கதையின் கீழ் ஒரு நிகழ்வை எழுதவேண்டும் என்று இருந்தேன் ... இப்போ இந்த திரி கண்ணில் பட்ட்து. குதிரை வேகத்தில் வந்திறங்கிய சாத்தான்களை பார்த்ததும் எனக்கு எந்த வியப்பும் இல்லை அவர்கள் ஆதி முதல் அந்தம் வரை என்னால் புரிய முடியும் என்பதால். இதை பல்கலைக்கழகத்தில் சரி செய்தால் பகிடிவத்தைத்தான் முடியும். அது ஒரு தீர்வாகி விடும் என்று இங்கு பலரும் எண்ணுகிறார்கள். அனால் இந்த பகிடிவதையோ ஆதிக்க எண்ணமோ முடியபோவிதில்லை.... அது வேலை தளம் வரை நீளும் இவர்களே பின்பு ஆசிரியர்கள் மருத்துவர்கள் கிராம அபிவிருத்தி அதிகாரிகளாக வருவார்கள் இப்போ இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தலைக்கவசம் கம்பு தடிகள்தான் ... பின்பு அதிகாரம் பதவி போன்ற பெரும் ஆயுதங்கள் சிக்கிக்கொள்ளும். அப்போது இவர்களிடம் சிக்கிப்போகும் சக பணியாளர்கள் மக்கள் நோயாளிகள் பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்? நிறைய எழுதலாம் .......... இவை எல்லாம் யாழ் களத்தில் தங்குமா என்று தெரியவில்லை. குறித்த நிர்வாகத்தினர் கண்ணில் பட்ட்தும் நீக்கப்பட்டு விடும் என்றே எண்ணுகிறேன். இவற்றை நாம் எழுதமுடியாது ... சமரசம் பற்றி வேதம் பற்றி எழுதுவது என்றாலும் அது சாத்தான்களுக்கான உரிமையே!
  8. சித்தசுவாதீனம் இழப்பவர்கள் தங்களின் பின்பக்க சட்டையை தாங்களே கிழிப்பார்கள், முன்பக்க சட்டை முழுதாக இருக்கும்.............. அதனால் முன்னால் மட்டும் பார்க்கும் மற்றவர்களுக்கு பிரச்சனையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்........ முதன்முதலாக முன்பக்கத்தையும், பின்பக்கத்தையும் கிழித்துக் கொண்டு தெளிவாக நிற்கின்றார் ஒருவர்.........🫣.
  9. நீங்கள் சொன்னதற்குத்தான் நானும் சொல்லிப் பார்த்தன். சும்மா முசுப்பாத்திக்காக. விளையாட்டில் உள்ள விருப்பமே அந்த தெரிவு செய்ய முடியாமை (unpredictability). நாம சுற்றிச் சுழன்டு எங்கட புலைமையை வீரத்த காட்டலாம் (சும்மா கம்பு சுத்துற என்டு இந்தியாவில சொல்லுவினம்). உண்மையிலேயே அவ்வளவுதான் நம்மால முடியும். நாம் வழமை போல குப்பையைக் கொட்டுவம். ஜபில தன்பாட்டில நடக்கும். இப்போதும் நானும் நீங்களும்தான் குப்பை கொட்டுறதில முதல்வரும் துணை முதல்வரும். வேறு ஒருவரும் கிட்டக்கூட இல்லை. குப்பைக் கணக்கு கீழே:
  10. கிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உத‌விகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே சில பெண்களின் அழுகுரல் கேட்கிறது யார் அங்கே அழுவது? என நான் கேட்க அவாவோ அங்கு ஒருவரும் இல்லை என சொல்கிறார் நானும் சாவியை எடுத்து வாசலுக்கு வர 3 பெண்கள் அழுது கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள் வந்து என்னை பிடிக்க நானும் அவர்களை பிடிக்க ................சோறு கொடுத்த பெண்மணி பேய் போல வந்து என்னையும் இழுத்துக்கொண்டு போகிறாள். நானும் ஒரு மாதிரியாக கைகளை உதறினாலும் அவா விடுவதாக இல்லை என்னை இழுத்துக்கொண்டு ஒரு இருட்டு அறைக்கு உள்ளே தள்ளி கதவை பூட்டுகிறாள். அப்போது காப்பாற்ற சொல்லி ஓடிவந்த பெண்களும் சேர்ந்து சிரிப்பது என் காதில் கேட்கிறது. ஐயோ தெரியாத்தன‌மாக இந்த இடத்தில் மாட்டிக்கொண்டேனே என அந்த அறையை பார்க்க அது ஒரு சித்திரை வதை கூடம் போல தென்பட்டது அறை முழுவதும் இரத்தக்கறைகளாக இருந்தது அதிலே இரத்தத்தால் நீங்களே இன்றைய உணவு தயாராக இருங்கள் என எழுதி இருந்தது ஒரு சிலுவையின் கீழ். ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! என அலறி கத்தி கட்டிலால் உருண்டு விழுகிறேன் நேரமோ ஏழரை. மனிசி வந்து கட்டிலால விழுந்துவிட்டு நரகத்தில் விழுந்து விட்டாராம் என முறைத்து பார்த்து இது நரக‌மா என கேட்டு விட்டு போகிறாள் அநேகமாக கொஞ்ச நாளைக்கு இந்த வாசகம் எனக்கு ஓடும் என நினைக்கிறன் ஏழரைக்கனவு பொல்லாதது போல.😆😆
  11. வாழ்த்துக்கள் குமாரசாமி
  12. அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....??? ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...
  13. நான், சற்று முன்... ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, நித்தியானந்தாவின் உடல் நலத்தை கேட்ட போது.... அது வசந்தி என்றும், இன்று காலை கூட... இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையும் சாப்பிட்டதாக கூறினார். 😂
  14. கடவுளுக்கு நன்றி சொல்வோம், இப்படியான ஒரு தாரத்தைத் தராமைக்கு.
  15. நாளை தொடக்கம் நாங்கள் இரண்டு பேரும்.. சத்தான சாப்பாடு சாப்பிடுறம்... ஒரு மணித்தியாலம் சுவிம் பண்ணுறம்... இரண்டு மணித்தியாலம் காடு,கரம்பை எல்லாம் ஓடுறம்.. தண்ணி அடிக்கிறத நிப்பாட்டுறம்... வாற வருசம் இந்த ரைம் கையில குவா...குவா
  16. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  17. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  18. நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார். சகோதரி மகன் தகவல் அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறிது அமைதியாக இருந்த நித்தியானந்தா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் சில நாட்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamilnadu.com/article/nithyananda-died-his-sister-son-announces-1743488615
  19. குத்தியனுக்கு கனவிலையும் சாராய போத்தில் பியர் ரின் கேக்குது....கலிகாலம்
  20. நாளைக்கு பங்களூரை பங்களூரிலேயே வைத்து தூக்கிறம்............🤣. இன்றைக்கு சிம்ரனை வைத்து லக்னோவைத் தூக்கியது போல, நாளைக்கு ஷாருக்கானை வைத்து பங்களூரை முடிக்கின்றோம்...............😜. வாஷிங்டன் சுந்தரையும் இறக்குவம் தேவைப்பட்டால்..........🤣
  21. உலகம் பிறந்தது எனக்காக .......! 😍
  22. ஏன் ..ரோட்டிலையும் படுத்துப் பார்க்கலாம்தானே..
  23. 2007வ‌ரை இந்தியா அணி ப‌ல‌ நாடுக‌ளிட‌ம் அடி வேண்டின‌ அணி 2008 ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு இந்தியா கிரிக்கேட்டில் அசைக்க‌ முடியாத‌ நாடாக‌ மாறி விட்ட‌து 2007 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2011 , 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2013 , ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ கோப்பை 2024 , மீண்டும் 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 2025 , மீண்டும் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ கோப்பை & 2014 , 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் தோல்வி 2023 50 ஓவ‌ர் உல‌க‌ கிண்ண‌ கோப்பையில் தோல்வி இந்தியா என்ற‌ நாடு உடையாம‌ இருக்கும் வ‌ரை கிரிக்கேட்டில் இவ‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்........................
  24. ஒரு கூட்டு கிளியா இருந்த‌ எம்மை ப‌ஞ்சாப் பிரித்து விட்ட‌து இனி ஒன்னா மீண்டும் சேர‌ மாட்டோம் என‌ ந‌ம்புகிறேன்👍.................................
  25. சிம்ரன் மேல ஊர்க் கண்கள் பட்டுவிட்டது............... அவுட்டாகி விட்டார்..............🥲. இந்தப் பெயரில் இவ்வளவு சிறப்பு இருக்குது என்று ஒரு முப்பது வருடங்களிற்கு முன்னமே தெரிந்திருந்தால், வீட்டில் இருவருக்கும் வைத்துப் பார்த்திருக்கலாம்..............😜.
  26. நன்றி ஐயா.
  27. புங்கை இது பரவாயில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தால் சிலர் இதை வைத்தே மனைவியை அடிமையாக வைத்திருக்கிறார்கள். விருந்தினர்களுக்கு தனி கோப்பை கிளாஸ் கப்.அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் எமக்கு வராமல் இருக்க வேண்டும். இன்னொருதன் உறவினர்கள் வந்து இருந்த கதிரை கவர் எல்லாம் கழட்டி தோய்ப்பாராம். உண்மையிலேயே இப்படி நடக்கிறதா? அல்லது நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்களா? சிறி இதில் மூன்றாவது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே சிகிச்சை கொடுக்க வேண்டும். எதிர் தரப்பில் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளது. ஒரு பெண் ஐயோ கணவன் வரும் நேரமாச்சே என்ன குறைகுற்றம் கண்டு பிடிக்கப் போகிறாரோ என்று பயந்தபடியே இருப்பதாக சொல்கிறார். மனைவி எனக்கு பேச்சு.ஏதாவது நல்ல நிகழ்ச்சியை பார்ப்பம் என்று இல்லை.உதவாக்கரை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருங்கோ என்று நடக்குது.
  28. குப்புற படுத்தால்... பாவிகள், சாரத்தையும் உருவிக் கொண்டு போடுவாங்கள். மல்லாக்க படுத்திருங்கோ....
  29. கன நேரம் பிடித்துக் கொண்டு நின்றால்... கை நோகும். இரண்டு, மூன்று பனங்குத்தி எடுத்து... முட்டுக் கொடுத்து விடுங்கோ.
  30. 2024ஆம் ஆண்டிலிருந்து T20ல் மிகப்பெரிய துடுப்பர். அவரின் ஆறுகள் எல்லாம் பார்த்தா, நாமளும் அடிக்கலாம் போல தோனும். அப்பிடி ஒரு அழகு. முயற்சி இல்லாமல் அடிப்பதில் மன்னன். நிக்கோலஷ் பூரான்.
  31. புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!
  32. எனக்கு ஓடு விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி 4ம் வாட்டில் உள்ளேன்… மண்டை வேதனை தாங்க முடியவில்லை பார்க்க வரும்போது பழம் வேண்டாம் பியர் மற்றும் சாராயப்போத்தல் வாங்கி வாருங்கள்.. குடிச்சிட்டு வாட்டில் குப்புறப்படுத்தால் வேதினை தெரியாது..
  33. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டுக் கிடக்குமிந்தப் பைந்தமிழ் இனத்திற்குற்ற ஊழ்வினையகற்றவந்த உத்தமன் நித்தி. ஆளவோர் நாடுகண்டு அன்னையெம் தமிழை அங்கே வாழ்விக்க முயலும் போது வஞ்சகர் அவனை வீழ்த்த கோழைகளாக நின்று குரைப்பதேன்? வேண்டாமிந்தக் கீழ்நிலை.
  34. நம்ப வேண்டாம். வீரசிங்கம் மண்டபத்தை நான் தாங்கி பிடித்துள்ளேன்….
  35. மூன்றாவது…. முற்றிய கேஸ் போல் உள்ளது. 😂 உடனடியாக மனநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். 🤣
  36. நானும் ஒரு வீட்டில் கவனித்தேன். கணவர் நெயில் கட்டரால் நகம் வெட்டி விட்டு மனைவியிடம் கொடுக்க, மனைவி அதை வாங்கி நீரில் கழுவி வைக்கிறார். கிருமிகள் இருக்குமாம்…!
  37. மறுத்து அளிப்பார்கள் என்று பார்த்தால் இவரும் நந்தி உடன் சேர்ந்து ஒத்து. பாடுகிறார் பழைய கார். அது தான் எரித்து. விட்டார்கள்
  38. எமது அப்பாத்தா காலங்களில் நாற்பதாச்சு தள்ளிப்படுங்கோ என்ற கதையும் இல்லை....அந்த சிந்தனைகளும் இல்லை. கச்சிதமாக கதையை முடிப்பார்கள். மூன்று நான்கு மாதங்களின் பின்னரே அன்று செய்த தப்புகள் வெளி வரும்.😀
  39. ஒரு கொடியில் பல மலர்கள் பூத்து குலுங்குகின்றன.....😂
  40. இங்கு யாழ் களத்தில் பஞ்சாப் அணியின் பக்கம் நிற்பவர்களைப் பார்த்தால், நாளைக்கு லக்னோ அணி படுத்திருந்து கொண்டே வென்று விடுவார்கள் என்று தான் தெரிகின்றது.............. 🤣.
  41. ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ... 1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று) இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...
  42. இன்னும் 7 க்கு இடம் உண்டு 😃
  43. 43 வயதில்… ஒரு லட்சம் படங்களை எடுத்துள்ளார். இவர் வைத்தியருக்கு படித்த நேரம் புகைப்பட பிடிப்பாளராக வந்திருக்கலாம்.
  44. யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால் , குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர். பயணிகள் உள்ளே வருவதற்கும் , வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம். விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும். இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் | Virakesari.lk
  45. ஐயோ, இங்கேயும் அரசியலா? ஒருவரையும் நல்லது செய்ய விடாதேங்கோ. உடனடியாக அரசியலுக்குள் பிடிச்சு போடுங்கோ. அதோடு அவர்களுக்கு வேறு வேலை வந்துவிடும், இதற்கான குரல் முடங்கிப்போய்விடும். விடுங்கோ அவரை, ஏனைய நாடுகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்துமளவுக்கென்றாலும் .
  46. Am an atheist - சோம.அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல். சமீபமாக ஒவ்வொரு வகுப்பின் போதும் பாடப்புத்தகத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கும் வரை ‘எப்போதடா முடியும்?’ என வேறு வழியின்றி ரொம்ப கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர், பாடம் முடிந்த உடன் மீதமிருக்கும் நேரத்தில் மேற்கூறிய தலைப்புகள் குறித்து இன்னும் இன்னும் என்னைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். பத்து பன்னிரெண்டு வயதிற்கே உரிய அவர்களது ஆர்வமும் ஆவலும் எனக்கான உந்துதலாக அமைந்தன. அவர்களிடம் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவற்றிக்கு என்னிடம் பதிலும் இருந்தன. அல்லாதவற்றிற்கு மறு வாரம் விடை தேடிச் சொல்வேன். தமிழின் சிறப்புகள் குறித்துப் புதிய தகவல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரது கண்களும் ஆச்சரியத்தில் விரியும். ஒரு முறை தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் ஐந்தேனும் கண்டுபிடித்து வரும்படி வீட்டுப்பாடம் தந்திருந்தேன். கூகுள் யுகத்தில் இது ஒன்றும் கடினமான பணி அல்ல என்பதால் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவள் ‘அவ்வை 🡪 Eve’ என எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை எனக்கு. இது பொதுவாக கூகுள் காட்டும் பட்டியல்களில் வராது. தான் எழுதியது தவறோ என தயங்கிக் கொண்டிருந்தவளை வெகுவாகப் பாராட்டி ஆதனும் அவ்வையும் தாம் Adam Eve என்று கூறவும் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் பொருட்டு வேக வேகமாக புத்தகத்தை மூடினார்கள். சிரித்தவாறே சொல்லத் துவங்கினேன். சில வருடங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பிப் படித்தது மிகச் சரியாக அன்று நினைவிற்கு வந்து கைகொடுத்தது. Edward Seuss என்னும் ஆஸ்திரிய புவியியல் வல்லுநர், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இருந்த மிகப் பெரிய நிலப்பரப்பிற்கு (இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, அண்டார்டிகா ஆகியவற்றை உள்ளடக்கியது), ‘கோண்டுவானா’ எனப் பெயரிட்டது; அங்கு ‘லெமூர்’(தேவாங்கு) என்ற உயிரினம் இருந்ததால் உயிர் நூலார் அப்பகுதியை ‘லெமூரியா’ என அழைக்கத் துவங்கியது; மனித இனம் லெமூரியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Ernst Haeckel கூறியது; இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த லெமூரியா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளால்(சுனாமி) அழிந்ததில் தப்பிய பகுதிதான் குமரிக் கண்டம் என்று தமிழ் மொழி வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான கா. அப்பாதுரையார் கூறியது; மனித இனம் மொத்தமும் ஒரே பெற்றோரிலிருந்துதான் தோன்றியது என்றும் அந்த ஆதிப் பெற்றோர் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிறுவிய பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் முனைவர் ஸ்பென்ஸர் வெல்ஸ், தமிழ்நாட்டிற்கும் வந்து மரபணு ஆராய்ச்சி செய்து இந்திய நிலப்பரப்பில் முதலில் வந்தது திராவிடர்கள் என்று கண்டுபிடித்தது; பைபிளிலும் திருக்குரானிலும் வரும் ஆதாம் ஏவாள் பூமியில் இருந்தததாகக் கூறப்படும் இடமான ‘செரந்தீப்’ என்பது இந்தியாவுடன் அப்போது இணைந்திருந்த இலங்கை என அறிஞர்கள் சுட்டுவது; இன்றும் குமரி மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி மற்றும் முப்பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வையாரம்மன் கோவில்கள்; அவை புலவர் ஔவையாருக்காகக் கட்டப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதப்படுவது; சங்க கால ஔவை, ‘ஆத்திசூடி’ பாடிய ஔவை, ‘ஞானக் குறள்’ பாடிய ஔவை ஆகிய இம்மூவருக்கும் குமரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது…. என ஞாபகமிருந்தவரை எல்லாவற்றையும் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கூறினேன். மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் மிகப் பெரிய நாகரிக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தை ஓரளவு அவர்களிடம் விதைத்து விட்ட திருப்தி! அவர்களின் அறிவுத் தேடலை விரிவுபடுத்தவும் வாசிப்பை அதிகரிக்கவும் என்னால் இயன்ற சிறு முயற்சி. அவ்வளவே! “இப்போது உங்கள் முறை. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களைத் தமிழில் உரையாட வைக்கும் முனைப்பில் கூறினேன். வரிசையாக ஒவ்வொருவராகக் கூறிக் கொண்டு வர ஒருவள், “விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது” என்றாள். “விஷ்ணுவின் முதல் அவதாரம்?” என்ற என் கேள்விக்கு, “மத்ஸ்ய அவதார்… that fish one” என்றாள். “இவ்விடத்தில் ஒரு ஒப்புமை உண்டு. மீன் உருவில் வந்த விஷ்ணு மனுவிடம் பிரளயம் ஒன்று வரப்போவதைக் குறித்து எச்சரிக்கவும் மனு பெரிய படகு ஒன்றைத் தயார் செய்து அதில் தனது குடும்பத்தினர், ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், விலங்குகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தப்பித்தார். பைபிளின் ‘நோவாவின் பேழை’ கதையும் கிட்டத்தட்ட இதுதான். நோவாவிற்கும் கடவுள் தான் ஏற்படுத்தப் போகும் பேரழிவைப் பற்றிக் கூறி கப்பல் ஒன்றில் நோவாவின் குடும்பம், அனைத்து உயிரினத்திலும் ஆண் ஒன்று பெண் ஒன்று, அனைவருக்கும் தேவையான உணவு எனத் தயார் செய்து கொண்டு தப்பிக்கும் வழிமுறையைச் சொல்வார். மனுவிற்கும் நோவாவிற்கும் அக்கட்டளைகள் மிகச் சரியாக ஏழு நாட்களுக்கு முன்பு தரப்படும். Noah, Navy போன்ற சொற்கள் ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவையே. இந்தப் பெருவெள்ளக் கதைகள் சுமேரிய மற்றும் பாபிலோனிய நாகரிகம், அமெரிக்காவின் மயன் இனத்தவர், ஆப்பிரிக்காவின் யொரூபா இனத்தவர் என அனைவரிடத்தும் உண்டு. ஆனால் கடல் கொண்ட இடம் என்பதற்கான சான்று ‘குமரிக் கண்டம்’ என நம்மிடம் ஆணித்தரமாக உண்டு” என்று சொல்லி முடிக்கவும்….. “Aunty! How do you know so much?” என்று கேட்டாள் அச்சிறுமி. “நிறைய எல்லாம் இல்லடா… ஏதோ கொஞ்சம் வாசிச்சதிலிருந்து சொன்னேன். நீங்களும் நிறைய வாசிங்க” என்று ஊக்கப்படுத்தினேன். “Aunty! Have you read the whole Bible?” என்று இன்னொரு சிறுவன் கேட்டான். “இல்லை” என்றேன் சிரித்தவாறே. “Then which holy book have you read completely?” – கேள்விகள் தொடர்ந்தன “எதையும் அல்ல. ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப் பிடிக்கும். அதன் பொருட்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். வெவ்வேறு கலாச்சாரங்களில் தென்படும் ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் கிடைத்த சில தகவல்கள் இவை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு துளி கடல்” என்று மறுமொழிந்தேன். “வேறென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?” “கிருஷ்ண அவதாரத்திற்கும் மோசஸ்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். கம்சனைப் போன்ற அரசன்தான் பார்வோன். இரண்டு பேருமே தத்தமது ராஜ்யத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டிருந்தனர். கிருஷ்ணன் மற்றும் மோசஸின் தாயார்கள் தத்தமது குழந்தைகளை ஆற்றில் விட்டனர். குந்திதேவி – மேரி மாதா, சிறுதொண்ட நாயனார் – ஆபிரகாம், சீதை – கிரேக்க புராணத்தில் வரும் Persephone…. என எனக்குத் தெரிந்த சில இவை” “Aunty! You talk about everything. Which religion do you belong to?” “Am an atheistடா” “Wow!” – ஒரே குரலில் சிலரது வியப்பு வெளிப்பட்டது. “சரி! அடுத்து யாரு பிடிச்ச புத்தகத்தைப் பற்றி சொல்லப் போறீங்க?” அடுத்ததாக ஒரு சிறுமி ஹாரி பாட்டரை களத்தில் இறக்க அதன் பிறகு முழுமையாக அவர்களின் பேச்சைக் கவனிக்கலானேன். வகுப்பு முடிந்து கலைந்து செல்கையில் “Aunty! Could you share more stories next week too? Both historical and mythological ones. Also we would like to know a bit more about etymology.” “கண்டிப்பா டா. நான் இன்னும் நிறைய வாசிக்கணும் அப்போ. அடுத்த வாரம் பார்ப்போம்” என்று கலைந்து சென்றோம். ************************** இப்ப என்னாச்சுன்னா மக்களே….. மறுநாள் மாலை எனக்கு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. முந்தைய நாள் வகுப்பைப் பற்றி எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல விஷயத்தைப் போட்டு உடைத்தார். “அது…. ஒண்ணுமில்ல… ஒரு complaint வந்துருக்கு” மனதினுள் வேகமாக ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவுமே இடம் பெறவில்லையே! “என்னாச்சு சார்?” “நீங்க ஏதோ கடவுள் இல்லனு சொன்னதா…. ஒரு parent கொஞ்சம் hurt ஆகிட்டாங்க” ங்கே…. எதே?! “கடவுள் இருப்பைப் பற்றியோ மறுப்பைப் பற்றியோ பேசவே இல்லையே” என்றபடி வகுப்பில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தேன். சட்டென விஷயம் முழுவதும் புரிந்து கொண்டவராக “ஓ! ஓகே! ஓகே! விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி நடந்ததை விளக்கினார். வகுப்பில் உள்ள ஒரு குழந்தை வீட்டினரிடம் “கடவுள்ன்னு ஒண்ணு உண்டா?” என்று கேட்டிருக்கிறது. அநேகமாக ‘atheist’ஐ கூகுள் செய்திருக்க வேண்டும். அல்லது தானாக யோசித்திருக்க வேண்டும். அந்தப் பெற்றோர் அந்த ஒற்றைக் கேள்வியின் காரணத்தை அறிய முயன்று ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் கண்டுகொண்டது – நான் ‘கடவுள் மறுப்பு’ பிரசங்கம் செய்திருக்கிறேன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. அக்குழந்தையைக் குறை சொல்லவே முடியாது. யோசிக்கும் திறன் பெற்ற எந்த உயிரினத்திற்கும் இயல்பாக எழும் கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்/ள். “ஒரு குழந்தை கேட்ட கேள்விக்கு என் தனிப்பட்ட தெரிவைக் கூறினேன். இதுக்கெல்லாமா offend ஆவாங்க? வகுப்பில் வரலாறு மற்றும் நாகரிகம் சார்ந்த எவ்வளவோ கருத்துகள் தகவல்கள் பரிமாறப்பட்டன. அந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் பாடா?” “குழந்தைகளின் சிந்தனைத் திறன் சரியாகத்தான் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாளுபவர்களால் ஆன சூழல் பெரும்பாலும் அவர்களுக்கு அமைவதில்லை. இனிமேல் நான் பாத்துக்குறேன். உங்களைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை சம்பிரதாயமாகக் கேட்டேன்” – நிதானமாகப் பேசிய அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பகுத்தறிவாதிகளையும் மதிக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர் – “வக்கீலு… ஆனா நல்லவரு” என்ற பாபநாசம் பட வசனத்தோடு நோக்கற்பாலது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் ஒருங்கிணைப்பாளர். ஒரு வகுப்பில் முதல் திருக்குறளைச் சொல்லி அதற்குப் பொருள் விளக்கம் அளிக்கையில் ‘ஆதி பகவன்’ என்பது சிவபெருமானைக் குறிப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்த அவ்வகுப்புக் குழந்தை ஒன்றின் பெற்றோருக்கு மனம் புண்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பை விட்டு நிறுத்திவிட்டார்களாம். சில பல மாதங்களுக்குப் பிறகுதான் வேறொருவர் மூலம் தெரிய வந்ததாம். பரிமேலழகரின் வழித் தோன்றலான அந்த ஆசிரியர் பரிமேலழகரையே ஒரு எட்டு முந்திச் சென்று கொடுத்த விளக்கம் ஒரு பறக்கோடி என்றால் பிள்ளையைப் பள்ளியிலிருந்து நிறுத்தியது இன்னொரு பறக்கோடி. போகிற போக்கைப் பார்த்தால் தேம்பாவனி, சீறாப்புராணம், தேவாரம் போன்றவற்றையும் சமயம் சார்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காகப் புறக்கணித்துவிடுவார்கள் போலும். ஜெய் அல்லா! கந்தனுக்கு ஸ்தோத்திரம்! பொசுக் பொசுக்கென்று புண்பட்டுவிடுகிறார்கள் மனிதர்கள். மாற்றுக் கருத்துக்கு இடமே அளித்துவிடத் துணியாத ஒரு அற்புதமான தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். நல்லவேளை! ஜியார்டானோ புருனோ, கலீலியோ போன்றோரின் காலங்களில் நான் பிறக்கவில்லை! ********************* இதை அப்பாவிடம் பகிர்ந்த போது, “It happens. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்கள். “ஆனாலும் அமெரிக்காவில் இதை நான் எதிர்பார்க்கல” என்றதற்கு, “அமெரிக்காவில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்த உலகம் மனதை விசாலமாக்கிப் பக்குவப்படுத்தி….” என்ற எனது பொதுப்புத்தியை “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார்கள் அப்பா. தாம் இத்தாலியில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் உடன் பணிபுரிந்த எலெயனோரா அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை முடித்து இத்தாலியில் வசிக்கும் அவர், “அமெரிக்காவைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்… நீங்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகவாதி என்பதைத்தான் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பார்கள்” என்றார்களாம் அப்போதே. அதாவது தனது மூட நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு ஒப்பான வேறு ஏதோவொரு கட்டமைப்பில் சக மனிதன் இயங்குவது வரை எம்மனிதனுக்கும் பிரச்சனை இல்லை. அவ்வாறாக எதுவுமே இன்றி ஒருவர் அடிப்படை அறிவுடன் வலம் வந்தால் பிறருக்கு மனம் புண்பட்டு சீழ் வைத்து நமநமத்துவிடும். அதானே? அமெரிக்கர்களே இப்படி என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பரந்துபட்டதொரு பார்வையை எதிர்ப்பார்த்த என் மடமையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். பிறகு நிதானமாக அத்தருணத்தை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தேன். “Aunty! Which religion do you belong to?” ஏதாவதொரு மதத்தைச் சொல்லியிருக்கலாமோ? எப்படி முடியும்? உதாரணமாக, ஒரு கற்பனையான சூழல் – அரசியல் கலந்துரையாடல் நிகழ்கிறது. எதேச்சதிக்காரத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரித்து பேச வந்தவர்கள் பெரும்பாலானோர் அதைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் பெயரை வெளிப்படையாகப் போட்டுக் கொள்ள நாணி ‘விமர்சகர்’, ‘ஆய்வாளர்’, ‘செயற்பாட்டாளர்’ என வித விதமான முகமூடிகளை அணிந்து கொள்வர். இப்போது நான் பசப்பியவாறே கழுவுற நீரில் நழுவுற மீனாகப் பேசிக் கொண்டிருந்தால், ஃபாசிசத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சியின் சாயத்தையோ பாயாசம் கிண்டும் தற்குறி கட்சியின் சாயத்தையோ (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) யாரேனும் என் மீது பூச எத்தனிப்பார்கள். அவசர அவசரமாக பதற்றத்தோடு அதை மறுதலிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில் முதலிலேயே ஒழுங்கு மரியாதையாக கருப்புச் சாயத்தைப் பெருமிதத்துடன் பூசி எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது உசிதம் அல்லவோ? இதே சூழல்தானே அதுவும். பொதுவாக பகுத்தறிவாளர்கள் யாரிடமும் போய்த் தாமாக அறிவித்துக் கொண்டு திரிவதில்லை. நானும் முடிந்த வரை வெகுசனத்தில் கரைந்து போகவே முயல்வேன். ஆனால் இப்படி நேருக்கு நேர் ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் போது சும்மானாங்காட்டி ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்க மனம் ஒப்பவில்லை. “நீங்கள் வலதுசாரியா?”, “முதலாளித்துவத்தை ஆதரிப்பீர்களா?”, “அடிமைத்தனம் சரிதானே?”, “மூடத்தனங்களை ஏற்றுக் கொள்வீர்களா?”, “சாமி கும்பிடுவீர்களா?” – இவற்றுக்கு எப்படி “எப்போதாவது” என்று பதில் கூற முடியும்? வளைந்து நெளிந்து குழைந்து என் ஆளுமையை விட்டுக்கொடுத்து என்னை இழக்க வேண்டிய அவசியம்தான் என்ன? NO, THANK YOU! மனம் சங்கெடுத்து முழங்கியது – “Am an atheist”.
  47. சரி ஏன் உங்கடை ஆசையை கெடுப்பான்! சீமான் மைண்ட் வாய்ஸ் - இந்த செக்ஸ் சைக்கோ ஈவேரா சொன்ன ஒரு சிந்தனையை செய்துபார்த்த எனக்கே இந்த நிலமையென்றால் அவர் கொள்கைகளையே தெய்வவாக்காக நினைத்து வாழும் உபிஸ் DMKகாரரின் நிலைமைகள் என்னாகப்போகிதோ??🤣 ஏன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஈவேராவா?
  48. தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.