Jump to content

டோப்பும் டூப்பும்.


Recommended Posts

கடந்த ஞாயிறு பின்னேரம் 3 க்கு போய் இருபது டொலரை வீணாக்க வேண்டுமா என நான் யோசித்துகொண்டிருக்க, சன் டி வி பார்த்துக்கொண்டிருந்த மனைவி கூப்பிட்டார் “அப்பா இஞ்சை வந்து பாருங்கோ யார் டி வி யில் நிற்கின்றார் என்று “. நானும் எட்டிப்பார்த்தேன். சூர்யா,திரிஷா நடித்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதில் சூர்யா ஒரு இளைஞனை பேசிக்கொண்டிருந்தார் .”அட நம்ம கார்த்திக்.ஆள் அப்படியே இருக்கு,பாவம் இப்பவும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளுடன் தான் போல தான் கிடக்கு இவர் நடிப்பு ”.

பத்துவருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு ஒருமாத கனவுப் பயணம் போனோம்.கன்னியாகுமாரி ,நாகர்கோவில் ,கேரளா படகு வீடு,கோவளம் கடற்கரை,மைசூர்,ஊட்டி,பின் சென்னையும் முக்கியமாக மனைவியின் சொப்பிங்.மூத்த அக்கா போன் பண்ணி சொன்னா “சாலிக்கிராமத்தில் உள்ள தனது வீடு (3 BR FLAT) சும்மா தான் கிடக்கு விருப்பமென்றால் சென்னையில் நிற்கும் போது அங்கு போய் தங்கு என்று”ஓமென்று திறப்பை வாங்கிக்கொண்டேன்.

மதியம் இரண்டு மணி சென்னை போய் இறங்க ஆடி வெக்கை தனது வேலையை காட்டிக்கொண்டிருந்தது,நேர கோல் டாக்சி பிடித்து அக்கா வீட்டிற்கு போனோம்,சாமான்களை அங்கு வைத்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுத்து பயணம் தொடர திட்டம்.அங்கு போய் பூட்டைதிறந்து உள்ளே போனால் கரண்ட் இல்லை.வெளியில் வந்து பியுசை பார்த்தால் காணவில்லை,துண்டு வைத்திருக்கு ஏதோ மூவாயிரத்து சொச்சம் கட்ட வேண்டும் என்று.அருகில் இருப்பவர்களிடம் விபரம் கேட்டு போய் ஒருமாதிரி பில்லையும் கட்டி பியுசையும் வாங்கிவந்து பொருத்தி அப்பாடா என்று சாய்ந்தால்,

மனுசி ஒரு குண்டை தூக்கி போட்டார்” மூத்தமகன் பிறக்கேக்க சுகபிரவசம் என்றால் தான் மொட்டை அடிப்பதாக நேர்த்தி வைத்ததாக”

“இஞ்ச பாரும் இனி ஒரு பிளானும் மாத்தி திருப்பதி போக முடியாது ,அப்படி நேர்த்தி வைத்ததை இஞ்சை வந்து இப்ப சொன்னால் இனி ஏலாது,அப்படியென்றால் வடபழனியில் மொட்டையை போடும்.”

“சரி, ஆனால் மொட்டை அடித்தபின் போட விக் வாங்கவேண்டும்.சும்மா இளக்கமான செயற்கை மயிரிலான விக்கில்லாமல் ஒறியினல் மயிரில் செய்த விக், இப்ப இருக்கின்ற மயிர் மாதிரியே ஓர்டர் பண்ணி செய்யலாமாம்”

ஓம் என்று தலையை ஆட்டினேன்.ஆனால் பேய்க்கொதி. மகன்,நேர்த்தி என்று இழுத்துவிட்டதால் கடத்தவும் முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஆள் T.V.I யில் ஒரு நிகழ்ச்சி வேறு நாடாத்திக்கொண்டிருந்ததால் முன்னர் இருந்த அதே HAIR STYLE இல் விக் வேண்டுமாம்.பிள்ளைகள் களையில் படுத்துவிட்டார்கள்.கடவுளே என்று காலாற நடக்க பதினைந்து வருடங்களுக்கு பின் புழுதியில் இறங்கினேன்.வியர்வை ஆருவியாய் கொட்டுது.நாடக சீரியலில் வரும் இடங்கள் போல சாலிக்கிராமம் ஓரளவு வசதியுடன் குளிர்மையாக இருந்தது. வடபழனிக்கு அருகில் இருப்பதால் சினிமாக்காரர்களின் ஆதிக்கம்,திரும்பும் இடமெல்லாம் படங்களிலோ,சீரியல்களிலோ பார்த்த துணை நடிக,நடிகைளின் முகங்கள்.குட்டி போலிஸ் நிலையம் சற்று திரும்ப உயர்ந்த கறுப்பு கேட் உடன் விஜய் வீடு.பரோட்டாவும் கறியும் கூலாக இரண்டு கிங்பிசரும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா கோபிக்க வேண்டாம் இந்தக் கதையின் கரு எனக்கு விளங்கவில்லை

Link to comment
Share on other sites

கோவிக்க வேண்டாம் கதை? இப்ப தான் தொடங்குது ?

எல்லோரும் நல்லா நித்திரை அடித்துவிட்டு விடிய எழும்பி சுற்றுலாவிற்கான ஒழுங்கு செய்ய காலையிலேயே சந்திக்கு வருகின்றோம், ஆட்டோ பிடித்து மவுண்ட்ரோடு போனால் அனைத்து அலுவல்களும் முடித்து விடலாம்.

சந்தியில் உள்ள ஒரு கடையில் மனைவி விக் எங்கு போனால் வாங்கலாம் என விசாரித்து பார்க்கின்றார்.கடைக்காரர் “ சவுரி வாங்க மவுன்ரோடு போங்கம்மா” எனும் போது கீரோகொண்டா மோட்டார் சயிக்கில் ஒன்று கடையடியில் வந்து நிற்க அதிலிருந்து வெகு டிப் டாப் ஆக ஒரு இளைஞன் இறங்கி வந்து அந்த கடையில் சிகரெட் வாங்கியவன் என்னைப்பார்த்து “சிலோனா சார்? லண்டனா? கனடாவா?” என்கின்றான்.

நான் கனடா என சொல்ல, அவன் “விக் வாங்குவதென்றால் வடபழனி தான் சரியான இடம் சார்” என்றபடி அருகில் நின்ற ஆட்டோகாரரை கூப்பிட்டு ஏதோ ஒரு கடையின் பெயரை சொல்லி எம்மை அங்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டு “நீங்கள் அவரோட போங்க சார் நானும் அரைமணியில் அங்கு வந்துர்றன்,சொறி சார் அறிமுகம் செய்யவே இல்லை,ஐ ஆம் சுந்தர், விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கின்றேன்,நீங்க எங்கே சார் தங்கியிருக்கின்றிர்கள்,”

நான் நாம் தங்கியிக்கிருக்கும் பிளாட்டை காட்டுகின்றேன் ,”நானும் ரொம்ப அருகில்தான் இருக்கின்றேன், வாறன் சார்” என்று போய்விட்டான்

வடபழனிக்கு ஆட்டோ வெளிக்கிடுகின்றது,எனது பொடிப்பிள்ளைகளுக்கு இது முதல் அனுபவம்,வீதியில் மாடுகளும் நாய்களும் ஒரே வாகனங்களும், அதுவும் எந்த நேரமும் கோன் அடித்தபடி,சனம் சனம் சனம். திரும்பும் திசையெல்லாம் மக்கள் நிறைந்திருக்கின்றார்கள், பஸ் நிரம்பி வழிகின்றது,உள்ள சந்து புந்து எல்லாம் நுழைந்தபடி ஆட்டோக்கள், ஸ்க்கூட்டியில் சல்வாருடன் பெண்கள் பறக்கின்றார்கள்.

எனக்கும் எண்பதுகள் மீண்டும் நினைவு வருகின்றது,இவை எல்லாம் நான் தோழர்களுடன்? மோட்டார்பைக் இல் சுற்றியடித்த இடங்கள் தான் ,ஆனால் இப்ப ரொம்பவும் மாறிவிட்டது.சரவணபவனில் இறங்கி மசாலதொசையை வெட்டிவிட்டு விக் கடைக்கு போனால் டிப்டாப் ஆசாமி அங்கே நிற்கின்றான்.

“காலை சாப்பாடு ஆகிடிச்சா சார்? ஆமென தலையை ஆட்டுகின்றேன்.

“இங்குதான் சார் பெரிய சினிமாகாரங்கள் எல்லோரும் விக் ஆர்டர் பண்ணுவாங்கள்,நல்ல கிளினாக செய்துதருவாங்க,”என்ற படி கடைக்காரரை அறிமுகம் செய்துவைக்கின்றார்.

ஒருவாறு விக் அலுவல் முடிந்த திருப்தி எனக்கு.

”தமிழ் நாடு கோயில்கள் சுற்றி பார்க்க வந்தீங்களா? எனக்கு தெரிந்த ரவல்ஸ் இருக்கு ஒழுங்கு பண்ணி விடட்டுமா சார்?

“இல்லை நாங்கள் சும்மா இடம் பார்க்க தான் வந்தனாங்கள்,உங்களுக்கு ஏன் சிரமம், நான் போய் மவுன்ரோடில் ஒழுங்கு பண்ணுகின்றேன்”

“என் கூட பைக்கில வாருங்க சார் உடனே போயிட்டு வந்துடலாம்”

நான் மனைவியிடம் உடன் திரும்பிவருகின்றேன் என்றுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

மவுன்ரோடில் பைக் பறக்கின்றது.

(இன்னும் வரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா போகின்றவர்கள், மொட்டை அடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி வந்தால்...

இமிகிரேசனில் விக்கையும், பாஸ்போட் படத்தையும்... மாறி,மாறி பார்த்திருப்பார்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகிறது அண்ணா அரசியல் கலக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை பார்த்துவிட்டு சுந்தரின் ராவல் ஏஜென்சி நண்பன் சொன்னார் “நீங்கள் முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி போய் பின் அங்கிருந்து ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வருவதுதான் நல்லது. அவ்வளவாக களையும் இருக்காது இரண்டு கிழமைக்கு சரியாகவும் அமையும். முதல் கன்னியாகுமாரிக்கு ரெயினில் போங்கள், அங்கு போய் இந்த முகவரை சந்தித்தால் அவர் பஸ்சையும் மிகுதி பயண ஏற்பாடுகளையும் செய்துதருவார்” என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.

“சார் சாயங்காலமே புக்கிங் ஆபிஸ் போய் கன்னியாகுமாரிக்கு டிக்கெட் போட்டிடுவம்,பாஸ்போட்டை கொண்டுபோனால் டூரிஸ்ட் என்று சொல்லி பார்த் புக் பண்ணிடலாம்” சுந்தரின் பை வடபழனி வந்துவிட்டது.

“அப்ப சாயங்காலம் சந்திக்கின்றேன்” என்றபடி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கை காட்டியபடி ஆள் பறந்துவிட்டது.

மனைவிக்கு சரியான கோபம்.”என்னப்பா வரக்கிடையில புது பிரெண்ட் பிடித்து வைத்திருக்கின்றீர்கள்,எல்லாவற்றையும் சுத்திக்கொண்டு போக போகின்றான்,இதற்குள் வீட்டு விலாசம் வேறு அவனுக்கு சொல்லுகின்றீர்கள்,எத்தனையோ தரம் ஏமாந்தும் திருந்தவில்லை இந்த மனுஷன்”

எனக்கு இவை காதில் விழுவதில்லை.எத்தனை தரம் எத்தனை பேர் என்னை ஏமாத்தினாலும் முதன் முறை சந்திக்கும் ஒருவர் என்னை ஏமாற்றபோகின்றான் என நான் சந்தேகக்கண் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை.தியாகராயர் நகர் போய் பாண்டிபசாரில் உள்ள அஞ்சனப்ப செட்டியார் மிடிடரியில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு வீடு திரும்புகின்றோம்.

மணி நாலு இருக்கும் யாரோ அழைப்புமணி அடிக்க போய் திறந்தால் “தூங்கி எழுந்தாச்சா” என்றபடி சுந்தர் உள்ளே வருகின்றான்.மனுசி முழுசி பார்க்க நான் தெரியாத மாதிரி பாஸ்போட்டையும் எடுத்துக்கொண்டு சுந்தர் கொண்டுவந்த கெல்மெட்டை அணிந்து கொண்டு பைக்கில் ஏறி குந்துக்கின்றேன்.டிக்கெட் புக் பண்ணி முடித்து வீடுவந்து மனைவியிடம் “நாளை காலை எட்டுக்கு ரெயின்,சுந்தர் இல்லாவிட்டால் இவ்வளவு அலுவலும் ஒரு நாளில் முடித்திருக்க முடியாது” என சுந்தருக்கு ஒரு சேட்டிபிகேட் கொடுத்தேன்.

சுந்தர் எதுவுமே கேட்காமல் விட்டாலும் ஏதாவது கொடுக்க வேண்டும் போலிருந்ததால் ஒரு புது சேட்டை எடுத்துகொடுத்தேன்,மகிழ்சியுடன் வாங்கியபடியே “ என் தங்கைக்கு இரண்டு வாரத்தில் கல்யாணம்,இதையே அணியலாம் போலிருக்கு, நீங்கள் சென்னையில் என்றால் கட்டாயம் உங்களையும் கூப்பிட்டிருப்பேன், பரவாயில்லை திரும்பி வந்த பிறகு வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போறேன் சார்” என்றபடி போனவன்,நின்று “நீங்க தண்ணி பாவிக்கும் பழக்கம் உண்டா “ என்று கேட்டான்.

எனக்கும் ஒரு பாட்னர் கிடைத்த சந்தோசத்தில்” அப்பப்ப அடிக்கிறதுதான்’ என்றேன்.

“மன்மதலீலையில கமல் சொல்லும் வசனம் சார் உது, அப்ப நைட்டு வரட்டா” என்றான்.

சரி சுந்தருடனும் ஒருக்கா அடிச்சா போச்சு என்று இரவு வரச்சொன்னேன்.

(இன்னும் வரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒருக்காத் தமிழ்நாட்டுப் பக்கம், போகிற விருப்பமிருக்கு, அர்ஜுன்!

நான் சிறு வயதிலிருந்தே, தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம், மகாபலிபுரம் போன்றவற்றின் கட்டிடக் கலையைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன்!

பின்பு, மும்பைக்கு ஒரு தடவை போனபோது கிடைத்த அனுபவங்களால், இந்தியா இப்போதைக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்!

எனது நெருங்கிய நண்பன் ஒருவனும், இந்தியாவின் கோவில்களின் இவ்வளவு மதிப்பு வைத்திருக்கும் நீ, அங்கே போனால், அந்த மதிப்புக் குறைந்துவிடும் என்று சொன்னான்!

உங்கள் பயண அனுபவம், மிகவும் கவனமாக வாசிக்கப் படுகின்றது, என்பதற்காகத் தான் இதை எழுதுகின்றேன்!

தொடருங்கள், அர்ஜுன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜூன்....30 வருட போர் சூழல் எம்மை உலகம் சுற்றும் வாலிபனாக்கி போட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் எத்தனை பேர் என்னை ஏமாத்தினாலும் முதன் முறை சந்திக்கும் ஒருவர் என்னை ஏமாற்றபோகின்றான் என நான் சந்தேகக்கண் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை

:rolleyes: ஆச்சரியமாக இருக்கு!

Link to comment
Share on other sites

அர்ஜீன் எங்கை மிச்சத்தை காணவில்லை டோப்படிச்சிட்டு படுத்தாச்சோ :lol: :lol:

Link to comment
Share on other sites

தண்ணியடிக்க வருவதாக சொன்ன சுந்தர் பத்துமணிபோல் வந்து மணியை அடித்தார், பெடியங்கள் வீடியோ கேமும் கையும்அவங்களுக்கு கனடா என்ன இந்தியா என்ன ஓர் வித்தியாசமும் இல்லை , ரீ.வீ பார்த்துக்கொண்டிருந்த மனைவி என்ன நடக்குது இங்கே என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார், சின்ன ஒரு அலுவல் என்று புறப்பட்டுவிட்டேன்,

மொட்டைமாடி பப் (இந்தியாக்காரன் எல்லாம் வெள்ளைகளிடம் இருந்து கொப்பிதான்) மங்கிய வெளிச்சத்தில் பூமரங்கள் பல சூழவர ஒரு மெல்லிய இதமான சித்தார் இசையில் இந்தியன் ஜின் அருந்த நான்றாகதான் இருந்து, தான் விளம்பர படங்கள் எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும் நிறைய பேர் இப்போ இந்த துறைக்கு வந்துவிட்டதால் போட்டிகள் கூடி ஒரு ஒப்பந்தம் எடுப்பதே பெரிய விடயமாக இருக்கு என்று சுந்தர் சொந்தக்கதை சோகக்கதை தொடங்கிவிட்டார்.

காலை புறப்படவேண்டும் என்பதை நினைவூட்டினேன், தங்கையின் கலியாணத்திற்கு வான் வாடைகைக்கு எடுத்து வைத்திருப்பதாகவும் அதில் கொண்டுபோய் ஸ்ரேசனில் விடுவதாக சொல்லி குண்டுதோசையும் சிக்கின் குருமாவும் ஓர்டர் பண்ணினார், நான் தோசையுடன் மாமிசம் உண்பதில்லை ஆனால் அந்த கொம்மினேசன் அப்போ மிக நன்றாக இருந்தது.நான் பில்லுக்குகாசை கொடுக்க வெளியேறினோம்.

காலை வானில் வந்து ஸ்டேசனில் கொண்டுபோய் இறக்கினார்.என்ன உதவி செய்யலாம் என்று நூறு அமெரிக்கன் டொலரை நீட்டினேன் மிகவும் சந்தோசமாக வாங்கிகியபின், முடிந்தால் திரும்பசந்திப்போம் என போய்விட்டார்.

எமது பயணம் திட்டமிட்டபடி மிக சந்தோசமாக அமைந்தது,(அது எழுத கோமகனின் பயணக்கட்டுரை போலாகிவிடும்) சென்னை திரும்பிய பின்பும் பயண களைப்பு காரணமாக சாலிக்கிராமம் வராமல் மகாலிங்கபுரத்தில் ஒருநாள் தங்கி அடுத்தநாள் மாலை சாலிக்கிராமம் திரும்பினோம்.

அடுத்தநாள் இரவு ஒன்பது மணியிருக்கும் யாரோ அழைப்பு மணி அடித்தார்கள்.

“அப்பா உங்கட சுந்தர்தான் போய் கதை திறவுங்கோ” என மனைவி சொல்ல நான் போய் கதவை திறந்தேன்.

“கலோ நான் கார்த்திக்,சுந்தரின் பிரெண்ட்,இன்று சுந்தரின் தங்கைக்கு ரிசப்சன்,உங்களுக்கு இஸ்டம் என்றால் கூட்டிவரச்சொன்னார்” அவரும் ஒரு ஹோண்டாவில் தான் வந்திருந்தார்.

ஓரளவு பிரமாண்டமான திருமண மண்டபம் விருந்தினர்களால் நிரம்பியிருந்தது, லைவ் மியுசிக் கானக்குயில்கள் “வளையோசை கலகலவென” என்று ஒரு பிசகிலாமல் மெய்மறக்க வைக்க , மிக நீண்ட சாப்பாடு பந்தி எங்கும் பலகாரங்களும், சமையல் சாதங்களும் நிரம்பியிருக்க, காஞ்சிபுரங்களும் பட்டு தாவணிகளும் அமலாக்களை அள்ளிகொட்டி நிரப்பியிருந்து.

சுந்தர் வந்து எனது கையை பிடித்து மேடைக்கு அழைத்து மணப்பெண்ணயும் மாப்பிள்ளையும் “கனடா நண்பன்” என்று என்னை அறிமுகம் செய்துவிட்டு, அருகில் இருந்த இன்னொரு பெண்ணை கூப்பிட்டு இவரும் ஒரு தங்கை என்றார். எனக்கு இந்த அழகான தங்கையை எங்கேயோ பார்த்தது போலிருந்தது ஆனால் சொல்லவில்லை.

மேடையால் இறங்கி கலியாண மண்டபத்தின் முக்கிய இடத்திற்கு அழைத்து போகின்றார், சுமார் ஒரு பதினைந்து சுந்தரின் நண்பர்கள் அந்த மாதிரி அனைத்தும் அடுக்கி வைத்து வாசித்துக்கொண்டிருந்தார்கள்.”கனேடிய இலங்கை நண்பன்” என்ற அறிமுகத்துடன் தான் பிசி என்று சுந்தர் போய்விட்டார். நான் கார்த்திக் அருகில் போய் இருக்கின்றேன்.

அவர்கள் என்னை கேட்ட முதல் கேள்வி “சினிமா பார்பீர்களா சார்” என்பதுதான், நானும் எனது பாண்டியத்தை இவர்களுக்கு காட்ட கூடாது என்று “நேரம் கிடைத்தால்,அதுவும் நல்ல படமென்றால் மட்டும்” என்றேன்,

“இல்லை நாங்கள் எல்லோருமே சினிஉலகில இருக்கின்றவங்க சார் அதனால் தான் கேட்டேன், இவர் சேரனின் அசிஸ்டென்ட் ,இவர் ரவிகுமாரின் அசிஸ்டென்ட் ,இவர் குஷியில் விஜயின் நண்பன், இவர் வாலியில அஜித்துடன் நடித்தவர்,இவர் சூர்யாவின் டூப்,இவர் மாதவனின் டூப்” என்று போய் கொண்டே இருந்தார்.

“இப்படி இருந்தால் சினிமாவில் வரும் வருமானம் உங்களுக்கு வாடகையும் கொடுத்து சாப்பிடவும் காணுமா” என கேட்டேன்.

“சிலவேளை ஊரில இருந்து எடுப்போம்,சிலசமயம் வேறு வேலைகளும் செய்வோம்,இருந்தாலும் சினிமாவில ஏதாவது சாதிக்கணும் என்றுதான் சினிமாவை விடமுடியாமல் இருக்கின்றோம் சார், விக்கிரம்,சியாம் கூட போன வருஷம் வரை எங்கள் கூடத்தான் சுத்திகிட்டு இருந்தாங்கள்,இப்ப அவங்க நிலையை பார்தீங்களா சார்? எங்களுக்கும் ஒரு பிரேக் கட்டாயம் கிடைக்கும் சார்”

நானும் விஸ்கியின் துணையுடன் அவர்களில் ஒருவனாகி, சந்தோசமாக அவர்களின் அனுபங்களை பகிர்ந்துகொள்ளுன்றேன், அப்போது தான் திடிரென்று நினைவு வந்தவனாக “சுந்தரும் சினிமா நடித்திருக்கின்றாரா?” எனக் கேட்டேன்,

“ஆமா சார், கிரோவாக தான் நடிப்பன் என்று வந்த சின்ன சான்ஸ்களை விட்டுவிட்டு இப்ப ஒன்றுமில்லாமல் போயிட்டார் சார் ,ரவிகுமாரின் நட்புக்காக படத்தில் மட்டும் தலையை காட்டினார், ரவிகுமார் படையப்பாவில சான்ஸ் தாறதாக சொன்னதால், பின் அந்த இடத்தில அப்பாஸை போட்டுடாங்கள் சார்,அதுதான் இனி நடிப்பதில்லை என்று விளம்பர படமெடுக்கும் முயற்சியில் இறங்கிட்டார் சார், மேடையில பாத்தீங்களா சார்

சுந்தர் தங்கச்சி அவ அண்ணாமலையில ரஜனி குஷ்பு மகளா நடிச்சா சார் அப்புறம் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கலை( அட அந்த வடிவான பெண்ணு ). சுந்தர் குடும்பம் தான் சார் அநேக சினிமா ஸூட்டிங்குகளுக்கு சமையல் செய்து அனுப்புவாங்க,அதில நல்ல வருமானம் சார்”

இதுதான் இந்தியாவின் சினிமா கனவுகூடம்.

அடுத்தநாள் சுந்தர் கார்த்திக் உதவியுடன் மனைவி வடபழனியில் மொட்டை வழித்து, விக்கும் வைத்து அடுத்த நாள் கனடா பயணமானோம்.

குறிப்பு –

சுந்தர், சினேகாவுடன் சன் ரீ வி யில் ஒரு கலைநயம் மிக்க ஒரு சரவணபவன் புடவை கடை விளம்பரத்தில் வந்தார்,பின்னர் ஆளில்லை.கலியாணம் பண்ணி கேரளாவிள் செற்றில்ஆகிவிட்டார்.

கார்த்திக் இப்பவும் ஐந்து நிமிட சீன்கள் தான் போலும் ,அதுதான் ஆறு படத்தில் பார்த்தது ..

அதைவிட ஒருவர் சாயி கைலாசின் கீழ்உதவி இயக்குனராகாக பிரபலமாகின்றார்.

இவர்கள் எல்லோருக்கும் “பிரேக் “ கிடைக்க இறைவனை தான் வேண்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஞாயிறு பின்னேரம் 3 க்கு போய் இருபது டொலரை வீணாக்க வேண்டுமா என நான் யோசித்துகொண்டிருக்க, சன் டி வி பார்த்துக்கொண்டிருந்த மனைவி கூப்பிட்டார் “அப்பா இஞ்சை வந்து பாருங்கோ யார் டி வி யில் நிற்கின்றார் என்று “. நானும் எட்டிப்பார்த்தேன். சூர்யா,திரிஷா நடித்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதில் சூர்யா ஒரு இளைஞனை பேசிக்கொண்டிருந்தார் .”அட நம்ம கார்த்திக்.ஆள் அப்படியே இருக்கு,பாவம் இப்பவும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளுடன் தான் போல தான் கிடக்கு இவர் நடிப்பு ”.

பத்துவருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு ஒருமாத கனவுப் பயணம் போனோம்.கன்னியாகுமாரி ,நாகர்கோவில் ,கேரளா படகு வீடு,கோவளம் கடற்கரை,மைசூர்,ஊட்டி,பின் சென்னையும் முக்கியமாக மனைவியின் சொப்பிங்.மூத்த அக்கா போன் பண்ணி சொன்னா “சாலிக்கிராமத்தில் உள்ள தனது வீடு (3 BR FLAT) சும்மா தான் கிடக்கு விருப்பமென்றால் சென்னையில் நிற்கும் போது அங்கு போய் தங்கு என்று”ஓமென்று திறப்பை வாங்கிக்கொண்டேன்.

மதியம் இரண்டு மணி சென்னை போய் இறங்க ஆடி வெக்கை தனது வேலையை காட்டிக்கொண்டிருந்தது,நேர கோல் டாக்சி பிடித்து அக்கா வீட்டிற்கு போனோம்,சாமான்களை அங்கு வைத்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுத்து பயணம் தொடர திட்டம்.அங்கு போய் பூட்டைதிறந்து உள்ளே போனால் கரண்ட் இல்லை.வெளியில் வந்து பியுசை பார்த்தால் காணவில்லை,துண்டு வைத்திருக்கு ஏதோ மூவாயிரத்து சொச்சம் கட்ட வேண்டும் என்று.அருகில் இருப்பவர்களிடம் விபரம் கேட்டு போய் ஒருமாதிரி பில்லையும் கட்டி பியுசையும் வாங்கிவந்து பொருத்தி அப்பாடா என்று சாய்ந்தால்,

மனுசி ஒரு குண்டை தூக்கி போட்டார்” மூத்தமகன் பிறக்கேக்க சுகபிரவசம் என்றால் தான் மொட்டை அடிப்பதாக நேர்த்தி வைத்ததாக”

“இஞ்ச பாரும் இனி ஒரு பிளானும் மாத்தி திருப்பதி போக முடியாது ,அப்படி நேர்த்தி வைத்ததை இஞ்சை வந்து இப்ப சொன்னால் இனி ஏலாது,அப்படியென்றால் வடபழனியில் மொட்டையை போடும்.”

“சரி, ஆனால் மொட்டை அடித்தபின் போட விக் வாங்கவேண்டும்.சும்மா இளக்கமான செயற்கை மயிரிலான விக்கில்லாமல் ஒறியினல் மயிரில் செய்த விக், இப்ப இருக்கின்ற மயிர் மாதிரியே ஓர்டர் பண்ணி செய்யலாமாம்”

ஓம் என்று தலையை ஆட்டினேன்.ஆனால் பேய்க்கொதி. மகன்,நேர்த்தி என்று இழுத்துவிட்டதால் கடத்தவும் முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஆள் T.V.I யில் ஒரு நிகழ்ச்சி வேறு நாடாத்திக்கொண்டிருந்ததால் முன்னர் இருந்த அதே HAIR STYLE இல் விக் வேண்டுமாம்.பிள்ளைகள் களையில் படுத்துவிட்டார்கள்.கடவுளே என்று காலாற நடக்க பதினைந்து வருடங்களுக்கு பின் புழுதியில் இறங்கினேன்.வியர்வை ஆருவியாய் கொட்டுது.நாடக சீரியலில் வரும் இடங்கள் போல சாலிக்கிராமம் ஓரளவு வசதியுடன் குளிர்மையாக இருந்தது. வடபழனிக்கு அருகில் இருப்பதால் சினிமாக்காரர்களின் ஆதிக்கம்,திரும்பும் இடமெல்லாம் படங்களிலோ,சீரியல்களிலோ பார்த்த துணை நடிக,நடிகைளின் முகங்கள்.குட்டி போலிஸ் நிலையம் சற்று திரும்ப உயர்ந்த கறுப்பு கேட் உடன் விஜய் வீடு.பரோட்டாவும் கறியும் கூலாக இரண்டு கிங்பிசரும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

தொடக்கம் சூப்பர் அண்ணா.  பரோட்டா வித் கிங்பிஷர் குட் சாய்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அழகண்ணா.  தொடர வாழ்த்துக்கள்.

நல்ல நக்கலாக செல்கிறது. 

Link to comment
Share on other sites

உண்மைதான் அர்ஜுன், திரைக்கு பின்னால் பலரது வாழ்க்கை இன்னும் வெளிச்சத்தை தேடி ஓடி கொண்டு தான் இருக்கிறது.

என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கும் திருப்பம் வரும், ஆனால் அப்படி திருப்பம் கிடைத்தவர்கள், தங்களை போல இருந்தவர்களுக்கு கை கொடுக்கவேண்டும். இப்படி ஒரு சங்கிலி தொடர் பிணைப்பு இருந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கைக்கு விடிவு கிடைக்கும்.

நன்றி உங்கள் அழகான பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.