Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி நான் தாங்கிடுவேன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நான் தாங்கிடுவேன்...

அப்பன் அடித்தாலே

ஆவென்று அலறுபவன்

எப்பன் நோவெனிலும்

ஏலாமல் கிடந்தமவன்

முற்றம் முழுதும்-பிணமாகிச்

சுற்றங்கள் செத்கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

கோழி அடைகிடக்க

குஞ்சுக்காய் தவித்தமகன்

கேவி அழமுதலே ஊரை

கூவி அழைத்த மகன்

கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள்

கொத்துக்கொத்தாய் செத்தகதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

விக்கல் எடுத்தாலே

கெக்கலித்து நின்றமவன்

முள்ளுத் தைத்தாலே பாயில்

மூன்று நாள் படுத்த மவன்

செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம்

சிதறிப் பிளந்த கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

நெருப்புச் சுட்டாலே

நேர்த்திக்கடன் வைச்ச மவன்

கறுப்பு காத்தென்று

திருஸ்டி சுத்திப் போட்டமவன்

கருகிப் பொஸ்பரஸில்-என்னினம்

பொசுங்கிக் கிடந்த கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பெத்தவளைக் கணநேரம்

பிரிஞ்சு செத்த மவன்

புத்தி பேதலித்துப் போகுமிடம்

புரியாமல் நின்றமவன்

செத்ததாய் மார்பினிலே-எம் குழந்தை

ரத்தம் குடித்த கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பட்டினியாய் நோன்பிருக்கும்

தாய்க்காய்ப் பரிதவித்துப்போன மவன்

பசியறியா நாய் வளர்ந்த வீட்டுப்

பாசத்தில் வளர்ந்த மவன்

ஒட்டிய வயிற்றுடன் பிஞ்சுகள் - உணவுக்காய்

ஓலமிட்டு அழுத கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பொன்வண்டு செத்தற்காய்

பொங்கிப்பொங்கி அழுத மவன்

தும்பிச் செட்டை உடைந்ததற்க்காய்

துடிதுடித்துப் போன மவன்

சொந்தங்கள் சிதறிப்போக - ரத்தத்தால்

நந்திக்கடல் சிவந்த கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

செம்பருத்தி பட்டதிற்கு

சேதி சொல்லித் திரிஞ்ச மவன்

புங்கை மரம் முறிந்து விழ

புதுக் கன்று நட்டமவன்

எங்கள் குலம் அழிந்துபோக - உலகம்

செங்கம்பளம் விரித்தகதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

தொலைந்துபோன பூனைக்காய்

அலைந்தலைந்து திரிந்த மவன்

கலைந்து போன குளவிக்கூட்டுக்கு

காவல் இருந்த மவன்

கூட்டமாய் வந்தவர்கள் - கடற்கரையில்

குடும்பமாய் தொலைந்த கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே..

கொத்துக்கொத்தாய்ச் செத்துப்போக

பித்துப்பிடிச்சு நின்ற மவன்

செத்துச் செத்துப் பிழைத்தபடி

உலகின் சேதிக்காய் தவித்த மவன்

பரிதவித்து நாம் கிடக்க - நீதியின்றி

பாதி உயிர் போயிடுச்சே...

மே மாம் வந்திடுச்சே

மீதி உயிர் தின்றிடவே...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதைக்கு

அஞ்சலிக்காக என்பதனால்

அதிகம் எழுத விருமபவில்லை.

பட்டினியாய் நோன்பிருக்கும்

தாய்க்காய்ப் பரிதவித்துப்போன மவன்

பசியறியா நாய் வளர்ந்த வீட்டுப்

பாசத்தில் வளர்ந்த மவன்

ஒட்டிய வயிற்றுடன் பிஞ்சுகள் - உணவுக்காய்

ஓலமிட்டு அழுத கதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

மனதை இறுக்கப் பூட்டிய

கதவுகளுக்கு

எட்டுமா உன்குரல் ?

வலிகளில் இருந்துதான் வலிமையும் பிறக்கும். ஆனால்... அதற்கொரு காலம் தேவைப்படும்.

2009 மே மாத வலிகளை மறந்து வலிமைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இனிமேலும் அழுதுபுரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டு காலங்கடத்தாமல் போராட முன்வர வேண்டும்.

"செய் அல்லது செத்துமடி!" என்று வேதம் கற்பித்துப் போனவர்களின் தியாகங்களுக்குரிய இலட்சியங்களை அடைய இனிமேலும் அழுதுகொண்டிருக்காமல் ஏதோவொரு வகையிலேனும் போராட முனைவதே விடியலைக் கொண்டு வரும்.

வலிகளை தாங்கிவரும் வரிகளின் வலிகளை தாங்கித்தான் ஆக வேண்டும்!

இன்னும் தாங்க வேண்டியவை நிறையவே இருக்கின்றது.

கவிதைக்கு நன்றி சுபேஸ்!

வலிக்கே வலி வரும் வலி மிகு வரிகள்.... எந்த மானுட இனமும் எதிர்கொள்ளாத பெரும் அவலம் எம் இனம் எதிர் கொண்டது. குழந்தை துடி துடிக்கும் போது அரவணைக்க முடியாது பெரும் காயங்களுடன் பரிதவித்த தாய்மார்களின் கதைகளும், தன் கண் முன்னே தன் பிள்ளைகள் சிதறுவதை தாங்காது தவித்த தந்தைமார்களின் கதைகளும், சாவு பற்றி அறிய முன்னமே ஆயிரம் சாவு பார்த்த குழந்தைகளின் கண்ணீர் கதைகளும் என எங்கு பார்த்தாலும் மகா துயரமே வியாபித்து கிடக்கின்றது.

ஒரு கோடி கவிதைகளில் சொன்னாலும் இவர்களின் துயரங்களில் ஒரு துளியைச் சொல்லவே எங்களால் முடியும்...

கவிதைக்கு நன்றிகள் சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....என்கிற பெருமூச்சைத் தவிர வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை

வரிக்கு வரி நெரிஞ்சி முள் வைத்துத் தைத்திருக்கிறாய்.

என்னத்தப்பா சொல்லிறது?

கை ஏலாதவர்களாய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம். எஞ்சியுள்ள சனமும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றல்ல இரண்டல்ல லட்சக்கணக்கில்

இழந்தவர்களின் கொடுமைகள்.

முடிவென்பது ஒரு ஆரம்பம்

கவிதைக்கு நன்றி சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • like this :D

  • கருத்துக்கள உறவுகள்

மரத்துப் போன உணர்வுகளை சிலிர்க்க வைக்கும் வரிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

செம்பருத்தி பட்டதிற்கு

சேதி சொல்லித் திரிஞ்ச மவன்

புங்கை மரம் முறிந்து விழ

புதுக் கன்று நட்டமவன்

எங்கள் குலம் அழிந்துபோக - உலகம்

செங்கம்பளம் விரித்தகதை

எப்படி நான் தாங்கிடுவேன்

ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே..

அருமையான வரிகள், சுபேஸ்!

அடி மனத்தின் ஆழத்தில், முள்ளாக நெருடுகின்றன!

நாட்டுதமிழ், அழகு!

இதில என்ர பெரும் அடிபடுகிற மாதிரி கிடக்குது? :D

வாழ்த்துக்கள் தம்பி!

எங்களின் வலி சுமந்த வாழ்கையை திரும்ப கண் முன்னே காட்டடியுள்ளிர்கள். அழகான எதார்த்தமான வரிகள் .

நன்றி சுபேஷ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.