Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிளான் டீயும் கறுவா பட்டையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு,

காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன்றை சாப்பிட்டுபோட்டு, அங்கே ஏதாவது விளையாட்டுகள் விளையாடிப்போட்டு, 3.30 மட்டும் இருந்து படித்துபோட்டு வந்தால் அது முழு நேரம்....

சரி உந்த கதைகளை விட்டுப்போட்டு,

நான் படிச்ச பள்ளிகூடத்துக்கு முன்னாலே ஒரு கடை இருந்தது, அதுக்கு பேர் ஐயர் கடை..அதேன் ஐயர் கடை என்று கேக்கப்படாது....அது ஐயர் கடைதான்...ஆனால் முதலாளி ஒரு ஐயர் இல்லை. அவருக்கு பேர் தங்கராசா..அந்தகடையில அந்தக்காலத்தில ஒவ்வொரு நேரத்தில ஒவ்வொன்று பேமஸ், இப்ப கண்காச்சிகள் வருகுது எண்டால் "பிரிஸ்டல்" போட் என்கிற காட் போட் மட்டைகள் பேமஸ், அதே மாதிரி, பட்டம் விடுற காலம் என்றால் திசு பேப்பர், நைலான் நூல்..ஆனால் எல்லாக்காலமும் பேமஸ் என்றால் எங்கடை கறுவாதான். 5 சதம், 10 சதம் குடுத்தால், ஒரு 2 , 3 பேருக்கு குறையாமல் வாய், எரிகிற அளவிற்கு தருவார்கள்...பிரச்சனை என்ன வென்றால், உந்த சோட் இன்டவல் இல் சிலவேளைகளில் போய் வாங்க நேரம் கிடைக்காது- காசும் இருக்கேக்க, அது வலு அரிதாகத்தான் நடக்கிறது எண்டாலும்--

அந்த நேரத்தில தான், பழம் நழுவி பாலில விழுந்தது மாதிரி, எங்கட சட்டம்பியார் சொல்லுவார், போய் அதுக்கு பக்கத்தில இருக்கிற செல்லத்துரை கடையில பிளான் டி வாங்கி வா என்று. அவர் அதுகொண்டு ஒரு "யாம்" போத்தில் வைத்திருக்கிறார், சொல்லி விடுவார் " வடிவா பைப்பில கழுவிக்கொண்டு போக வேண்டும்" என்று. நாங்களும், - கனதரம் நான்தான் செய்திருக்கிறேன், மற்றாக்களுக்கு அந்த பாக்கியம் குறைவு என்றுதான் நினைக்கிறன்-யாம் போத்தலை கொண்டு போகிறது..ஒரு 600 - 700 மீட்டர்க்கு குறையாமல் வரும்.

ஒரு கையில பிளான் டீயும் மறுகையில் கறுவா பட்டையுமாய் நடக்கிறது..அதுவும் மற்றாக்களுக்கு பாடம் நடக்கையில்.....

அந்த சட்டம்பியார் ஒரு தெய்வம்..எனக்கு அவற்றை மரண வீட்டிற்கும் போக சந்தர்பம் கிடைத்தது...அருமையான மனிதன்...என்னை உருவாக்கியவர்களில் கணிசமான பங்கிற்கு உரியவர் ..3 வருடம் எனது வகுப்பாசியர் ஆக இருந்தவர்..

அந்த சட்டம்பியார் ஒரு தெய்வம்..எனக்கு அவற்றை மரண வீட்டிற்கும் போக சந்தர்பம் கிடைத்தது...அருமையான மனிதன்...என்னை உருவாக்கியவர்களில் கணிசமான பங்கிற்கு உரியவர் ..3 வருடம் எனது வகுப்பாசியர் ஆக இருந்தவர்..

இப்பிடிப்பட்ட சட்டாம்பியளாலைதான் நாங்கள் இண்டைக்கு தலைநிமிந்து கருத்துக்களத்திலையும் குப்பை கொட்டிறம் . என்ரை சீவயத்தில ரெண்டு தமிழ்படிப்பிச்ச சட்டாம்பி வாத்திமாரை மறக்கேலாது . ஒண்டு கோப்பாய் கிறீஸ்தவகல்லூரி நடராஜலிங்கம் வாத்தியார் , பேந்து யாழ் இந்து ராமலிங்கம் வாத்தியார் . அனுபவித்து எழுதியிருக்கிறியள் எரிமலை . இப்பிடி உருப்படியான வேலையள் ஏதாவது செய்யுங்கோ அப்ப யாழ் கொடிகட்டிபறக்கும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு அருமையாக எழுதி இருக்கிறிர்களே நேரம் ஒதுக்கு கொஞமாச்சும் இன்னும் எழுதலாமே?

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் [size=4]Volcano அண்ணா. :) [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பகிர்விற்கு நன்றி [/size]

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல குரு கிடைப்பது ஒரு வரம். அதுவும் சிலர்தான் கிடைப்பார்கள். அவர்களை மறக்க முடியாது.

நான் ஆறாம், எழாம் வகுப்புப் படிக்கும் பொழுது மதிய இடைவேளையின் பின் எல்லா பொடியனுகளின் பொக்கட்டுகளிலும் கறுவா இருக்கும்.

எரிமலை அண்ணா, நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். :)

பாடசாலை, என் ஆசிரியர்கள், பட்டம், கறுவா என அனைத்தும் நினைவுக்கு வருகிறது.

பச்சை முடிந்து விட்டது. பின்னர் போடுகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ ஆச்சரியமாகவுள்ளது தொடர்ந்தும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி வொல்கானோ

அந்த சட்டம்பியார் ஒரு தெய்வம்..எனக்கு அவற்றை மரண வீட்டிற்கும் போக சந்தர்பம் கிடைத்தது...அருமையான மனிதன்...என்னை உருவாக்கியவர்களில் கணிசமான பங்கிற்கு உரியவர் ..3 வருடம் எனது வகுப்பாசியர் ஆக இருந்தவர்..

இப்பிடிப்பட்ட சட்டாம்பியளாலைதான் நாங்கள் இண்டைக்கு தலைநிமிந்து கருத்துக்களத்திலையும் குப்பை கொட்டிறம் . என்ரை சீவயத்தில ரெண்டு தமிழ்படிப்பிச்ச சட்டாம்பி வாத்திமாரை மறக்கேலாது . ஒண்டு கோப்பாய் கிறீஸ்தவகல்லூரி நடராஜலிங்கம் வாத்தியார் , பேந்து யாழ் இந்து ராமலிங்கம் வாத்தியார் . அனுபவித்து எழுதியிருக்கிறியள் எரிமலை . இப்பிடி உருப்படியான வேலையள் ஏதாவது செய்யுங்கோ அப்ப யாழ் கொடிகட்டிபறக்கும் .

ராமலிங்கம் வாத்தியாரோ சிவராமலிங்கம் வாத்தியாரோ கோமகன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி......................

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு,

காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன்றை சாப்பிட்டுபோட்டு, அங்கே ஏதாவது விளையாட்டுகள் விளையாடிப்போட்டு, 3.30 மட்டும் இருந்து படித்துபோட்டு வந்தால் அது முழு நேரம்....

ஆங்காங்கே ஊடுருவியுள்ள நகைச்சுவையுடன் கதையை... நகர்த்திச் சென்ற விதம் அழகு,எரிமலை :rolleyes: .

பகிர்விற்கு நன்றி வொல்கானோ

ராமலிங்கம் வாத்தியாரோ சிவராமலிங்கம் வாத்தியாரோ கோமகன் :D

சிவராமலிங்கம் மாஸ்ரர் என்று, நினைக்கின்றேன் வாத்தியார்.

சிவராமலிங்கம் மாஸ்ரர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவர் வைத்திருக்கும், பொல்லால்... செல்லமாக அடி வாங்க குடுத்து வைச்சிருக்க வேணும் :D .

கோமகனுக்கும் வயசு போட்டுது. அதாலை... ஞாபக மறதி கூடிப்போச்சுது :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், வோல்கனோ!

கதை நன்றாக இருக்கின்றது!

ஆங்காங்கே ஊடுருவியுள்ள நகைச்சுவையுடன் கதையை... நகர்த்திச் சென்ற விதம் அழகு,எரிமலை :rolleyes: .

சிவராமலிங்கம் மாஸ்ரர் என்று, நினைக்கின்றேன் வாத்தியார்.

சிவராமலிங்கம் மாஸ்ரர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவர் வைத்திருக்கும், பொல்லால்... செல்லமாக அடி வாங்க குடுத்து வைச்சிருக்க வேணும் :D .

கோமகனுக்கும் வயசு போட்டுது. அதாலை... ஞாபக மறதி கூடிப்போச்சுது :lol: .

அதாரது, சிவராமலிங்கம் வாத்தியாரைப் பற்றிக் கதைக்கிறது?

அவரைச் சையிக்கிளில் ஏற்றித் திரிந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை! இனிமையானவை! :D

பகிர்விற்கு நன்றி வொல்கானோ

ராமலிங்கம் வாத்தியாரோ சிவராமலிங்கம் வாத்தியாரோ கோமகன் :D

நாக்கு தவறீட்டுதண்ணா . சிவராமலிங்கம் வாத்தியார்தான் . நாலுமுளம் வேட்டியும் வெள்ளை சேர்ட்டோடை தான் வருவார் . அவரிட்டை , பொன்னரிட்டை , பொ னா சா னாவிட்டை சொட் வாங்க குடுத்து வைச்சிருக்கவேணும் . மற்றது சிறியர் இது அனியாயம் .

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. வொல்கேனோ, தொடர்ந்து எழுதுங்கள்.

நாங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு அருகிலும் ஒரு ஐயர் கடை இருந்தது. சின்ன இன்ரேவலுக்கு நண்பர் ஒருவர் (கனடாவில் இருக்கிறார்) சம்பலுக்குள் சீனியை கலந்து விட்டு வந்து விடுவார். :lol: இனிமையான காலங்கள் அவை.

  • கருத்துக்கள உறவுகள்

அதாரது, சிவராமலிங்கம் வாத்தியாரைப் பற்றிக் கதைக்கிறது?

அவரைச் சையிக்கிளில் ஏற்றித் திரிந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை! இனிமையானவை! :D

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, ஊருக்குப் போன போது... சிவராமலிங்கம் மாஸ்ரர் வீட்டுக்குச் சென்று, நலம் விசாரித்தேன்.

அவரின் மனைவி, யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது... நாவற்குழி பாலத்தடியில் இறந்துவிட்டதாக அறிந்தேன்.

அவரும்.. நாலைந்து வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார் என கேள்விப்பட்டேன்.

ஆசிரியருக்கும், மாணவருக்கும் நல்ல நட்புபூர்வமான உறவுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சிவராமலிங்கம் மாஸ்ரர்.

அவரின் பிள்ளைகள் எங்கிருந்தாலும், நன்றாக வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாம் ஒரே செற்போல கிடக்கு...எல்லாரும் சிவராமலிங்கம் வாத்தி எண்டு கதைக்கிறியள்..எனக்கு யாரெண்டு தெரியேல்லை..மன்னிக்கணும்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.