Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாவியார் போகுமிடம்

Featured Replies

காதலுக்குள்ளும்

மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம்

பணத்திற்குள்ளும்

பகட்டுக்குள்ளும்

பனித்துளியாகி விட்ட பாசங்கள்

உறவுகளை தேடி

உரைத்திட மொழியின்றி

படித்திட வரியின்றி

கண்களில் கண்ணீர்

கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது

சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது

தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது

தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம்

வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி

வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள்

நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள்

வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள்

ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல்

ஆயிரம் முறை ஆப்பு வைக்க காத்திருப்பார்கள்

குட்ட குட்ட குனிந்து கொண்டிருக்கவும்

குட்டிக்கொண்டு இருப்பார்கள் கொடியவர்கள்

ஆதரவாய் கை கொடுக்க நினைக்கும் உறவுகளையும்

கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் வைக்கும் இந்த உறவுகள்

பார்வையில் தெளிவு இருந்தாலும் போகும் வழியும் புரிந்து இருந்தாலும்

பாவிகள் போகும் பாதை எல்லாம் பள்ளமும் திட்டியுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல்

ஆயிரம் முறை ஆப்பு வைக்க காத்திருப்பார்கள்

குட்ட குட்ட குனிந்து கொண்டிருக்கவும்

குட்டிக்கொண்டு இருப்பார்கள் கொடியவர்கள்

பாராட்டுகள் ரமா நல்ல வரிகள் அது சரி ஆப்பு என்ன விலை போகுது இப்ப மலிவிலை போட்டீருக்கா?? இல்லை எனக்கு கொஞ்சம் தேவை படுது அதுதான் சரி தொடர்ந்து எழுதுங்கள் ராமா

  • தொடங்கியவர்

பாராட்டுகள் ரமா நல்ல வரிகள் அது சரி ஆப்பு என்ன விலை போகுது இப்ப மலிவிலை போட்டீருக்கா?? இல்லை எனக்கு கொஞ்சம் தேவை படுது அதுதான் சரி தொடர்ந்து எழுதுங்கள் ராமா

ஆகா உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் சாத்திரி. ஆப்பு உங்களுக்கு இன்னும் மலிவாக வரவில்லையா? நம்ம இனம் இருக்கின்ற இடங்களில் கொஞ்ச நாளைக்கு இருந்து பாருங்கள் மலிவாக என்ன இலவாசமாக தந்து விட்டு போவார்கள் ஆப்பு. :lol:

என்ன ரமா ரொம்ப நொந்து போய் இருக்கிறீங்கள் போல. கவிதை அருமை ரமா. வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் ரமா!

கவி வரிகள்சூப்பர்

எமது சமுதாயத்தை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க...வாழ்த்து

ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல்

ஆயிரம் முறை ஆப்பு வைக்க காத்திருப்பார்கள்

ரமாக்கா நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமா உங்களது கவிதையை படித்து இந்த பறவைகள் கவலை கொள்கின்றது. மானிடருக்குள் இருக்கும் இற்த ஆப்வு வைக்கும் பழக்கம் அகிர்திணையான மிருகங்களுக்குள் இல்லையே! ஐந்தறி படைத்தவர்கள் என்று கீழ்தரமாய் கதைக்கும் மனிதனின் ஆறவது அறிவு யார் வீட்டில் வாடகைக்கு கிடக்கிறதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரமா ரொம்ப நொந்து போய் இருக்கிறீங்கள் போல. கவிதை அருமை ரமா.  வாழ்த்துக்கள்

இதுக்கு தான் சொல்லுறது இரசிகை கவிதை ரசிச்சிட்டு பொகவேணும் என்று :P . அவாட வாழ்கை நொந்த என்ன நோ எண்னையே போட போறீங்க.. :wink: போட்டாலும் நோ மாறவா போகுது.கவிதையை படிச்சமா கருத்து வைச்சமா போனமா என்றிருக்கனும். :evil:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வருபவர்கள் எல்லாம் ஆப்பு வைக்க வழிதேடுபவர்களா?

அல்லது ஆப்புத் தேடுகிறவர்களா?

ரமா கவிதையில் சொல்ல வந்த விடயம் சில இடங்களில்

தெளிவு குறைந்தாலும் கருப்பொருள் சிறப்பானதே.

தொடரும் பயிற்சி ஆளுமை கொடுக்கும்.

வல்வை சகாறா

  • தொடங்கியவர்

ரசிகை

என்ன ரமா ரொம்ப நொந்து போய் இருக்கிறீங்கள் போல. கவிதை அருமை ரமா. வாழ்த்துக்கள்

வாழ்க்கையே நோ தானே ரசிகை. அப்படியல்ல வேலைத்தளத்தில் ஓரு சோக கதை கேட்டதின் விளைவு தான் இந்த கவிதை. வாழ்த்துகளுக்கு நன்றி ரசிகை.

தாரணி

வாழ்த்துக்கள் ரமா!

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தாரணி

புறா

கவி வரிகள்சூப்பர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் புறா

கெளரிபாலன்எமது சமுதாயத்தை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க...வாழ்த்து

ம்ம்..கவிதை நன்றாக இருக்கு ரமாக்கா..

இடைக்கிட சோகம்., கோவம் எல்லாம் தெரியுது :roll:

ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல்  

ஆயிரம் முறை ஆப்பு வைக்க காத்திருப்பார்கள்  

குட்ட குட்ட குனிந்து கொண்டிருக்கவும்  

குட்டிக்கொண்டு இருப்பார்கள் கொடியவர்கள்

இதுக்கெல்லாம் கவலையா ரமாக்கா..இன்னும் கொஞ்சம் பெரிய ஆப்பா திருப்பி வைக்க வேண்டியது தானே..இல்லை என்றால்>>உங்க கவியிலேயே பதில் இருக்கே...அவர்கள் குட்டிக்கொண்டே இருப்பார்கள்.. :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி

வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள்

நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள்

உங்க கவிதையில பிடித்தமான வரிகள் ரமா.. :roll: வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு. மேலும் உங்கள் உணர்கள் கவிகளாகட்டும். காத்திருக்கிறோம் உங்கள் கவிக்காய்.

நல்ல கவிதை. அக்கா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். சிறுகதையும் எழுதுங்கோ. :P

  • கருத்துக்கள உறவுகள்

ராம நல்ல கவிதை வாழ்த்துகள்

நானும் கவிதை எழுத நினைத்தனான் நினைக்கும் பொழுது வார்த்தை முட்டுது அதை எழுத நினைக்கும் போது .............

ராம நல்ல கவிதை வாழ்த்துகள்

நானும் கவிதை எழுத நினைத்தனான் நினைக்கும் பொழுது வார்த்தை முட்டுது அதை எழுத நினைக்கும் போது .............

என்ன புத்தா கமல் ரேஞ்சுக்கு போயிட்டியள் :roll:

இருதடவை பதியப்பட்டுவிட்டது மன்னிக்கவும் :cry:

எல்லா வரிகளுமே நன்றாக இருக்கு ... நல்லா உண்ர்ந்து எழுதியிருக்குறீங்க... வாழ்த்துக்கள் ரமா அக்கா..! :lol:

பணத்திற்குள்ளும்

பகட்டுக்குள்ளும்

பனித்துளியாகி விட்ட பாசங்கள்

இந்த வரிகளும் உண்மையான வரிகள்...

சகி சொல்வது போல் பெரிய ஆப்பா திருப்பி வைக்கலாம் ... ஆனாலும் அந்த அளவுக்கு துணிவு வேணுமே... :lol:

  • தொடங்கியவர்

ப்ரியசகி

ம்ம்..கவிதை நன்றாக இருக்கு ரமாக்கா..  

இடைக்கிட சோகம்., கோவம் எல்லாம் தெரியுது  

மேற்கோள்:  

ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல்  

ஆயிரம் முறை ஆப்பு வைக்க காத்திருப்பார்கள்  

குட்ட குட்ட குனிந்து கொண்டிருக்கவும்  

குட்டிக்கொண்டு இருப்பார்கள் கொடியவர்கள்  

இதுக்கெல்லாம் கவலையா ரமாக்கா..இன்னும் கொஞ்சம் பெரிய ஆப்பா திருப்பி வைக்க வேண்டியது தானே..இல்லை என்றால்>>உங்க கவியிலேயே பதில் இருக்கே...அவர்கள் குட்டிக்கொண்டே இருப்பார்கள்..

உங்கள் கருத்துகளுக்கு நன்றி சகி. மெல்லிய சோகம் நிறைய கோபத்தை வைத்து தான் இதை எழுதினேன். பெரிய ஆப்பாக திருப்பி வைக்கலாம் தான் ஆனால் நா.. கடித்தால் அதை நாம் திருப்பி கடிக்க இயலாது தானே :lol:

விஸ்ணு

மேற்கோள்:  

வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி  

வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள்  

நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள்  

 

உங்க கவிதையில பிடித்தமான வரிகள் ரமா..  வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு. மேலும் உங்கள் உணர்கள் கவிகளாகட்டும். காத்திருக்கிறோம் உங்கள் கவிக்காய்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி விஷ்ணு. நீங்களும் அந்த வரிகளை அனுபவத்தில் கண்டீர்களா?

வெண்ணிலா

நல்ல கவிதை. அக்கா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். சிறுகதையும் எழுதுங்கோ.

கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நிலா. சிறுகதையும் எழுத ஆசை தான். நேரங்கள் கிடைப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது. கிடைக்கும்போது கட்டாயம் எழுதுவேன்.

puttan

ராம நல்ல கவிதை வாழ்த்துகள்  

நானும் கவிதை எழுத நினைத்தனான் நினைக்கும் பொழுது வார்த்தை முட்டுது அதை எழுத நினைக்கும் போது .............

உங்கள் கருத்துகளுக்கு நன்றி புத்தன்

நானும் இப்படிதான் நினைத்து பல பேப்பர்களை கிழித்து போட்டு கொண்டு இருந்தேன். இப்போ கொஞ்சம் எழுததொடங்கி விட்டேன். நீங்களும் எழுத தொடங்குங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.

அனிதா

எல்லா வரிகளுமே நன்றாக இருக்கு ... நல்லா உண்ர்ந்து எழுதியிருக்குறீங்க... வாழ்த்துக்கள் ரமா அக்கா..!  

மேற்கோள்:  

பணத்திற்குள்ளும்  

பகட்டுக்குள்ளும்  

பனித்துளியாகி விட்ட பாசங்கள்  

இந்த வரிகளும் உண்மையான வரிகள்...  

சகி சொல்வது போல் பெரிய ஆப்பா திருப்பி வைக்கலாம் ... ஆனாலும் அந்த அளவுக்கு துணிவு வேணுமே...

உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அனிதா... ம்ம் அந்த துணிவு நமக்கும் இல்லை அனிதா.

என்ன சொல்ல - கணணியின் முன்னால் இருந்து வாசிப்பவர் எல்லாரையும் - ஏதோ குறு குறுக்க வைக்குமோ?

பொதுவாய் சொல்லி எழுதிய உங்கள் கவியின் - கோவம்-

எல்லோர்மேலும் - ஏதோவகையில் பாயும் என்பது உண்மை-!

தொடருங்கள்- இதுபோலவே- மேலும்! 8)

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் வர்ணன். இந்த கவியை திருப்பி படிக்க எனக்கும் அந்த குறுகுறுப்பை உணரக்கூடியதாக இருக்கு.

கவி நன்றாக இருக்கிறது.

அதிகமாகத் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றீங்

ஆதரவாய் கை கொடுக்க நினைக்கும் உறவுகளையும்

கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் வைக்கும் இந்த உறவுகள்

பார்வையில் தெளிவு இருந்தாலும் போகும் வழியும் புரிந்து இருந்தாலும்

பாவிகள் போகும் பாதை எல்லாம் பள்ளமும் திட்டியுமாம்

¨¸ ¸ðÊ ¿¢ýÚ §ÅÊ쨸 À¡÷ì¸ ¨ÅìÌõ þó¾ ¯È׸û..... ±ýÚ Å󾡸 þýÛõ ¿øÄ¡Â¢ÕìÌõ §À¡Ä¢Õ츢ÈÐ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா, நல்லதொரு கவிதையைத் தந்ததிற்கு எனது பாராட்டுக்கள்.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல் தமிழ் பேசப்பேச, எழுத எழுத நன்றாக வளரும். உங்கள் தமிழ் வளர்ச்சியையும், கவிதை வளர்ச்சியையும் கண்டு நான் மனம் மகிழ்கிறேன்.

தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களையே குட்டிக்காட்டுவோர் முன் தவறுகளை களத்திலேயே சுட்டிக்காட்டுங்கள் என்று கூறுவதில் ராமா முன்னணியில் நிற்கிறார். இது ரமாவின் தமிழ் ஆர்வத்தையும், தமிழ்ப்பற்றையும் காட்டுகிறது. நிச்சயம் ரமா நல்லதொரு தமிழ் ஆர்வலராக வருவார் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.