Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா??

 

 

 

http://www.youtube.com/watch?v=MC67z3OByRU

பார்க்கவில்லை முழுதாக வீட்டில்தான் பார்க்கனும், பிள்ளை வளர்ப்பில் இருவரின் பங்கிற்க்கும் முக்கியத்துவமிருக்கு, அடுத்து யார் கூட நேரம் பிள்ளைகளுடன் இருக்கின்றார்கள் என்பதைப்பெறுத்தும் இருக்கு. நல்ல திரி, நன்றி நுனாவிலான்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க வீட்டில அம்மாதான் 

பிள்ளை வளர்ப்பில் இருவரின் பங்கிற்க்கும் முக்கியத்துவமிருக்கு

தாயகத்தில் பெற்றோரால் முடியாவிட்டால்..  ஊரும் வளர்க்கும் .


புலத்தில் பெற்றோர் மட்டுமே வளர்க்க முடியும், ஆனால் அதுவும் கடினமானது, சவால்கள் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொரு நாளும் அவர்களுடன் ஒரு மணித்தியாலம் என்றாலும் செலவழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடம் பிள்ளைகளுடன் வீட்டில் அம்மாவாக இருந்த போது கண்டறிந்தது அம்மா என்னும் தொழில் மிகவும் கடினமானது.

பெண்களுக்கு உள்ள சக்தி, பொறுமை எங்களுக்கு இல்லை.

 

தொழில் என்பது சரியல்ல.

தயவு செய்து மாற்றி  விடுங்கள்

பெண்களுக்கு உள்ள சக்தி, பொறுமை எங்களுக்கு இல்லை.

எல்லா தாய்களுக்கும் ஒரு சலூட்.

பல வீடுகளிலும் இருவரும் சம பங்கெடுத்து பிள்ளைகளைப் பராமரித்தாலும் தாயிடம் உள்ள அர்பணிப்பு தந்தையிடம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவரின் பங்களிப்பும் முக்கியமானது இருப்பினும் 'தாயின் பங்களிப்பு இன்றியமையாதது. தாயான பின்னர் தான் தாய்மை' ஏன் போற்றப்படுகின்றது? மதிக்கப்படுகின்றது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

 

பொறுமையும், அர்ப்பணிப்பும் மிக அதிகம் தேவை.

பொறுப்புணர்விலும் கடமையுணர்விலும் இருவருக்கும் சம பங்கு உண்டு இருப்பதால் இருவருக்குமே பிள்ளை வளர்ப்பதில் சம பங்குண்டு. ஆணாலும் திறமாக பிள்ளையை பராமரித்து வளர்க்க முடியும் என்பதை என் அனுபவத்தினூடாகவே கண்டுள்ளேன். ஆனாலும் இருவரது வளர்ப்பு முறைகளுக்கும் வேறுபாடுண்டு.

 

உதாரணத்துக்கு, பிள்ளைக்கு வருத்தம் வந்துட்டுது என்று வைப்பம். ஆண், கடமையே கண்ணாகக் கொண்டு நேர காலத்துக்கு மருந்து கொடுத்து, அடிக்கடி பிள்ளையை கவனித்து வலு கவனமாக பார்பார். இதையே தாயும் செய்வார். ஆண் ஒரு அலுவலகத்தில் உள்ள ஒரு பொறுப்பை எப்படி கனகச்சிதமாக செய்து முடிக்க வேண்டுமோ அதே மாதிரி இங்கும் செய்வார். பாசத்தை விட கடமை உணர்ச்சியும் வருத்தத்தினை மாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் அதிகம் தொக்கி நிற்கும். ஆனால் தாய் செய்யும் போது இவற்றுடன் பாசத்தையும், அரவணைப்பையும் சேர்ந்து கொடுப்பார்.

 

இதே போன்று தான் மற்ற விடயங்களிலும். தனக்குரிய கடமையை முடிப்பதில் கூடிய கவனத்தை ஆண் செய்வர். அன்பும் பாசமும் மனசில் இருந்தாலும் கடமையுணர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு வித Mechanical approach இருக்கும்.  ஆனால் தாயின் அணுகுமுறை இதில் மாறுபட்டு இருக்கும்.

 

ஒரு தாயால் ஓரளவுக்கேனும் தந்தையின் இடத்தினை நிரப்ப முடியும். ஆனால் ஆணால் தனித்து தாயின் இடத்தை நிரப்ப முடியாது. physical காரணங்களும் உண்டு; Emotional காரணங்களும் உண்டு. பிள்ளை பெண் பிள்ளையாயின் இந்த நிலை மேலும் அதிகரிக்கும்.

 

ஆகவே physical and emotional ரீதியாக பெண்களுக்குத்தான் முக்கிய பங்குண்டு என்று சொல்லி என் வாதத்தை முடித்துக் கொள்கின்றேன் யுவர் ஆனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா?

இருவருக்குமே சம பங்கு இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி நிழலி.

 

 

இணைப்புக்கு நன்றி நிழலி.

 

 

ஆள் டுபாயிற்கு போய்ட்டு வந்தபின் கொஞ்சம் ஆடிப்போயிட்டு போல இருக்கு... இணைச்சது நானில்லையப்பா...

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் டுபாயிற்கு போய்ட்டு வந்தபின் கொஞ்சம் ஆடிப்போயிட்டு போல இருக்கு... இணைச்சது நானில்லையப்பா...

 

ஓ ஸாரி  ஸாரி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பிள்ளையின் வளர்ப்பிற்கு தாயின் அரவணைப்பு மிக முக்கியமானது.அதுதான் ஆரோக்கியமானதும் கூட அதிலும் அந்த தாய் பெண்மைக்குரிய குணங்களுடன் இருக்க வேண்டும்.இல்லையேல்.....????? உதாரணத்திற்கு ஒரு ஆசிரியை வீட்டிலும் பிள்ளைகளுடன் ஆசிரியை மாதிரி நடந்தால்........ தகப்பன் தான் அந்த பிள்ளைகளுக்கு தாயும் தகப்பனுமாக உருப்பெறுவார்.

:lol:  :lol:  

ஆள் டுபாயிற்கு போய்ட்டு வந்தபின் கொஞ்சம் ஆடிப்போயிட்டு போல இருக்கு... இணைச்சது நானில்லையப்பா...

 

 பாட்டானிகளின் கையில் அகப்பட்டாரோ தெரியா செப்பிங் சென்ரரில் :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா + அப்பா

 

அடிக்கிற  கை தான் அணைக்கும் என்பதன் பொருளே அந்த கை  என்பது அம்மா அப்பா இருவரையும் குறிப்பிடுவதே.

ஒருவர் கண்டிப்புடன் இருக்க  மற்றவர் அரவணைத்துக்கொள்ளணும்.  இதில் நேரங்களுக்கு அல்லது பிரச்சினைகளுக்கு ஏற்ப அம்மா அப்பா இருவரும் மாறி மாறி கண்டிப்பை அல்லது அரவணைப்பை மாற்றலாம்.  மாறலாம்.

 

நான் பல இடங்களில் பார்த்துள்ளேன்  இதில் ஒருவர் வளர்த்த பிள்ளைகள் எதிர்காலத்தில் சில  தளும்பல்களுக்கும் ஒருவித ஒதுங்குதல்களுக்கும் முகம் கொடுப்பதை.  அந்தவகையில் இருவருமே முக்கியம்.

 

எனது வீட்டில்

தாயுடன் அதிகம் இருப்பதால் அவரது சொல்   கோயில் மேளம் அளவுக்குத்தான்.

பைல் அப்பாவிடம் போகப்போகுது என்ற  எச்சரிக்கை தற்பொழுதைக்கும் வேலை  செய்கிறது.

ஆனாலும் எனது பார்வை கடுமையாக இருக்கும்போது அது மீண்டும் தாயின் மடியிலேயே  தஞ்சமடைகிறது.

தாயின் பார்வை  கடுமையாக இருக்கும்போது அது எனது மடிக்கு மாறுகிறது.

இருவரின் பங்களிப்பும் வேண்டும். அதிலும் தாயின் பங்களிப்பு மிக முக்கியம். தனியொருவரின் பராமரிப்பில் வளரும் பிள்ளைகள் ஏதாவது பிரச்சனைகளுக்குள்ளாவதை அல்லது அவர்களின் முன்னேற்றம் குறைவாக உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

என்னதான் ஆணும் பெண்ணும் ஒன்றென்று சொன்னாலும், உடல் தன்மைக்கேற்ப சிந்தனைகளில் மாற்றம் இருக்கும். பிள்ளைகளுக்கு எது நல்லதோ அதையே செய்வார்கள். வேறுபட்ட நல்ல சிந்தனைகளில் வளரும் பிள்ளையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

பராமரிப்பில் தாயின் இடத்தை தகப்பன் எடுப்பது மிகக் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

50:50 எங்க அப்பா : அம்மா காலத்தில

 

இப்ப நம்ம ஆட்கள் மத்தியில்..

 

அப்பா: அம்மா = 25:75

 

அரைவாசி வீடுகளில் மகன்/ள் என்ன படிக்கிறாங்க என்று அப்பாக்களுக்குத் தெரியவே இல்லை. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில்..! இது அவலம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
50:50 எங்க அப்பா : அம்மா காலத்தில

 

இப்ப நம்ம ஆட்கள் மத்தியில்..

 

அப்பா: அம்மா = 25:75

 

அரைவாசி வீடுகளில் மகன்/ள் என்ன படிக்கிறாங்க என்று அப்பாக்களுக்குத் தெரியவே இல்லை. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில்..! இது அவலம்..! :)

 

அப்படியான வீடுகளில் அம்மாவுக்கு அதுவும் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை வளர்ப்புக்கு தாய்/தந்தை இருவரும் தேவை ஆனால் கண்டிப்பாக் தாய் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்...ஒரு வீட்டில் தாய் சரியில்லா விட்டால் அந்த குடும்பமே அழிந்து விடும்...ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார் என்பதை வைத்துத் தான் ஒரு குடும்பம் உயர்வதோ/தாழ்வதோ நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
குழந்தை வளர்ப்புக்கு தாய்/தந்தை இருவரும் தேவை ஆனால் கண்டிப்பாக் தாய் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்...ஒரு வீட்டில் தாய் சரியில்லா விட்டால் அந்த குடும்பமே அழிந்து விடும்...ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார் என்பதை வைத்துத் தான் ஒரு குடும்பம் உயர்வதோ/தாழ்வதோ நடக்கும்

 

 

இதைத்தான் எல்லாரும் காலம் காலமாச் சொல்லுறாங்க. நீங்க இதில என்னத்தைப் புதிசா சொல்லிட்டீங்க..???! ஒரே கீறல் விழுந்த ரெக்கோட் தான். செம மொக்கைப் பதில். முடியல்ல...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
இதைத்தான் எல்லாரும் காலம் காலமாச் சொல்லுறாங்க. நீங்க இதில என்னத்தைப் புதிசா சொல்லிட்டீங்க..???! ஒரே கீறல் விழுந்த ரெக்கோட் தான். செம மொக்கைப் பதில். முடியல்ல...! :lol:

 

 

நான் என்ன உங்கள மாதிரி புத்திசாலியா என்ன :lol: ...ஆமா இத் திரியில் நீங்கள் என்னத்தை புதிசாய் சொல்லீட்டிங்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா?...எல்லோரும் சொன்ன கருத்தை நான் சொன்னாலும் என்னுடைய கருத்தும் இது தான் என காட்டுவதற்கு நான் எழுதியுள்ளேன்...வேலை,வெட்டி இல்லாட்டில் போய் 4 பிள்ளைகளை படிப்பியுங்கோ மொக்கையாய் எழுதி நேர‌த்தை வீணாக்காமல் ^_^
 
  • கருத்துக்கள உறவுகள்
நான் என்ன உங்கள மாதிரி புத்திசாலியா என்ன :lol: ...ஆமா இத் திரியில் நீங்கள் என்னத்தை புதிசாய் சொல்லீட்டிங்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா?...எல்லோரும் சொன்ன கருத்தை நான் சொன்னாலும் என்னுடைய கருத்தும் இது தான் என காட்டுவதற்கு நான் எழுதியுள்ளேன்...வேலை,வெட்டி இல்லாட்டில் போய் 4 பிள்ளைகளை படிப்பியுங்கோ மொக்கையாய் எழுதி நேர‌த்தை வீணாக்காமல் ^_^
 

 

ஆமா.. உலகத்திற்கு தெரியாத விசயம். அதை நீங்க ரிப்பீட் பண்ணித்தான் உலகம் தெரிஞ்சுக்கனுமாக்கும்..??!

 

எங்களுக்கு வேலை வெட்டி இல்லைன்னா.. செய்ய எவ்வளவே இருக்குது. நமக்கேன் அடுத்தவன் பிள்ளையைப் படிப்பிக்கனும். அதை அவன் பாத்துக்குவான்..! நீங்க உங்க வேலையை பார்த்திக்கிட்டாவே நல்லம். நீங்களும் வேலை வெட்டி இல்லாமல் தானே இதுகளை ரிப்பீட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
உஸ் பாவம் நெடுக்கர் அவரை விட்டு விடுவோம்
 
  • கருத்துக்கள உறவுகள்
உஸ் பாவம் நெடுக்கர் அவரை விட்டு விடுவோம்
 

 

 உஸ் அக்கா பாவம். அவாவை விட்டு விடுவோம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.