Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது- பின்னணி பாடகி ஜானகிக்கு பத்ம பூஷன் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி: பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர், பத்ம விபூஷன் விருதுக்கும், 24 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 80 பேர், பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களில், 24 பேர் பெண்கள்.ஒடிசாவை சேர்ந்த ரகுநாத் மெகாபத்ரா, டில்லியை சேர்ந்த ஹெய்தர் ரஸா, உ.பி.,யைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ்பால், கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் ரோத்தம் நரசிம்மா ஆகியோர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த, திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, ராமமூர்த்தி தியாகராஜன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், நடிகை சர்மிளா தாகூர், மறைந்த இந்தி திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா உட்பட, 24 பேர், பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த, தற்போது மும்பையில் வசிக்கும் நடிகை ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், லட்சுமி நாராயண சத்திய ராஜூ, ராஜ் ஸ்ரீபதி, டாக்டர்.டி.வி.தேவராஜன் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உட்பட, 80 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.அதேநேரத்தில், மிகப்பெரிய விருதான, "பாரத் ரத்னா' விருதுக்கு, இந்த ஆண்டு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன், 2008ம் ஆண்டில், மறைந்த, பீம்சென் ஜோஷிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதுகள் எல்லாம், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும்.

Dinanalar

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கொடுக்கும், இந்த விருதுகளால்.. யாரும், வாழ்க்கையில்... முன்னேற்றம் அடைந்துள்ளார்களா?
சும்மா... போட்டோவுக்கு, போஸ் குடுத்து, மழை ஒழுகும் தகரக் கூரையில், ஒரு நாள் சாப்பாட்டுக்க்கே... அல்லாடும், பல மக்களால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
பத்மபூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி ஜானகி

தினமலர் – 

 

சென்னை: பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார். 74 வயதான எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜானகியின் முடிவு சரியானதே!

 

காலம் கடந்த ஒரு விருது!

  • கருத்துக்கள உறவுகள்
பத்ம விருதுகள் அறிவிப்பு:
எஸ். ஜானகிக்கு பத்ம பூஷண் ; நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ
 
Posted by: Mayura Akilan Published: Saturday, January 26, 2013, 10:30 [iST]
நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறையைச் சேர்ந்த 108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் உள்ளிட்ட 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷண் வழங்கப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி, நானா படேகர், திரைப் பட இயக்குனர் ரமேஷ் சிப்பி உள்ளிட்ட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும்.

ஜானகி அம்மா தான் ஒரு இசைக் குயில் மட்டுமல்ல, சுயமரியாதையுள்ள ஒரு கலைஞர் என்றும் நிரூபித்துள்ளார்.

இந்த முறை இந்த விருதுகள் தமிழன அழிப்புக்கு பெரும் துணை போன ஒரு போர்க்குற்றவாளியால் வழங்கப்படவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களுக்கு மிகவும் காலங் கடந்து ஏன்தான் பத்ம விருதுகளைக் கொடுக்கின்றார்களோ தெரியவில்லை. சரியான நேரத்தில் கொடுக்கப்படாத விருதை ஜானகி அம்மையார் நிராகரிப்பதிலும் நியாயம் உள்ளதுதான்.

சிறிதேவிக்கு 'பத்மசிறி ' விருது கொடுக்கப்பட்டிருக்குது என்றால், இதன் தராதரம் பற்றி என்ன சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதேவிக்கு 'பத்மசிறி ' விருது கொடுக்கப்பட்டிருக்குது என்றால், இதன் தராதரம் பற்றி என்ன சொல்வது?

 

இந்தியாவில் வழங்கப்படும் பத்மசிறி  விருதுக்கான தகுதிகள் சிறிதேவியிடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதேவிக்கு 'பத்மசிறி ' விருது கொடுக்கப்பட்டிருக்குது என்றால், இதன் தராதரம் பற்றி என்ன சொல்வது?

 

தப்பிலி.. சும்மா கருத்து எழுதவேண்Dஉம் எண்டதுக்காக எழுதக்கூடாது.. :D கீழே உள்ள இணைப்பை பார்த்துவிட்டு கருத்து எழுதமுடியுமா தங்களால்?? சவால்.. :lol:

 

தப்பிலி.. சும்மா கருத்து எழுதவேண்Dஉம் எண்டதுக்காக எழுதக்கூடாது.. :D கீழே உள்ள இணைப்பை பார்த்துவிட்டு கருத்து எழுதமுடியுமா தங்களால்?? சவால்.. :lol:

 

அட இது நம்ம 'தமிழ் ஸ்ரீ' கொடுக்கும் விருதா இது? :lol:

 

 

மன்னிக்கவும்.

 

இந்த  'பலகார ஸ்ரீ' விருதுக்கான தகுதிகள் என்னவென்று அடியேனுக்குத் தெரியவில்லை. :D

சிறிதேவிக்கு கொடுப்பதால் பத்மசிறி பட்டமே பெருமை அடைகின்றது .

நடிப்புத் திறமைக்காக கொடுக்கப்படுகின்றது என்றால் சிறிதேவிக்கு கொடுப்பது மிகவும் சரியானது. சிறிதேவி நன்கு நடிக்கத் தெரிந்த ஒரு நல்ல நடிகை. ஜொனி, மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே..முக்கியமாக மூன்றாம் பிறை ஆகிய படங்களே அதற்குச் சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விருதை ஜானகி அம்மா புறக்கணித்தது வவேற்கத்தக்கது.


பத்மசிறி விருது சிறிதேவி அவர்களுக்கு 10 வருடங்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 2009 இல் வழங்கப்பட்ட இவ்விருதுக்கு நடிகை அய்ஸ்வர்யா ராய் தகுதியானவர் என்றால் அவரைவிட சிறிதேவி பலநூறு மடங்கு தகுதியானவர் என்பது எனது எண்ணம்.

அர்ஜுன் அண்ணனும் நிழலியும் தங்கள் கனவுக் கன்னி சிறிதேவிக்காக ரெம்ப பீல் பண்றாங்க போல கிடக்கு.  


 

அப்படிப் பார்த்தால் என்னுடன் கனவுகளில் நடித்ததற்காக பமேலா அண்டர்சனுக்கு ஒஸ்கார் அவார்டே கொடுக்கலாம். :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.