Jump to content

வாட்டிய மீன்


Recommended Posts

dscn02824.jpg

 

 

 

வாட்டிய மீன் (கரிமீன் பொலிச்சது)

 

 

இது கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு. முக்கியமாக கள்ளுக் கடைகளில் 'சைட்டிஷ்' ஆக பிரசித்தம் பெற்றது. இதற்கு 'கரிமீன்' (Pearl Spot Fish)எனும் நன்ணீர் மீனைப் பாவிப்பார்கள். இந்த மீன் இலங்கையிலும் உண்டு. பெயர் தெரியவில்லை. 'செத்தல்', 'சள்ளல்' ஆகியவையாக இருக்கலாம் என நினைக்கிறேன். இங்கு மீன் சந்தைக்கு செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் வருகிறது. அதனால் வாங்க முடியவில்லை. 'கருவாவல்' ( Pomfret fish)  மீனைப் பாவித்தேன். 'திலாப்பியா, மீனும் நன்றாக இருக்கும். ஆனால் முள்ளு. தட்டையான சதைப்பிடிப்பான எந்த மீனும் பாவிக்கலாம்.

 

 

தேவையான பொருட்கள்
 

மீன் பொரிப்பதற்கு 

 

தட்டையான சதைப்பிடிப்பான  சுத்தப்படுத்திய சிறு முழு மீன் - 1

(மீனைக் கழுவ முன் பக்க வாட்டில் சதுரங்களாக மெலிதாகக்  கீறி விடவும.மீனைக் கழுவிய பின் நீர் இல்லாதவாறு ஒரு ரிஷுவால் ஒற்றி எடுக்கவும்) 

கறித்தூள்               - 1 பெரிய கரண்டி 

உப்பு / மஞ்சள்       - தேவையான அளவு 

தேசிப்புளி              - பாதி

எண்ணெய்            - 4 கரண்டி


 

மசாலா  தயாரிக்க

 

கடுகு - 1 தேக்கரண்டி  

சிறிதாக அரிந்த  சின்ன வெங்காயம்            - 20

சிறிதாக அரிந்த பச்சை மிளகாய்                   - 5

தக்காளி சிறிதாக அரிந்தது                             - 1

அரைத்த இஞ்சி                                                 - 2 பெரிய கரண்டி

அரைத்த உள்ளி                                               - 1 பெரிய கரண்டி

சின்னச் சீரகம் / பெரிய சீரகம்                       - சிறிது  தேவையான அளவு

கறிவேப்பிலை                                                - ஒரு இணுங்கு

தேங்காய்ப் பால்                                             - கால் கோப்பை 

எண்ணெய்                                                       - 3 கரண்டி 

ஊறவைத்த கொறுக்காய்ப் புளி  கரைசல்  - கால் கோப்பையை விட சிறிது குறைந்தளவு

(இல்லாவிட்டால் பழப்புளி பாவிக்கலாம்)

தண்டில்லாத வாட்டிய பெரிய வாழை இலை -1

(மீனை சுற்றி பொதியாகக்  கட்டுவதற்கு. வாழை இலையை வாட்டினால்தான் இலகுவாக மடியும்)  

சூட்டிற்கு உருகாத தடினமான நூல்         - 1

(வாழை இலையைச் சுற்றிக் கட்டுவதற்கு)

 

செய்முறை

 

முதலில் கறித்தூள், உப்பு, மஞ்சள், தேசிப்புளி சாறு  ஆகியவற்றைப் பிசைந்து அக் கலவையை மீனின் மீது பூசி  ஒரு மணித்தியாலம்  ஊற வைக்கவும். பிசையும் பொழுது மீனின் பக்கவாட்டில் மெலிதாகக் கீறிய பகுதிகளில் கலவை  சேரக் கூடிய வகையில் பிசையவும்.

 

பின்பு ஒரு தட்டிச் சட்டியை (Frying Pan)  தீயில் வைத்து, சட்டி காய்ந்ததும் 4 கரண்டி எண்ணையை ஊற்றி, கொதித்ததும் ஊற வைத்த மீனை ஒரு பக்கமாகப் போட்டு அளவான தீயில் 5-7  நிமிடங்கள் பொரிக்கவும். பின்பு மீனை அடுத்த பக்கம் பிரட்டி அதேயளவு பொரித்து  தனியே வைக்கவும்.
 

பின்பு தட்டிச் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய் விட்டு கொதித்த பின் கடுகைப் போட்டு வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்பு தக்காளியையும் இஞ்சி / உள்ளிக் கலவையைப் போடவும்.அதன் பின் 1 தேக்கரண்டி கறித் தூள் போட்டு சிறிது நேரம் வதக்கி, அதன் பின் சின்னச் சீரகம் பெரிய சீரகம், கறி வேப்பிலை போட்டு கொறுக்காய் புளி கரைசலை ஊற்றி சிறிது நிமிடத்தில் தேங்காய் பாலை ஊற்றி நீர்த் தன்மை போகும் மட்டும் 3-5 நிமிடங்கள் பிரட்டி இறக்கவும்.

 

செய்த மசாலாவின்  அரைப் பங்கை வாட்டிய வாழையிலையில் வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து மீண்டும் மீனின் மேலே மிகுதி மசாலாவை பரவி, வாழை  இலையால் மீனைச் சுற்றி ஒரு பொதியாக சுற்றி நூலால் இறுக்கமாகக் கட்டவும்.

சட்டியை அடுப்பில் வைத்து 3 கரண்டி எண்ணெய் விட்டு கொதித்ததும் மீன் பொதியின் தட்டையான பக்கத்தை அளவான நெருப்பில் 10 நிமிடங்கள் பொரித்து, மற்றப் பக்கம் திருப்பி அதனையும் 10 நிமிடங்கள் பொரித்தெடுக்கவும்.

கட்டிய பொதியைத் திறந்து, தேவையாயின் எலுமிச்சம் புளி சிறிது விட்டு பச்சை வெங்காயத்துடன் பரிமாறவும். 

 

செய்முறை நீண்டது போல இருந்தாலும் மிக இலகுவான முறை. வாழை இலை கிடைக்காதவர்கள் அலுமினியக் கடதாசி (Foil) இல் சுற்றி Oven இற்குள் வைத்து எடுக்கலாம். ஆனால் அதே சுவையும் மணமும் இராது

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாட்டிய மீன் (கரிமீன் பொலிச்சது)

தலைப்பில் தப்புள்ளதா???

பொரிச்சது என்று வரும்  என்று நினைக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

வாட்டிய மீன் (கரிமீன் பொலிச்சது)

தலைப்பில் தப்புள்ளதா???

பொரிச்சது என்று வரும்  என்று நினைக்கின்றேன்

 

 

இது தமிழ் உணவு அல்ல. கேரள உணவு.  தலைப்பைப் பார்த்து  தவறான விளங்கக் கூடாது என்பதற்காக மாற்றி செய்முறையில் போட்டுள்ளேன்.  

 

நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தப்பிலி!

 

இங்கு இடைக்கிடை செய்வதுண்டு! ஆனால், Oven க்குள் வைத்துத் தான் செய்வது!

 

பொரிக்கிற படியால், கொஞ்சம் தட்டையான மீனா இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்!

 

பாரை மாதிரி ஒரு மீன் இருக்கின்றது! முயற்சித்துப் பார்ப்போம்! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, தப்பிலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாட்டிய மீனைப் பார்க்க சும்மா அந்த மாதிரி இருக்கு :lol: ...ஒரு நாளைக்கு செய்யோனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி அண்ணா..நான் மீன் சாப்பிடுவதில்லை..ஆனாலும்பகிர்விற்கு நன்றிகள்..அடுத்த பதிவு ஏதாவது மரக்கறி அயிற்ரம் இல்லாட்டி இறால்,நண்டு,கண்வாய் அயிட்டத்திலை செய்து போடுங்கோ..எனக்கும் உதவியாய் இருக்கும்.. :)

Link to comment
Share on other sites

கண்டிப்பாக இதனை செய்து பார்பேன்...அநேகமாக நாளைக்கு அல்லது அடுத்த வாரம்.

 

"எவரவர் நல்ல சாப்பாடுகள் பற்றி தகவல் தருகின்றார்களோ அவரவர் வீட்டில் அருள் பாலிப்பேன்" : சுவாமி நிழலியானந்தாஜி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது தப்பிலி!...... கூடுதலாய் உந்த சில்லெடுத்த சமையல் எல்லாம் எங்கடை சனத்துக்கு சரிவராது....மீனை கழுவினமாம்.......வெங்காயத்தை தாளிச்சமாம்.......உப்பையும் தூளையும் போட்டு பிரட்டினமாம்.......கொஞ்சதண்ணிவிட்டு கொதிக்க வைச்சமாம்.......பசுமதியோடை அமுக்கினமாம்........ :D

 

உந்த சமையல் முறை அங்கை ஊரிலை ரைம்பாஸிங்க்குக்கு வெள்ளைக்காச்சட்டையோடை ரெனிஸ் விளயாட்டு விளயாடின   குடும்பங்களுக்குத்தான் சரி :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தப்பிலி.
இந்த மீனை... சோறு, புட்டு, இடியப்பம், நூடில்ஸ், உப்புமா... போன்ற எதனுடன் கலந்து சாப்பிட்டால்... நல்லாயிருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றிகள், தப்பிலி!

 

இங்கு இடைக்கிடை செய்வதுண்டு! ஆனால், Oven க்குள் வைத்துத் தான் செய்வது!

 

பொரிக்கிற படியால், கொஞ்சம் தட்டையான மீனா இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்!

 

பாரை மாதிரி ஒரு மீன் இருக்கின்றது! முயற்சித்துப் பார்ப்போம்! :D  

 

நன்றி புங்கை.

பாரை மீன் இதற்குச் சரி வருமோ தெரியாது.  சிறிய அளவான சதைப்பிடிப்பான எந்த மீனிலும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க நல்ல இருக்கிறது. மீன் பொரியல் வீடு மணக்கும்

Link to comment
Share on other sites

நன்றி, தப்பிலி!

 

நன்றி லியோ.

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்.

வாட்டிய மீனைப் பார்க்க சும்மா அந்த மாதிரி இருக்கு :lol: ...ஒரு நாளைக்கு செய்யோனும்

 

நன்றி ரதி. 

வருத்தம் சுகமானதும்  செய்து பாருங்கள்.

தப்பிலி அண்ணா..நான் மீன் சாப்பிடுவதில்லை..ஆனாலும்பகிர்விற்கு நன்றிகள்..அடுத்த பதிவு ஏதாவது மரக்கறி அயிற்ரம் இல்லாட்டி இறால்,நண்டு,கண்வாய் அயிட்டத்திலை செய்து போடுங்கோ..எனக்கும் உதவியாய் இருக்கும்.. :)

 

நன்றி சுபேஷ்.

அடுத்த முறை உங்களிற்கான 'அயிற்றம்' இணைக்கிறேன்.  

கண்டிப்பாக இதனை செய்து பார்பேன்...அநேகமாக நாளைக்கு அல்லது அடுத்த வாரம்.

 

"எவரவர் நல்ல சாப்பாடுகள் பற்றி தகவல் தருகின்றார்களோ அவரவர் வீட்டில் அருள் பாலிப்பேன்" : சுவாமி நிழலியானந்தாஜி

 

நன்றி நிழலி.

செய்யும் பொழுது கையளவில் உள்ள மீன்கள் என்றால்,  ஒன்றில்லாமல் பலது செய்யலாம்.

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது தப்பிலி!...... கூடுதலாய் உந்த சில்லெடுத்த சமையல் எல்லாம் எங்கடை சனத்துக்கு சரிவராது....மீனை கழுவினமாம்.......வெங்காயத்தை தாளிச்சமாம்.......உப்பையும் தூளையும் போட்டு பிரட்டினமாம்.......கொஞ்சதண்ணிவிட்டு கொதிக்க வைச்சமாம்.......பசுமதியோடை அமுக்கினமாம்........ :D

 

உந்த சமையல் முறை அங்கை ஊரிலை ரைம்பாஸிங்க்குக்கு வெள்ளைக்காச்சட்டையோடை ரெனிஸ் விளயாட்டு விளயாடின   குடும்பங்களுக்குத்தான் சரி :lol:  :icon_mrgreen:

 

நன்றி அண்ணன்.

உண்மைதான். ஒரே மாதிரி சமைத்துச் சாப்பிட்டால் அலுப்புத் தட்டி விடும். ஒரு மாறுதலுக்காகச்  செய்யலாம்.  

நன்றிகள், தப்பிலி. செய்து பார்க்கனும்

 

நன்றி உடையார்,

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தப்பிலி.

இந்த மீனை... சோறு, புட்டு, இடியப்பம், நூடில்ஸ், உப்புமா... போன்ற எதனுடன் கலந்து சாப்பிட்டால்... நல்லாயிருக்கும்.

 

நன்றி சிறி.

செய்த மீனை குறுக்கு வாட்டில் வெட்டி, சோற்றுடன் சாப்பிடலாம்.

பார்க்க நல்ல இருக்கிறது. மீன் பொரியல் வீடு மணக்கும்

 

நன்றி ஷகானா.

அடிக்கடி பொரிப்பதில்லை. இருந்து போட்டுதான் செய்வது. மணத்தைப்  போக்க  எலுமிச்சம் பழக கோதை நீருடன்  அல்லது வினிகர் சிறிது  அடுப்பில் வைத்துச் சூடாக்கினால் மணம் போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் மீன் சாப்பிடததாலை பார்த்திட்டு போக வேண்டியது தான்.

(ஆனால் பிற்காலத்திற்கு உதவும்.) :lol:

 

நன்றி அண்ணா பகிர்வுக்கு.. :)

Link to comment
Share on other sites

நானும் மீன் சாப்பிடததாலை பார்த்திட்டு போக வேண்டியது தான்.

(ஆனால் பிற்காலத்திற்கு உதவும்.) :lol:

 

இப்பவே பழகி வையுங்கள் ஜீவா. :D

செய்முறைக்கு நன்றி தப்பிலி. புட்டும் மீன் பொரியலும் சொல்லி வேலையில்லை. :)

 

புட்டும் மீன் பொரியலும் சம்பலும் அந்த மாதிரி இருக்கும் நுணா.

Link to comment
Share on other sites

நன்றி தப்பிலி அண்ணா. :) நான் டின் மீன் இடைக்கிட சாப்பிட்டிருக்கிறேன். மற்ற மீன் என்றால் வகை பார்த்து அல்லது நல்ல மீனா என்று பார்த்து வாங்கவும் தெரியாது. சமைக்கவும் தெரியாது. :icon_idea:  அத்துடன் மீன் அவ்வளவாக பிடிக்காது. :wub:  அதனால் வாங்குவதில்லை. :rolleyes:

 

தப்பிலி அண்ணா..நான் மீன் சாப்பிடுவதில்லை..ஆனாலும்பகிர்விற்கு நன்றிகள்..அடுத்த பதிவு ஏதாவது மரக்கறி அயிற்ரம் இல்லாட்டி இறால்,நண்டு,கண்வாய் அயிட்டத்திலை செய்து போடுங்கோ..எனக்கும் உதவியாய் இருக்கும்.. :)

 

இதில் மரக்கறி ஐட்டம் என்றால் எனக்கும் பயன்படும். :)
 

Link to comment
Share on other sites

நன்றி தப்பிலி அண்ணா. :) நான் டின் மீன் இடைக்கிட சாப்பிட்டிருக்கிறேன். மற்ற மீன் என்றால் வகை பார்த்து அல்லது நல்ல மீனா என்று பார்த்து வாங்கவும் தெரியாது. சமைக்கவும் தெரியாது. :icon_idea:  அத்துடன் மீன் அவ்வளவாக பிடிக்காது. :wub:  அதனால் வாங்குவதில்லை. :rolleyes:

 

 

இதில் மரக்கறி ஐட்டம் என்றால் எனக்கும் பயன்படும். :)

 

 

நன்றி துளசி.

 

மரக்கறி  செய்யும் பொழுது இணைக்கிறேன்.

 

வாறவருக்கு 'மீன் வாங்கிச் சமைக்கப்' பழக்கி விட்டீங்க எண்டா பிரச்சனையில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அறக்குளா நல்லாய் இருக்கும் என்டு நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

இதுக்கு அறக்குளா நல்லாய் இருக்கும் என்டு நினைக்கிறேன்.

 

ஓரளவு சிறிய, தட்டையான முழு மீனாக இருக்க வேண்டும் சஜீவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுடன் ஏ.ஏ.எல். ஜயரத்னராஜா சந்தேக நபருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். திருடனுக்கு ..திருடன் உதவி....நல்லாயிருக்கு..
    • சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39     இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.   இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது.   மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].   தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது.   கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) ( அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.   நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.   [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra]   மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 40 தொடரும்            
    • மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........!   👍
    • வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை. இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.