Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

எதிரிகள் மனபலம்

உன்னடி விழ விழ

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

காப்பினைத் தந்திடா...

உலகமும் விழிக்கட்டும்!

தூக்கிய பொருளினால்

துயர் துடை!

களங்களில் நின்று

கலிகளை வெல்! வெல்!

புதுப்பலம் படைத்துப்

பெண்சினம் சொல்! சொல்!

வெஞ்சினம் கண்டு

வேற்றுவர் ஓட...

பிஞ்சுகள் பிய்த்தவர்

பிணமாய் வீழ...

நஞ்சினை அணிந்தவர்

வாகை சூட...

வஞ்சியர் வீரம்

வான்வரை ஆள...

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

எதிரிகள் மனபலம்

உன்னடி விழ விழ

எழு! எழு! பெண்ணே!!

எழு! எழு!!

கனல் விழி வீசு!

கவிஞனின் கோல்கள்

கர்வம் ஏற்றி எழுதட்டும்!

புனலாய்க் கிடந்தவள்

கனலாய்ச் சிவந்திட

காலம் காட்டிய பாதையிது!

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

எதிரிகள் மனபலம்

உன்னடி விழ விழ

எழு! எழு! பெண்ணே!!

எழு! எழு!

எழுத்தின் அளவு சிறியதாக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Edited by yarlpriya

உணர்வு பூர்வமான கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே...இதனை அல்லது வேறு கவியை சாத்திரி அவர்கள் தொடக்கியுள்ள இது ஒரு புதிய முயற்சிக்கு எழுதுங்கள்....கட்டளையல்ல பணிவான வேண்டுதல் :lol: :wink:

நன்றி

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11138

எழு எழு நல்லாத்தான் இருக்கு...

தெரியாமத்தான் கேட்கிறன்.....

வங்காலை.....

வேண்டாம் கேக்கிறதுக்கு வேற இடம் இருக்கு

எழு எழு பெண்ணே எழு எழு

நல்லாத் துடிப்பா இருக்கு.

துடிக்கிறது இணையத்திலயும் எழுதுகோலிலயும் மட்டுந்தானோ?

துடிப்பை ஆராயும் ஆதிவாசி

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

வெஞ்சினம் கண்டு

வேற்றுவர் ஓட...

பிஞ்சுகள் பிய்த்தவர்

பிணமாய் வீழ...

நஞ்சினை அணிந்தவர்

வாகை சூட...

வஞ்சியர் வீரம்

வான்வரை ஆள....

உணர்வுபூர்வமான வரிகள். தொடரட்டும் உங்கள் உணர்வின் வீச்சு கவிதைகளாக.

வீறு கொண்டு எழ வைக்கும் கவிதை நன்றாய் இருக்கின்றது.

வாழ்த்துக்கள்.

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

வெஞ்சினம் கண்டு

வேற்றுவர் ஓட...

பிஞ்சுகள் பிய்த்தவர்

பிணமாய் வீழ...

நஞ்சினை அணிந்தவர்

வாகை சூட...வஞ்சியர் வீரம்

வான்வரை ஆள...

நல்ல இனிமையான கவிதைவரிகள் .வீரம் செறிந்து இருக்கிறது வாழ்த்துக்கள் :)

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

எதிரிகள் மனபலம்

உன்னடி விழ விழ

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

--

நல்ல உணர்வுள்ள வரிகள். மறுபடி மறுபடி உச்சரிக்க

வைக்கும் வரிகள். ஈழத்தில் களத்தில் பெண்கள் போராட

உணர்வுக் கவிகள் படைக்கப்படுகின்றன. இங்கே புலத்தில்

பெண்ணின் நிலை பகரவும் கவிதை வடியுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

நன்றாகத்தான் இருக்கு. பெண்ணை எங்கே எழ விட்டார்கள்.

அருமை - அருமை - அருமை - வல்வை! 8)

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வைத் தூன்டும் வரிகள்.அது தான் தலைவன் வழி காட்டலில் எழுந்து விட்டர்களே. உங்கள் கவிப்பனி தொடரட்டும்.

மிகவும் அருமையான கவிதை. உணர்வுபூர்வமாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதையை வாசித்த பின்னர்...நாங்கள் என்ன செய்யலாம் என நினைக்க வைக்கின்றது...

பாராட்டுக்கள்

எழு எழு பெண்ணே எழு எழு . . .

உவள் நளாயினி த்றீ பெட் றூம் ஹவுஸ் வேண்டிட்டாளாம்

எழு எழு பெண்ணே எழு எழு . . .

எழு எழு பெண்ணே எழு எழு . . .

சித்தி . .அத்தை . . . குஞ்சுமாமி தொடங்கப் போகுது . .

எழு எழு பெண்ணே எழு எழு . . .

எழு எழு பெண்ணே எழு எழு . . .

டிஸ்யும், பன்னியன், கில்லி சாறிகள் குமரன்ஸ்ல வந்திருக்காம்

எழு எழு பெண்ணே எழு எழு . . .

எழு எழு பெண்ணே எழு எழு . . .

புலம் பெயர் புரட்சிப் பெண்கள் நாங்கள்

சண்டை பிடிக்க துணிவில்லாம ஒளிச்சு ஓடி வந்த அகதி நாய்களும் நாங்களே

பாட்டெடுப்போம் . .வீக்கெண்ட்டில் கூழ் குடிப்போம்.

பேந்து . .விசிலடித்து மகிழ்வோம்.

இடைக்கிடை கவியும் வடிப்போம்.

சொகுசாக சோபாவில் இருந்து கொண்டு சனியன்.

சகாறா அக்கா.

உங்கட கவிதை சூப்பர்.

நல்ல கவிதை

எங்கள் பெண்கள் எழுந்து பலகாலமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லவை சாகாரா உணர்வுபூரவமான சந்தத்துடன் கூடிய கவிதை நன்று. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பர்களே!

புலத்தில் பெண்கள்?..........

கேள்விக் குறியோடு விடைபெறுகிறேன்....

வல்வை சகாறா.

  • 1 year later...

வல்வை சகாறாவின் "எழு! எழு! பெண்ணே!" என்ற இந்த கவிதை வரிகள் பாடலாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் இன்னொரு தலைப்பில் தெரிவித்திருந்தார். அந்தப்பாடலை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். மிகவும் அருமையாக எழுச்சி உணர்வுடன் பாடப்பட்டுள்ள அந்தப் பாடலை அனைவரும் கேட்கும் வண்ணம் இதோ இங்கு youtube வடிவில் இணைக்கிறேன்... :D

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகீராவின்ரை பாட்டு இப்பதான் கேட்டன் நல்லா இருக்கு பாராட்டுக்கள் ;)

கவிதையும் பாடலும் எழுச்சிகரமாக உள்ளது. வாழ்த்துக்கள். இணைப்பிற்கு நன்றி இளைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

நன்றாகத்தான் இருக்கு. பெண்ணை எங்கே எழ விட்டார்கள்.

யார் எழ வேண்டும்

எழ வேண்டியது தானே

சீரியல் உங்களுக்கென்ன சாப கேடா

21ம் நூற்றில் இதென்ன தூற்று

தானாக வந்து வாழ்த்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளைஞன், கடந்த ஒரு வருடத்தின் முன்னர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எழு! எழு1 பெண்ணே! எழு! எழு! என்ற எனது கவிதைக்கு நீங்கள் அளித்த விமர்சனம்.... அன்று நீங்கள் சுட்டிக்காட்டிய மெட்டு பின்நாளில் ஒரு எழுச்சி நிகழ்விற்கான சிறிது திருத்தங்கள் செய்யப்பட்டுப் பாடலாக்கப்பட்டது.இப்பாடலின் வரிகளை இத்தோடு இணைக்கின்றேன் இதற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றிகள் இளைஞன்.

எழு எழு பெண்ணே! எழு! vழு!

எதிரிகள் மனபலம்

உன்னடி விழவிழ

எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!

காப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும்

காப்புக் கரங்களால் துயர் துடை!

சாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும்

ஆக்கப் பலமது நீ படை!

களங்களில் நின்று கலிகளை முட்டும்

காரிகை வெல்லப் பலம் கொடு!

உளங்களை வென்று பூமகள் முன்றலில்

புலம் பெயர் பெண்ணென வளம் கொடு!

பிஞ்சினைப் பிய்த்தவர் வஞ்சியை வதைத்தவர்

வெஞ்சினம் கொண்டவர் நெஞ்சை உடை!

நஞ்சினை அணிந்தவர்நாட்டைக் காப்பவர்

நெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை!

கனல் விழி வீசு!

கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்.

புனலாய் கிடந்தவள் கனலாய் சிவந்திடக்

காலம் காட்டிய பாதையிது

வல்வை சகாறாவின் "எழு! எழு! பெண்ணே!" என்ற இந்த கவிதை வரிகள் பாடலாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் இன்னொரு தலைப்பில் தெரிவித்திருந்தார். அந்தப்பாடலை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். மிகவும் அருமையாக எழுச்சி உணர்வுடன் பாடப்பட்டுள்ள அந்தப் பாடலை அனைவரும் கேட்கும் வண்ணம் இதோ இங்கு youtube வடிவில் இணைக்கிறேன்... :lol:

">

தற்போது தான் பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது இணைத்த இளைஞனிற்கு நன்றிகள்!!வல்வைசகரா அக்காவின் பாடல் வரிகள் அற்புதம்........ :lol:

பாடல் நல்லாக இருக்கு. அதை இணைச்சமைக்கு நன்றிகள் இளைஞன்.

பாடலாசிரியரான சஹாரா அக்காவுக்கு பாரட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, சுகன், நுணாவிலான், யமுனா, வெண்ணிலா மற்றும் இப்பாடலை இரசித்த அனைவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.