Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

 ஒடியல்மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்?

 

அத்துடன் வேறு மா ஏதும் கலக்க வேண்டுமா?

 

கூலுக்கு ஒடியல் மாவில் உள்ள கயர்ப்பு தன்மை போக ஊற வைக்கின்றனாங்கள்

அம்மா, அம்மம்மா அவிச்ச ஒடியல்மா புட்டை பற்றித்தான் இங்கு சொன்னனான்.  :D
 
 
பழைய ஞாபகத்தின் படி கயரை எடுக்க மாவை ஊராவிட்டு பின் துணியால் வடிப்பார்கள்.
 
பின் கருவல் நொருவல் முளகாய்த்தூள் போட்டு சாதாரண புட்டுப்போல் நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்.
 
மாவைக் கலப்பது பற்றி கேட்டுத்தான் சொல்ல வேண்டும். :)
 
அடுத்த நாள் அது காய்ந்து போய் இருக்கும். நல்லெண்ணை விட இளகி வரும்.

இனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப்  போல இருக்கு  :(

 

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .

 

முருங்கைக்காய்க் கறியும் பிட்டும் ம் ....... நல்ல உருசிதான்.

அதுசரி

ஓட்ஸை அவித்துவிட்டு புட்டைக் குழைப்பீர்களா? அல்லது பச்சையாகக்

குழைப்பீர்களா?? அதையும் எழுதிவிடுங்கோ மைத்திரேயி. ஆனா ஓட்சும் அதிகமாக

உண்டால் உடம்புவைக்கும் என்பார்கள். உண்மையோ தெரியாது.

 

புட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.

 

நானும் எதோ அங்கலாய்ப்பில புட்டைப் பற்றி எழுதப் போய் இப்ப எல்லாருக்கும் பிடிச்ச உணவு புட்டு என்று தெரிகிறது.

 

முதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும். 
 
ஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.

 

ஒடியல் மாப்புட்டு ஒரே ஒருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருநாளும்

அவித்ததில்லை. ஒடியல் மாவைப் பச்சையாகக் குழைப்பதா?சரி அதையும் ஒருக்காச்

செய்யவேணும்.

 

கொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள். :D

 

போட்டால் நீங்கள் தான் போடவேணும். :D

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

அதென்ன நந்தனுக்கு தெரிஞ்சிருக்கும். ஊரினாலா??

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கே!

 

ஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்!

 

அவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ!

 

சும்மா நாதம் பேசும்! :D

 

பி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்!

 

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

அடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... !! சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

புட்டும் சூடை  மீன் பொரியலும் உண்டிருக்கிறேன். அலாதிச் சுவை அது.

 

சுறா வறை வேறு.  சுறாப்புட்டு வேறு.  சுறாப்புட்டும் அவிப்பதுண்டு.  சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம்.   சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள்.  நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.  இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.

 

அப்ப சுறாப் புட்டும் இருக்குத்தான். சரி நாளைக்கு விருந்தினர் வருகின்றனர் செய்து அசத்திவிட வேண்டியதுதான்.

 

ஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது?

 

புட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

 

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ பொரிப்பதற்குப் பதிலாக Oven இற்குள்  வைத்து எடுத்து பின் குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

***பிழையான அர்த்தம் தருவதனால் திருத்தப்பட்டது.****

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த சூடை  மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ Oven இற்குள்  வைத்து குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.

 

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

ஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி???

 

 

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80906

 

நல்லவேளை.. தப்பிலியை நம்பி யாரும் கறிச்சட்டியை oven க்குள் வைக்கவில்லை.. :D

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

நீங்களே புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு புட்டுகளை நினைச்சன் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவர்

 

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் பிட்டு எப்பவாவது அவிப்பது. என்னை விட ஒருவரும் விரும்பி உண்பதில்லை. அதனால் அவிப்பதில்லை. என்ன கறியுடன் உண்டால் அது சுவை என்றும் எழுதினால் நல்லது மல்லையூரன்.

நேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .

 

 

 

சாப்பிடேக்கிளயும் யாழ் நினைவுதானோ ?
 
மனுசி.. பிள்ள குட்டிகள எல்லுபேளுயும் நினைக்கிறேல்லையே..   :D

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

குரக்கன் புட்டை எங்கள் வீட்டில் சர்க்கரையோடுதான் அதிகம் சாப்பிடுவோம்.  கறிகளோடும் சாப்பிடுவதுண்டு.  முந்தி கூட்டுக் குடும்பமாக இருந்தபோது வீட்டில் அடிக்கடி தாயக முறைப்படி தாயக உணவுகள் பலவிதமாகச் செய்வார்கள்.  இப்போது தனிக்குடித்தனங்களாக வந்தபின்னர் எல்லாம் சிம்பிள் சமையல்தான்.

தானியங்களில் மிகச் சிறந்தாக கருதப்படவேண்டியது குரக்கன். ஆனால் மக்களின் மென்மையான சுவை தேடும் இயல்பால் அதன் பிரயோகம் மிக குறைந்துவிட்டது. நாம் எல்லோரும் தானியங்களுக்கு மிகத் தீங்கானதாக வருணிக்கப்படும் வெள்ளை அரிசிகளில் வந்து சங்கமமாகியிருக்கிறோம்.  யாழ்ப்பாணத்தில் இருந்த போது அதில் புட்டு கழி, கூழ் எல்லாமே அடிக்கடி சாப்பிடுவதுண்டு. சலரோக தாக்கம் கொடுக்காமல் அதே நேரம் மிக கூடுதலான சக்தி கொடுக்கும் தானியமாக கிராமத்து மக்கள் கருத்தும் உணவு அது.

 

இணிப்பு வகையுடன் உண்ணாத போது குரக்கன் புட்டை சாப்பிட காரசாரமான கறிகள் தேவை. கத்தரிக்காய், பிலாக்காய், மரவள்ளிகிழங்கு கறிகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

Edited by மலையான்

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

 

புட்டு கதை நல்ல தான் போகுது. :)

 

 

குறுஞ்சா புட்டு தெரியாது. ஆனால் பொருத்து மான் இலை புட்டு வீட்டில் அவித்த போது  சாப்பிட்டு இருக்கிறேன். போருத்துமான் இலை  புட்டு  உடல் நோவுக்கு, பெண்களிற்கு இரத்த போக்கு அல்லது மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் போது  செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன். போருத்துமான் இலையை பச்சை அரிசியுடன் இடித்து, புட்டு அவிப்பார்கள். நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.