Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் சினிமாக்காரனின் நடிப்பை, இயக்கத்தை திரையில் தான் ரசிக்க முடியும். நிஜத்தில் அல்ல.

பலரால் பலமுறை ஏமாந்த,ஏமாற்றப்பட்ட இனம் விழிப்புணர்வுடன் இருப்பது ஒன்றும் தவறில்லையே?????????

  • Replies 135
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்காக பேசினால்

அதுவும் தடைசெய்யப்பட்ட  காலத்திலும்

அவர் உழைக்கலாம்  என்பதும்

அரசியலில் முன்னுக்கு வரலாம்  என்பது பெரும் திரிப்பு  மட்டுமல்ல

எமக்காக பேசிய  எமக்காக குரல்  கொடுத்தவர்களை  கேவலப்படுத்தி  எம்மைவிட்டு ஒதுக்கும் செயல்

அந்த செயலை  எவர்  செய்வர்.............????????????????????????? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த ஆதாரம் தேவை. இல்லையெனில், தனிப்பட்ட விதத்தில் அவர்கள் கூட முடிந்தால் உரையாட வையுங்கள். அவர்கள் எப்போது பணம் கொடுத்ததால் படம் எடுக்க அனுமதித்தார் எனக் கட்டாயம் அறிய வேண்டும்.

தவிர,  சீமானுக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வைக்க வேண்டாம் என்று தலைவர் சொன்னார் என நீங்கள் ”விட்ட கதைக்கும்” உண்மைத்தன்மை வேண்டும். ஏனெனில் தலைவர் இந்தச் விடயங்களைக் கூட மூன்றாம் மனிதர்களின் காதுகளுக்குச் செய்தி கசியும் அளவில் தன் செயற்பாட்டினை வைத்துக் கொண்டார் என்று அறிய வேண்டியுள்ளது.

அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதோடு, அவர் முன்னால் கணவர் குறித்த ஒரு தளபதியோடு வீரச்சாவு அடைந்தார் என்ற விடயம் கூடத் தெரியாமல் கருத்துப் பகிர்கின்றபோதே நீங்கள் விடுவது முழுப் பொய் எனத் தெரிகின்றது. அப்படியிருக்க மேலதிக விடயங்கள் அறிந்து என்ன புதினம்?

நாளைக்குத் தலைவர் இப்படி என் காதில் சொன்னார் என என்னொரு புனைகதையை உருவாக்க உதவக்கூடும். 

 

ஜயோ முடியவில்லை அவருக்கு அலெக்ஸ் கூட கல்யாணம் நடந்ததும்,அலெக்ஸ் த.செ கூட வீர மரணம் அடைந்ததும் எனக்கு தெரியும்.நான் நினைத்தேன் நீங்கள் அப் பெண் மறு மணம் புரிந்து விட்டார் என எழுதினீர்களாக்கும் என்று ?
 
ஏன் நீங்கள் எழுதுகிற எல்லா கருத்தையும் ஆதாரத்தோட நிருபீக்கிறனீங்களோ? மேலும் உங்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் எனக்கு இல்லை
 
தலைவர் அது சொன்னார்,இது சொன்னார், நான் மு.வாய்க்காலில் கடைசி வரை இருந்தேன் என சொல்லி யாழில் நிறையப் பேர் இப்ப எழுதுகினம்.எனக்கு அப்படி புனை கதை எழுத வேண்டிய அவசியமில்லை
 
 
நேரம் போயிட்டுது மிச்சத்தை இரவு வந்து எழுதுகிறேன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21661_10152134264149128_788033895_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி நான் அவதானித்தவரைக்கும் யாழில் குளோனிங் தவிர்த்து அக்டிவா எழுதுவது கிட்டத்தட்ட 20-25 பேர் தான் அதிலும் பத்துப் பேராவது யாழின் பொது நிலைக்கு எதிரான கருத்துக்களைப் பதிபவர்களாகத் தான் இருக்கிறார்கள் யாழுக்கு வெளியே மற்ற தளங்களிலும் பேஸ்புக்கிலும் பார்த்தால் தெரியும் சீமானுக்கு ஆதரவாக 10 பேர் எழுதினால் எதிர்த்து 100 பேர் கருத்து எழுதுகிறார்கள். அவ்வளவு பேரும் ஈழத்தமிழர்களும் இல்லை மஹிந்தவிடம் காசு வாங்கியவர்களும் இல்லை. தமிழக உறவுகள் தான் அதிகம், அப்படி இருக்க அவர்கள் எதிர்க்க காரணம் என்ன? அவர்களுக்கும் சிங்களத்தால், ஒட்டுக்குழுக்களால் வருமானம் கிடைக்கிறதா??

 

நாங்கள் நினைப்பதை விட யதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

சீமான் எத்தனை பேரையும் விரும்பட்டும், எத்தனை பேரையாவது கல்யாணம் செய்யடும் அது அவரது தனிப்பட்ட விடயம் அதை விமர்சிக்கும் அருகதை எவருக்கும் இல்லை அதே போலத்தான் அவரது அரசியாலாகட்டும், அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், முதல்வர்,பிரதமர் என்னவாகும் ஆகட்டும் அதை அவர் தமிழகத்தோடு மட்டும் வைத்துக்கொள்ளும் வரைக்கும் அதில் கருத்துக்கூறும் யோக்கியம் எமக்கு இல்லை ஆனால் என்று  அவர் தனது  சுயநலத்துக்காக ஈழத்தமிழர் அவலங்களைப் பாவித்தாரோ அன்றிலிருந்து நீங்களவரை ஆதரிக்க எவ்வளவு காரணமிருக்கோ அவ்வளவு அவரை எதிர்க்கவும்,அவரது பித்தலாட்டங்களையும்  வெளிக்கொண்டு வரும் தார்மீக உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. :)

சீமான் கடந்து வந்த பாதைகள் சொல்லில் அடங்காது......போர் உக்கிரமாய் நடந்து கொண்டு இருக்கும் போது தான் வன்னி போனவர்...ஏன் அவர் அங்கை போக்க வேண்டிய அவசியம்...படம் எடுத்து தன்ட வாழ்க்கையை போக்கிட்டு இருந்த சீமான் ஏன் ஜெயில் போக்கனும் கொஞ்சம் சிந்திச்சுப் பார் ..........மக்களின் கண்ணுக்கு பட்டால் சீமான் கெட்டவர் என்று மக்கள் மற்றவர்களை ஒரம் கட்டின மாரி சீமானும் ஓரம் கட்டப் படுவார்....என்னை பொறுத்த மட்டில் சீமானுக்கு புலத்திலும் சரி தமிழ் நாட்டிலும் சரி மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கு.........காங்கிரஸ் காரனிடம் சீமானை பற்றி கேட்டால் அவன் பொய் பொய்யாய் எடுத்து விடுவான்.........சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எழுதி தள்ளுறது சுகம் மச்சி.......சீமானின் பொதுக் கூட்டத்துக்கு கூட ஜெயலலிதா தடை போடுரா...ஏன் என்றால் அவர் மக்கள் மத்தியில் வளர்சி அடைந்து கொண்டு வாறார்.......சீமானை தவிர்த்து தமிழ் நாட்டு மற்ற அரசியல் வாதிகளை நான் பெரிதாக்க நம்புவது இல்லை....வைகோ என்டாலும் சரி திருமாளவன் என்றாலும் சரி........எனக்கும் தமிழ் நாட்டில் பிறந்த ஒரு சில நல்ல நண்பர்கள் இருக்கிறாங்கள்....ஒரு நண்பன் இதை தான் எனக்கு சொன்னான்..தானாம் ஆரம்பத்தில் சீமான் ஏதோ தீவிரவாதி என்று நினைத்தேனாம் பிறக்கு தானாம் தெரிஞ்சது அவர் எவளவோ நல்ல மனிதர் என்று.............காங்கிரச் எம்மிக்களிடம் போய் கேலு எங்கட தேசிய தலவர உடன சொல்லுவாங்கள் அவன் ஒரு பயங்கர தீவிரவாதி என்று...அதையே நீ ஈழத்தில் பிறந்த ஒரு பையனிடம் கேல் தேசிய தலைவர் எப்படி என்று அவன் உடன சொல்லுவான் அவர் கை எடுத்து கும்பிடும் தெய்வம் போன்று....இது தான் உலகம்.........சீமான் செய்ததை செய்து கொண்டு இருக்கிறதை பற்றி கதைக்க ஒரு தருக்கும் அருகதை இல்லை
  • கருத்துக்கள உறவுகள்

21661_10152134264149128_788033895_n.jpg

 

சொந்த இனத்தின் விடுதலைக்காக தன்னை தன் குடும்பத்தை எல்லாம் கொடுத்துப் போராடிய மாவீரனை அண்ணனாக மதித்து ஒரு தமிழன் அவரின் ஆசீர்வாதத்தோடு அழைப்பிதழ் தந்து.. திருமணம் செய்து கொள்கிறான் என்றால்  அது அண்ணன் சீமானாகவே இருக்க முடியும்.

 

தேசிய தலைவர் மீதும் அவர் கொண்ட கொள்கை மீதும் அவர் விடுதலை வேண்டிப் போராடிய மக்கள் மீதும் அண்ணன் சீமான் கொண்டுள்ள மதிப்பிற்கு தலை வணங்குகிறோம்.

 

எம்மவர்களே.. எந்த ஒரு அடிப்படை நன்றி உணர்வும் இன்றி.. இன உணர்வும் இன்றி.. தங்கள் சுய குற்ற உணர்வும் இன்றி.. "முருகனாக மதித்தவரை.. கோவணத்தோடு விட்டிட்டிங்களே" என்று எதிரிக்கு நிகராக தம் இன வீரனை இகழ்ந்துரைக்கும் நிலையில் அண்ணன் சீமானின்.. இந்த நன்றி உணர்வு உண்மையில் மெச்சத்தக்கது வரவேற்கத்தக்கது. இது பலருக்கு நல்ல வழிகாட்டுதலை நல்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாத்தின் சுருக்கத்தை இங்கே இணைக்கின்றேன்  :D

 

http://www.youtube.com/watch?v=YoI8sk8m8t8

 
  • கருத்துக்கள உறவுகள்

காரணம் சினிமாக்காரனின் நடிப்பை, இயக்கத்தை திரையில் தான் ரசிக்க முடியும். நிஜத்தில் அல்ல.

பலரால் பலமுறை ஏமாந்த,ஏமாற்றப்பட்ட இனம் விழிப்புணர்வுடன் இருப்பது ஒன்றும் தவறில்லையே?????????

விழிப்புணர்வு என்பது வேறு, அவதுாறாகப் பேசுவது என்பது வேறு. நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது அவதுாறு... உங்களின் விழிப்புணர்வு எப்படி இருந்திருக்க வேண்டுமெனில் ஏன் திமுக காரர்கள் இத்தனை பேர் நாம் தமிழரை எதிர்க்கின்றார்கள் என்பதில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். திராவிடம் என வயிறு வளர்த்தவர்கள், தமிழ்த் தேசியம் என்ற வரையறை வகுக்க ஏன் அதைக் கண்ட மேனிக்கு எதிர்க்கின்றார்கள் என்பதில் உங்களின் விழிப்புணர்வு இருந்திருப்பின், அது நியாயமாக இருந்திருக்கலாம்.

இயக்கத்தை ஆதரித்தோ, அல்லது ஆதரவைப் பாவித்து அரசியல் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. இல்லாவிடில் வரலாறு எங்களையும், எங்களின் போராட்டத்தின் தேவையையும் மறக்கடிக்கச் செய்துவிடும்.

உங்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது எனில், கிழக்கில் பிள்ளையானோ, ஒரு முஸ்லீமோ வரலாம். ஆனால் தமிழரசுக்கட்சியில் இருந்து விக்னேஸ்வரனைத் தெரிவுசெய்யும்போது தான் நொட்டை சொல்வது போலுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜயோ முடியவில்லை அவருக்கு அலெக்ஸ் கூட கல்யாணம் நடந்ததும்,அலெக்ஸ் த.செ கூட வீர மரணம் அடைந்ததும் எனக்கு தெரியும்.நான் நினைத்தேன் நீங்கள் அப் பெண் மறு மணம் புரிந்து விட்டார் என எழுதினீர்களாக்கும் என்று ?
 
ஏன் நீங்கள் எழுதுகிற எல்லா கருத்தையும் ஆதாரத்தோட நிருபீக்கிறனீங்களோ? மேலும் உங்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் எனக்கு இல்லை
 
தலைவர் அது சொன்னார்,இது சொன்னார், நான் மு.வாய்க்காலில் கடைசி வரை இருந்தேன் என சொல்லி யாழில் நிறையப் பேர் இப்ப எழுதுகினம்.எனக்கு அப்படி புனை கதை எழுத வேண்டிய அவசியமில்லை
 
 
நேரம் போயிட்டுது மிச்சத்தை இரவு வந்து எழுதுகிறேன்

 

 

உங்களுக்குப் புனைகதை எழுத அவசியமில்லை... ஆனால் எழுதுகின்றீர்கள்.

முதலில் தலைவரோடு சீமான் கதைத்த நேரம் அவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டாம் எனத் தலைவர் சொன்னதாகக் கதை விட்டீர்கள். அந்த நேரம் அந்தப் பெண் திருமணம் செய்திருந்தார்.

இப்போது திரும்பவும் அப் பெண் மறுமணம் செய்துள்ளார். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

தலைவர் வேறு என்ன உங்களிடம் சொன்னவர் என்பதைப் பிறகு வந்து படித்துத் தெரிந்து கொள்ள முனைகின்றேன்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தின் விடுதலைக்காக தன்னை தன் குடும்பத்தை எல்லாம் கொடுத்துப் போராடிய மாவீரனை அண்ணனாக மதித்து ஒரு தமிழன் அவரின் ஆசீர்வாதத்தோடு அழைப்பிதழ் தந்து.. திருமணம் செய்து கொள்கிறான் என்றால்  அது அண்ணன் சீமானாகவே இருக்க முடியும்.

 

தேசிய தலைவர் மீதும் அவர் கொண்ட கொள்கை மீதும் அவர் விடுதலை வேண்டிப் போராடிய மக்கள் மீதும் அண்ணன் சீமான் கொண்டுள்ள மதிப்பிற்கு தலை வணங்குகிறோம்.

 

எம்மவர்களே.. எந்த ஒரு அடிப்படை நன்றி உணர்வும் இன்றி.. இன உணர்வும் இன்றி.. தங்கள் சுய குற்ற உணர்வும் இன்றி.. "முருகனாக மதித்தவரை.. கோவணத்தோடு விட்டிட்டிங்களே" என்று எதிரிக்கு நிகராக தம் இன வீரனை இகழ்ந்துரைக்கும் நிலையில் அண்ணன் சீமானின்.. இந்த நன்றி உணர்வு உண்மையில் மெச்சத்தக்கது வரவேற்கத்தக்கது. இது பலருக்கு நல்ல வழிகாட்டுதலை நல்கும்..! :icon_idea:

 

நன்றி சகோ.......எங்கடையலின் ஒற்றுமையை பார்க்க அருவருப்பாக்க இருக்கு.............ராஜிவ் காந்தி படு கொலை வழக்கில் அவங்க மூன்று பேருக்கும் தூக்கு தன்டனையை நிறைவேற்ற போகிறார்கள் என்று சொல்ல...அந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் யார்...அண்ணன் சீமான் தான் அவர் அப்ப சொன்னதும் இப்பவும் என்ற காதில் ஒலிச்சு கொண்டு இருக்கு....தன்ட தம்பி மாருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டால் அது தன்ட பினத்தை தான்டி தான் நடக்கும் என்று...இது எல்லாம் அவர குறை சொல்லுற பச்சோந்திகளுக்கு எங்கை தெரியப் போக்குது..........

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி நான் அவதானித்தவரைக்கும் யாழில் குளோனிங் தவிர்த்து அக்டிவா எழுதுவது கிட்டத்தட்ட 20-25 பேர் தான் அதிலும் பத்துப் பேராவது யாழின் பொது நிலைக்கு எதிரான கருத்துக்களைப் பதிபவர்களாகத் தான் இருக்கிறார்கள் யாழுக்கு வெளியே மற்ற தளங்களிலும் பேஸ்புக்கிலும் பார்த்தால் தெரியும் சீமானுக்கு ஆதரவாக 10 பேர் எழுதினால் எதிர்த்து 100 பேர் கருத்து எழுதுகிறார்கள். அவ்வளவு பேரும் ஈழத்தமிழர்களும் இல்லை மஹிந்தவிடம் காசு வாங்கியவர்களும் இல்லை. தமிழக உறவுகள் தான் அதிகம், அப்படி இருக்க அவர்கள் எதிர்க்க காரணம் என்ன? அவர்களுக்கும் சிங்களத்தால், ஒட்டுக்குழுக்களால் வருமானம் கிடைக்கிறதா??

 

நாங்கள் நினைப்பதை விட யதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

சீமான் எத்தனை பேரையும் விரும்பட்டும், எத்தனை பேரையாவது கல்யாணம் செய்யடும் அது அவரது தனிப்பட்ட விடயம் அதை விமர்சிக்கும் அருகதை எவருக்கும் இல்லை அதே போலத்தான் அவரது அரசியாலாகட்டும், அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், முதல்வர்,பிரதமர் என்னவாகும் ஆகட்டும் அதை அவர் தமிழகத்தோடு மட்டும் வைத்துக்கொள்ளும் வரைக்கும் அதில் கருத்துக்கூறும் யோக்கியம் எமக்கு இல்லை ஆனால் என்று  அவர் தனது  சுயநலத்துக்காக ஈழத்தமிழர் அவலங்களைப் பாவித்தாரோ அன்றிலிருந்து நீங்களவரை ஆதரிக்க எவ்வளவு காரணமிருக்கோ அவ்வளவு அவரை எதிர்க்கவும்,அவரது பித்தலாட்டங்களையும்  வெளிக்கொண்டு வரும் தார்மீக உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. :)

இணையத்தில் ஒபாமாவிற்கு எதிராக கருத்து எழுதுபவர்கள்தான் அதிகம்.

ஆதரிப்பவர்கள் எழுத என்ன இருக்கிறது?
பொருளாதார முன்னேற்றம் பற்றியது தெளிவாக புள்ளி விபரத்தில் உண்டு.
கூகுளில் ஒரு தட்டு தட்டினால் அப்படியே வருகிறது.
இருந்தும் ஒரு மொக்கு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது...........
இந்த வசதி உள்ள உலகிலேயும் பொய்யை எழுதுபவனுடன் உரையாட என்ன இருக்கிறது??
 
எதிர்ப்பவனுக்கு  லாபம் இருக்க வாய்ப்பில்லை என்பதை காரணம் காட்டமுடியாது 
அவனுக்கு  மேல் வீட்டில் ஒன்றும் இல்லாது இருக்கிறது.
 
சீமானை பற்றி தெளிவு இருந்தால் அதை துணிந்து எழுத வேண்டும்.
அதுவே எமது இனத்தை காக்கும்!
 
இன உணர்வும் தமக்கு மட்டுமே இருக்கு என்கிறார்கள்.
சீமானை பற்றி தெரிந்ததையும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். (அதுக்கு காலம் கனிய வேண்டுமாம். சீமான் இனத்தை ஏமாற்றட்டும் என்று காத்திருக்கிறார்களா?)
சீமானை தூற்றாமலும் இருக்கிறார்கள் இல்லை.
 
இவர்கள் யார்?
இவர்களுக்கு தேவை இலாபம் ஏதும் இல்லை என்று சொல்ல முடியாது.
சுயவிளம்பரம் இதில் இல்லையா??
 
ஒருவரை விமர்சிப்பதற்கும் ....
தூற்றுவதற்கும் நிறைய தூரம் உண்டு.
 
சீமான் தவறு செய்தால் அதை தட்டி கேட்க வேண்டும்.
சீமான் எது செய்தாலும் தடுப்பது என்பது வேறு ரகம்.

நீங்கள்  புதியவர்கள்

ஆட்களை  அறிந்து கொள்ளுங்கள்

முகம்  தெரியும்  காலமிது.

இந்த  திரியில் பலர் தமது உண்மை  முகத்தைக்காட்டியுள்ளனர்.

இன்னும்  சிலர்  இதற்குள் வராது வெளியில்  நின்று  முகம்  காட்டாது  ஊக்குவிக்கின்றனர்.

அவர்களையும் தெரியவரும்............... :(

வணக்கம் விசுகு ஜயா. உங்களுக்கு எப்ப பாரு யாராவது ஊக்குவிக்கினம் தேக்குவிக்கினம் என்கிற கதைதான். ஏன் ஜயா இங்கு உங்கள் கருத்துக்கு மாறாக எழுதுபவர்கள் எல்லாம் பேபேக்கள் சொந்தப்புத்தி இல்லாதவர்கள் சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு எழுதுபவர்களா? தயவு செய்து ஊரில் திண்ணையில் இருந்து கதைப்பது போல் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள் யாழின் அரசியல் கருத்தாடல்கள் இடம்பெறும் திரிகளில். அண்ணண் தம்பி தங்கச்சி கதைகளை குழுக்கதைகளை இனியபொழுது போன்ற பொழுதுபோக்கு திரிகளிலும் திண்ணையிலும் கதையுங்கள். இப்படியான சீரியாசான திரிகளில் வந்து கருத்தை திசை திருப்பும் வகையில் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள். உங்களுக்கு ஒரு கருத்தில் முரண்பாடு இருந்தால் அதற்கு உங்கள் கருத்தை வையுங்கள். அதைவிடுத்து முகங்களை அறிகிறோம் முதுகை அறிகிறோம் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் முன்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று எல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக கருத்தாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் எழுதாதீர்கள். பல அரசியல் கருத்தாடல் திரிகள் திசைதிருப்பபடுவதற்கு இப்படியான சின்னப்பிள்ளைகள் நேசரியில் ரீச்சருக்கு முறைப்பாடுசெய்வதுபோன்ற கருத்துக்கள்தான் காரணம். மேலே நீங்கள் எழுதிய பந்தியில் ஏதாவது பிரயோசனமான் கருத்து இருக்கா?.தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் தான் சீமானின் மனைவி கயல்விழி

 

கல்யாணப் பூரிப்பில் இருக்கிறார் சீமான்!

 

‘வாழ்த்துகள்’ சொன்னால், ”அட, மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்… அதைக் கடைசியாப் பார்த்துக்கலாம்!” என்று மடை மாற்றுகிறார்.

”தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்…இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம் காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?”

”சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மை யான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள். சாதி மத உணர்வைசாகடிச் சுட்டுதான் ‘தமிழர்’ என்ற உணர்வோடுமேலெ ழுந்து வர்றோம். திவ்யாவுக்குச் சாதி வெறி இருந்திருந்தால், இளவரசனை மணந்து இருக்குமா? இளவரசன் மரணத்தைப் பா.ம.க-வில் உள்ளவங்க எல்லாரும் கொண்டாடிட்டாங்களா என்ன? அவங்களுக்குள்ளும் வருத்தம் இருக்கும். இளவரசனே, ‘திவ்யாவைக் காதலிப்பதற்கு அதிகமா உதவியது வன்னிய நண்பர்கள்தான்’னு சொன்னானே! அதேபோல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வாழும் ஏழு குடும்பங்கள் தர்மபுரியில் இருக்கின்றன. ஆனால், திவ்யா – இளவரசன் காதல் மட்டும் திட்டமிட்டு அரசியல் நோக்கத்துக்காகத் திசைத் திருப்பப்பட்டு இருக்கு. அதை கொம்பு சீவிக் குத்தவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியா? இதுக்கு ‘அறிக்கை விடு, கருத்து சொல், எதிர்த்துப் பேசு’ என்ற சிந்தனைதான் பிழை. அதைச் சரிபண்ணணும்!”
p88a.jpg
‘மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?”

”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா,  அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம்  படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார் இருப்பா? நான்தான் இருப்பேன். இந்த அடக்குமுறைகள் எல்லாம் மேலும் மேலும் நம்மை வெறியேற்றி, இன்னும் வீரியமாகப் பாயவைப்பதற்கான வேலையே தவிர, வேறொன்றும் இல்லை!”

” ‘பிரபாகரன் இறந்துவிட்டார். அவரின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகுறித்து உங்கள் கருத்து என்ன?”

”என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியவில்லை என்பதே சத்தியம். பயிற்சி எடுக்கும்போதுகூட தலைக் கவசம், புல்லட் ஜாக்கெட் இல்லாமல் என் தலைவன் நின்றது இல்லை. சாக்ஸ் வரை வெடி மருந்து நிரப்பி இருக்கும். குறைந்தது 200 பேருக்கு மேல் அவரைச் சுற்றி எப்போதும் பெட்ரோல் கேனுடன் நிற்பார்கள். ஒருவேளை என் அண்ணன் செத்திருந்தால், அந்தப் பாதுகாப்புப் படையினர் அவரைச் சாம்பலாக்கிவிட்டுத்தான் நகர்ந்திருப்பார்கள். சண்டையிட்டபோது கால் கருகிப்போனதால் எங்கள் அண்ணனுக்குக் ‘கரிகாலன்’ என்கிற வேறொரு பெயரும் உண்டு.  ஆனால், அவர்கள் காட்டும் உடலில் கால் எங்கே கருகி இருந்தது? சில விஷயங்கள்ல நீங்கள் கேள்வி எழுப்பாமலே இருந்துவிட வேண்டும். ராஜபக்ஷே சொல்வதை நம்புறீங்க… நான் சொல்றதை நம்ப மாட்டீங்களா? என் அண்ணன் இருக்கும்போது என்ன செய்தோமோ, அதையெல்லாம் இப்பவும் ‘அவர் இருக்கிறார்’னு நினைச்சு செய்கிறோம். பிரபாகரன் என்பவர் ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் உள்ள உருவம்னு நீங்க நினைக்கக் கூடாது. அவர், தமிழ் தேசிய இனத்தின் உயிர்; ஓர் ஆன்ம பலம்!  ‘இருக்கிறார்’ என்ற நம்பிக்கையோடு இந்த மக்கள் செயல்படும் போது, அதை அப்படியே விட்டுடணும்! புலிகளிடம் நான் காசு வாங்கிட்டுப் பேசுறேன்னு சொல்றாங்க. அண்ணனை நான் சந்திச்சப்ப அவர் எனக்கொரு கடிகாரம் தந்தார். பிறகு, ‘உன் பாதுகாப்புக்கு வெச்சுக்க’னு ஒரு கத்தி தந்தார். அவ்வளவுதான்! பொணத்தைக் கட்டிப்பிடிச்சு அழுற என் இன மக்கள் எனக்கு பணத்தை அனுப்பிட்டா படுத்துக்கிடப்பான்?”

”இணையத்தில் உங்களை காமெடியனைப் போல சித்திரிக்கிறார்களே?”

” ‘விமர்சனம் என்பது எப்போதும் வெறும் சொற்கள்தானே தவிர; நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல’ – இது என் அண்ணன் பிரபாகரன் சொன்னது. அதைக் கடந்து போயிடணும். தந்தை பெரியார், காமராஜர், என் அண்ணன் போன்றவர்களைப் பற்றி எல்லாம் பேசாததையா என்னைப் பற்றிப் பேசிடப்போறாங்க? பொழுது போகாம தண்ணி அடிச்சுட்டு, சிகரெட் புகைச்சுட்டுப் எழுதிட்டுப் போறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் முன்வந்து ‘சீமான் அயோக்கியன்’னு பேசுங்களேன். அந்தத் துணிச்சல் இருக்காது. ‘அப்படியான எந்த விமர்சனத்துக்கும் பதில் எழுதாதீங்க’ன்னு என் தம்பிகளிடம் சொல்லியிருக்கேன். ‘சீமான் முதல்வராகும் கனவோடு இருக்கிறார்’னு என்னைக் கிண்டலடிக்க அவங்க யாருங்க?”

”என் அடுத்த கேள்வியே அதுதாங்க. ‘நான் முதல்வரானால்…’னு பல இடங்கள்ல பேசுறீங்க. அது அத்தனை எளிதான காரியமா?”

”அதில் என்ன சிரமம் இருக்கு? எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவால் ஆகிட முடியும். ஸ்டாலினால் ஆகிட முடியும்னா, சீமானால் முதல்வராக முடியாதா? விஜயகாந்த் முதல்வராக விரும்பும்போது, சீமான் ஆகக் கூடாதா? இந்த மண்ணின் பிள்ளைகளான எங்களுக்கு, ‘இந்த மண்ணை ஆளும் லட்சியம்கூட இருக்கக் கூடாது’னு நினைச்சீங்கன்னா, அந்த மாதிரி துரோகம், அயோக்கியத்தனம் இந்த உலகத்தில் கிடையாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த நாடு அய்யா நல்லகண்ணுவிடமும் பழ.நெடுமாறனிடமும் இருந்திருந்தால், என்றைக்கோ உருப்பட்டு இருக்கும். பத்து, இருபது பொண்டாட்டிக் கட்டி, ஏகப்பட்டப் புள்ளைங்களைப் பெத்து…  எல்லாருக்கும் சொத்துச் சேர்க்குறதுக்கும், ஆத்து மண்ணை 60 ஆயிரம் கோடிக்கு அள்ளி விற்கவும், கமிஷன் வாங்கவுமா  நாங்க ஆட்சிக்கு வர்றோம்னு சொல்றோம்?”

”உங்கள் திருமணச் செய்தியைச் சொல்லுங்களேன்..?”

”செப்டம்பர்-8 எனக்குக் கல்யாணம்.  எனக்கு மனைவியா வரப்போகும் கயல்விழி… முன்னாள் சபாநாயகர், அய்யா காளிமுத்து அவர்களின் மகள். தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் அதிகமாகச் சொன்ன வகையில், காளிமுத்து அய்யா தெரிந்தும் தெரி யாமலும் விடுதலைப் போராட்டத்துக்கு அதிக அளவில் உதவியுள்ளார். அந்த அடிப்படையில் இன விடுதலைப் போராட்டத்தில் கயல்விழிக்கு அதீதப் பற்று. தம்பி பாலச்சந்திரன் இறந்தபோது, திருச்சியில் பட்டினிப் போராட்டம் நடத்தி னேன். அந்தச் சமயத்தில்தான், ‘நான் இன்னார் மகள், சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கி றேன். நானும் உங்கள் இயக்கத்தோடு இணைந்து போராடணும்னு நினைக்கிறேன்’னு  கயல்விழி பேசினாங்க. ஒரு பெண் இப்படிப் பேசியது பெருமகிழ்ச்சி, நம்பிக்கையைத் தந்தது. ‘சென்னை வந்ததும் சந்திக்கிறேன்’னு சொன்னேன். ஆனால், வேலைப்பளுவில் மறந்தேவிட்டேன். ‘சந்திக்க லாம்னு சொல்லிட்டு நேரம் தர மறுக்கிறீங்களே’னு மறுபடியும் பேசினாங்க. அதைத் தொடர்ந்து சந்தித்தோம். பேசினோம். புதிதாக என்னைப் பற்றிப் பேசி, புரியவைக்கவேண்டிய அவசியம் அவங்களுக்கு இல்லாமல் இருந்தது. இருவருக் குள்ளும் புரிதல் இருந்தது.  ‘ஆணும் பெண்ணும் இணைந்துதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’னு என் தேசியத் தலைவர் சொல்வார். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற இரண்டு பேர் இணைந்துப் பயணிப்பது சரியாக இருக்கும் என நினைத்து இந்த முடிவெடுத்தோம். அப்படித்தான் இந்தத் திருமணம் முடிவானது!”

”எந்த நேரமும் சிறையில் அடைக்கப்படக்கூடிய ‘மாப்பிள்ளை’யை கயல்விழி வீட்டில் எப்படி எதிர்கொண்டார்கள்?”

”எடுத்த எடுப்பில் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவங்க ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்காங்க. நானும் ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்கேன். நடுவில் கேடுகெட்ட சாதிகள் வேற இருக்கு. எல்லாத்தையும் மீறி, பூரண சம்மதத்துக்குப் பிறகுதான் இந்தத் திருமணம் நடக்குது. நெடுமாறன் ஐயா, எங்க அப்பா மணிவண்ணன், எங்க அண்ணன் சந்திரசேகர் எல்லாரும்தான் எனக்காகப் பொண்ணு கேட்டுப் போய் பேசி முடிச்சாங்க. ஏற்கெனவே பலமுறை சிறைக்குச் சென்று வந்தவன்தானே நான்.  சிறைக்குச் செல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கும் எங்கய்யா பழ.நெடுமாறன், வைகோ அண்ணன் மூவருக்கும் உயிருக்கு ஆபத்துனு செய்தி வந்ததும் கொஞ்சம் பயந்தாங்க. மற்றபடி யாவையும் நலம்!”

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு ஜயா. உங்களுக்கு எப்ப பாரு யாராவது ஊக்குவிக்கினம் தேக்குவிக்கினம் என்கிற கதைதான். ஏன் ஜயா இங்கு உங்கள் கருத்துக்கு மாறாக எழுதுபவர்கள் எல்லாம் பேபேக்கள் சொந்தப்புத்தி இல்லாதவர்கள் சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு எழுதுபவர்களா? தயவு செய்து ஊரில் திண்ணையில் இருந்து கதைப்பது போல் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள் யாழின் அரசியல் கருத்தாடல்கள் இடம்பெறும் திரிகளில். அண்ணண் தம்பி தங்கச்சி கதைகளை குழுக்கதைகளை இனியபொழுது போன்ற பொழுதுபோக்கு திரிகளிலும் திண்ணையிலும் கதையுங்கள். இப்படியான சீரியாசான திரிகளில் வந்து கருத்தை திசை திருப்பும் வகையில் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள். உங்களுக்கு ஒரு கருத்தில் முரண்பாடு இருந்தால் அதற்கு உங்கள் கருத்தை வையுங்கள். அதைவிடுத்து முகங்களை அறிகிறோம் முதுகை அறிகிறோம் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் முன்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று எல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக கருத்தாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் எழுதாதீர்கள். பல அரசியல் கருத்தாடல் திரிகள் திசைதிருப்பபடுவதற்கு இப்படியான சின்னப்பிள்ளைகள் நேசரியில் ரீச்சருக்கு முறைப்பாடுசெய்வதுபோன்ற கருத்துக்கள்தான் காரணம். மேலே நீங்கள் எழுதிய பந்தியில் ஏதாவது பிரயோசனமான் கருத்து இருக்கா?.தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

இவளவு சீரியஸாக..... பெரியவர்கள்

 சீமானை அறிந்தவர்கள்...
 கூட படுத்தவர்கள் ....
வந்து அரசியல் கலந்து இன விடுதலை பற்றி ஆராய்ந்து  கொண்டிருக்கும் இந்த திரியில்.
\வந்து இப்படி எழுதினாரா??
என்ன தினாவெட்டு இருந்திருக்கும்??

 

அதே போலத்தான் அவரது அரசியாலாகட்டும், அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், முதல்வர்,பிரதமர் என்னவாகும் ஆகட்டும் அதை அவர் தமிழகத்தோடு மட்டும் வைத்துக்கொள்ளும் வரைக்கும் அதில் கருத்துக்கூறும் யோக்கியம் எமக்கு இல்லை ஆனால் என்று  அவர் தனது  சுயநலத்துக்காக ஈழத்தமிழர் அவலங்களைப் பாவித்தாரோ அன்றிலிருந்து நீங்களவரை ஆதரிக்க எவ்வளவு காரணமிருக்கோ அவ்வளவு அவரை எதிர்க்கவும்,அவரது பித்தலாட்டங்களையும்  வெளிக்கொண்டு வரும் தார்மீக உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. :)

 

 

சீமானை விமர்சிக்கும் பெரும்பானமையானோர் வெறும் காழ்ப்புணர்ச்சியிலேயே அவரை தூற்றுகிறார்கள்.அதைப்பார்த்துவிட்டு விடயம் விளங்காமல் பல சீவன்களும் அவர்கள் பின்னே சீமானை திட்டுவதை பொழுதுபோக்காக செய்கிறார்கள்.அரசியலில் உள்ள ஒருவரை விமர்சிக்க அவரின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் ஆராய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அனால் இங்கு யாழிலோ அல்லது வெளியே அரசியல் பொதுத்தளத்திலோ இப்பொழுது என்ன நட்ந்துகொண்டிருக்கிறது என்றால் சீமானை விமர்சிப்பவர்களில் 98வீதமானோர் யாரும் நியாயமான காரணங்களை அவரை எதிர்ப்பதற்கான காரணங்களை தெளிவாக முன்வைத்து விமர்சிப்பதாக இல்லை. வெறுமனே எல்லோரும் சீமான் ஈழத்தமிழரை தனது யசுநல அரசியலுக்கு பயன்படுத்துகிறார் என்று சொல்லுகிறார்களே ஒழிய யாரும் அதற்கான வலுவான ஆதாரங்கலை காரணிகளை முன்வைத்ததாக தெரியவில்லை. அதேபோல்தான் சீமானை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி கதைக்கப்படுபவைகளையும். இதேபோலத்தான் சீமானை ஆதரிப்போரும் எதிர்ப்பவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில்லை ஆனால் அவர்கள் மேல் தனிமனித தாக்குதல் அல்லது வன்முறை மூலம் வாயை மூடச்செய்தல் என்பதாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

”எந்த நேரமும் சிறையில் அடைக்கப்படக்கூடிய ‘மாப்பிள்ளை’யை கயல்விழி வீட்டில் எப்படி எதிர்கொண்டார்கள்?”

”எடுத்த எடுப்பில் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவங்க ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்காங்க. நானும் ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்கேன். நடுவில் கேடுகெட்ட சாதிகள் வேற இருக்கு. எல்லாத்தையும் மீறி, பூரண சம்மதத்துக்குப் பிறகுதான் இந்தத் திருமணம் நடக்குது. நெடுமாறன் ஐயா, எங்க அப்பா மணிவண்ணன், எங்க அண்ணன் சந்திரசேகர் எல்லாரும்தான் எனக்காகப் பொண்ணு கேட்டுப் போய் பேசி முடிச்சாங்க. ஏற்கெனவே பலமுறை சிறைக்குச் சென்று வந்தவன்தானே நான்.  சிறைக்குச் செல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கும் எங்கய்யா பழ.நெடுமாறன், வைகோ அண்ணன் மூவருக்கும் உயிருக்கு ஆபத்துனு செய்தி வந்ததும் கொஞ்சம் பயந்தாங்க. மற்றபடி யாவையும் நலம்!”

 

ஆதாரம் இல்லாத செய்தி இது....
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து சீமானின் திருமணம் குறித்து கனக்க யோசிக்க வேண்டிய ஒருவர் கயல்விழிதான்..! அவரே சரியென்று சொல்லிவிடடார்.. :rolleyes: கொஞ்சம் விட்டால் சீமான் கல்யாணம் கட்டலாமா என்பதை பொதுவாக்கெடுப்புக்கு விடச்சொல்வார்கள் போலுள்ளது.. :lol:

 

இவளவு சீரியஸாக..... பெரியவர்கள்

 சீமானை அறிந்தவர்கள்...
 கூட படுத்தவர்கள் ....
வந்து அரசியல் கலந்து இன விடுதலை பற்றி ஆராய்ந்து  கொண்டிருக்கும் இந்த திரியில்.
\வந்து இப்படி எழுதினாரா??
என்ன தினாவெட்டு இருந்திருக்கும்??

 

ம்ம். உங்களுக்கு இந்த திரியில் வந்து உதை எழுத இருக்கும் அதே தெனாவெட்டுத்தான் அவருக்கும் எண்டு நினைக்கிறன். <_<

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து சீமானின் திருமணம் குறித்து கனக்க யோசிக்க வேண்டிய ஒருவர் கயல்விழிதான்..! அவரே சரியென்று சொல்லிவிடடார்.. :rolleyes: கொஞ்சம் விட்டால் சீமான் கல்யாணம் கட்டலாமா என்பதை பொதுவாக்கெடுப்புக்கு விடச்சொல்வார்கள் போலுள்ளது.. :lol:

 

திரியை முழுசா வாசிக்கவில்லை போல் ????

என்ன சொல்லுவார்கள் .................
அப்படிதான் எழுதுகிறார்கள்!
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு ஜயா. உங்களுக்கு எப்ப பாரு யாராவது ஊக்குவிக்கினம் தேக்குவிக்கினம் என்கிற கதைதான். ஏன் ஜயா இங்கு உங்கள் கருத்துக்கு மாறாக எழுதுபவர்கள் எல்லாம் பேபேக்கள் சொந்தப்புத்தி இல்லாதவர்கள் சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு எழுதுபவர்களா? தயவு செய்து ஊரில் திண்ணையில் இருந்து கதைப்பது போல் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள் யாழின் அரசியல் கருத்தாடல்கள் இடம்பெறும் திரிகளில். அண்ணண் தம்பி தங்கச்சி கதைகளை குழுக்கதைகளை இனியபொழுது போன்ற பொழுதுபோக்கு திரிகளிலும் திண்ணையிலும் கதையுங்கள். இப்படியான சீரியாசான திரிகளில் வந்து கருத்தை திசை திருப்பும் வகையில் சின்னப்பிள்ளைத்தனமாக எழுதாதீர்கள். உங்களுக்கு ஒரு கருத்தில் முரண்பாடு இருந்தால் அதற்கு உங்கள் கருத்தை வையுங்கள். அதைவிடுத்து முகங்களை அறிகிறோம் முதுகை அறிகிறோம் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் முன்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று எல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக கருத்தாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் எழுதாதீர்கள். பல அரசியல் கருத்தாடல் திரிகள் திசைதிருப்பபடுவதற்கு இப்படியான சின்னப்பிள்ளைகள் நேசரியில் ரீச்சருக்கு முறைப்பாடுசெய்வதுபோன்ற கருத்துக்கள்தான் காரணம். மேலே நீங்கள் எழுதிய பந்தியில் ஏதாவது பிரயோசனமான் கருத்து இருக்கா?.தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

 

 

உங்களுக்கு  ஒரே பதில்

எங்களை வகுப்பேற்றுவதற்கு முன்

யாழில் எப்படி  எழுதணும்

தொடர்ந்து எழுத எவற்றைக்கடைப்பிடிக்கணும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

இதற்கு PHD படிக்கவேண்டிய  அவசியமில்லை

சாதாரண  திண்ணையே போதும். :(

 

சீமானை எல்லாம் யார் கணக்கில் எடுத்தது ? யாரையும் கட்டி எப்படியும் வாழட்டும்.

ஈழஉணர்வை ஏன் இழுக்கின்றார் என்பது தான் தெரியவில்லை .அப்ப கனிமொழி இன்னும் தோதாக இருக்கும் .

சீமான் ஈழ உணர்வை இழுப்பதால் ஈழத்துக்கு ஏற்படக்கூடிய தீமைகள் சிலவற்றை பட்டியலிடுங்கள் அண்ணை.

சீமான் நேர்மையானவராக உண்மையானவராக இருந்தால் தனது கலியாண விடயத்தில் இந்த ஈழஉணர்வை இழுத்திருக்க மாட்டார் .அவர் ஒரு அரசியல்வாதி என்றபடியால் தான் இழுத்தார் .

சீமான் மாத்திரம் அல்ல தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஒட்டு மொத்தமுமே ஈழப்பிரச்சனையை எடுப்பது தமது சுய அரசியலின் ஒரு பங்குதான் . இதில் பலர் சாயம் வெளுத்துவிட்டது .சீமானுக்கு அதற்கான சந்தர்ப்பம் இன்னமும் வரவில்லை இருந்தாலும் சீமானின் பேச்சுகள் ,செய்கைகள் சுய அரசியல் சார்ந்ததாதவே இருக்கு.அதை விட புலம் பெயர்ந்தவர்கள் எவருடன்  அவர் தொடர்பு வைத்திருக்கின்றார் என்பதும் மிக முக்கியம் .பணமும் செல்வாக்கும் உள்ள கச போக்கிலிகளுடன் தான் அவர் தொடர்பு .உள்ளதும் முக்கியம் .

 

எவனாவது புலிகளை பற்றி புகழ் பாடினால் அவரை தூக்கிபிடிக்க,வெளிநாட்டிற்கு கூப்பிட  ஒரு கூட்டம் இருக்கு.அவனை மேடையில் ஏற்றி அவன் புலி புகழ் பாட புல்லரிக்கும் கூட்டம் கனக்க  இருக்கு.வந்தவன் வெளிநாடும் பார்த்து காசும் பார்த்து போய்விடுவான் . (அவர்கள் அறிவு அந்த அளவுதான் )

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
அண்ணா நான் சொல்ல வந்தது சீமானின் உண்மையான குணம் எனக்குத் தெரியும்.கூடிய சீக்கிரம் உங்களுக்கும் தெரிய வரும் அதைத் தான் சொன்னேன்
 
கோழிகுருடாய் இருந்தால் நமக்கென்ன ராசாத்தி? நமக்கு குழம்புதானே முக்கியம்.
 
உலகத்தலைவர்கள் வரிசையிலை மாவோசேதுங்,பிடல்கஸ்ரோ,ஜோன்கெனடி இப்பிடி கனபேர் விட்ட சேட்டையள் எல்லாம் தெரியுமோ? ஏன் பில்கிளின்ரன் குறைஞ்ச ஆளே? இவையளெல்லாம் சனத்துக்கு நல்லாட்சியைத்தானே செய்தவை.
 
எங்கடசனத்திலை இருக்கிற விசேசகுணம் என்னெண்டால் தங்கடை நாத்தத்தை தாங்களே கிண்டிக்கிளறி நாறடிக்கிறதுதான். இது வேறை  எந்த மிருக,மனித இனத்திலையுமில்லை.
 
மன்னிக்கோணும் இதிலை ஒரேயொரு இனம்மட்டும் விதிவிலக்கு.அதுதான் நம்ம நாயனார் இனம் (நாய்) அவையள் தாங்களும் தின்னாயினம்....மற்றவையையும் தின்ன விடாயினம்.

திருமண வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.