Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடைக்கால விடுமுறைக்கு வடக்கு கிழக்கு சென்று அரைகுறை ஆடைகளுடன் திரியும் புலம்பெயர்த் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அரசு ஈழத்தில் ஆட்சிசெய்தபோது நீச்சல் போட்டிகளில் பெண்கள் நீச்சலுடையில் பகிரங்கமாகத் தோன்றினார்கள். எவரிடமிருந்தும் எந்த விமர்ச்சனமும் வெளிவரவில்லை.

  • Replies 103
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அரசு ஈழத்தில் ஆட்சிசெய்தபோது நீச்சல் போட்டிகளில் பெண்கள் நீச்சலுடையில் பகிரங்கமாகத் தோன்றினார்கள். எவரிடமிருந்தும் எந்த விமர்ச்சனமும் வெளிவரவில்லை.

 

பிரபாகரன் ஆட்சியோ.. ஓபாமா ஆட்சியோ.. நீச்சல் போட்டியில் நீச்சல் உடையில் தான் நீச்சலடிக்கனும். சேலையோடையா நீச்சலடிக்கிறது. :icon_idea:

 

நீச்சல் உடையோட.. பிக்நிக் போறது தான்.. இங்க பேசப்படுகிற விடயம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
70 களில் யாழ்ப்பாணத்தில் எங்கட சித்திமார்,அன்ரிமார் எல்லாம் குட்டைப் பாவாடை முழங்காலுக்கு மேல் போட்டு இருக்கிறார்கள்.விளையாட்டுப் போட்டியின் போது கட்டையாக சோட்ஸ்[running shorts] போட்டு ஓடி இருக்கிறார்கள்.கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை
 
  • கருத்துக்கள உறவுகள்

70 களில் யாழ்ப்பாணத்தில் எங்கட சித்திமார்,அன்ரிமார் எல்லாம் குட்டைப் பாவாடை முழங்காலுக்கு மேல் போட்டு இருக்கிறார்கள்.விளையாட்டுப் போட்டியின் போது கட்டையாக சோட்ஸ்[running shorts] போட்டு ஓடி இருக்கிறார்கள்.கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை

 

அப்படி போடுங்கோ.... எனக்கு பத்து வயது இருக்கும்....... :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்கோ.... எனக்கு பத்து வயது இருக்கும்....... :D

எழுபதுகளில் என்றால் ஒரு 79வரைக்கும் தள்ளலாம்தானே.. :D

 

கையில்லாத சேலை உடுத்திருக்கிறார்கள்.அப்ப இல்லாத கலாச்சாரத்தை பற்றி இப்ப கவலைப்படுவது தான் வேடிக்கை

 

 

உங்கட காலத்திலை சேலைக்கு கை வேறை இருந்துதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிவோர்களிடம் குறைகளைக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. ஆனாலும் இத்திரிக்கான சில பின்னூட்டங்கள் தவறாக தென்படும்போது அதனை தவறெனக்காட்டும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. நீங்கள் என்னைச் சுட்டிக் காட்டியதும் திரும்பவும் உங்கள் பதிவை படித்துப் பார்த்தேன்.

 

சிங்கள ஆமிக்காரன் இவர்களை ஒன்றும் செய்யுறானில்லையே என்றது தான் என்ர கவலை. சும்மா ஊரில பெட்டி விக்கிற பெண்களையும்.. கச்சான் விக்கிற பெண்களையும்... காடு வெட்டிற பெண்களையும் துகில் உரிகிறவன்.. உவையை ஏன் விட்டு வைச்சிருக்கிறான். உதில.. ஒரு நாலைஞ்சை.. பிடிச்சு மிச்ச துகிலையும் உரிஞ்சால்.. அப்புறம் ஊர்ப் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டார்கள். :rolleyes::(

 

ஆதங்கத்தில் இப்படி நீங்கள் எழுதியிருக்கலாம். ஆனால் இதனை நீங்கள் திரும்பவும் படித்துப் பார்க்கும்போது உங்களுக்கே உறுத்தலாக தெரியவில்லையா. பிணம்புணரும் காட்டுமிராண்டிப் படையிடமா எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தெரிந்தோ, தெரியாமலோ உதவியைக் கோரவேண்டும்!. ஆத்திரத்தில், ஆதங்கத்தில் எழுதினாலும் அதில் ஒரு நியாயம் வேண்டுமல்லவா!. தொடர்ந்து நீங்கள் பதிந்த பதில் பின்னூட்டம் சிறப்பானது. நீங்கள் அதில் தெரிவித்துள்ளது வரவேற்கப்படக்கூடிய நியாயமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. இங்க பேசப்படுகிற விடயத்தை நான் திசைதிருப்ப முயல்வதாக உணர்ந்தால் மன்னிக்கவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டுப் பிள்ளை, கொடியில காயப்போட்டது, காத்துக்கு, எங்கட வீட்டு வளவுக்குள்ள வந்து விழுந்திட்டுது, மோனை! :D

 

product-hugerect-97219-28561-1366508890-

 

 

அது  சரி

சட்டையைக்காட்டிங்க(கழட்டிட்டீங்க) :D

அவா

எங்க............. :icon_mrgreen: 

(உங்களுக்கு பக்கத்து வீடு என்றால்  எனக்கு மச்சாள் முறை அது  தான்... :lol: )

இணையதள காரருக்கு வேற வேலை இல்லை பரபரப்பான செய்தி போடவேண்டும் என்பதற்காக இப்படியான செய்தியை போடுகிறார்கள் 


முதல்ல பாடசாலை மாணவர்கள் கஞ்ச அடிப்பதை நிறுத்துங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பன்சலவுக்கு அதற்குரிய ஆடை அணிந்து தான் சிங்களக் குமரிகள் போகிறார்கள். முஸ்லீம் பெண்கள் அப்படி. எமது பெண்கள் அப்படி. அதேன் வெளிநாட்டில பிறந்தவைக்கு மட்டும்.. உது தெரியுதில்ல...!

 

உடை என்பது இடத்திற்கு நிகழ்வுக்கு கெளரவம் அளிக்கும் ஒரு விடயம். அண்மையில்.. பிரிட்டனின் பிரதிப் பிரதமரை.. நீங்கள் ஏன் இந்த வெக்கைக்கு சோட்ஸ் போடவில்லை என்று கேட்ட போது அவர் சொன்னார்.. அந்தத்த தொழிலுக்கு.. இடத்திற்கு என்று ஒரு உடை ஒழுங்குள்ளது. அதைப் பின்பற்றுவது நாகரிகம் என்று.

 

அப்படி ஒரு நாகரிகத்தை தான் அங்கும் மக்கள் விரும்பினம். அது அவர்களுக்கு கூடிய பாதுகாப்பு என்றும் கருதினம். இதற்குப் போய்.. அப்ப போட்டது.. இப்ப போட்டது என்று நியாயம் கற்பிக்க முனைவது.. முறையாகாது.

 

முன்னரும் மினி ஸ்கேர்ட்.. ஆம் கட்.. டீப் நெக்.. சட்டை போடுற ஆன்ரிமாரை ஒரு மாதிரியாத்தான் ஆக்கள் பாக்கிறவை..! கூடிய அளவு கொழும்பு அக்கால இருந்திட்டு வாறவை தான் உந்தக் கூத்துக் காட்டிறது. எங்கட ஊர்ப் பெண்கள்.. இந்த விடயத்தில்.. நிலத்திற்குரிய ரெஸ் கோட் டை தான் அதிகம் விரும்பிறவை. அந்தந்த நிலத்திற்கு அந்தந்த சுவாத்தியற்கு என்று உடை ஒழுங்குள்ளது. அதை பின்பற்றுதல் உல்லாசப் பயணிகளுக்கும் அழகு.. ஆபத்தும் இல்லை..! அதுவும் இனவெறிப் படைகள் உள்ள ஓர் இடத்தில்..! :icon_idea::)

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

எமக்காக தான் கலாச்ச்சாரம். கலாச்சாரம் மாறக்கூடியது, எப்போதும் மாறிக்கொண்டோ இருப்பத்து. இது உலக பொது நியதி. பண்டைய கற்கால  கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் கிறுக்கர்களை இந்த இயற்கை யதாரத்தத்தை உணர்ந்து கொள்ள்ள வேண்டும். அவ்வாறு உணராமல் தொடர்ந்து கத்தி கொண்டே போனால் மாரி தவக்கை போல் கத்தட்டும். உலகம் இவர்களுக்காக காத்து நிற்க போவதில்லை.

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

 

இதுக்குள்ளும் புலிகளா???? :(

  • கருத்துக்கள உறவுகள்

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

எழுதுவதும் சொல்வதும் சிதைப்பதும் இலகு. ஒன்றை ஆக்கிக்காட்டி விட்டு மற்றவர்களை விமர்சிப்பதே உண்மையில் சிறந்தது.

 

சரி புலிகள் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாததால் தோற்றார்கள் என்போர்.. அந்த யதார்த்ததை விளங்கிக் கொண்டு ஒரு போராட்டத்தை நடத்தி வென்று காட்டட்டும்... அதன் பின் புலிகளை விமர்சிக்கட்டும். புலிகள் விடுதலைக்காகச்.. செய்ததில் ஒரு துரும்பளவு கூட செய்யாமல்.. புலிகளை விமர்சிப்பது என்பது வெறும்.. வாய்ச்சவடால் மட்டுமே ஆகும்.

 

அதேபோல்.. யாழ் வீதிகளில்.. ரூ பீசில் அலைவதன் மூலம்.. நாகரிகமான.. ஆபத்துக்களை விலைக்கு வாங்காத... ஒரு  சமூகத்தை அமைச்சுக் காட்டிட்டு.. சொல்லனும்.. இது மாரித்தவளைக் கத்தல் என்று.

 

இங்கிலாந்தில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகளுக்கும்.. மற்றும் பாலியல் குற்றங்களுக்கும்.. உடைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி சமூகவியல் ஆர்வலர்கள் யோசிக்கும் நிலையில்.. (நிராகரிப்புக்களும் உள்ளன. அவை உடை வடிவமைப்பாளர்களின் பக்கம் இருந்து வருவனவாகவும் இருக்கலாம்.) நம்மவர்கள்..??????????!

 

இதற்கு நம்மவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்..??!

 

Tesco bans customers wearing pyjamas, nightgowns and slippers.

 

http://www.mirror.co.uk/news/uk-news/tesco-bans-customers-wearing-pyjamas-197999

 

Edited by nedukkalapoovan

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

 

 

சூப்பரா சொன்னீங்கண்ணா.... !  

 

இந்தியாவிலை நடிகைகள் தொடை தெரிய உடுப்பு போட்டு பொது இடத்துக்கு வந்தால்  உடனையே கேஸை போட்டு  கேஸை காசாக்கிறாங்களே  அது எந்த உலக நியாயம்...??  

 

இல்லை தெரியாமத்தான் கேக்கிறன்  உங்களுக்கு எல்லாம் எங்கை அடிப்பட்டாலும் காலைதான் தூக்குவீங்களா.....??    நாய் மாதிரி ....???   :unsure:  :unsure:  :unsure:

பல தலிபான்கள் எங்களுக்கும் இருக்கின்றார்கள் .

அதென்ன பெண்கள் போடும் உடுப்பை பற்றி மட்டும் விமர்சனம் ?

விடுதலை புலிகளில் உன்னதமான அர்பணிப்புடன் கூடிய போராட்டம் எக்காலத்திலும் மதிக்கபடவேண்டயது. கெளரவத்துடன் நினைவு கூரவேண்டியது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களின் தவறுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் நினைப்பது தவறு.

விடுதலை புலிகளில் உன்னதமான அர்பணிப்புடன் கூடிய போராட்டம் எக்காலத்திலும் மதிக்கபடவேண்டயது. கெளரவத்துடன் நினைவு கூரவேண்டியது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவர்களின் தவறுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் நினைப்பது தவறு.

 

அதுக்கும் உள்ளாடைக்கும்  என்னங்க தொடர்பு ....??? 

 

சரி புலிகள் பிழை விட்டவை எண்டால் நீங்கள் எல்லாம் போராடி இருக்கலேமே புலிகளை விட பலமான அமைப்பை உருவாக்கி...??   

 

இல்லை விமர்சனம் மட்டும் தான் வருமா....?? 

  • கருத்துக்கள உறவுகள்

பன்சலவுக்கு அதற்குரிய ஆடை அணிந்து தான் சிங்களக் குமரிகள் போகிறார்கள். முஸ்லீம் பெண்கள் அப்படி. எமது பெண்கள் அப்படி. அதேன் வெளிநாட்டில பிறந்தவைக்கு மட்டும்.. உது தெரியுதில்ல...!

 

உடை என்பது இடத்திற்கு நிகழ்வுக்கு கெளரவம் அளிக்கும் ஒரு விடயம். அண்மையில்.. பிரிட்டனின் பிரதிப் பிரதமரை.. நீங்கள் ஏன் இந்த வெக்கைக்கு சோட்ஸ் போடவில்லை என்று கேட்ட போது அவர் சொன்னார்.. அந்தத்த தொழிலுக்கு.. இடத்திற்கு என்று ஒரு உடை ஒழுங்குள்ளது. அதைப் பின்பற்றுவது நாகரிகம் என்று.

 

அப்படி ஒரு நாகரிகத்தை தான் அங்கும் மக்கள் விரும்பினம். அது அவர்களுக்கு கூடிய பாதுகாப்பு என்றும் கருதினம். இதற்குப் போய்.. அப்ப போட்டது.. இப்ப போட்டது என்று நியாயம் கற்பிக்க முனைவது.. முறையாகாது.

 

முன்னரும் மினி ஸ்கேர்ட்.. ஆம் கட்.. டீப் நெக்.. சட்டை போடுற ஆன்ரிமாரை ஒரு மாதிரியாத்தான் ஆக்கள் பாக்கிறவை..! கூடிய அளவு கொழும்பு அக்கால இருந்திட்டு வாறவை தான் உந்தக் கூத்துக் காட்டிறது. எங்கட ஊர்ப் பெண்கள்.. இந்த விடயத்தில்.. நிலத்திற்குரிய ரெஸ் கோட் டை தான் அதிகம் விரும்பிறவை. அந்தந்த நிலத்திற்கு அந்தந்த சுவாத்தியற்கு என்று உடை ஒழுங்குள்ளது. அதை பின்பற்றுதல் உல்லாசப் பயணிகளுக்கும் அழகு.. ஆபத்தும் இல்லை..! அதுவும் இனவெறிப் படைகள் உள்ள ஓர் இடத்தில்..! :icon_idea::)

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:  :icon_idea:

 

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:

 

சபாஷ் ரதி சரியான பதில் இக்கிறுக்கர்களுக்கு.

பல தலிபான்கள் இங்கு இருப்பது உண்மைதான். நல்ல காலம் இவங்க கையில ஆயுதம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் ரதி சரியான பதில் இக்கிறுக்கர்களுக்கு.

 

 

வார்த்தையில் மரியாதை  தெரியாதவர்

நன்றி  வணக்கம் :(  :(  :(

அதுக்கும் உள்ளாடைக்கும்  என்னங்க தொடர்பு ....??? 

 

சரி புலிகள் பிழை விட்டவை எண்டால் நீங்கள் எல்லாம் போராடி இருக்கலேமே புலிகளை விட பலமான அமைப்பை உருவாக்கி...??   

 

இல்லை விமர்சனம் மட்டும் தான் வருமா....?? 

அனுமதித்திருப்பார்களா?

அனுமதித்திருப்பார்களா?

 

பலமாக தானே இருந்தவை...??  இல்லையா ....??  ஏன் அழிஞ்சு போனார்கள்...?? 

 

TELO - 2000 க்கு மேற்பட்ட போராளிகள், PLOTE- 6000 பேர்..   இந்திய இராணுவம் வரும் போது புலிகளில்  900 பேருக்கு அண்மையில்  இருந்தார்கள்...   இந்திய இராணுவத்தோடு போராட விருமாதவர்கள் 300 பேர் விலகினர்கள்.... 

 

 

Edited by தயா

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

எமக்காக தான் கலாச்ச்சாரம். கலாச்சாரம் மாறக்கூடியது, எப்போதும் மாறிக்கொண்டோ இருப்பத்து. இது உலக பொது நியதி. பண்டைய கற்கால  கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் கிறுக்கர்களை இந்த இயற்கை யதாரத்தத்தை உணர்ந்து கொள்ள்ள வேண்டும். அவ்வாறு உணராமல் தொடர்ந்து கத்தி கொண்டே போனால் மாரி தவக்கை போல் கத்தட்டும். உலகம் இவர்களுக்காக காத்து நிற்க போவதில்லை.

 

சரிபிழைக்கு அப்பால் உலக யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாபெரும் தியாங்களையும் அர்பணிப்புகளையும் செய்து போரிட்ட எமது விடுதலைபுலிகளும் உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதலால் தான் தோல்வியடைய நேரிட்டது.

உலக மதங்கள் எல்லாமே தங்கள் கோவில்களுக்கு எப்படி போக வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கின்றன. அதை தெரிந்து கொள்வது அவசியம்.

 

அதில் மிக மிக இலகுவான முறைகளை கடைப்பிடிப்பது இந்து மதம்.  உண்மையில் மனுதர்ம சாத்திரத்தில் தன்னும் பெண்கள் கோவில்களுக்குள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை. ஆனால் பாண்பாடு , சிறிமிகள் முழுப்பாவாடை சட்டை, இளசுகள் ஒற்றைத்தாவணி. பெண்கள் சேலை. இப்போது சல்வார் கமிசும் அணிகிறார்கள். இது தமிழ் உடுப்பாக இல்லாவிட்டாலும் இந்து மத உடுப்பாக பார்க்கப்படுகிறது.  உன்மையில் இது பண்பாடு தன்னைத்தால் மாற்றி அசைந்து கொடுக்கும் முறை. இதை யாரும் பலமாக எதிர்க்கவில்லை.

 

தெருவில் பெண்கள் எப்படி போகலாம் என்று மேற்கு நாடுகளிலும் சட்டம் இருக்கு. இது பண்பாட்டல்ல சட்டம்.  ஆனால் மேற்குநாடுகள் பொதுவில் சட்டத்தில் எப்படி உடுக்க வேண்டும் எனப்தில் இலகு நடையை பின்பற்றுபவை. எங்காது ஒரு உடை இப்படி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சட்டப்படி நிர்ணயித்திருந்தால் அது சீருடை. சீருடையை நாம் பழகியது அவர்களிடம் இருந்துதான்.  இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலே உள்ள படத்தில் பெண்கள் தீவிரவாதமாக உடை அணிந்து இல்லை. அவர்கள் நீற்பது கூட கடற்கரையில்.  வலம்புரி வெளிவிட்ட செய்தி நல்லூர் ஆலயத்திற்குள்ளும் பெண்கள் அசிங்கமாக உடுக்கிறார்கள் என்று கூறி அந்த படத்தை போட்டதுதான். நல்லுருக்குள் வலம்புரியால் படம் எடுப்பது இலகல்ல. ஆனால் வெளியே வரும்போதுதன்னும்  ஒருபடத்தை எடுத்து போட்டிருக்கலாம். 

 

கோவிலுக்குள் எப்படி போகலாம் என்றதில் இருக்கும் பண்பாடு ஆன்மீகம் நோகத்துக்காக மட்டும் கோவில்கள் இருக்கின்றன எனபதில் இருந்து வரும் கட்டுப்பாடு. மேற்குநாடுகளில், பாடசாலைகள் மேமையான இடங்களாக கொள்ளப்படுவதால் எப்படி அங்கு உடுத்தலாம் என்ற வரையறை இருக்கு. இது சீருடையை சட்டமாக்காத பள்ளிகளுக்குத்தான் இந்த கட்டுப்பாடு.  

 

எனவே ஒருகரையில் மட்டும் எழுதாமல் நீங்கள் என்ன சொல்லவருகிறீகள் என்பதை சூழலை வரையறுத்து சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில்  தலையிட்டு விமர்சனம் செய்வதும் தேவையில்லாம் நேரத்தை வீண்டிப்பதும் தமி்ழ் கலாச்சாரத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பது தெரிகிறது இவ்விடயத்தை ஒரு செய்தியாக எழுதிய ஊடகம். அதை இங்கு இணைத்தது, அதையொடி அதற்கு வக்காலத்து வாங்கி எழுதுவது போன்ற விடயங்களை பார்க்கும் போது நாம் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களாக வாழ்வதை உறுதி செய்கிறோம்.

 

Tulpen,

ஊரில் எத்தனையோ பிரச்சனை இருக்க தேவையில்லாமால் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், அவர்கள் உடுத்து உடைகளில் தலையிட்டு விமர்சனம் செய்தும் தேவையில்லாம் நேரத்தை வீண்டித்தும் அதன் தொடர்பாக இந்தத் திரிக்குக் கருத்தெழுதியும் இன்னமும் பழைய நூற்றாண்டு கற்கால மனிதர்களாக, கிறுக்கர்களில் ஒருவராக வாழ முற்படும் எங்களுடன் நீங்களும் இந்தத் திரிக்குக் கருத்தெழுதி, எங்ளுடன் வாழ முற்படுவதை உறுதி செய்வதை ஆமோதித்து வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஆமாம் நெடுக்கு நீங்கள் யாழ்ப்பாணத்தில் யாராவது 'டூ பீஸ்' உடுப்பு போட்டுக் கொண்டு வீதிகளில் திரிவதைக் கண்டீர்களா? எந்த இணையத்திலாவது படம் வந்திருக்கா? 'டூ பீஸ்' உடை என்டால் என்ன? 
 
அடுத்த கேள்வி என்ன என்டால் அங்குள்ள இராணுவமோ,சிங்களவனோ அல்லது கேடு கெட்டத் தமிழனோ உங்கள் பாசையில் அங்கு 'டூ பீஸ்' உடுப்போடு செல்லும் பெண்களை எந்த பலத்தகாரத்திற்கும் உட்படுத்தாமல் பாவப்பட்ட அப்பாவி பெண்களை ஏன் பலவந்தப்படுத்துகிறார்கள்?
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே கல்யாணம் கட்டி அங்கேயே ஒழுக்கமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் அன்ரிமார் தான் அதிகம் மினி ஸ்கேட்டும்,கையில்லாத பிளவுசும் போட்டுள்ளனர்.சும்மா கொழும்பில் இருந்து வருவோர் தான் இப்படியான உடுப்புகள் போட்டனர் என்று கதை விட வேண்டாம்.தங்களால் அப்படி உடுப்பு போட முடியவில்லை என்ட ஆத்திரத்தில் தான் மற்ற பெண்கள் இவையல ஒரு மாதிரி பார்க்கிறவை :D  :lol:  :icon_idea:

 

 

வலம்புரி பிரசுரித்துள்ள படம் சார்ந்தல்ல விவாதம் இங்கு போய்க்கொண்டிருக்கிறது.

 

வலம்புரி மட்டுமல்ல... பல ஊடகங்களும் கடந்த காலத்தில்.. யாழ் குடா உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் வருவோர்.. பல்வேறுபட்ட சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடுவது குறித்த முறைப்பாடுகள் செய்து வருகின்றன.

 

விடுதலைப்புலிகளின் காலத்திலும்.. புலம்பெயர்ந்தவர்கள் காவி வந்த எயிட்ஸ் நோய் தொடர்பான எச்சரிக்கைகள் உட்பட பல எச்சரிக்கைகள் வெளிவந்திருந்தன. இவை அந்த மக்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்தற்காக அல்ல. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. காவி வரும் பாதகமான விளைவுகள் மற்றவர்களைச் சென்றடையாமல் இருக்கவே.

 

ரூ பீஸ் என்றால் என்னென்று தெரியாவிட்டால்.. யாரிடமாவது கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அந்த அசிங்கத்தை இங்கு எழுதி பெண்களின் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் வாங்க விரும்பவில்லை.

 

ஊரில ஒரு சில ஆன்ரிகள்.. சினிமா மற்றும் தென்னிலங்கை.. வெளிநாட்டுத் தாக்கத்தால்..தறிகெட்டுப் போனதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. அப்படியான ஆன்ரிகள் கூட கோவில் என்று வந்துவிட்டால்.. இடத்திற்குரிய நாகரிகத்தை பின்பற்றவே செய்தனர். நல்லூரில் மினி ஸ்கேர்ட் போட்டுக் கொண்டு.. விழுந்து கும்பிட்ட ஆன்ரிகள் இருக்கினமோ..??! நீங்கள் நல்லாவே கற்பனை செய்து கதை எழுதுவீர்கள் என்பது புரியும். நாங்களும் அதே நல்லூரில் தான் வெகு காலம் வாழ்ந்தவர்கள். நானென்றால் அப்படி ஆன்ரிகளைக் காணவில்லை..!!!

 

ஆடை என்பது கவனச் சிதறல்களுக்கு இடமளிக்காத வகையில்.. அணியப்படுதலே கோவில்.. மற்றும் பொது இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. அது எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை தான். பீச்சில் போய்.. பார்க்கில் போய் நீங்கள் எப்படியாவது இருக்கலாம். ஆனால் அதே மாதிரி.. பொது இடங்களில்.. பொதுப் போக்குவரத்து ஊடகங்களில்.. நிறுவனங்களில்.. பள்ளிகளில்.. வழிபாட்டிடங்களில் இருக்க முடியாது. அவை அவற்றிற்கு என்று ஓர் உடை ஒழுங்கு (Dress code) மற்றும் உடை ஒழுக்கம்.. ( Dress discipline) உண்டு. அதையே தான் தாயக மக்களும் வலியுறுத்தினம்.

 

பாலியல் வன்புணர்வு செய்வோர்.. பாலியல் குற்றம் செய்வோர்.. உடைகளை மட்டும் நோக்கி அவற்றைச் செய்வதில்லை. பால்.. வயது.. அவர்களின் மனநிலை சார்ந்து இவை இருக்கிறது. என்றாலும் உடைகளின் தாக்கம் சில சம்பவங்களில் இருந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உள்ள ஒன்றுதான். அவற்றை மறுத்து வரும் கருத்துக்களும் உடை வடிவமைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரச்சனை அது அல்ல. ஒரு பெண் அரையும் குறையுமாக ஆடை அணிந்து சென்றால் கவர்ச்சி என்று சித்தரிக்கும் சினிமா ஒழுங்கில் வாழும் மக்களிடம் அதையே நேரில் செய்யும் போது பாதக விளைவுகளுக்கு வாய்ப்புள்ளது. அதனை நிராகரிக்க முடியாது.

 

சிங்களப் படைகள் தமிழ் பெண்கள் என்ற ஒரு காரணத்திற்காக பாலியல் வெறியாட்டம் செய்கின்றன என்றால் அது 100% உண்மை. அதே நேரம்.. சிங்களப் படைகளின் இலக்குகளாகக் கூடிய கவர்ச்சிகரமான உடை அணியும் தமிழ் பெண்களுக்கு கூடிய ஆபத்து உள்ளது என்பதையும் நிராகரிக்க முடியாது.

 

அந்த வகையில்.. அது புலம்பெயர் பெண்களுக்கு மட்டுமல்ல.. தாயகத்தில் உள்ள பெண்களுக்கும் ஆபத்தானதாகும். எனவே இது குறித்து பலமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது ஒரு சமூகப் பொறுப்புள்ள பிரஜைக்கு அவசியம்.

 

இங்கிலாந்தில் அண்மையில் பெண் பிள்ளைகள் பாடசாலையில் குட்டைப் பாவாடை அணியத் தடை கொண்டு வரப்பட்டது. அதனை வரவேற்றவர்களும் உளர். எதிர்த்தோரும் உளர். ஆனால் நிர்வாகம் அதனை அமுல்படுத்தியே வருகிறது. அந்த வகையில்.. உடை விவகாரத்தில்.. அந்தந்த நாட்டு மக்கள் தங்களின் பொது வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான விளைவுகளைத் தரவல்ல.. உடையணியும் உலாவிகள் தொடர்பில் தக்க நடவடிக்கைகள் எடுப்பது அவரவர் சுதந்திரமும் ஆகும். அதை பரிகசிப்பது தான் அறியாமை. அதனையே ரியுலிப் துல்பன் செய்கிறார்.

 

School bans girls from wearing 'unladylike' short skirts.

 

school_children_1112974b.jpg

 

Girls as young as nine have been banned from wearing skirts to school because of concerns they are getting too short and “unladylike”.

 

http://www.telegraph.co.uk/education/educationnews/10207263/School-bans-girls-from-wearing-unladylike-short-skirts.html

 

மேற்படி தடை குறித்து ரெலிகிராப் வாசகர் ஒருவரின் கருத்து....

 

"Good on the school. This ban is the result of some parents not co-operating and ensuring dresses and skirts of a suitable length. It's not appropriate to be flashing their knickers all the time - at some schools the girls wear knee length leggings under their skirts by personal choice which also solves the problem.

 

This is nothing to do with Islamification in the UK and everything to do with these children increasing flashing absolutely everything inappropriately and their parents no longer showing any concern, altering skirts lengths downwards when necessary or buying new skirts when they are no longer the right size, with these garments never having been cheaper relative to income. You don't have to be a muslim to think that flashing your knickers is not the right thing to be constantly doing at school."

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.