Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட, பற  என்பவை வினை அடிகள் என்று கூற முடியாதா???

 

வினை அடிகள் என்றால் என்ன அக்கா..? :(

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார்! உவர் பாஞ்ச் எண்டவரை எங்களோடை கடைசி வரிசையிலை இருத்திவிடுங்கோ.மிச்சத்தை நாங்கள் பாக்கிறம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! உவர் பாஞ்ச் எண்டவரை எங்களோடை கடைசி வரிசையிலை இருத்திவிடுங்கோ.மிச்சத்தை நாங்கள் பாக்கிறம். :wub:

 

முதியவரை பலாத்காரம் செய்த முதியவர் கைது... எண்டு செய்தி வராட்டி சரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்
வாத்தியார்.. எனக்கிந்த பாடலின் பொருள் வேணும்..
 
 
அன்னச் சேவல் அன்னச் சேவல்
 
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
 
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
 
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
 
மையல் மாலையாங் கையறுபு இனையக்
 
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
 
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
 
சோழ நன்னாட்டுப் படினே கோழி
 
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
 
வாயில் விடாது கோயில் புக்கு எம்
 
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
 
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
 
இன்புறு பேடை அணியத்தன்
 
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
 
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்... எனக்குப், பக்கத்திலை... இருக்கிற பெடியள் எனக்கு, நுள்ளுறாங்கள்.
நான்... வல்வைக்கும், சுமோக்கும், இடையிலை... உள்ள வாங்கிலை போய்.. இருகட்டே......

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்... எனக்குப், பக்கத்திலை... இருக்கிற பெடியள் எனக்கு, நுள்ளுறாங்கள்.

நான்... வல்வைக்கும், சுமோக்கும், இடையிலை... உள்ள வாங்கிலை போய்.. இருகட்டே......

 

எதுக்கு இந்த விபரீத ஆசை சிறி அண்ணா...? நசிபட்டே செத்துப்போவியள்.. :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கு இந்த விபரீத ஆசை சிறி அண்ணா...? நசிபட்டே செத்துப்போவியள்.. :D

 

:lol:  இன்றைய சாத்திர பலனிலை வேறை இப்பிடி எழுதிக்கிடக்கு:- உடல்நலம் ஆரோக்கிய பலம் பெற, சத்து நிறைந்த உணவு உண்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... அலைக்கும், சாந்திக்கும் நடுவிலை உள்ள வாங்கிலை இருக்கிறன்.
 

Edited by தமிழ் சிறி

அப்ப... அலைக்கும், சாந்திக்கும் நடுவிலை உள்ள வாங்கிலை இருக்கிறன்.

 

 

 

:o எடு அந்த தும்புக்கட்டையை  :lol:  தான் கெடுகிறதும் பத்தாது எண்டு மற்றவையையும்...... :lol:

வாத்தியார் வல்வை படிப்பிக்கிறதைக் கவனியாமல் பெடியளேயே பார்த்துக் கொண்டிருக்கிறா 

சுமே "என் வீட்டு றோஜா பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்குது" எண்டு பாடுறா வாத்தியார்

இங்கை வாற சனம் உருப்படுகின்ற நோக்கமே இல்லை சார்

நீங்கள் பற, நட எண்டு படிப்பிச்சால் ............

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! உவர் பாஞ்ச் எண்டவரை எங்களோடை கடைசி வரிசையிலை இருத்திவிடுங்கோ.மிச்சத்தை நாங்கள் பாக்கிறம். :wub:

 

காதலுக்கு கண்ணில்லை ஐயா! அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாள்!! இருந்தாலும் புளிச்ச கள்ளு அடிக்கிறதெண்டால் நான் வரலை. ^_^  ஒருபனைக் கள்ளு, அதுவும் உடன்கள்ளு எண்டால் சொல்லுங்கோ இப்பவே வாறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... அலைக்கும், சாந்திக்கும் நடுவிலை உள்ள வாங்கிலை இருக்கிறன்.

 

 

தமிழ் சிறி அவர்களே! தயக்கமின்றிப் போயிருங்கள். ஒருபக்கம் அலை அடித்தாலும் மறுபக்கம் சாந்தி கிட்டும். பாருங்கள் நீங்கள் கோரிக்கை விடுத்தவுடன் அலை ஆர்ப்பரித்து அடிக்குது. சாந்தி சாந்தமாகவே உள்ளார். :blink:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பெண்களுக்கான மொனிட்டர்..கண்காணி......சுமே பெடியள் சேட்டை விடுறாங்கள் போல கிடக்கு ... :D

தமிழ் சிறி அவர்களே! தயக்கமின்றிப் போயிருங்கள். ஒருபக்கம் அலை அடித்தாலும் மறுபக்கம் சாந்தி கிட்டும். பாருங்கள் நீங்கள் கோரிக்கை விடுத்தவுடன் அலை ஆர்ப்பரித்து அடிக்குது. சாந்தி சாந்தமாகவே உள்ளார். :blink:  :wub:

 

 

:o அடபாவி  :lol:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு இந்த விபரீத ஆசை சிறி அண்ணா...? நசிபட்டே செத்துப்போவியள்.. :D

 

 

பொறும் வாறன் சுபேஸ். நீர் ஒருத்தரையும் கிட்ட வராமல் தடுக்கிறீரோ.

 

வாத்தியார், சுபேஸ் பின்னுக்கிருந்து படிக்கவிடாமல் கதைச்சுக்கொண்டு நிக்கிறார். அவருக்கு நான் இரண்டுதரம் குட்டலாமோ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இடைநிலை மெய்மயக்கம்
 

1.உடனிலை  மெய்மயக்கம்
2.வேற்று நிலை மெய்மயக்கம் என இரு வகைப்படும்

 

இரண்டு மெய்யெழுத்துக்கள் அதாவது மெய்யெழுத்தும் அதனை அடுத்து ஒரு உயிர் மெய்யெழுத்தும் ஒரு சொல்லின் இடையில் வருவதை இடை நிலை மெய் மயக்கம் என்றார்கள் இலக்கணத்தை எழுதியவர்கள்.
 

வேறு முறையில் கூறினால் இந்த இந்த மெய்யெழுத்துக்களின் பின்னர் இந்த இந்த மெய்யெழுத்துக்கள் அல்லது உயிர் மெய் எழுத்துக்கள் தான் வரவேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள்.
 

க் ச் த் ப் எனும் மெய்களைத் தொடர்ந்து வேறு மெய்களோ உயிர் மெய்களோ வராது.

(பக்கம் அச்சம் மொத்தம் கப்பல் என்ற சொற்கள் உதாரணம் ஆகும்.
பக்தி என்ற சொல்லில் க் இன் பின்னர் தி என்ற உயிர் மெய் வருகின்றது . பக்தி ஒரு தமிழ்மொழிச் சொல் அல்ல. வடமொழிச்சொல்.
சரியான தமிழ்ச்சொல்  பத்தி என வரவேண்டும்) 
 

அவற்றினைத் தவிர்த்து மிகுதி பதினான்கு  மெய் எழுத்துக்களில் ர ழ  எனும் இரண்டு மெய்களின் பின்னர் அதே மெய்கள் வராது வேறு மெய்களே வரும்.
 

மிகுதி பன்னிரண்டு மெய்யெழுத்துக்களின் பின்னர்
அதே மெய்யெழுத்துக்களும் வேறு மெய்யெழுத்துக்களும் வரும்.
 

ர், ழ்
ஆகிய இரண்டு எழுத்துக்கள்

தவிர்ந்த ஏனைய 16 மெய்களுமே உடனிலையாக அதாவது தம்முடன் தாமே மயங்குகின்றன.
 

க் ச் த் ப்

தவிர்ந்த ஏனைய 14
மெய்யெழுத்துக்களும் வேற்று நிலை மெய் மயக்கத்திற்குரியவை

 

பக்தி ஒரு தமிழ்மொழிச் சொல் அல்ல. வடமொழிச்சொல்.
சரியான தமிழ்ச்சொல்  பத்தி என வரவேண்டும்) //

 

எனக்கு உள்ள பிரச்சனையே இந்த இடைநிலை மெய்மயக்கந்தான் :D :D . மேலும் பக்தி வடமொழிச் சொல் என்கின்றீர்கள் .  பத்தி என்பதற்குத் தாழ்வாரம் என்ற பொருளும் உண்டல்லவா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க்,ங்,ச், ஞ், ட், ண் ,த், ந், ப் , ம் , ய்,  ல், வ்,  ள், ற், ன்

என்பன உடனிலை மெய்மயக்கத்திற்குரியவை

 

ங், ஞ்,ண், ந், ப் , ம் , ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
வேற்று நிலை மெய்மயக்கத்திற்குரியவை

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம் சொல்லுங்கோ வாத்தியார் மூளையில எதுவும் ஏறமாட்டன் என்று அடம் பிடிக்குது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட, பற  என்பவை வினை அடிகள் என்று கூற முடியாதா???

இது வினை அடி அல்ல வினை முற்று

 

நட எனக் கூறும்போது  அது ஒரு கட்டளையாக அல்லது ஒருவரை அப்படிச் செய் என ஏவுவதாக இருக்கின்றபடியால் நட, பற, கட,

போன்ற சொற்களை  ஏவல் வினை முற்று என்பார்கள்.

 

இன்னொரு இடத்தில் நட என்பது வினை எச்சம் ஆகின்றது. அதாவது ஒரு வினைச்சொல் முற்றாக  வராமல் இடையில் நிற்கின்றது. அதனால் வினை எச்சம் என்று இலக்கணத்தில் அவற்றையும் சேர்த்துக் கொள்கின்றார்கள் இலக்கணவாதிகள்.

 

இலக்கணப்பிழை என்றாலும் சில விதிவிலக்குகளையும் பேசுபவர்களின் வழக்கு முறையினையும் கருத்திற்கொண்டு அவற்றையும் இலக்கணத்தில் சேர்த்துக்கொள்வது இலக்கண மரபு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வினை அடிகளுக்கு உதாரணம் கூறுங்கள் வாத்தியார்.

நடந்து, பறந்து என்பவை வினை எச்சங்கள் இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவு நல்வரவாகுக.  

 

இங்கு "நல்வரவாகுக" என்பதில் "க" முடிந்திருக்கிறதே சொல்.... 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு, பாஞ்சு தமிழ் படித்தவருக்கு முது(மை)மயில் கண்டதினால் வரும் குறைந்த இரதத அழுத்தம் காரணமாக பள்ளிக்கு சில நாட்கள் வரமாட்டார் என இத்தால் சகலருக்கும் அறிவிக்கப்படுகிறது. :lol:

 

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 இடைநிலை மெய்மயக்கம்

 

க் ச் த் ப் எனும் மெய்களைத் தொடர்ந்து வேறு மெய்களோ உயிர் மெய்களோ வராது.

 

பக்தி என்ற சொல்லில் க் இன் பின்னர் தி என்ற உயிர் மெய் வருகின்றது .

 

 

பக்தியோ! பத்தியோ! 'க்' பக்கத்தில் தி வருகிறது. 'த்' பக்கத்திலும் தி வருகிறது.

 

வரும் ஆனால் வராது வடிவேலின் கமெடியை விடவும் அட்டகாசமான கமெடியாக உள்ளதே வாத்தியார்!!!!. :huh:  

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு, பாஞ்சு தமிழ் படித்தவருக்கு முது(மை)மயில் கண்டதினால் வரும் குறைந்த இரதத அழுத்தம் காரணமாக பள்ளிக்கு சில நாட்கள் வரமாட்டார் என இத்தால் சகலருக்கும் அறிவிக்கப்படுகிறது. :lol:

 

வன்னியில் இப்போ உடும்புகள் இல்லையோ! ராசவன்னியரே...!! அத்தனையும் சங்கரியார் சங்கரித்துவிட்டாரோ...? என் இரத்தத்தில் வைட்டமின் '.' (குத்து) இல்லையென்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! உடும்பு கிடைக்காவிட்டால், மயில் இறைச்சியில் அது இருக்கிறதாம், அதுதான் தேடிப்போறன்.

 

 

நான்படித்த கவிதை ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு உங்களுக்காகச் சமர்ப்பிக்கிறேன்.

 

அன்பின் முத்தங்களோடு வரும்

அமுத சொற்கள்                                                    (வாத்தியாரிடம் தமிழ் கற்றல்)

புண்களை எல்லாம் ஆற்றி உனக்கு

புத்துயிர் ஊட்டும் உன் இளமை

போய் மடியாது காக்கும்!

பொற்குட மகளிர் உன்னை

பூரிக்க பூரிக்க வைத்து

போக்குவர் போக்கருந் திறத்து

மூப்பும் அதனோடு வரும் சாக்காடும்!

போரிட்டே நீ வாழ்!

போரிட்டே நீ ஆள்!

போரிட்டே நீ வீழ்!

போரிட்டே நீ மாள்! என்கின்றாள்

என் தாய்! கோதற்ற

கொற்றவைத் தாய்!

  • கருத்துக்கள உறவுகள்

உடும்பு கிடைக்காவிட்டால், மயில் இறைச்சியில் அது இருக்கிறதாம், அதுதான் தேடிப்போறன்.

நான்படித்த கவிதை ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு உங்களுக்காகச் சமர்ப்பிக்கிறேன்.

 

அன்பின் முத்தங்களோடு வரும்

அமுத சொற்கள்                                                    (வாத்தியாரிடம் தமிழ் கற்றல்)

புண்களை எல்லாம் ஆற்றி உனக்கு

புத்துயிர் ஊட்டும் உன் இளமை

போய் மடியாது காக்கும்!

பொற்குட மகளிர் உன்னை

பூரிக்க பூரிக்க வைத்து

போக்குவர் போக்கருந் திறத்து

மூப்பும் அதனோடு வரும் சாக்காடும்!

போரிட்டே நீ வாழ்!

போரிட்டே நீ ஆள்!

போரிட்டே நீ வீழ்!

போரிட்டே நீ மாள்! என்கின்றாள்

என் தாய்! கோதற்ற

கொற்றவைத் தாய்!

 

 

எழு மகனே எழு! என்கின்றாள்

என் தாய்! கொற்றவைத் தாய்!

ஆண் மகனாய்ப் பிறந்துவிட்டாய் (பாஞ்சு)!

அட்டூழியங்கள் அநியாயங்கள்

அவலங்கள் அகிலமெங்கும்

அலங்கோலத் தாண்டவமாடுவதை

அடக்காது அழிக்காது கிடப்பதோ உன்

ஆண்மைக்கு அழகு?

எழு மகனே எழு! என்கின்றாள்

என் தாய்! கொற்றவைத் தாய்!

வீர வாளெடுத்து வெற்றி வாகை சூட

விடாதேப் போரிடு!

வெட்டுப் புண்களைக் கண்டு நீ

விழுந்து விடாதே (பாஞ்சு)!

விழுப் புண்களாகக் கொண்டு

விடாது உஞற்று!

தேன் கொட்டி  அவற்றை ஆற்ற

திரு நிறைந்த மங்கையர்களாக

தீம்மொழி  நங்கையர்களாக உனக்கு

சிலரை அருளுகின்றேன்!

மயில் இறைச்சியில் 'அது' தேடலா?

தமிழ்மகன் முருகனே இகழ்வாரே!

மயில் இறைச்சியில், வைட்டமின் தேடும் மாணாக்கர் பாஞ்சுவிற்கு சிறிய குட்டு!

 

- வாத்தியார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.