Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

3.jpg

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு மாகணத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டிது. அவற்றில் ஒரு சில துயிலும் இல்லங்கள் தற்போது சிறிலங்கா இராணுவத்தினருடைய பாதுகாப்பு அரணாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் சில துயிலும் இல்லக் காணிகள் அரசாங்க திணைக்களங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் முதலில் தடுத்து நிறுத்தப்படும், அதன் பின்னர் நிர்வாகத்தில் பரீசீலனை செய்யப்பட்ட பின்னர் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களை மீள புனரமைத்து அழகுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.sankathi24.com/news/33497/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ,முதலில் இதைச் செய்யுங்கள் கோடானுகோடி புண்ணியம் உங்களைச் சேரும்

நல்ல செய்தி ,முதலில் இதைச் செய்யுங்கள் கோடானுகோடி புண்ணியம் உங்களைச் சேரும் 

  • கருத்துக்கள உறவுகள்

மிக உன்னதமான அறிவித்தல்... நன்றி முதலமைச்சர் அவர்களுக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாக செய்ய அவரால் முடியாது போனால் திட்டுவீர்களா? காணி அதிகாரங்கள் என்னமும் மகாணசபைக்குள் உள்ளடங்கவில்லை. அப்படி உள்ளடங்கும்போது, வடக்கில் இராணுவமுகாம்கள் குறித்து பிரச்சனை எழும் என்பதால் மகிந்த அதைக் கொடுக்கத் தயாராக இல்லை. அதை உடனே பெறாவிடின், சிறிலங்கா அரசு இழுத்தடிப்பினைக் கொடுத்து, அடுத்த தேர்தல் வரை காலத்தைப் போக வைத்துவிடும்.

தவிர, இராணுவ விடயங்களைக் கோத்தபாயாவே கையாளுகின்றார் என்பதால் கூடுதலான அழுத்தங்கள் தேவைப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ,முதலில் இதைச் செய்யுங்கள் கோடானுகோடி புண்ணியம் உங்களைச் சேரும் ......

  • கருத்துக்கள உறவுகள்

e0aeaae0af82e0aea8e0af8de0aea4e0af8be0ae

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி

எல்லோர் மனதிலும்  உள்ளது தான்

எமக்கே கேட்கும் போது திக்  என்றிருக்கிறது

சிங்களவனுக்கும் பகைவர்களுக்கும் எப்படி இருக்கும்???

 

 

இனி  கட்டப்படுவது இடிக்கப்படக்கூடாது என்ற உறுதியோடு செயற்படுங்கள்

கால அவகாசம்  எடுத்து

தருணம் வரும்போது செய்யலாம்  என்பது எனது கருத்து.

தற்செயலாக செய்ய அவரால் முடியாது போனால் திட்டுவீர்களா? காணி அதிகாரங்கள் என்னமும் மகாணசபைக்குள் உள்ளடங்கவில்லை. அப்படி உள்ளடங்கும்போது, வடக்கில் இராணுவமுகாம்கள் குறித்து பிரச்சனை எழும் என்பதால் மகிந்த அதைக் கொடுக்கத் தயாராக இல்லை. அதை உடனே பெறாவிடின், சிறிலங்கா அரசு இழுத்தடிப்பினைக் கொடுத்து, அடுத்த தேர்தல் வரை காலத்தைப் போக வைத்துவிடும்.

தவிர, இராணுவ விடயங்களைக் கோத்தபாயாவே கையாளுகின்றார் என்பதால் கூடுதலான அழுத்தங்கள் தேவைப்படலாம்.

நல்லதொரு கருத்து தூயவன் 

 

அவர்கள் செய்ய வேண்டியதை சொல்வார்கள் ஆனாலும் நடைமுறையில் அதற்காக அதிகம் சிரமப்படவேண்டி இருக்கும். 

 

மாகாணசபைக்கு இன்னும் காணியதிகாரம் இல்லை இருந்தும் இது செய்யமுடியாது இல்லை, அப்படியே செய்யமுடியாது போனால் நாங்கள் இவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்ட எவ்வளவு காலம் செல்லும்??

மிக உன்னதமான அறிவித்தல்... நன்றி முதலமைச்சர் அவர்களுக்கு..! 

இது நடைபெற்றால் மிகவும் மகிழ்ச்சி...

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் கருத்துக்கு உடன்படுகிறேன். மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க சிங்களம் அனுமதிக்காது. இதனால் எங்கட சனத்தின் சிலரினால் விக்கினேஸ்வரன் சொன்னதினைச் செய்யவில்லை என்று சொல்லி துரோகி ஆக்கப்படலாம்.

எவ்வளவுதூரம் இது சாத்தியப்படுமென்று தெரியவில்லை. ஆனால் அவற்றை செய்தால் நன்று. அந்தப் புனிதர்களாவது இவருக்கு ஆத்ம பலத்தைக் கொடுக்கட்டும்!

நான் நினைக்கிறேன்..விகினேஸ்வரன் இந்த போரில் இறந்த எல்லாருக்குமாக ஒரு நினைவு தூபீ அமைக்க முயற்சிப்பார் என்று...... "மாவீரர் துயிலும் இல்லம்" சாத்தியமில்லை....

நான் நினைக்கிறேன்..விகினேஸ்வரன் இந்த போரில் இறந்த எல்லாருக்குமாக ஒரு நினைவு தூபீ அமைக்க முயற்சிப்பார் என்று...... "மாவீரர் துயிலும் இல்லம்" சாத்தியமில்லை....

 

சட்டப்படி இலங்கையில் சாத்தியம் இல்லை எனில் அவர் அதை சொல்லி இருக்க முடியாது...   மற்றும்  போரில் ஈடுபட்டவர்களை வீரர்களாக நடத்துவது உலக கலாச்சாரம்...  

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்லங்களும் பொறுப்பற்ற ஊடக வியாபாரமும்
25 செப்டம்பர் 2013

 

maveerar-thuyilum-illam_CI.jpg

மீண்டும் தமிழ் மக்களையும் மாகாண சபையையும் பொறிக்குள் வீழ்த்த மாட்டாதா?



( இந்த ஒலிநாடாவில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் மாவீரர் துயிலும் இல்லம் குறித்த ஊடகவியலாளரின் கேளிவிக்கு சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் வழங்கிய பதில் இணைக்கப்பட்டு உள்ளது.)

மாவீரர் கல்லறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அங்கீகாரம் வழங்கியதாக தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் வெளியாகி உள்ளன. உண்மையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு தம் இன்னுயிர் நீந்த அனைத்து போராளிகளின் நினைவுகளும் பேணப்பட வேண்டியவை. அவர்களின் தியாகங்கள் தமிழ் மக்களின் வராலாறு முழுவதும் பேசப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 
 

ஆனால் வெளிப்படையாக இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டு உள்ள சீ.வீ விக்னேஸ்வரனும் வழங்கிய குரல் வழி செவ்வியை பொறுப்பற்ற விதத்தில்  திரிவுபடுத்தி நமது தமிழ் ஊடகங்களே வெளியிடுவதாக இருந்தால் செவ்விகளை - செய்திகளை திரிவுபடுத்துவதாக  இந்துப் பத்திரிகை பற்றியும் தெற்கின் சிங்கள ஊடகங்கள் பற்றியும்  விமர்சிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 

மகாண சபை வெற்றியின் பின் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஊடக மகாநாடொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி இதுதான் ...
 

ஊடகவியலாளர் - அழிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களை மீள புணரமைக்க இந்த மாகாண சபை அரசாங்கத்தின் ஊடாக  நடவடிக்கை எடுக்கப்படுமா?  
 

பதில் – சம்பந்தன் – மகாண சபை தொடர்பாக அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக நான் பதில் கூறுவது தப்பு அந்த அதிகாரம் எமக்கு இல்லை.. அவ்விதமான கோரிக்கை மகாண சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அது விடயம் சம்பந்தமாக மாகாண சபை சிந்திக்கும். ஆனால் நிச்சயமாக  எமது மக்களுடைய உணர்வுகளைபுரிந்து அதனை மதித்து செயலாற்றக் கூடிய வகையில் மாகாண சபை தனது கருமங்களை முன்னெடுக்கும்..

ஊடகவியலாளர் – மன்னிக்கவேணும் சில வேட்பாளர்களின் மேடைப் பேச்சுகளில் இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டு இருந்தன. 

சம்பந்தன் – அது விடயமாக நான் பேசுவது தப்பு.. கட்சியினுடைய தலைவராக இருக்கிறேன். மகாண சபை உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்திருக்கிறியல். உங்களுடைய முதலமைச்சரை நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள்..உங்களுடைய முதலமைச்சர் சில நாட்களில் பதவியேற்பார். அவரது அமைச்சரவையை அவர் தீர்மானித்து முடிவெடுப்பார். இந்தக் கருமத்தை அவர்கள் கையாள வேண்டும். அவர்களுக்காக நான் பதில் கூறுவது பிழை. ஆனால் நிட்சயமாக எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து நாங்கள் நடந்துகொள்வோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். 

ஊடகவியலாளர் – இல்லை வேட்பாளர்களின் பேச்சுக்களில் தொடர்ந்தும் இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன ... 
 

விக்னேஸ்வரன்... மகாண சபை கூடியதன் பிற்பாடு இப்பேற்பட்ட விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம். தலைவர் கூறியது போன்று மக்களுடைய உணர்வுகளை மதித்து மாகாண சபை உறுப்பினர்கள் நடந்து கொள்வார்கள். அவ்வளவுதான் இப்ப கூற முடியும். ( முழுமையாக ஒலிவடிவில் இணைக்கப்பட்டு உள்ளது.
 

"இந்தப் பதில்கள் எவ்வளவு ஆழமானவையாகவும் பொறுப்பான பதில்களாகவும் இருக்கின்றன"

இப்படி இருக்க அவர்கள் சொன்னதனையே தலைகீழாக மாற்றி மாவீரர் துயிலும் இல்லங்களை மீழக் கட்டிஎழுப்ப தலைமை அங்கீகாரம் என முதலாவது சந்திப்பிலேயே கூறினார் என தமிழ் ஊடகங்கள் சொன்னால் இதனை எப்படியெல்லாம் சிங்கள ஊடகங்கள் திரிவு படுத்தி எழுதி வட மகாண சபையை சட்டச்சிக்கலுக்குள் தள்ளி விடுவா்கள். 

கள நிலவரங்களை சரியாக கணிப்படாமல் சுயமான அரசியல் லாபங்களுக்காகவும் களத்தில் நித்தமும் உயிருக்கு அஞ்சி தமது வாழ்வையும் இலட்சியங்களையும் விலைபேசாமல் சொந்த மண்ணிலேயே வாழுகின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் வைத்து அரசியல் - ஊடக வியாபாரத்தை தொடரலாமா? 

நாளாந்தம் மக்களை உசுப்பேத்தி இணையங்களுக்குள் உலாவருவதற்காகவும், அதன் மூலம் வியாபாரத்தை வழமாக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், மாவீரர்களையும், அவர்களின் குடும்பங்களையும் இலங்கை அரசாங்கத்தினதும் அவர்களின் புலனாய்வாளர்களிடமும் காட்டிக் கொடுக்கும் சூட்சுமங்களை ஏன் மக்கள் இனம்கண்டு கொள்கிறார்கள் இல்லை என்பது புரியவில்லை என யாழ் ஊடக மகாநாட்டில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஊடகங்களாலேயே நேற்று உருவாக்கப்பட்ட செய்திக்கு இன்று அரசாங்கம் மறுப்பு வெளிட்டு உள்ளதாம். மாவீரர் துயிலும் இல்லங்களை மீளக் கட்டி எழுப்ப அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க மாட்டாதாம். எப்படி இருக்கு ஊடக வியாபாராம்?
 

குறிப்பு:- இந்த செய்தி எந்த ஊடகங்களையும் கொச்சைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை... மாறாக முள்ளி வாய்க்காலுக்குள் மூழ்கடிப்பட்ட தமிழ்மக்கள் மெல்ல மெல்ல எழுந்து வரும் போது மீண்டும் ஹம்பாந்தோட்டைக் கடலுக்குள் அமிழ்த்தும் வேலையை தெரிந்தோ தெரியாமலோ தமிழ் ஊடகங்களை நடத்தும் நாமும் செய்யக் கூடாது என்பதன் நோக்கமே இந்தக் குறிப்பு,
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96953/language/ta-IN/article.aspx

மக்களின் விருப்பு அதுவாக இருந்தால் மதிப்பு அளிக்கப்படும்...  அது மாவீரர் துயிலும் இல்லமாக இருந்தாலும்  கூட எண்டு ஊடகவியலாளர் எடுக்க முடியும் தானே....?? 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்நடைமுறை சாத்தியமில்லதாத விடயத்தைப் பரிசீலனைக்கு எடுப்போம் என்று கூறமாட்டார்.ஆக பொறுத்திருந்து பார்ப்போம்.ஒரு மலர் வளையம் வைக்க நவிபிள்ளைக்க அனுமதிமறுத்த சிங்களம் இதை ஒரு பெரும் பிரச்சினையாக எடுக்கும்.மாவீரர் இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டால் பெரும் மகிழ்ச்சியடைவோம்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.