Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கஜனின் புலம்பல் (போனால் போகட்டும் போடா!)

Featured Replies

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

 

மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார்

நடந்தது நமக்கே புரியாது

தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால்

கோட்டையில் எமக்கு இடமேது

மக்கள் மனதில் உறுதியடா

அதை மாற்றற நினைத்தது கொடுமையடா

இனி ஆழ நினைப்பது மடமையடா

போனால் போகட்டும் போடா

 

உரிமை உள்ளவன் கேட்கின்றான்

அதை இல்லை என்றால் அவன் விடுவானா

ஆசையைச் சொல்லி அழுவதனாலே

ஆளச் சொல்லித் தருவானா

கூக்குரலாலே கிடைக்காது இனி

கோட்டுப் போடவும் முடியாது

மக்களை மிரட்டுவும் முடியாது

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

 

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

மகிந்தரின் காலைக் நக்கியே நாங்கள்

காலத்தைக் கழிக்கத் துணிந்தோமே

மக்கள் மனதில் உறுதியடா – அதை

அறிந்திட முடியாப் பாவியடா இனி

செல்லாக் காசுப் பதர்களடா

போனால் போகட்டும் போடா

 

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

நமக்கும் மேலே தமிழரடா

அவர் மானம் உள்ள மனிதரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

 

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னோரு மணிக்கவிதை :D

  • தொடங்கியவர்

இன்னோரு மணிக்கவிதை :D

 

புத்தா! இந்த உல்டா கவிதைக்கு ஐடியா தந்ததே நீங்கள் தான். உங்கடை யாழ்தேவிக் கவிதையைப் பாத்த பிறகு தான் இந்த யோசனை வந்தது.

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

 

அருமையான பொருள்தரும்  பாடல்

நன்றி  தம்பி

தொடருங்கோ....

 

(பச்சையைக்கூட்டுங்கோப்பா-  தம்பிமாருக்கு போட...)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்குப் புலம்பல் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனை வணங்கும் சிங்களனின் மூலங்களை மொழிபெயர்த்துத் தந்தபோதெல்லாம் 'ஓ' வெனப் பாராட்டி உங்களை வாழ்த்தியது நினைவிருக்கலாம். :D 

 

மகிந்தாவின் கால் நக்கும் அங்கஜனின் புலம்பல் பாடலுக்கு புத்தனே முழுமுதல் மூலமென ஆதாரம் தந்தபோது 'ஆ' வெனப் பிளந்த வாய் இன்னமும் மூடவில்லை. :lol: 

  • தொடங்கியவர்

புத்தனை வணங்கும் சிங்களனின் மூலங்களை மொழிபெயர்த்துத் தந்தபோதெல்லாம் 'ஓ' வெனப் பாராட்டி உங்களை வாழ்த்தியது நினைவிருக்கலாம். :D 

 

மகிந்தாவின் கால் நக்கும் அங்கஜனின் புலம்பல் பாடலுக்கு புத்தனே முழுமுதல் மூலமென ஆதாரம் தந்தபோது 'ஆ' வெனப் பிளந்த வாய் இன்னமும் மூடவில்லை. :lol: 

 

 

இன்னொரு பதிவில் நீங்கள் வாழ்த்தியது கண்டிப்பாய் நினைவில் உள்ளது.

 

 

இந்தப் பதிவிற்குக் காரணம் அரசமரத்திற்குக் கீழிருக்கின்ற புத்தரல்ல. அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற புத்தன் :D  :D  :D

நன்றாகத்தான் இருக்குப் புலம்பல் அண்ணா.

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றியக்கா...

 

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

 

அருமையான பொருள்தரும்  பாடல்

நன்றி  தம்பி

தொடருங்கோ....

 

(பச்சையைக்கூட்டுங்கோப்பா-  தம்பிமாருக்கு போட...)

 

 

 

வணக்கம் அண்ணா!

நீங்கள் பச்சை தந்து தான் உங்கள் அன்பைக் காட்ட வேண்டுமா என்ன,. என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் அண்ணாவல்லவா நீங்கள்..

 

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

 

 

 

வணக்கம் கரன்!

 

டக்ளசின் அடாவடியை விட அங்கஜனதும் அதைப் பெத்தவரதும் அடாவடி அதிக அருவருப்பைத் தருவதுண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

யாருப்பா அது அளவெட்டி பையன நக்கல் பண்ணி கவிதை எழுதிறது ? :(:D :d

யாருப்பா அது அளவெட்டி பையன நக்கல் பண்ணி கவிதை எழுதிறது ? :(:D :D

 

 

அடபாவி வாயை மூடப்பா. உந்த வெக்கங்கெட்ட துரோகி அங்கஜன் நம்ம ஊர் என்று புலம்பாதை பிறதர்!

:D

  • தொடங்கியவர்

யாருப்பா அது அளவெட்டி பையன நக்கல் பண்ணி கவிதை எழுதிறது ? :(:D :D

 

ஓஓஓ எங்கடை சுண்டலும் அளவெட்டியோ!

அடபாவி வாயை மூடப்பா. உந்த வெக்கங்கெட்ட துரோகி அங்கஜன் நம்ம ஊர் என்று புலம்பாதை பிறதர்!

:D

 

 

அட இங்கை பெரிய அளவெட்டிப் படையே இருக்குது போலை..

 

கவலைப்படாதேங்கோ! ஈழத்து இலக்கியத்தின் சொத்து மகாகவியும் அளவெட்டிதான் என்று நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் ஒரு 30 வயசு பெடியன் டக்கி மாமாவையே போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுறத பாராட்டி தானே ஆகணும் அலை அக்கா :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ எங்கடை சுண்டலும் அளவெட்டியோ!

 

அட இங்கை பெரிய அளவெட்டிப் படையே இருக்குது போலை..

 

கவலைப்படாதேங்கோ! ஈழத்து இலக்கியத்தின் சொத்து மகாகவியும் அளவெட்டிதான் என்று நினைக்கிறன்...

 

 

ஆனால்  அளவெட்டி  என்றால்  எனக்கு ஞாபகம்  வருவது

அந்த அழகான

அமிர்தமான

 நாதசுவர

மேள

இசைதான் :icon_idea: 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

எண்டாலும் ஒரு 30 வயசு பெடியன் டக்கி மாமாவையே போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுறத பாராட்டி தானே ஆகணும் அலை அக்கா :D

 

சுண்டல் எனக்கு உச்சி குளிர்ந்து போச்சுது :D  மற்றது இது டக்கிக்கு எழுதேல்லை. அங்கசனுக்கு...

 

ஈழத்து எம்.ஜி.ஆரைப் பற்றி நாங்கள் எல்லாம் கதைக்க ஏலுமா???

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

இது அட்டகாசமான புலம்பலை  அனுபவித்து  எழுதியுள்ளீர்கள் !

அங்கஜன்தான் வெற்றி பெற்றுவிட்டாரே! எதற்காக அவர் புலம்ப வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வெல்லவேண்டுமென அங்கஜன் தேர்தலில் நின்றாரா இல்லைத்தானே

சுய நலவாதிகள் தங்களின் வியாபாரத்தை  மேம்படுத்த ஒரு சிறிய வழி  கிடைத்துள்ளது.
 

கவிதை தூள் மணிவாசகன் 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜன் போனால், ஒரு

அம்புஜம் வருவாள்!

இது தான் தமிழன் வாழ்க்கையடா?

 

எது வந்த போதிலும்,

இன்னொரு 'உறுமல்'

என்பது மட்டும் உண்மையடா!

 

உங்கள் கவிதை  'காண்டா மணி' ஒன்றின் ஓசை என்பேன், மணிவாசகன்!

 

 

 

 

  • தொடங்கியவர்

அங்கஜன்தான் வெற்றி பெற்றுவிட்டாரே! எதற்காக அவர் புலம்ப வேண்டும்?

 

எதிரணிக் கதிரைக்காவா  சபேசன் தகப்பனும மகனும் துப்பாக்கிகளோடு வலம வந்தார்கள். மற்றது மகிந்தரிடம் அவரின் இமேஜ் என்னாகி இருக்கும் அதை நினைத்து புலம்பமாட்டாரா?

  • தொடங்கியவர்

இது அட்டகாசமான புலம்பலை  அனுபவித்து  எழுதியுள்ளீர்கள் !

 

நன்றி சுவி

மகிந்த வெல்லவேண்டுமென அங்கஜன் தேர்தலில் நின்றாரா இல்லைத்தானே

சுய நலவாதிகள் தங்களின் வியாபாரத்தை  மேம்படுத்த ஒரு சிறிய வழி  கிடைத்துள்ளது.

 

கவிதை தூள் மணிவாசகன் 

 

நன்றி வாத்தியார்

அங்கஜன் போனால், ஒரு

அம்புஜம் வருவாள்!

இது தான் தமிழன் வாழ்க்கையடா?

 

எது வந்த போதிலும்,

இன்னொரு 'உறுமல்'

என்பது மட்டும் உண்மையடா!

 

உங்கள் கவிதை  'காண்டா மணி' ஒன்றின் ஓசை என்பேன், மணிவாசகன்!

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புங்கையூரான்

அருமையான புலம்பல்; அது மணியான வாசகமாக இருக்கிறது மணிவாசகன்.

 

அங்கஜன் வெல்லவில்லை டக்கியிடம் பிடுங்கி எடுத்திட்டார் என்பது செய்தி. அதை சபேசன் மறுத்து எழுதாதவரைக்கும் அதுதான் உண்மை.

 

சபேசன் "பாலும் பழமும்"  படத்தை மறந்திட்டாரா அல்லது பாலும் பழம் அவர் பார்க்காதா ஒருபடமா தெரியாது; சிவாஜி தான் இறந்ததற்க "போனால் போகாட்டும் போடா" பாட்டை பாடியதாக சபேசன் நினைக்கிறார்.ஆனல் சிவாஜி பாடியது தனது தோழி இறந்ததற்கே. இதில் அங்கஜன் தங்கள் அணியின் முதல் அமைச்சர் தோற்றதற்கு, கட்சி தோற்றதற்கு பாடும் பாட்டாக்கத்தான் இது அமைந்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு பிழையும் தெரியவில்லை.

 

எதற்கும் சபேசன் கவிதைப்பற்றி தான் என்ன நினைக்கிறார் என்பதை தான் சொல்லாமால் உறவுகளை ஊகிக்க விட்டுவிடுகிறார். அதாவது அவர் அரச "காங்கை" பற்றி குறைத்தெழுதும் கவிதையைப்பற்றி அவர் நினைப்பது  அவரின் வழமையான negative thinking தான்.

 

 

 

 

  • தொடங்கியவர்

அருமையான புலம்பல்; அது மணியான வாசகமாக இருக்கிறது மணிவாசகன்.

 

அங்கஜன் வெல்லவில்லை டக்கியிடம் பிடுங்கி எடுத்திட்டார் என்பது செய்தி. அதை சபேசன் மறுத்து எழுதாதவரைக்கும் அதுதான் உண்மை.

 

சபேசன் "பாலும் பழமும்"  படத்தை மறந்திட்டாரா அல்லது பாலும் பழம் அவர் பார்க்காதா ஒருபடமா தெரியாது; சிவாஜி தான் இறந்ததற்க "போனால் போகாட்டும் போடா" பாட்டை பாடியதாக சபேசன் நினைக்கிறார்.ஆனல் சிவாஜி பாடியது தனது தோழி இறந்ததற்கே. இதில் அங்கஜன் தங்கள் அணியின் முதல் அமைச்சர் தோற்றதற்கு, கட்சி தோற்றதற்கு பாடும் பாட்டாக்கத்தான் இது அமைந்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு பிழையும் தெரியவில்லை.

 

எதற்கும் சபேசன் கவிதைப்பற்றி தான் என்ன நினைக்கிறார் என்பதை தான் சொல்லாமால் உறவுகளை ஊகிக்க விட்டுவிடுகிறார். அதாவது அவர் அரச "காங்கை" பற்றி குறைத்தெழுதும் கவிதையைப்பற்றி அவர் நினைப்பது  அவரின் வழமையான negative thinking தான்.

 

நன்றி மல்லை அண்ணா!

 

தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு கட்சியும் புள்ளிவிபரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு எனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி என்று அறிக்கை வீடுவது வழமை.

 

கடைசியில் தோற்றது யார் என்றே தெரிவதில்லை.

கலக்கல் :D

  • தொடங்கியவர்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஞ்சரன்

அங்கஜன்தான் வெற்றி பெற்றுவிட்டாரே! எதற்காக அவர் புலம்ப வேண்டும்?

சாமானிய வெற்றியா அது? முன்னுக்குப் பின் முரணும் முகையும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.