Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
190157_190661960970918_1697603_n.jpg
 
 
பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்..
 
-----------------
 
கனவுகளில் 
காய்ந்த நிலத்தில்
விதைகளைதேடுகிறேன்
என் காதலை துளிர்ப்பதற்காய்..
 
மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது 
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..
 
ஆவியாகி
இன்னமும் பொழிவதற்காய்
சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன
ஒரு மாலைப்பொழுது
எமை நனைத்த மழைத்துளிகள்..
 
நாம்தான்
கரைபிரித்துக்கட்டப்பட்ட 
துருவ நதிகளாக
திசை பிரிந்து...
 
எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..
 
இப்போதெல்லாம்
நாம்பேசிய வார்த்தைகளில்
சிதறிக்கிடக்கின்றன
அன்பைத்தொலைத்த
கண்ணீர்ப்பூக்கள்...
 
ஏன் மெளனம்
உன் கரைகளில்..?
 
உன்
எண்ணங்களை வனையத்தெரியா
வண்ணாத்திப்பூச்சி நீயோ..?
 
இல்லை
என் சோகங்கள் எழுதியகண்ணீர்த்துளிகள்
இன்னமும் உன் பூமியை சேரவில்லையோ..?
 
புரியவில்லை....
 
காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..? 
 
காய்ந்த நிலத்தில்
புதைந்திருக்கும் காதலை
சுமந்தபடி
நிராகரிப்பின் ஒற்றைசாட்சியாய்
எப்படி 
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?
 
மடியாத என் கனவுகளை கேட்டேன்..
 
முடியாத உன் என்றோ ஒரு இரவில
தொடங்கலாம் என் நினைவுகள்
 
நம்பிக்கைகள் கூச்சலிட்டன...!
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்
காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..?

 

 

மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது 
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..

 

 

உங்கள் கவிதைகளில், காதலின் வலி நன்றாக வெளிப்படுகின்றது!

 

உங்களுக்காக......

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுகப் பழசை நினைச்சுக் கொண்டு இருந்து பயனில்லை. புதியதை பாருங்கோ. எல்லாத் துன்பமும் மறைந்துவிடும் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிரக்கம் கூடிய கவிதையாக இருக்கின்றது. வாழ்க்கையில் வெற்றி பெற தன்னிரக்கம் களைதல் நன்று!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

உங்கள் கவிதைகளில், காதலின் வலி நன்றாக வெளிப்படுகின்றது!

 

உங்களுக்காக......

 

 

 

நன்றி..புங்கை அண்ணா.. கேட்டேன்..ரசித்தேன்.. :D

ஏக்கங்கள் களைந்த புத்துணர்ச்சியுடன் கூடிய கவியுடன் மீளவும் சந்திக்க ஆசை :D

  • கருத்துக்கள உறவுகள்
எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..
 
அழுதபடி கடந்து போகிறது நிலவு ஒவ்வொரு இரவும். சோகம் மீண்டு வர வாழ்த்துக்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாளின் பின்னர் ஒரு காதல் கவிதை கண்ணீரின் துளிகளாகி சுபேஸ் உங்கள் எழுத்தால் வடிந்திருக்கிறது. ஒரு திரைப்படம் போல அருமையடா பொடியா.

பி.கு :- விரும்பியது அமையாவிடில் அமைந்தவை விரும்பு (நான் சொல்லேல்ல உதநிடதம் சொல்கிறது)

நல்ல கவிதை...வார்த்தைகள் அழகாக இருக்கின்றன.............. ஆனால் காதல் தோல்வியின் வலியும் நிற்காமல் போன பஸ்ஸுக்கான காத்திருப்பும் ஒன்றுதான் என்றது அனுபவ உண்மை என்பதால் உங்கள் துயரத்துடன் ஒட்ட முடியவில்லை.

வலிகளைக் கடந்து வந்தவன் சொல்கிறேன்.... கேள் நண்பா! எல்லாமே கடந்துபோகும்!

நீ ஆசைப்பட்ட அந்த வாழ்க்கையினும் இனிதான வாழ்க்கை உனைத் தேடி வரும். அது நிலையானதாய் உன்னுடன் இருந்து உன் வாழ்வை எப்பொழுதும் இனிதாக மாற்றும். நிழலி சொன்னது மாதிரி.... போன பஸ்ஸுக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை. வலிகளைத் தாண்டி வெளியே வா... வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானது,அழகானது.

 

அழகாக வார்த்தைகளைக் கோர்த்த வரிகளில் ஆழமான வலிகளையும் உணரமுடிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கருத்திட்ட மற்றும் வாசித்து விரும்பிய அன்புறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் அக்கா,கிருபன் அண்ணா,மணிவாசகன் அண்ணா,நிலா அக்கா,சாந்தி அக்கா,நிழலி அண்ணா,கவிதை,நந்தன் அண்ணா,தமிழினி அக்கா,அஞ்சரன் அண்ணா,நொச்சி அண்ணா,யாயினி அக்கா... உங்கள் எல்லோரது அன்புக்கும்,நேசிப்புக்கும் நன்றி உறவுகளே...
 
இப்பொழுதெல்லாம் முன்னைப்போல் அதிகம் எழுத நேரம் கிடைப்பதில்லை புதியவேலையால் உறவுகளே..கிடைக்கும் கொஞ்ச நேரங்களை நிறைய வாசிப்பதற்கும் நல்ல ரசனையான படங்கள் அல்லது மனதுக்கு நெருக்கமான ஏதாவது விடயங்கள் செய்யக்கிடைத்தால் செய்வதற்கு செல்விடுகிறேன்...ஆதலால் உடன் பதில் எழுத முடியவில்லை அத்துடன் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக எழுத முடியவில்லை..மன்னித்துவிடுங்கள்...
 
##இந்த இடத்தில் பொருத்தமாய் இருக்கும் என்பதால் பதிவிடுகிறேன்...
 
நேற்று பல நண்பர்கள்,நண்பிகளின் பரிந்துரையால் கிடைத்த ஓய்வை ராஜா ராணி படத்திற்காக செலவிட்டோம்...அதில் வரும் ஒரு அருமையானவசனம்..
 
நம்ம கூட இருக்கிறவங்க நம்மள விட்டிட்டு போயிட்டா நாமளும் போகணும்னு அவசியம் இல்ல.. என்னைக்காவது ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம லைவ் மாறும்...
 
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு யதார்த்தமான சினிமாப்படம் பார்த்தன்...கல்யாணம் கட்டியவங்க,காதலிச்சு தோத்தவங்க பார்க்கவேண்டிய படம்.. 
 
படம் நல்லாருக்கு...(ஆனால் என்ன நாலைஞ்சு பழைய படத்தை அங்கையும் இங்கையுமா கொப்பி பண்ணி இருப்பதுதான் பெரிய குறை..)
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பியரடித்தால்  இப்படித்தான் பெய்து கொண்டே இருக்கவேணும். விஸ்கிக்கு மாறுங்கள்.

 

நல்ல கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பியரடித்தால்  இப்படித்தான் பெய்து கொண்டே இருக்கவேணும். விஸ்கிக்கு மாறுங்கள்.

என்ன இழவுடா இது... பியரடித்தவங்களுக்குப் போவது யூரின் அண்ணை :lol: .. இது நினைவுகள்..
 
நன்றி அண்ணா..

நல்ல கவிதை.

நன்றி கரன் அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சுபேஷ்!

காதல் என்று வந்தாலே வலிதான் என்றும் விழி நீருடன்  கலந்து, விழுந்து  

வளியோடு கலந்து விடுவது!

காதல் நிறைவாகி விட்டால்!

கருத்தான கவி வராது ,

கண்ணான  கருதான் வரும்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.