Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீட்பர்களின் வருகைக்காக...

Featured Replies

எஞ்சி இருக்கும்

உடலங்களையும்  அரிக்கத்தொடங்கிவிட்டது

வார்த்தைகளால் வளைத்த கூட்டம்,

 

புதிய ஏற்பாடு என்றும்,

மீள்ந்தெழல் என்றும்,

அறையப்பட்ட ஆணிகளை

அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும்

செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர்.

 

நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய,

மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும்

தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும்

அவல ஓலங்களையும் கடந்து,

 

நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில்

குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும்

இறந்தவர்களின் உறுதிகளால்

இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும்

அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து,

 

எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து

குறிகசக்கி பல்லிழிப்பவனையும்,

சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து,

 

தோற்றுப்போனாலும்,

நேற்றுப்போனவர்களின் நினைவுடன்

வாழ்தலின் விதிஎழுதவென்று தானே மைகொண்டோம்.

 

எம் வாசலில் எம் வயலில்

எம் கோவிலில் எம் ஊரில்

நாமேதான் இருக்கவேண்டும்

நாமாகத்தான் இருக்கவேண்டும்.

 

புதிய ஏற்பாடு செய்தவர்களே...

மீழுகை அறிவிப்பு செய்தவர்களே ...

 

எங்களின் முள்ளந்தண்டுகளை உருவி

தீ மூட்டி இருக்கிறீர்கள்

நீங்கள் குளிர்காய...

எங்களின் மூச்சுக் காற்றுக்களை விற்று

செங்கோல் ஏந்தியிருக்கிறீர்கள்

நீங்கள் கோலோச்ச...

எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி

உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்

நீங்கள் உயிர்வாழ...

 

பெருவெடிப்பின் அவலம் சுமந்து

கொப்புளிக்கும் குருதியடக்கி

கொலையுண்டும் காணாமலும் போனவர்களின்

கடைசி மூச்சினை உள்வாங்கி

அமைதியாய் கிடக்கிறது தரவைகளில் ஆக்காட்டிகுருவிகள்

 

அவைகளுடன்,

மக்களும் இந்த

தேசத்தின் தெருக்களில் காத்திருக்கிறார்கள்,

 

நன்றி 

http://www.ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=08a98827-8b29-4a1d-acd2-5d2c431c2f15

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையாக இருக்கிறது நேற்கொழு..

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் முள்ளந்தண்டுகளை உருவி

தீ மூட்டி இருக்கிறீர்கள்

நீங்கள் குளிர்காய...

எங்களின் மூச்சுக் காற்றுக்களை விற்று

செங்கோல் ஏந்தியிருக்கிறீர்கள்

நீங்கள் கோலோச்ச...

எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி

உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்

நீங்கள் உயிர்வாழ...

 

 

கவிதையல்ல நெற்கொழுதாசன்,

கனத்துப்போன இதயங்களின்,

மூலை முடுக்கெல்லாம்,

கனன்று கொண்டிருக்கும் நெருப்பு!

 

உடல் பிழந்து வெளிவரத்,

துடிக்கின்ற தீ நாக்குகள்,

தங்களைத் தாங்களே தின்று,

தாகத்தைத் தணிக்கின்றன!

 

வெம்மை கனன்று,

வெடிக்கும் ஒரு நாளன்று,

உண்மை உலகத்தின்,

மனச்சாட்சியை எரிக்கட்டும்!,

கவிதை அருமை. வீச்சம் அதன் பெருமை.

 

கருத்தைப்பற்றி இங்கே கூறினால்.. அது விவாதமாகி கவிதையை மழுங்கடித்துவிடும். ஆனால் ஒன்று... கவிதையில் தொனிக்கும் கோபம் நியாயமானது.. ஆனால் சாத்தியம்?!!! :wub:

அருமை கவிதை ஆதங்கம் சொன்னால் அவன் ஆளா என கவிதையை பாழ்படுத்தி விடுவார்கள் உண்மையும் இதுதான் நன்றி பகிர்வுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழ்த் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அவல நிலையை புடம்போட்டுக்காட்டுகிறது உங்கள் பாடல். அனால் அவர்களுக்கு இது புரியவேண்டுமே. அவர்கள் மகிந்த சிந்தனையிலிருந்து விழுந்த சிறு துளிகளை மாந்தி மந்திகள் போலல்லோ இருக்கின்றனர். அவர்களது ஏவற்பேய்கள் சிங்களத்து ஏவற்பேய்களைவிட மிகவும் இளிதனமாய் எமை பிறாண்டி வருத்துகின்றனவே.

 

ஒரு சமாதான நீதவானின் முன் ஏற்கக்கூடிய பதவியை சிங்களத்தின் முன் மண்டியிட்டு விக்கு வினாயகம் இணக்க அரசியலுக்காக தனது வேட்டியை அவிழ்த்தெல்லோ வெள்ளைகொடி காட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வார்த்தைகள் என்னிடம் இல்லை நேற்கெழுதாசன். 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு வீச்சு! அபாரம் நேர்கொழுதாசன்!

ஏமாற்றங்களாலான ஏக்கங்களையும் ஆதங்கத்தையும் சுமந்துநிற்கும் வரிகள்.... பாராட்டுக்கள் நெற்கொழு!

 

இக்கவிதையைப் படிக்கும்பொழுது ஒன்றரை வருடத்துக்கு முன்பொருநாள் எழுதிய கவிதையொன்றும் ஞாபகத்திற்கு வந்தது.

 

கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...!
மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...?

 



எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...!
யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!!
உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று,
இல்லாத காலத்தை நினைத்து!!!

ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே!
ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!!
எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை?
உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத...
பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!!

மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்...
இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை!
ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்...
வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்!

'இயலாமை' என்றொன்று எம் வருங்காலத்தை நெருக்கும் முன்னமே,
வெட்கம்விட்டு... மானம்விட்டு... சூடு சுரணையற்று...
சொந்தமாய்ப் போராட திராணியற்ற பாவிகளாய்,
சுயநலத்தோடு கேட்கின்றோம்..............................

கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...!
மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97739

எம் வாசலில் எம் வயலில்

எம் கோவிலில் எம் ஊரில்

நாமேதான் இருக்கவேண்டும்

நாமாகத்தான் இருக்கவேண்டும்.  ////////

 

ஏக்கங்கள் சரி . எல்லோருமே தங்கள் தங்கள் தனித்துவங்களைப் பேண வேண்டும் என்றால் மனித வாழ்வு அடுத்தகட்ட நகர்வுக்குப் போகாது . சகிப்புத்தன்மை உள்ளதாலேயே உலகம் ஒருவரை ஒருவர் சார்ந்து அடுத்த வேளையை நோக்கிச் செல்கின்றது .படைப்புக்குப் பாராட்டுக்கள் கொழுவன் .

 

 

நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் நெற்கொழுதாசன். பாராட்டுக்கள்..........!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் விடியலை விரும்பும் ஆன்மாவின் குரல் கவிதையில் ஒலிக்கின்றது. படித்து முடிக்க அடுத்த மாதம் மாவீரர் தினம் வருவதும் நினைவுக்கு வந்தது.

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். :)

  • தொடங்கியவர்

உங்களின் உணர்வுகளையும் எனது வரிகள் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன். 

 

கருத்திடலுக்கும், விமர்சிப்புக்களுக்கும் என் அன்புகலந்த நன்றிகள். 

 

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 

மாக்களுக் கோர் கணமும் -கிளியே 

வாழத் தகுதி யுண்டோ ........

 

கேட்டவன் பாரதி. 

 

இன்றிருந்தால்........ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.