Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகனின் வருகை; உரிய நேரத்தில் முடிவாகும் என்கிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d94ce68f818c4ffbb095fade778a9a41.jpg

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு, பொதுநலவாய மாநாட்டை இந்திய பிரதமர் புறக்கணிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=563442380220712600

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் நின்று ஊளையிடும்போதும், சம்பூர் ஒப்பந்தம் செய்யும்போதும், சம்பிக்க, விமல் கும்பல் குரைக்கவில்லை.. அதனால் மாநாட்டை வைத்து இந்தியா இலங்கையை மிரட்டுகிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.. :rolleyes: அப்படியானால் மாநாடு முடிய மறுபடி தொடங்கும் கச்சேரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கு வரும். . . ஆனா வராது.

ஏதோ பேரம் நடக்கிறது. இன்னமும் படியவில்லை. என்னவாயிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங் வேளைக்குச் சொன்னால் தானே.... அவங்களும் ஹொட்டல் ஒழுங்கு பண்ண வசதியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தமிழ் நாடு தான் அமைதி பூங்காவாய் இருக்கு...அதையும் இந்த சிங் சுடு காடாய் ஆக்க போறான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங் வேளைக்குச் சொன்னால் தானே.... அவங்களும் ஹொட்டல் ஒழுங்கு பண்ண வசதியாய் இருக்கும்.

சிங்குக்கு  ஹொட்டல் படுக்கை எல்லாம் எதற்கு ? சும்மா ஒரு மூலையில சுருண்டு படுத்துவிட்டு போகும், அப்பாவி சிங்கு .... சிங்குகளுக்கே அசிங்கம் இந்த சிங்கு  

  • கருத்துக்கள உறவுகள்

puja-april-2011.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

India%20con%20Cartoon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படம்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவுக்கு அடிகொடுத்த துவக்கின் பிடி மெருகேற்றப் பட்டுள்ளதாக கேள்வி. கேள்விப்பட்ட சிங் பாய்வாரா,...? பதுங்குவாரா....? <_<  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவுக்கு அடிகொடுத்த துவக்கின் பிடி மெருகேற்றப் பட்டுள்ளதாக கேள்வி. கேள்விப்பட்ட சிங் பாய்வாரா,...? பதுங்குவாரா....? <_<  :icon_mrgreen:

 

அதுக்குத்தான் அந்தாள் 

தலையைச்சுத்தி  கட்டி  இருக்கே....

சிங்கா

கொக்கா.......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

d94ce68f818c4ffbb095fade778a9a41.jpg

.

 இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=563442380220712600

இலங்கையுடன் பகைத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாத நிலை வரலாம்

அதனால் அங்கு சென்று மகிந்தவுடன் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை விடையமாக கலந்துரையாடுவேன்

என ஒரு அறிக்கை வரும் 

பலாலியில் நின்று ஊளையிடும்போதும், சம்பூர் ஒப்பந்தம் செய்யும்போதும், சம்பிக்க, விமல் கும்பல் குரைக்கவில்லை.. அதனால் மாநாட்டை வைத்து இந்தியா இலங்கையை மிரட்டுகிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.. :rolleyes: அப்படியானால் மாநாடு முடிய மறுபடி தொடங்கும் கச்சேரி.. :D

தேர்தல் வந்தது அரசுக்கு படு தோல்வி. இனி காசு கொடுத்து, வந்து அரசுக்காகாக பேசுகிறாயா என்று கேட்டாலும் விமல் வந்து பேசமட்டார். அவரே தனக்காக பேச இப்போ நாநானவை(முகமெட் முசாமில்) கூலிக்கு அமர்த்த வேண்டிய தேவையாகி போய்விட்டது. 

 

தேர்தலையும் 13ம் திருத்தத்தையும் வைத்து வாசுதேவாவும் மற்றைய இடதுசாரிகளும் விமலின் கால்ச்சட்டையை பிடிங்க்கொண்டிருந்தார்கள். விமல் அரச குடும்பத்தை நம்பி சவால்கள் விட்டார். இப்போ நிர்கதியாக நிற்கிறார்.

 

விமலின் பேச்சுகளுக்கு எதிர்ப் பேச்சாக தேர்தல் முடிந்தவுடன் "தேர்தல் நடந்தமை அரசாங்கத்துக்கு பெரும் வெற்றி" என்று பசில் பேசினார். அதற்கு முடி சூட்டியது போல மகிந்தா தேர்தல் நடந்தது அரசுக்கு வெற்றி மட்டும் அல்ல இலங்கை எங்கும் ஜனநாயகம் மிளிர்வதற்கான அறிகுறி என்றும் பேசினார். அது அப்படியே அடங்காமல் அதற்கு வெளிநாட்டு ராஜதந்திரிகள் பதில் உரைத்தார்கள். மகிந்தா அதை ஐ.நா. வரைக்கும் எடுத்து சென்றார்.

 

இவை எல்லாவற்றாலும் விமலுக்கு ஐக்கிய சுதந்திர கூட்டு முன்னணியில் வாசுதேவாவையோ அல்லது மற்றய இடதுசாரிகளையோ பார்க்க முடியாத அவமானம். இதனால் அவர் இப்போ நாநா கையில் இந்த கோமாளிதனங்களுக்கான பதவியை கை அளித்துவிட்டார்.  

 

இந்தியாவுடன் ஏதாவது புதிய இணக்கப்பாடுகள் வந்து அதை பற்றி விடுகதைகள் சொல்ல வேண்டிய தேவை வந்தால் இனி நாநாதான் அதை செய்வார். அதன் போது கக்கீம், சல்மான் குர்திஸ், நாநா மூன்று பேரும் சேர்ந்துதான் அறிக்கையாக வெளிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் பகைத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாத நிலை வரலாம்

அதனால் அங்கு சென்று மகிந்தவுடன் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை விடையமாக கலந்துரையாடுவேன்

என ஒரு அறிக்கை வரும் 

 

 

வாத்தியார், நீங்கள் ஒரு பேச்சுக்குத்தான் இப்படிச் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மையும் அதுதான். இன்றுவரை சிறிலங்காவுக்கு இந்திய முண்டுகொடுப்பதன் காரணமும் அதுதான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அண்மையில் வெளியான கேணல் ஹரிகரனுடனான செவ்வியில் 2009 இல் புலிகளின் முக்க்ய பிரமுகர்களையும் இன்னும் பலரையும் அமெரிக்கா தனது பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்காக இந்தியாவை அணுகி இருந்தது. தமது வெளியுறவுக்கொள்கையின் மிக முக்கியமான சோதனைக் காலம் அது என்று வர்ணித்த ஹரிகரன், அமெரிக்கா இலங்கையில் கால்வைக்குமிடத்து அது இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் பிடியை முற்றாக அழித்துவிடுமென்றும், அதன்பிறகு இந்தியா எக்காரணத்தைக் கொன்டும் இலங்கையில் தலையிட சந்தர்ப்பாம் இல்லாது போய்விடுமென்றும் இந்தியா அன்று கருதியதால், அமெரிக்காவின் அந்த திட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்.

 

ஆக இன்றுவரை இந்தியா செய்துவரும் இனவழிப்பிற்கு துணைபோனது, அதை மறைக்க உதவுவது, சிறிலங்காவுக்கான சர்வதேச எதிர்ப்பைச் சமாளிப்பத்து என்பதுவரை  எல்லாமே இந்த காரணத்தால்த்தான் நடக்கிறது.

 

இந்த செவ்வி இன்னமும் யூ டியூப்பில் இருக்கிறது. தந்தி என்கிற தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பானது. முடிந்தால் பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இங்கிருந்த அர்ஜுனின் கருத்து என்னவாயிற்று ?? :(

  • கருத்துக்கள உறவுகள்
மன்மோகன் இலங்கை போவது உறுதியானால் தியாகு திரும்பவும் உண்ணா விரதம் இருப்பாரா :unsure:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.