Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்திடோம் வீரர்களே!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம்
செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம்
அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம்
அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம்
விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம்
விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம்


அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென
அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க
வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர்
போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர்

சொத்து சுகங்கள்  சொந்தங்கள் இழந்தனர்
பருவ வயதின்  பற்றெல்லாம் துறந்தனர் 
அன்னை மண் காத்திட அத்தனை பேரும்
ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர்

புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் 
புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர்
சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் சிறைப்பிடித்து
விடுதலை வேட்கையின் வடுக்கள் ஆயினர்   

பொன்னான மேனியையே போருக்காய்த் தந்தனர்   
போராட்ட வீரர்களாய் புண்ணாகி வெந்தனர்
பகைவன் படை துரத்தி பார் புகழ வைத்தனர்
பார்த்தோர் வியக்க நம் தேசம் அமைத்தனர்

அத்தனையும் எத்தர்களால் அழிந்து போனதுவே
உத்தமர்கள் எல்லாம் உருக்குலைந்து போயினரே
யார் கண் பட்டதுவோ யாம் செய்த பாவமதோ
உலகமெலாம் சேர்ந்தெம்மை உழுது போட்டனரே

என்ன சொல்லி நாமழுதும் ஏதும் வரப்போவதில்லை
எத்தனை பாடுபட்டோம் எள்ளளவும் பயனுமில்லை
ஏங்கி நாம் உமை நினைந்து எப்போதழுதாலும்
என்றும் நீர் எம்முன்னே எழுந்து வரப் போவதில்லை

காலத்தின் கோலமடா கார்த்திகை தீபமடா
கண்களில் நீரலைய காத்திருக்கின்றோமடா 
காலங்கள் கரைந்திடினும் கனவை நனவாக்க
காரிருளில் கரைதேடி கால்பதிக்க காத்திருக்க

கார்முகில் கரையொதுங்க கண்மணிகள் உங்கள்
கனவு நிறைவேற்றும் கணப்பொழுது  வந்திடும் 
போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்
புனிதர்கள் உம்கனவு நம் மண்ணில் நனவாகும்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து
மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்
மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் அருகில் வருகையில் !!!,

 

எருதேறி வருகினற எமதர்மன்,

தெரிந்திப்பானா?

அவன் ஏந்தியிருக்கும் கயிறின்,

முடிச்சுக்கள் தெரிந்திருக்குமா?

பெற்றெடுத்த அன்னையின்,,

சிரித்த முகம் தெரிந்திருக்குமா?

கட்டியனைத்த காதலியின்,

கனியிதழ்கள் தெரிந்திருக்குமா?

எதுவுமே தெரிந்திருக்காது!

தமிழீழத் தாயகத்தின்,

தளைகள் உடைவது தெரிந்திருக்கும்!

 

இன்றைய நாள் மாவீரர் வாரத்தின் முதலாவது நாள்!

 

நேரம், காலம் அறிந்து வருகிறது உங்கள் கவிதை!

 

நன்றிகள், சுமே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி நெடுக்ஸ், புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

நன்றி  மாவீரர் கவிதைக்கு

 

யார் கண் பட்டதுவோ யாம் செய்த பாவமதோ

உலகமெலாம் சேர்ந்தெம்மை உழுது போட்டனரே

 

 

ஒரு சிறு சந்தேகம்

உழுதல் என்பது நன்மையைச்செய்வதாகாதா????

 

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

மனங்களில் நிலையான தமிழ் வீரரே!

மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள்

மண்ணினில் விதையான மாவீரரே

மனங்களில்....

விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள்

விடுதலை மூச்சினில் நின்றீர்களே

மனங்களில்....

தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட

பகைவனை விரட்டவே வந்தீர்களே

மனங்களில்....

ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள்

வேராகி விழுதாகிப் பரந்தீர்களே

மனங்களில்....

இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்

எம் இதயத்தில் நினைவூறுமே!

மனங்களில்....

 

நன்றி: யாழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

நன்றி  மாவீரர் கவிதைக்கு

 

 

ஒரு சிறு சந்தேகம்

உழுதல் என்பது நன்மையைச்செய்வதாகாதா????

 

 

உழுதல் என்பது ஒருவகையில் பார்த்தால் நன்மைசெய்வது எனினும் இருந்தவற்றை எல்லாம் அழித்து இல்லாதொழிப்பதுதானே. உழுவது செழித்து வளர்வதற்கு. அதுபோல் எம் தேசத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தீ அதிகமாக எழுந்தது எம்மை உழுது போட்டதனால்த்தானே அண்ணா???????

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உறவுகளே.

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவுக்கவிக்கு நன்றிகள். கார்த்திகை ஒவ்வொன்றும் கண்ணில் நீரோடு கடமையில் உறுதியோடு எழ வேண்டிய யதார்த்தத்தைச் சொல்லும் மாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

வணக்கம் சுமேரி.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தில் மாவீரர் கவிதையை வழங்கிய சுமேக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

-----

கார்முகில் கரையொதுங்க கண்மணிகள் உங்கள்

கனவு நிறைவேற்றும் கணப்பொழுது  வந்திடும் 

போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்

புனிதர்கள் உம்கனவு நம் மண்ணில் நனவாகும்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

 

அர்த்தம் பொதிந்த... வரிகளுடன், அமைந்த கவிதை.

நன்றி சுமோ.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் சோழி,சாந்தி, குசா, நுணா, வந்தி, சிறி, மணி,அஞ்சரண்  ஆகியோருக்கு நன்றி.

மாவீரர்க்கான உங்கள் கவி அருமை அக்கா. மிக்க நன்றி

மாவீரர் வாரத்தில் மாவீரர் கவிதையை வழங்கிய சுமேக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை, யாழ்கவி.


நன்றி அலை.

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

அக்கா கவிதை அருமை

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!

மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!

 

 

மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்

நன்றி  மாவீரர் கவிதைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி மயூரன், செண்பகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.