Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெரிசலில் ஓர் மோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெண் பற்றிய வர்ணனை சிறிது எல்லை மீறிப் போகிறது. அது நான் பெண் என்பதாலும் எனக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் உங்கள் விவரிப்பு சொல்லாளுமை உண்மையிலேயே ஒரு சிறந்த எழுத்தாளனுக்குரியது. உங்கள் எழுத்தைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் எழுத்தாளன் இல்லை! எனக்கு நானே ஒரு கதை சொல்லிப் பார்த்தேன் அவ்வளவுதான்!
பெண்பற்றிய வர்ணனை எல்லை மீறிப்போவதற்கு என்னோடு ஒரே பெட்டியில் பயணம் செய்த அந்த தமிழ்ப் பெண்தான் காரணம்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

71181847-8c4e-4fb7-b4d9-b0c570423d97_S_s

 

உந்த மூண்டாவது பாக கதைக்கு  பூந்தளிர் புன்னகையோடை ஒரு படமும் போட்டிருந்தால் அந்தமாதிரியிருக்கும்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிய ஒரு விரிவான கருத்தை எழுதுவம் எண்டு பாத்துக்கொண்டிருந்தால், யாழ் களத்து 'இளசுகள்',தங்களுக்கு ஏற்ற பெண்  தேடுற மாதிரித்தான் முடியும் போல கிடக்கு! இப்போதைக்கு நடவாத காரியம் எண்டு சொல்ல வந்தன்!

 

ஒரு பெண்ணின் அழகில், அமைப்பில், பார்வையில், அசைவுகளில், தலைமயிரில், இதழ்களில்.........!!!

 

அப்பப்பா, கதையை வாசிக்க வாசிக்க வாழ்க்கையில, அநியாயமாப் பல விசயங்களை, மிஸ் பண்ணிப்போட்டமோ என்று எண்ணவைக்கிறது, கதை!

 

எழுத்தின் நடையானது, ஒரு வித்தியாசமாக, பழக்கமான நடை போலவும், ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு வித்தியாசமான பாணியில் எழுதமுனைவது போலவும் தோன்றுகின்றது!

 

பன்மைத்துவத்துக்குள், ஒருமைத்துவத்தை வெளிக்காட்ட முனையும் நடை!

 

இன்னும் எத்தனையோ இடங்கள் வர்ணனைக்காகக் காத்துக்கொண்டிருப்பதால், இந்தத் தொடர் நீண்டு செல்லும்போது, அந்த ஒருமைத்துவ நடை, தன்னைத் தெளிவாக இனம் காட்டி நிற்கும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், கிருபன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

2013ல் சாண்டில்யன் ரயிலில் பயணிக்கிறார்!

தொடருங்கள் ஜீ ! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிய ஒரு விரிவான கருத்தை எழுதுவம் எண்டு பாத்துக்கொண்டிருந்தால், யாழ் களத்து 'இளசுகள்',தங்களுக்கு ஏற்ற பெண்  தேடுற மாதிரித்தான் முடியும் போல கிடக்கு! இப்போதைக்கு நடவாத காரியம் எண்டு சொல்ல வந்தன்!

 

ஒரு பெண்ணின் அழகில், அமைப்பில், பார்வையில், அசைவுகளில், தலைமயிரில், இதழ்களில்.........!!!

 

அப்பப்பா, கதையை வாசிக்க வாசிக்க வாழ்க்கையில, அநியாயமாப் பல விசயங்களை, மிஸ் பண்ணிப்போட்டமோ என்று எண்ணவைக்கிறது, கதை!

 

எழுத்தின் நடையானது, ஒரு வித்தியாசமாக, பழக்கமான நடை போலவும், ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு வித்தியாசமான பாணியில் எழுதமுனைவது போலவும் தோன்றுகின்றது!

 

பன்மைத்துவத்துக்குள், ஒருமைத்துவத்தை வெளிக்காட்ட முனையும் நடை!

 

இன்னும் எத்தனையோ இடங்கள் வர்ணனைக்காகக் காத்துக்கொண்டிருப்பதால், இந்தத் தொடர் நீண்டு செல்லும்போது, அந்த ஒருமைத்துவ நடை, தன்னைத் தெளிவாக இனம் காட்டி நிற்கும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், கிருபன்! :D

வித்தியாசமாக எழுதமுனையவில்லை புங்கையூரான்! இப்பத்தான் எழுத முயற்சிக்கின்றேன்.. அதுதான் ஒரே கூழாம்பாணியாக வருகின்றது.

இனியும் வர்ணித்துக்கொண்டிருந்தால் ரெயின் ஷங்காய் வரை மட்டும்போய்விடும் என்பதால் அடுத்த ஸ்ரொப்பில் இறங்கலாம் என்று நினைக்கின்றேன்!

2013ல் சாண்டில்யன் ரயிலில் பயணிக்கிறார்!

தொடருங்கள் ஜீ ! :D

சாண்டில்யனின் கதைகளின் தலைப்புக்க்கள் மட்டும்தான் நினைவுக்கு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கதைகள்

தொடர் வர்ணனைகள்

திரும்  திரும்ப  சொல்லல்...

போன்றன  எனக்கு அலர்சியானவை  கிருபன்

அந்தவகையில் முதலாவது பகுதியை  தற்பொழுது  தான் படித்து முடித்தேன்..

ம்ம்ம்

16 பேர் பச்சை  போட்ட அளவுக்கு ஒன்றும் புரியல.

என் போன்ற  வாசகர்களையும் கவனத்திலெடுக்குக...... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கதைகள்

தொடர் வர்ணனைகள்

திரும்  திரும்ப  சொல்லல்...

போன்றன  எனக்கு அலர்சியானவை  கிருபன்

அந்தவகையில் முதலாவது பகுதியை  தற்பொழுது  தான் படித்து முடித்தேன்..

ம்ம்ம்

16 பேர் பச்சை  போட்ட அளவுக்கு ஒன்றும் புரியல.

என் போன்ற  வாசகர்களையும் கவனத்திலெடுக்குக...... :icon_idea:

ஒரு முத்திரைக்குப் பின்னால சுருக்கமாகக் கதை எழுதி அனுப்புகின்றேன். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முத்திரைக்குப் பின்னால சுருக்கமாகக் கதை எழுதி அனுப்புகின்றேன். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் <_<

இது தான் இப்போதைக்கு உலகத்திலேயே பெரிய முத்திரை என்று சொல்லுகின்றார்கள்!

 

இப்போதைக்கு இதுக்குப்பின்னாலை எழுதுங்கோ, கிருபன்! :icon_idea:

 

UAE%252520Stamp%25255B3%25255D.jpg

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் கிருபன் கதை எழுதப் போகிறீர்கள் என நீண்ட நாட்களாய் சொல்லி எழுதிக் கொண்டு இருக்கும் கதை இது.என்னைப் பொறுத்த வரை இதில் ஏமாத்தி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.இப்படி எழுதுவதற்கு முதலில் மன்னிக்கவும்.உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேனோ தெரியாது :unsure:
 
பாலகுமாரன்,சாண்டிலியன் நாவல்களில் கூட முதல் இரு பந்திகளின் தான் வர்ணனை இருக்கும்[அதைக் கூட நான் வாசிப்பதில்லை].ஆனால் உங்கள் கதை 3 அத்தியாயம் முடிந்து விட்டது இன்னும் வர்ணனை முடியவில்லை. உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் ஒரே கதையில் எழுதி முடித்து விடலாம் என நினைக்கிறீர்களோ தெரியாது :unsure:
 
நீங்கள் கண்ட பெண் உங்கள் கண்களுக்கு உலகப் பேரழகியாக இருக்கலாம்.ஆனால் அதை வர்ணிப்பதற்கும் ஒரு எல்லை இருக்குது என்று நினைக்கிறேன்
 
இந்தக் கதையை நெடுக்கர் எழுதி இருந்தால் என்னிடம் வேண்டி கட்டியிருப்பார்.நீங்கள் என்ட படியால் தப்பி விட்டீர்கள்.தயவு செய்து கதையை எழுதி முடிக்கவும்.இல்லா விட்டால் யாழின் கிளு,கிளு வாசகர்களின் பாவத்தை நான் சம்பாதிக்க வேண்டி வரும் ^_^ இதை வாசித்து குறை நினைக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.நன்றி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலத்த எதிர்பார்ப்புக்களோடு இருந்த ரதியை ஏமாற்றியதற்கு வருந்துகின்றேன் :( . மோகம் வந்தால் வர்ணிக்காமல் இருக்கமுடியாதுதானே! :wub:  எனக்கு பொதுவாக வர்ணித்து எழுதத் தெரியாது என்றாலும் ரெயினில் வந்தவள் பேரழகியாக இருந்ததாலும் இன்ப அவஸ்த்தையைத் தந்ததாலும் குறைத்து எழுதமுடியவில்லை.

ஏற்கனவே கதையை எப்படி முடிப்பது என்று தீர்மானித்துவிட்டதால் கிறிஸ்மஸ் விடுமுறைக்குள் முடிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன். :)

 பி.கு. நெடுக்ஸ் பெண்களை எல்லாம் வர்ணிக்கமாட்டார். அவருக்கு பறவைகள், குருவிகள், ஐ-போனை வர்ணிக்கவே நேரம் போதாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த எதிர்பார்ப்புக்களோடு இருந்த ரதியை ஏமாற்றியதற்கு வருந்துகின்றேன் :( . மோகம் வந்தால் வர்ணிக்காமல் இருக்கமுடியாதுதானே! :wub:  எனக்கு பொதுவாக வர்ணித்து எழுதத் தெரியாது என்றாலும் ரெயினில் வந்தவள் பேரழகியாக இருந்ததாலும் இன்ப அவஸ்த்தையைத் தந்ததாலும் குறைத்து எழுதமுடியவில்லை.

ஏற்கனவே கதையை எப்படி முடிப்பது என்று தீர்மானித்துவிட்டதால் கிறிஸ்மஸ் விடுமுறைக்குள் முடிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன். :)

 பி.கு. நெடுக்ஸ் பெண்களை எல்லாம் வர்ணிக்கமாட்டார். அவருக்கு பறவைகள், குருவிகள், ஐ-போனை வர்ணிக்கவே நேரம் போதாது. :lol:

ரதியின் பேச்சைக் கேட்டு வர்ணனையை இம்மியளவும் குறைத்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.. :huh: இல்லாவிட்டால் அனைத்து யாழ்களைத்தையும் கூட்டி போராட்டம் நடத்துவோம்.. :D

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கதையின் முடிவினைக் காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கதையின் முடிவினைக் காணவில்லை.

கன காலமாக தவறவிட்ட கதைகளையெல்லாம் கந்தப்பு தூசு தட்டிப் படிக்கின்றார்?

 எனக்கு தெரிந்த வர்ணனைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டேன்! ரதியும் வர்ணனை அதிகம் என்பதால் மிகுதியை வர்ணனை இல்லாமல் திருத்தி எழுதுவதா இல்லையா என்று குழம்பியதால் அப்படியே விட்டுவிட்டேன்?

ஆனாலும் மிகுதிக் கதையை யாழில் கட்டாயம் தொடர்வேன்?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

கன காலமாக தவறவிட்ட கதைகளையெல்லாம் கந்தப்பு தூசு தட்டிப் படிக்கின்றார்?

 எனக்கு தெரிந்த வர்ணனைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டேன்! ரதியும் வர்ணனை அதிகம் என்பதால் மிகுதியை வர்ணனை இல்லாமல் திருத்தி எழுதுவதா இல்லையா என்று குழம்பியதால் அப்படியே விட்டுவிட்டேன்?

ஆனாலும் மிகுதிக் கதையை யாழில் கட்டாயம் தொடர்வேன்?

எனக்கு வர்ணனை இருந்தால் நல்லது போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசினை. எல்லோருடைய  கருத்துக்களைக் கேட்டால் ஒரு முடிவினையும் எடுக்கமுடியாது. குழப்பம் தான் ஏற்படும். உங்களுக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ , அதன்படி எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் முதன்முதலாக இக் கதையைப் படிக்கக் கிடைத்தது. கதையின் வர்ணனைகளும் விவரணங்களும் சாண்டில்யனையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. கிருபன் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளனில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்லமுடியாதபடி உங்கள் எழுத்துநடை அட்டகாசமாக உள்ளது. அழகி பாவம். முடிவை எழுதி வாசகர்களை அமைதிப்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 01/03/2018 at 2:26 AM, Kavallur Kanmani said:

இன்றுதான் முதன்முதலாக இக் கதையைப் படிக்கக் கிடைத்தது. கதையின் வர்ணனைகளும் விவரணங்களும் சாண்டில்யனையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. கிருபன் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளனில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்லமுடியாதபடி உங்கள் எழுத்துநடை அட்டகாசமாக உள்ளது. அழகி பாவம். முடிவை எழுதி வாசகர்களை அமைதிப்படுத்துங்கள்.

ஓய்வாக இருக்க நேரம் கிடைபதில்லை. நான்கு நாட்கள் கிடைத்தால் எழுதியதை திருத்தி முடிக்கலாம். கிடைக்கும்போது கட்டாயம் மிகுதியையும் யாழில் பதிகின்றேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 02/03/2018 at 6:04 AM, கிருபன் said:

ஓய்வாக இருக்க நேரம் கிடைபதில்லை. நான்கு நாட்கள் கிடைத்தால் எழுதியதை திருத்தி முடிக்கலாம். கிடைக்கும்போது கட்டாயம் மிகுதியையும் யாழில் பதிகின்றேன்.

உந்த வசனம் முதலும் நாலு வருடங்களுக்கு முன் சொன்னதுபோல் இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்த வசனம் முதலும் நாலு வருடங்களுக்கு முன் சொன்னதுபோல் இருக்கே.

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றிர்கள்......கிருபனிடம் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு என்று கிடையாது, என்றைக்கும் ஒரே பேச்சுதான்.....! டோன்ட் வொர்ரி கிருபன். நான் எல்லாரையும் சமாளிக்கிறன்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றிர்கள்......கிருபனிடம் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு என்று கிடையாது, என்றைக்கும் ஒரே பேச்சுதான்.....! டோன்ட் வொர்ரி கிருபன். நான் எல்லாரையும் சமாளிக்கிறன்....!  tw_blush:

:11_blush::11_blush::11_blush:

உதுக்குப் பிறகும் கிருபன் எழுதாமல் விட்டிடுவாரா ???

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஒரு நல்ல கதை சொல்லி. அது "நெரிசலில் ஒரு  மோகம்" தானே?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/04/2018 at 12:59 AM, சுப.சோமசுந்தரம் said:

கிருபன் ஒரு நல்ல கதை சொல்லி. அது "நெரிசலில் ஒரு  மோகம்" தானே?

மிகுதிக் கதையை முடிப்பதற்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசிக்கின்றேன். tw_blush:

நான் எழுதிய நடையில் எழுதி முடிப்பவருக்கு பொற்காசுகள் கொடுத்தால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டிக்கு நான் வரவில்லை. உங்கள் நடை உங்கள் தனித்துவமாயிற்றே ! உங்கள் எழுத்துக்கான முகவரியும் அதுதானே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.