Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீயா அவள் ????

Featured Replies

நீயா அவள் ????

 

usha1.jpg

 

நித்தம் நித்தம் வந்து
முத்தம் கொடுத்த என்னை
சித்தம் கலங்கிய பித்தா
என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ??
எந்தன் பிழைதான் என்னவோ??

பள்ளியறையில்
பங்காக சிந்து பாட வந்த பொழுது
என்னை நீ ,
முட்டித் தள்ளியதும் ஏனோ ??

கொத்துக் கொத்தாக
நீயாக ,
வந்து முத்தம் கொடுத்ததும் ,
முன்பு நீ ,
அத்தான் !! அத்தான் !! என்று
நொடிக்கொரு தடவை
அழைத்த நினைவு ,
என் நினைவில் முட்டித் தள்ளியதே........
அடி கள்ளி..... நீயா அவள் ????

கோமகன் 

11 மார்கழி 2013

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

உது வீட்டுக்குள்ள தனியத் தீக்க வேண்டிய பிரச்சனை. வீதியால போற நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் முதலாவது பகுதி, தலைவன் தலைவிக்கு இடையில் உள்ள ஊடலைச் சொல்கின்றது!

 

கவிதையின் இரண்டாவது பகுதி, தலைவனுக்கு நல்ல 'குரல் வளம்' இல்லை என்பதைக் குறி சொல்கின்றது!

 

கவிதையின் மூன்றாவது பகுதி, தலைவனுக்கும், தலைவிக்கும் வயதாகி விட்டதை, நயமாகக் காட்டுகின்றது!

 

கவிதை நல்லாயிருக்குது, கோமகன்!

 

ஆனால் எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் தான் இப்போது இருக்கின்றது!

 

நம்மளை, இதுவரையில, ஒருவர் கூட இந்த 'அத்தான்' போட்டு அழைத்ததில்லை! :o

 

வெறும் 'இஞ்சேரப்பா' தான்! :wub:

அழகான கவிதை அண்ணே .....பழைய நினைவு போல :lol:

 

அத்தான் செத்தான் மச்சினி இருந்தா பாருங்கோ :D

  • தொடங்கியவர்

உது வீட்டுக்குள்ள தனியத் தீக்க வேண்டிய பிரச்சனை. வீதியால போற நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. :lol:

 

நீங்கள் எங்கை நிக்கிறியள் :o :o ?? இது நான் நேற்று காலமை கோப்பியோடை எங்கடை பல்கணியிலை நிக்கேக்கை வந்து விழுந்தது  :D  :D  .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான வரிகளும் மொழிகளும் கோமகன். வாழ்த்துக்கள்.

படம் நல்லாயிருக்கு கோ. :icon_mrgreen:

அப்பொழுதைய அத்தானுக்கு இப்ப என்ன நடந்தது...? :lol::wub:

ம்ம்ம்ம்... கவி நல்லா இருக்கு கோ! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐம்பது ஈரோக்கு  லாசப்பல்லில அட்டியல் ஒன்டு வாங்கிக் கொண்டு போய்க் குடுங்கோ, அட்டியல் இளிக்கிற வரைக்கும் ஒவ்வொரு நாளும்  அத்தான் ,என்  அத்தான்  தான்!! :D :D

  • தொடங்கியவர்

கவிதையின் முதலாவது பகுதி, தலைவன் தலைவிக்கு இடையில் உள்ள ஊடலைச் சொல்கின்றது!

 

கவிதையின் இரண்டாவது பகுதி, தலைவனுக்கு நல்ல 'குரல் வளம்' இல்லை என்பதைக் குறி சொல்கின்றது!

 

கவிதையின் மூன்றாவது பகுதி, தலைவனுக்கும், தலைவிக்கும் வயதாகி விட்டதை, நயமாகக் காட்டுகின்றது!

 

கவிதை நல்லாயிருக்குது, கோமகன்!

 

ஆனால் எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் தான் இப்போது இருக்கின்றது!

 

நம்மளை, இதுவரையில, ஒருவர் கூட இந்த 'அத்தான்' போட்டு அழைத்ததில்லை! :o

 

வெறும் 'இஞ்சேரப்பா' தான்! :wub:

 

பாடகருக்கு நல்ல குரல்வளம் இருந்தாலும் பாட்டுக்கு ரசிகர்கள் இல்லாட்டி பாடகர் தனிய பாடி என்ன பிரயோசனம் புங்கையர்  :icon_mrgreen:  :lol:  :D  ?? நீங்களும் செரியாய் பீல் பண்ணுறியள் ஒருத்தரும் அத்தான் எண்டு கூப்பிடேலை எண்டு , உங்களுக்காக ஒரு சிற்றுவேசன் சோங் ஒண்டு தாறன் :D . உங்கள் வரவுக்கும் கலகலப்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான் :) .

 

https://www.youtube.com/watch?v=VCgOiHU0aDw

 

  • கருத்துக்கள உறவுகள்

நீயா அவள் ????

 

usha1.jpg

 

நித்தம் நித்தம் வந்து

முத்தம் கொடுத்த என்னை

சித்தம் கலங்கிய பித்தா

என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ??

எந்தன் பிழைதான் என்னவோ??

பழகப் பழகப் பாலும் புளிக்கும்! :unsure: 

 

பள்ளியறையில்

பங்காக சிந்து பாட வந்த பொழுது

என்னை நீ ,

முட்டித் தள்ளியதும் ஏனோ ??

கழுதைக் குரல்போல இருந்திருக்கும் :D

 

 

கொத்துக் கொத்தாக

நீயாக ,

வந்து முத்தம் கொடுத்ததும் ,

முன்பு நீ ,

அத்தான் !! அத்தான் !! என்று

நொடிக்கொரு தடவை

அழைத்த நினைவு ,

என் நினைவில் முட்டித் தள்ளியதே........

அடி கள்ளி..... நீயா அவள் ????

எத்தனை நாட்களுக்குத்தான் ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுறது! :lol: 

 

 

கோமகன் 

11 மார்கழி 2013

 

அழகான படைப்பு, வாழ்த்துக்கள்!

Edited by யாழ்வாலி

  • தொடங்கியவர்

அழகான கவிதை அண்ணே .....பழைய நினைவு போல :lol:

 

அத்தான் செத்தான் மச்சினி இருந்தா பாருங்கோ :D

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அஞ்சரன் :) :) .

 

  • தொடங்கியவர்

அழகான கவிதை அண்ணே .....பழைய நினைவு போல :lol:

 

அத்தான் செத்தான் மச்சினி இருந்தா பாருங்கோ :D

 

மச்சினிச்சி இல்லையே ( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் ) :( :( :D .

 

மச்சினிச்சி இல்லையே ( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் ) :( :( :D .

வீடு, காணிக்கு ஆசைப்பட்டு மச்சினிச்சிய விட்டுப்புட்டிங்களே கோ அண்ணே :D

இப்போ புலம்பி என்ன செய்ய... எல்லாத்திலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டுமல்லோ :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த அழகிய பாடலைக் கவனித்தேன்..! :D ஆற்றாக்கொடுமையில் எழுதினதுபோல் இருக்கு.. :rolleyes: கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ.. பிறகு உங்களுக்கு பழகிவிடும்.. :lol:

பாடல் அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகவேணும்..

யாரை நினைச்சு????

  • தொடங்கியவர்

அழகான வரிகளும் மொழிகளும் கோமகன். வாழ்த்துக்கள்.

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்வையூரான் :) .

 

  • தொடங்கியவர்

படம் நல்லாயிருக்கு கோ. :icon_mrgreen:

 

நானும் அப்பிடித்தான் நினைச்சன் :wub: :wub: .

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பித்தம் தலைக்கேறி

முத்தம் கொடுத்தவளை

நித்தம் எண்ணி எண்ணி

நீ நாயாய் போகாதே

 

ரத்த உறவாய் உன்

அருமை மனைவியாய்

அருகில் இருப்பவளை

கலங்க நீ வைக்காதே

 

மொத்தம் கெட்டவள்

நான் நொந்து சொல்கிறேன்

அவள் வெட்கம் கெட்டவள்

மறந்திடு மன்னித்துவிடாதே !!!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீயா அவள் ????

 

usha1.jpg

 

அடி கள்ளி..... நீயா அவள் ????

கோமகன் 

11 மார்கழி 2013

 

என் கனவுக் காதலியை நீங்கள் கண்டு வரைந்ததென்ன..!!  எப்படி..???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.