Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையைச் சொல்லுங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு ஏழரைச் சனி நடக்குது, இந்த மோட்டுத்தனமான சனங்களின்ர கதையைக் கேக்காமல், ஒழுங்கா ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து எள்ளெண்ணை எரி எண்டு,ரவி ஐயர் திரும்பத் திரும்பச் சொன்னவர் ! :o

 

சரி குளிச்சிட்டு, வெளிக்கிட்டுப் போவம்! :icon_idea:

 

உங்கள  சனி  பிடிப்பது பிறவிப்பலன் :o

ஆனால்

இங்கிருப்பவர்கள் மோடர்கள் என்பது

தொற்று  நோய் போலும்...... :icon_idea:

  • Replies 87
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள  சனி  பிடிப்பது பிறவிப்பலன் :o

ஆனால்

இங்கிருப்பவர்கள் மோடர்கள் என்பது

தொற்று  நோய் போலும்...... :icon_idea:

நான் சொன்னது 'சிட்னியில' வசிக்கிற நம்ம 'பக்தி மான்களை" :o

 

என்னவோ தெரியேல்லை, இண்டைக்கு விடிஞ்சதிலையிருந்து தொட்டது எல்லாமே பொன்னாகுது! :o

  • கருத்துக்கள உறவுகள்

“முதற்கோணம் முற்றுங்கோணம்” என்ற ஒருபழமொழியுண்டு.
தங்களுடைய இடத்திற்குப் புதியவர்கள் வருவதைப் பலர் விரும்புவதில்லை. கதை எழுதிய உங்களுக்கு அதனைக் கதையாக ஏற்றுக்கொள்ள முடிந்திருந்தாலே போதும். எவருடைய அபிப்பிராயத்தையும் எதிர்பாராது உங்கள் முயற்சியில் புத்தகமாக வெளியிட்டிருந்தால், ஒருசிலரோ, பலரோ ஆதரவு தந்து உற்சாகப்படுத்தவும் செய்திருப்பார்கள். இனிமேற்கொண்டு நீங்கள் கருத்தைக் கவரும் கதைகளை எழுதினாலும். அந்த முயற்சி உங்களுக்கு இலகுவாக இருக்கப்போவதில்லை. காமாளைக் கண்களுக்கு எதுவும் மஞ்சள் நிறமாகவே தெரியும். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ??????. என்ற பதிவை நான் வாசித்தபோது ஒரு சரித்திரக் கதையைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டதை இங்கு நான் குறிப்பிடவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“முதற்கோணம் முற்றுங்கோணம்” என்ற ஒருபழமொழியுண்டு.

தங்களுடைய இடத்திற்குப் புதியவர்கள் வருவதைப் பலர் விரும்புவதில்லை. கதை எழுதிய உங்களுக்கு அதனைக் கதையாக ஏற்றுக்கொள்ள முடிந்திருந்தாலே போதும். எவருடைய அபிப்பிராயத்தையும் எதிர்பாராது உங்கள் முயற்சியில் புத்தகமாக வெளியிட்டிருந்தால், ஒருசிலரோ, பலரோ ஆதரவு தந்து உற்சாகப்படுத்தவும் செய்திருப்பார்கள். இனிமேற்கொண்டு நீங்கள் கருத்தைக் கவரும் கதைகளை எழுதினாலும். அந்த முயற்சி உங்களுக்கு இலகுவாக இருக்கப்போவதில்லை. காமாளைக் கண்களுக்கு எதுவும் மஞ்சள் நிறமாகவே தெரியும். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ??????. என்ற பதிவை நான் வாசித்தபோது ஒரு சரித்திரக் கதையைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டதை இங்கு நான் குறிப்பிடவேண்டும்.

 

நன்றி பாஞ்ச் உங்கள் கருத்துக்கு. உண்மைதான் பாஞ்ச் நானும் கதையை எழுத ஆரம்பித்தவுடனேயே மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கதை எழுதத்தான் போகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எக்கோய் நீங்க கதை எழுதினது தப்பில்ல.... அதை வாசிக்க போட்டதிளையும் தப்பில்ல ஆனால் அதை புத்தகமா அடிச்சு வெளியிடனும் எண்டு பாத்திங்களே அங்க தான் தப்பு.... முடியல்ல.....

சரி சரி ஆசைபட்டிடிங்க நீங்க புததகத்த பிரிண்ட் பண்ணுங்க நாங்க நந்தன் அண்ணா மாதிரி சில தொழில் அதிபர்கள வைச்சு வெளியிடுவம்..... :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எக்கோய் நீங்க கதை எழுதினது தப்பில்ல.... அதை வாசிக்க போட்டதிளையும் தப்பில்ல ஆனால் அதை புத்தகமா அடிச்சு வெளியிடனும் எண்டு பாத்திங்களே அங்க தான் தப்பு.... முடியல்ல.....

சரி சரி ஆசைபட்டிடிங்க நீங்க புததகத்த பிரிண்ட் பண்ணுங்க நாங்க நந்தன் அண்ணா மாதிரி சில தொழில் அதிபர்கள வைச்சு வெளியிடுவம்..... :(:D

 

நானும் உங்கள் ரண்டுபேரையும் தான் கூப்பிட நினைச்சனான். :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

மெசோ ஆன்ரி எழுதியவை கதைகள் இல்லை என்று சொன்னவர் சொன்ன காரணம் ஆன்ரிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மேலே சொல்ல என்ன இருக்கு! கனிமொழி தனது கவிதைகளைப் புத்தமாகப் போடுவது பற்றி எழுத்தாளர் ஜெயமோகனிடம் அபிப்பிராயம் கேட்டபோது முதலில் கவிதை எழுதுங்கள் என்று அவர் சொன்னதாக எங்கோ படித்ததுதான் நினைவுக்கு வந்தது. அதற்காக கனிமொழி கவிதைப் புத்தகம் வெளியிடவில்லையா என்ன!

இலக்கிய கர்த்தாக்கள் தமது புலமையையும் செருக்கையும் காட்ட விமர்சனம் என்ற பெயரில் கண்டதையும் சொல்வார்கள். அத்தோடு அவர்களது விமர்சனங்கள் அவர்களது இலக்கிய கொள்கைகள்தான் சரியென்ற பார்வையோடு வருவதால் இலக்கிய உலகில் எப்போதுமே சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்துகொண்டே உள்ளன. இதையெல்லாம் வாசகன் என்ற முறையில் நான் கண்டுகொள்வதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரு கதையை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சட்டகத்திற்குள் அடைக்கமுடியாது. அப்படிச் செய்வதை விடுத்து வாசிப்பு அனுபவம் ஒன்றை உருவாக்க முயலவேண்டும். கதையை எழுதுபவர்தான் முதல் வாசகர். கதையை எழுதுவதே ஒரு கதையை தனக்குச் சொல்லிப் பார்க்கத்தான். அந்தக் கதை எழுதுபவருக்குப் பிடித்திருந்தால் வெற்றிதானே. அப்படி இல்லாமல் மற்றவர்களுக்காகக் கதை எழுதும்போதும் கதை நன்றாக வந்திருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் வரும்!

மேலும் ஆழமான வாசிப்பு இருந்தால் பல்வேறு வகையான பார்வைகள் வரும். பல்வேறு வகையான இலக்கிய வாசகர்களைப் பற்றி அறியமுடியும்.

என்னுடைய பார்வையில் மெசோ ஆன்ரி எழுதுவது தனது சுவாரசியமான சம்பவங்கள். அவற்றை மேலோட்டமாக விபரிக்காது மனவோட்டங்களையும், காரண காரியங்களையும் தந்தால் நன்றாக இருக்கும்.

யாழ்களம் சொந்தமாக எழுதுபவர்களை ஊக்குவிக்கின்றது என்று நினைக்கின்றேன். ஆகவே இலக்கியப் பழசுகளின் கதைகளைக் கேட்டு எழுதாமல் விட்டுவிடாதீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ எல்லோரும் தங்கட அனுபவங்களை,பார்த்ததை,கேட்டதைத் தான் கதையாக எழுதுகின்றனர்.நீங்கள் அடுத்தவர் அனுபவங்களை கதையாக எழுதுகின்றீர்கள் :lol: உங்களிட்ட புத்தகத்தை வெளியிடும் அளவு காசும்,வெற்றி,தோல்வியை சமமாக பங்கிடும் மனமும் இருந்தால் எழுதி வெளியிடுங்கோ.
 
உங்களை விட எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கினம்.ஊர் சனம்,சொந்தம்,நண்பர்கள் என்று எப்படியாவது முதலாவது புத்தகம் வித்துடும்.முதலாவது வில்பட்டுதே என்று அவசரப்பட்டு இரண்டாவது புத்தகம் எழுத வேண்டாம் :D
 
பிகு;யாழில வந்து உங்கட புத்தகத்தை வேண்டச் சொல்லி கரைச்சல் படுத்தக் கூடாது சரியா :lol:

ஏன் இருந்தாப் போல இந்தச் சுய பரிசோதனை? :o

 

கதை என்பது ஒருவரது அனுபவங்களின் தொகுப்பெனவே நினைக்கிறேன்! அந்த அனுபவங்களை, ஒரு வாசகனைக் கேட்போனாக வைத்து எழுத்தாளர் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் ஒரு கதையின் வெற்றி தங்கியுள்ளது! அந்தக் கதை மூலம் எழுத்தாளர் வாசகர்களுக்கு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதங்கள் எழுத்தாளருக்கு, எழுத்தாளர் வேறு படும்! அதுவே காலப்போக்கில், ஒரு எழுத்தாளனின் தனித்துவமாகவும் அமைந்து விடுகின்றது! 

 

ஒரே கதைக்கருவை இரண்டு எழுத்தாளர்கள், எழுதும்போது கதை வேறு வேறாக அமையும்! அங்கு தான் ஒரு கதை சொல்லியின் திறமை வெளிக்காட்டப் படுகின்றது!

 

உதாரணமாக எழிலி கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று ஒருவர் எழுதலாம்!

 

அதையே இன்னொருவர் எழுதும்போது, நேரே கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று எழுதாமல்,

 

எழிலி கிணற்றுக்கட்டில் அமர்ந்து, கிணற்றுக்குள் குதிப்பதா அல்லது வேறு ஏதாவது வழியில் உயிரை

மாய்த்துக்கொள்ளலாமா என்று சிறிது நேரம் சிந்தித்தாள்! அந்த ஆழமான கிணற்றில், தனது உடல் மறுநாள் காலையில் மிதக்கும் போது, அந்தச் செய்தியை எவரோ போய், அம்மாவுக்குச் சொல்லுவார்கள்! அப்போது தன்னைப் பத்துமாதம் சுமந்த அந்த வயிறு எவ்வளவுக்குத் துடித்துப்போகும்! வாழும் போது தான் என்னால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை!..................

 

இதில் மேலுள்ளவை இரண்டுமே ஒரே கருப்பொருளைத் தான் சொல்லுகின்றன! ஆனால் விதம் வேறு படுகின்றது!

 

உங்கள் நண்பர் இதைப்பற்றித் தான் குறிப்பிட்டிருக்கிறார் என எண்ணுகின்றேன்!

 

இறுதியாக நீங்கள் ஒரு எழுத்தாளரா இல்லையா என்பதை இன்னுமொரு எழுத்தாளர் முடிவு செய்ய இயலாது! அவர் வாசகர் என்னும் நிலைக்கு இறங்கி வந்து விமர்சிப்பதே முறையாகும்!

 

எனக்கென்னவோ வாசகன் என்ற முறையில் உங்கள் கதைகளை வாசிக்கவும், விமரிசிக்கவும் விருப்பம்!

 

கிருபன், நிழலி, கோமகன், அர்ஜுன் , ஜஸ்டின் நுணா , ரதி போன்றவர்களது கருத்துக்களையும் கேழுங்கள்! :D

 
புங்கை இதில என்ட பெயரை எழுதி உள்ளீர்கள் உள் குத்து எதுவும் இல்லைத் தானே :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகளில் ஒன்றை வாசித்த அனுபவத்தில்.. ஒரு அனுபவத்தை அல்லது.. சம்பவத்தை வைச்சு... அதனையே விபரித்துள்ளீர்கள். ஆனாலும் அதனை ஒரு கதையாகக் கொள்ளலாம். கதை என்பது சம்பவங்களின் கூட்டு. நாவல் என்பது பல கதைகளின் கூட்டு என்று எங்கள் தமிழ் ஆசான் சொல்லித் தந்தது ஞாபகத்துக்கு வந்து போகிறது. எதனையும் இலக்கண வரம்போடு பார்ப்பவர்களிடம் மாறுபாடுகளுக்கு அனுமதியைப் பெறுவது கடினம். பாரதியார் புதுக்கவிதை பாடிய போது.. விசரன் பிணாத்திரான் என்று சொன்னார்களாம்.. மரபுக் கவிதை விற்பன்னர்கள். ஆனால் பாரதி அன்று துணிவாக தன்னிலையில்.. தெளிவாக நின்று கொண்டதால்.. அவன் இன்று புரட்சிக்கவிஞன் மட்டுமல்ல.. புதுக்கவிஞனாகவும் எம் முன் நடந்து வழிக்காட்டிக் கொண்டிருக்கிறான் இன்று வரை. எங்கட யாழில்.. புத்தன் இருக்கிறார். ஒரு குட்டிக்கதைக்க.. சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லிவிடுவார். இன்றைய காலக்கட்டம் என்பது.. நீண்ட வாசித்தலுக்கு உகந்ததல்ல. என் (பாமரன்) வாழ்க்கையில் நாவல் வாசித்தது என்றால் இல்லை என்றே சொல்லலாம். பள்ளிக்காலத்தில் வாசித்த சிலவற்றைத் தவிர. கதைகள் என்றால்.. வாசித்திருக்கிறேன். அதுவும்.. பக்கம் பக்கமாக நீளும் கதைகள் என்றால்.. தூக்கி ஒரு பக்கம் போட்டுவிட்டுப் போய்விடுவேன். இதே மனநிலையில் தான் நாங்க பார்த்த பலரும். உங்கள் கதை மூலம்.. நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லி இருக்கிறீங்களா.. என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் அதேவேளை.. விற்பன்னர்களிடம் கொடுக்காமல்.. ஒரு பாமரனிடம் அதனை வாசிக்கக் கொடுங்கள். அவன் என்ன உணர்கிறானோ.. அதுதான் கதையின் தாக்கம். அது உங்களின் உணர்வை ஒத்திருந்தால்.. அது நிச்சயம் கதை தான்..! உறுதியாக நின்று நூலாக்கலாம். அந்தப் பாமரனைப் போன்ற ஒரு சிலராவது வாசிப்பாங்க. நாம் விடும் தவறுகளில் முக்கியமானது.. விற்பன்னர்கள் சொல்வது வேதம் என்று எண்ணுவதுதான். அது உண்மை அல்ல. விற்பன்னர்களை விட 10 பாமரன் என்ன உணர்வை குறித்த கதையை வாசித்து..உணர்வுஈட்டுகிறானோ அது தான்.. படைப்புக்கான அங்கீகாரம். வெறுமனவே விருதுக்கு புகழுக்கு ஆக்கனுன்னா.. விளங்காத வகையில் கவிதை எழுதித் திரிவோருக்கு அந்த அக்காடமி.. இந்த அக்காடமி விருதுகளை பின்வாசல் கதவால பெரியவர்களின் தயவோடு.. முன்மொழிவோடு வழங்குவது போல.. ஆக்கம் படைக்கனுன்னா.. விற்பன்னர்களை திருப்திப்படுத்த படைப்பதே சிறப்பு. ஆனால் பாமரனுக்கு அது புரியாது. அவையே ஏட்டுச்சுரக்காய்களாக.. செல்வை அழங்கரிக்கின்றன. யாழ் என்பது படைப்புக்களுக்கு சரியான சோதனைகளம். ஏனெனில்.. இங்கு விற்பன்னர்களை விட பாமர மக்களே அதிகம். அவர்களின் உணர்வே படைப்புக்கான அங்கீகாரம்.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆம்மா வெளியிடுங்கோ நானும் பிரபல London கோழி வியாபாரியும் தொழில் அதிபரும் வியாபார காந்தம் (பிசினஸ் மக்நெட்) நந்தன் அண்ணாவும் ரெடி

  • கருத்துக்கள உறவுகள்

 

சுமோ எல்லோரும் தங்கட அனுபவங்களை,பார்த்ததை,கேட்டதைத் தான் கதையாக எழுதுகின்றனர்.நீங்கள் அடுத்தவர் அனுபவங்களை கதையாக எழுதுகின்றீர்கள் :lol: உங்களிட்ட புத்தகத்தை வெளியிடும் அளவு காசும்,வெற்றி,தோல்வியை சமமாக பங்கிடும் மனமும் இருந்தால் எழுதி வெளியிடுங்கோ.
 
உங்களை விட எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கினம்.ஊர் சனம்,சொந்தம்,நண்பர்கள் என்று எப்படியாவது முதலாவது புத்தகம் வித்துடும்.முதலாவது வில்பட்டுதே என்று அவசரப்பட்டு இரண்டாவது புத்தகம் எழுத வேண்டாம் :D
 
பிகு;யாழில வந்து உங்கட புத்தகத்தை வேண்டச் சொல்லி கரைச்சல் படுத்தக் கூடாது சரியா :lol:

 
புங்கை இதில என்ட பெயரை எழுதி உள்ளீர்கள் உள் குத்து எதுவும் இல்லைத் தானே :rolleyes:

 

நிச்சயமாக இல்லை, ரதி!

 

அதிகமாக வாசிப்பவர்கள் தான் சுமேயின் பதிவுக்கு 'விளக்கம்' அழிப்பது உகந்தது என்ற கருத்தில் தான் நான் அந்தப்பெயர்களைப் பதிய வேண்டி வந்தது! :D

 

அதுக்காகவே கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கொண்டேன் என நினைக்கிறேன்! :o

 

ஆனால் எனக்குக் கவலையில்லை! :icon_idea:

 

ஏனெனில் எனக்குத் தெரியும், மீன் கரைஞ்சாலும் 'ஆணத்துக்குள்ள"  தான் கிடக்கும் என்று !

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை, ரதி!

 

அதிகமாக வாசிப்பவர்கள் தான் சுமேயின் பதிவுக்கு 'விளக்கம்' அழிப்பது உகந்தது என்ற கருத்தில் தான் நான் அந்தப்பெயர்களைப் பதிய வேண்டி வந்தது! :D

 

அதுக்காகவே கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கொண்டேன் என நினைக்கிறேன்! :o

 

ஆனால் எனக்குக் கவலையில்லை! :icon_idea:

 

ஏனெனில் எனக்குத் தெரியும், மீன் கரைஞ்சாலும் 'ஆணத்துக்குள்ள"  தான் கிடக்கும் என்று !

இருந்தாலும் இப்படித்தப்பிக் கொள்ளக்கூடாது ரோமியோ

  • கருத்துக்கள உறவுகள்

சுமே... நீங்கள் உங்கள் கதையை வாசிக்கக் கொடுத்தவர்...நிச்சயமாக பலவற்றை எழுதியிருக்கக்கூடியவராக இருக்கக்கூடும் என்பது என் யூகம்.

 

அடுத்து இந்தக் கருத்துக்களத்தில் நன்றாக இருக்கிறது என்று சொல்வது ஒவ்வொரு படைப்பாளியையும் ஊக்கப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய படைப்பை நாங்களும் வாசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும். அத்தோடு ஒருவருக்குப் பிடித்த எழுத்து இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கும். படைப்பாளிகள் பல ரகம்..மேலே இசை, ரோமியோ குறிப்பிட்ட விடயங்கள் இலகுவான உதாரணங்கள். இங்கு நெடுக்கு கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இன்றைய நாட்களில் நீண்ட படைப்புகள் அதிகமாக கவருவதில்லை. சிக்கென இருக்கும் சிறிய படைப்புகள் உடனடியாக வாசக உள்ளங்களைச் சென்றடைந்து விடுகின்றன. மற்றது கிருபன் கூறிய விடயமும் சரியாகவே இருக்கின்றது. குறிப்பிட்ட எழுத்தாளர் உங்களுக்கு எந்த இடத்தில் எத்தகையதை அமைவாக வரவில்லை என்பதைச்சுட்டிக்காட்டியிருந்தால் அதனை தெளிவுறத் தெரிந்து கொண்டால் அது இன்னும் உங்களை மேன்மைப்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும். அத்தோடு உங்களுக்கு உங்கள் படைப்புகளில் நம்பிக்கை இருக்குமானால் மற்றவர்களிடம் அதனை ஏற்புடையதா இல்லையா என்று கேட்கவேண்டியதேவை இல்லை. ஆனால் நூல் வடிவம் பெறும்போது நிச்சயமாக விமர்சனங்களைச்சந்திக்கநேரும். அப்போது உங்களுக்கு விமர்சனங்களுக்கான பதிலை தெளிவாக உரைக்கும் துணிவு இருக்கவேண்டும். நூல் வடிவம் பெறும்போது அது உங்களுக்கான படைப்பாளி என்னும் அங்கீகரிப்பை வழங்குகிறது. அது உங்கள் காலத்திற்குப்பின்னும் வாழும். சில நேரங்களில் கன்னிமுயற்சிகளை சில வருடங்களின் வளர்ச்சியின் பின்னர் மீளப்பார்க்கும்போது அடடா நாம் இதனை இப்படி எழுதியிருக்கலாமே என்றும் தோன்றும். ஆரம்பம் எப்போதுமே அலைகடல் போலவும் தொடரும் காலங்கள் ஆழ்கடல்போலவும் மாறும். அவையே உங்களின் எழுத்தின் முதிர்ச்சியை அதன் அளவுகளை அளக்கவல்லது...... புரியாமல் குழம்புகிறீர்களா?.... உங்களின் தொடர்ச்சியான எழுத்துப் பயணமே உங்களின் இன்றைய எழுத்துக்களை அளக்க வல்லது. முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சுமேரியர் அவர்கட்டு!

 

இங்கு பின்னூட்டம் எழுதியவர்களை நோக்கும்போது அவர்கள் அனைவருமே உங்கள் முதல் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து முன்பணமும் கட்டிவிட முண்டியடிப்பதுபோல் தெரிகிறது. உங்களுடைய பொருளாளராக வருவதற்கு எனக்குப் பூரணசம்மதம்.

 

இவ்வண்ணம்

பாஞ்.

  • கருத்துக்கள உறவுகள்

Swiss பிரபல தூள்( மிளகாய் தூள், சரக்கு தூள், கோப்பித்தூள்) வியாபாரியான சஜீவன் அண்ணா வும் France நாட்டிலே அழகிய இளம் பெண்களுக்கு மட்டும் இன்டெர் நெட்டு இலவசம் என்று கடை வாசலிலே போட்டு விட்டு தன்னலம் பாராது ஓயாது தூங்காது சமூக சேவையாற்றி வரும் பிரபல சமூக சேவகரும் தோழி அதிபருமான விசு அண்ணாவையும் ஒழுங்கு பண்ணி புத்தகத்த வாங்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு அக்கா சோ சட்டுப்புட்டு எண்டு காரியத்த தொடங்குங்கோ.......

சுமேரியரின் மண்டை ஓடுகள் மாதிரி ஒரு காலத்தில் உலகம் அழிஞ்சாலும் உங்க புத்தகத்த தோண்டி எடுக்க கூடிய மாதிரி நல்ல quality பேப்பர் use பண்ண சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுண்டல்.. புத்தகத்தை வெளியிட வைக்கிறதுதான் ஒரே முடிவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்ன இப்பிடி கேட்டுட்டிக அவக ஆசைப்பட்டாக ..... நாங்க தம்பி மார் நடத்தி வைக்க வேண்டாமா......:D

இப்பவே உங்கள் புத்தகங்களை கனடாவில் வெளியிட இசை அண்ணாவால் 100 புத்தகங்களுக்கு ஆர்டர் வந்திடிச்சி அக்கோய்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழிச் செல்வி :D  ,எம் இனமானம் காக்க புறப்பட்ட புரட்சிகர எழுத்தாணி :o சுமோ வாழ்க (விசிலடிச்சான் குஞ்சுகளும் ரெடி அக்கோய் ) :icon_idea:

சுண்டூஊஊஊஊஊஊஉ! பெரிய பிரித்தானியாவின் பிரபல கோழி அதிபர் நண்டனுக்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்கவும்.


:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கனடாஇடியப்ப கடை முதலாளி அலை அக்காக்கு எத்தினை? :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் கடைசியா வந்து சொல்லுறன் போல இருக்கு. நான் சொல்ல நினைச்ச பல விடயங்களை ஏற்கனவே சக உறவுகள் சொல்லி விட்டார்கள். என்னிடம் மிச்சமிருக்கும் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். நீங்கள் ஒரு இலக்கிய விமர்சகரிடம் ஆலோசனை கேட்டு நல்ல கதை சொல்லியா எனத் தீர்மானிப்பதை விட, உங்கள் எல்லாக் கதைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து புத்தகமாக்கி அதை வாசிக்கும் வாசகர்களிடமிருந்தே உங்கள் படைப்பின் தராதரத்தை அறிந்து கொள்ள வேண்டும். முறைசார் கல்வி முறைகளில் ஒருவர் தயாரிப்பது போன்ற ஆய்வுக் கட்டுரைக்கு (thesis) ஒத்ததாக உங்கள் முதல் புத்தகம் இருக்கலாம். புத்தகம் வெளியிட்ட பிறகும் எல்லா புனை கதை வாசகர்களும் உங்கள் புத்தகத்தை வாங்கி வாசிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. ஏனெனில், எப்படி எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட sub population இனைத் தான் நீங்கள் குறிவைக்க முடியும். அதனால், புத்தக விற்பனை எண்ணிக்கையை உங்கள் படைப்புத் திறமையின் அளவு கோலாக வைத்திருக்க வேண்டாம் என இப்போதே உங்களுக்குச் சொல்கிறேன். நான் புனை கதை வாசிப்பது மிகவும் குறைவு. ஆனால், நீங்கள் வெளியிடப் போகும் புத்தகத்தின் மூன்று பிரதிகள் கட்டாயம் வாங்குவேன்!  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஆழமான வாசிப்பு இருந்தால் பல்வேறு வகையான பார்வைகள் வரும். பல்வேறு வகையான இலக்கிய வாசகர்களைப் பற்றி அறியமுடியும்.

என்னுடைய பார்வையில் மெசோ ஆன்ரி எழுதுவது தனது சுவாரசியமான சம்பவங்கள். அவற்றை மேலோட்டமாக விபரிக்காது மனவோட்டங்களையும், காரண காரியங்களையும் தந்தால் நன்றாக இருக்கும்.

யாழ்களம் சொந்தமாக எழுதுபவர்களை ஊக்குவிக்கின்றது என்று நினைக்கின்றேன். ஆகவே இலக்கியப் பழசுகளின் கதைகளைக் கேட்டு எழுதாமல் விட்டுவிடாதீர்கள்!!

 

நான் யாழுக்கு வருவதற்கு முன்புவரை எத்தனையோ நூல்களை வாசித்ததுதான். ஆனாலும் உங்களைப் போல் அதற்குள் ஆழப் போய் பதிய வைக்க முடியவில்லை. அது என்னில் உள்ள ஒரு பெரும் குறை. உங்கள் விமர்சனம் மனதுக்கு நின்மதி தருகிறது.நன்றி கிருபன்.

 

 

சுமோ எல்லோரும் தங்கட அனுபவங்களை,பார்த்ததை,கேட்டதைத் தான் கதையாக எழுதுகின்றனர்.நீங்கள் அடுத்தவர் அனுபவங்களை கதையாக எழுதுகின்றீர்கள் :lol: உங்களிட்ட புத்தகத்தை வெளியிடும் அளவு காசும்,வெற்றி,தோல்வியை சமமாக பங்கிடும் மனமும் இருந்தால் எழுதி வெளியிடுங்கோ.
 
உங்களை விட எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கினம்.ஊர் சனம்,சொந்தம்,நண்பர்கள் என்று எப்படியாவது முதலாவது புத்தகம் வித்துடும்.முதலாவது வில்பட்டுதே என்று அவசரப்பட்டு இரண்டாவது புத்தகம் எழுத வேண்டாம் :D
 
பிகு;யாழில வந்து உங்கட புத்தகத்தை வேண்டச் சொல்லி கரைச்சல் படுத்தக் கூடாது சரியா :lol:

 
புங்கை இதில என்ட பெயரை எழுதி உள்ளீர்கள் உள் குத்து எதுவும் இல்லைத் தானே :rolleyes:

 

 

புங்கை கூற முதலே நான் உங்களையும் கருத்து வந்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் நீங்கள் துணிவாகக் கருத்து வைப்பவர் என்பதால். நன்றி கருத்துக்கு ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகளில் ஒன்றை வாசித்த அனுபவத்தில்.. ஒரு அனுபவத்தை அல்லது.. சம்பவத்தை வைச்சு... அதனையே விபரித்துள்ளீர்கள். ஆனாலும் அதனை ஒரு கதையாகக் கொள்ளலாம். கதை என்பது சம்பவங்களின் கூட்டு. நாவல் என்பது பல கதைகளின் கூட்டு என்று எங்கள் தமிழ் ஆசான் சொல்லித் தந்தது ஞாபகத்துக்கு வந்து போகிறது. எதனையும் இலக்கண வரம்போடு பார்ப்பவர்களிடம் மாறுபாடுகளுக்கு அனுமதியைப் பெறுவது கடினம். பாரதியார் புதுக்கவிதை பாடிய போது.. விசரன் பிணாத்திரான் என்று சொன்னார்களாம்.. மரபுக் கவிதை விற்பன்னர்கள். ஆனால் பாரதி அன்று துணிவாக தன்னிலையில்.. தெளிவாக நின்று கொண்டதால்.. அவன் இன்று புரட்சிக்கவிஞன் மட்டுமல்ல.. புதுக்கவிஞனாகவும் எம் முன் நடந்து வழிக்காட்டிக் கொண்டிருக்கிறான் இன்று வரை. எங்கட யாழில்.. புத்தன் இருக்கிறார். ஒரு குட்டிக்கதைக்க.. சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லிவிடுவார். இன்றைய காலக்கட்டம் என்பது.. நீண்ட வாசித்தலுக்கு உகந்ததல்ல. என் (பாமரன்) வாழ்க்கையில் நாவல் வாசித்தது என்றால் இல்லை என்றே சொல்லலாம். பள்ளிக்காலத்தில் வாசித்த சிலவற்றைத் தவிர. கதைகள் என்றால்.. வாசித்திருக்கிறேன். அதுவும்.. பக்கம் பக்கமாக நீளும் கதைகள் என்றால்.. தூக்கி ஒரு பக்கம் போட்டுவிட்டுப் போய்விடுவேன். இதே மனநிலையில் தான் நாங்க பார்த்த பலரும். உங்கள் கதை மூலம்.. நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லி இருக்கிறீங்களா.. என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் அதேவேளை.. விற்பன்னர்களிடம் கொடுக்காமல்.. ஒரு பாமரனிடம் அதனை வாசிக்கக் கொடுங்கள். அவன் என்ன உணர்கிறானோ.. அதுதான் கதையின் தாக்கம். அது உங்களின் உணர்வை ஒத்திருந்தால்.. அது நிச்சயம் கதை தான்..! உறுதியாக நின்று நூலாக்கலாம். அந்தப் பாமரனைப் போன்ற ஒரு சிலராவது வாசிப்பாங்க. நாம் விடும் தவறுகளில் முக்கியமானது.. விற்பன்னர்கள் சொல்வது வேதம் என்று எண்ணுவதுதான். அது உண்மை அல்ல. விற்பன்னர்களை விட 10 பாமரன் என்ன உணர்வை குறித்த கதையை வாசித்து..உணர்வுஈட்டுகிறானோ அது தான்.. படைப்புக்கான அங்கீகாரம். வெறுமனவே விருதுக்கு புகழுக்கு ஆக்கனுன்னா.. விளங்காத வகையில் கவிதை எழுதித் திரிவோருக்கு அந்த அக்காடமி.. இந்த அக்காடமி விருதுகளை பின்வாசல் கதவால பெரியவர்களின் தயவோடு.. முன்மொழிவோடு வழங்குவது போல.. ஆக்கம் படைக்கனுன்னா.. விற்பன்னர்களை திருப்திப்படுத்த படைப்பதே சிறப்பு. ஆனால் பாமரனுக்கு அது புரியாது. அவையே ஏட்டுச்சுரக்காய்களாக.. செல்வை அழங்கரிக்கின்றன. யாழ் என்பது படைப்புக்களுக்கு சரியான சோதனைகளம். ஏனெனில்.. இங்கு விற்பன்னர்களை விட பாமர மக்களே அதிகம். அவர்களின் உணர்வே படைப்புக்கான அங்கீகாரம்.  :icon_idea:  :)

 

மிக்க நன்றி நெடுக்ஸ். உங்களிடமிருந்து இப்படி ஒரு ஆதரவான கருத்தை எதிர்பார்க்கவில்லை. புத்தகம் வெளியிட்டால் வருவர்கள் தானே ????? :icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே... நீங்கள் உங்கள் கதையை வாசிக்கக் கொடுத்தவர்...நிச்சயமாக பலவற்றை எழுதியிருக்கக்கூடியவராக இருக்கக்கூடும் என்பது என் யூகம்.

 

அடுத்து இந்தக் கருத்துக்களத்தில் நன்றாக இருக்கிறது என்று சொல்வது ஒவ்வொரு படைப்பாளியையும் ஊக்கப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய படைப்பை நாங்களும் வாசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும். அத்தோடு ஒருவருக்குப் பிடித்த எழுத்து இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கும். படைப்பாளிகள் பல ரகம்..மேலே இசை, ரோமியோ குறிப்பிட்ட விடயங்கள் இலகுவான உதாரணங்கள். இங்கு நெடுக்கு கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இன்றைய நாட்களில் நீண்ட படைப்புகள் அதிகமாக கவருவதில்லை. சிக்கென இருக்கும் சிறிய படைப்புகள் உடனடியாக வாசக உள்ளங்களைச் சென்றடைந்து விடுகின்றன. மற்றது கிருபன் கூறிய விடயமும் சரியாகவே இருக்கின்றது. குறிப்பிட்ட எழுத்தாளர் உங்களுக்கு எந்த இடத்தில் எத்தகையதை அமைவாக வரவில்லை என்பதைச்சுட்டிக்காட்டியிருந்தால் அதனை தெளிவுறத் தெரிந்து கொண்டால் அது இன்னும் உங்களை மேன்மைப்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும். அத்தோடு உங்களுக்கு உங்கள் படைப்புகளில் நம்பிக்கை இருக்குமானால் மற்றவர்களிடம் அதனை ஏற்புடையதா இல்லையா என்று கேட்கவேண்டியதேவை இல்லை. ஆனால் நூல் வடிவம் பெறும்போது நிச்சயமாக விமர்சனங்களைச்சந்திக்கநேரும். அப்போது உங்களுக்கு விமர்சனங்களுக்கான பதிலை தெளிவாக உரைக்கும் துணிவு இருக்கவேண்டும். நூல் வடிவம் பெறும்போது அது உங்களுக்கான படைப்பாளி என்னும் அங்கீகரிப்பை வழங்குகிறது. அது உங்கள் காலத்திற்குப்பின்னும் வாழும். சில நேரங்களில் கன்னிமுயற்சிகளை சில வருடங்களின் வளர்ச்சியின் பின்னர் மீளப்பார்க்கும்போது அடடா நாம் இதனை இப்படி எழுதியிருக்கலாமே என்றும் தோன்றும். ஆரம்பம் எப்போதுமே அலைகடல் போலவும் தொடரும் காலங்கள் ஆழ்கடல்போலவும் மாறும். அவையே உங்களின் எழுத்தின் முதிர்ச்சியை அதன் அளவுகளை அளக்கவல்லது...... புரியாமல் குழம்புகிறீர்களா?.... உங்களின் தொடர்ச்சியான எழுத்துப் பயணமே உங்களின் இன்றைய எழுத்துக்களை அளக்க வல்லது. முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்.

 

உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். வந்தமைக்கு நன்றி சகாரா. என்னையே கலக்கிய அந்த எழுத்தாளர் திறமையானவர்தான். நான் எழுதிய கதைகளில் ஒன்றை திருத்தி எழுத எண்ணி எடுத்தால் எனக்கே அது உடன்பாடற்றுப் போய்விட்டது. உங்கள் எல்லோரின் கருத்துக்களையும் பார்த்தபின்னால் எனக்கு இப்ப தெளிந்துவிட்டது. :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சுமேரியர் அவர்கட்டு!

 

இங்கு பின்னூட்டம் எழுதியவர்களை நோக்கும்போது அவர்கள் அனைவருமே உங்கள் முதல் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து முன்பணமும் கட்டிவிட முண்டியடிப்பதுபோல் தெரிகிறது. உங்களுடைய பொருளாளராக வருவதற்கு எனக்குப் பூரணசம்மதம்.

 

இவ்வண்ணம்

பாஞ்.

 

பாஞ்ச அவர்கட்கு,

 

உங்கள் விண்ணப்பப் படிவம் பார்த்தேன். முன்பு புத்தகம் அடித்த எவருக்காவது பொருளாளராக இருந்த முன் அனுபவம் உண்டா????

இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அனால் 1000 புத்தகங்களும் விற்று முடிந்தபின்தான் உங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படும். சம்மதமெனில் இன்றிலிருந்தே வேலை.

 

இப்படிக்கும்

சுமே  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.