Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன்: மாதுலுவாவே சோபித தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன்: மாதுலுவாவே சோபித தேரர்

 

(இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.)

maduluwawe-sobtiha2_CI.jpg

 
இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி  மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா.  இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது.  இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 
 
18ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும்.   இலங்கை அரசாங்கம்  ஐ.நா.பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன் எனவும் அவர் குறிப்பிடடார். 
 
அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை.  இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார். 
 
இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
ஆளுநரை வெளியேற்ற வேண்டும்.  காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில்  ஆளுநர் ஒருவரை தெரிவுசெய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன் எனவும் தெரிவித்தார். 
 
நிர்வாக சேவையில் 15 வருடங்கள்  அனுபவமும்  பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால்இ இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில்  சமூகத்திற்கு  பிரச்சினை எழுகின்றது என்றார். 
 
அதேபோல வடமாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி வழங்கினாலும்  மாவட்ட ஆட்சிமுறைமை  உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யுஎன்பி தேரர் போல் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, இன்னிக்கு ரோவா அடிச்சிட்டாரு, தேரரு

சிங்களவர் தரும் பொதியெல்லாம் பொய் என்று இவர் சொல்லுகிறார். எங்கட தமிழர் மீது அக்கறை போல் நடிப்பவர்கள் தான் இந்த பொதிகளையும், தீர்வுகளையும் நம்புகிறார்கள்.

இவர் யுஎன்பி தேரர் போல் இருக்கு.. :D

அப்ப பின்ன ......... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் தரும் பொதியெல்லாம் பொய் என்று இவர் சொல்லுகிறார். எங்கட தமிழர் மீது அக்கறை போல் நடிப்பவர்கள் தான் இந்த பொதிகளையும், தீர்வுகளையும் நம்புகிறார்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்கள்?

நீங்கள் எதை நம்புகிறீர்கள்?

அண்ணா,

என்னால் ஒரு தீர்வோ, பொதியோ அதை செயல்படுத்துமட்டும் நம்பமுடியாது.

இங்கு ஒருவர் யாழ்பாணத்தில் கே.எப்.சி. பொதி வந்து மக்கள் நிம்மதியாக இருப்பதாக நினைக்கிறார்.

ஏதாவது தீர்வுகள் இப்போது செயல்படுத்தபடுகின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்

பொதி என்று ஒன்று இருந்தால் அதை யாராவது சுமக்கத்தானே வேண்டும்?? :huh:

Spoiler
our-food-carrying-donkey-demnate.jpg:D

எந்த பொதி வந்தாலும் தாம் நினைத்த மாத்திரம் உடனே திருப்பி பறிக்க கூடிய விதத்தில் அமைக்கபட்டிருக்கும். சர்வதேச தலையீடு அதை அமுல்படுத்துவதற்கான சர்வதேச உத்தரவாதம், நடைமுறைப்படுத்துவதை சர்வதேசத்தின் தொடர்ச்சியான  கண்காணிப்பு போன்ற விடயங்கள் இருந்தால் தான் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

எல்லா இனத்திலும் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். :rolleyes:

ஒரு சேஞ்சுக்கு தேரரை கொண்டுவந்த்தால் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்க்குவாராகும். இல்லையேல் அப்படியான ஒரு அதி உன்னத பதவியில் ஏறுபவர் ஒருவர் ஏந் அந்த பதவியையே இல்லாமல் செய்ய வேண்டும்? அப்படி ஒருவர் செய்வாராகில் அவர் உண்மையான துறவி, அல்லது அங்கொடைக்கிளால் வெளிகிட்டு ஓடியவர்.

 

இது சிங்கள மக்களுக்கு நன்மையாகலாம். எது எது எல்லாம் சிங்கள மக்களுக்கு நன்மையோ அது அது எல்லாம் தமிழ் மக்களுக்கு ஆபத்து. இவர் வந்தால் புத்த வெறியர்களும், அல்லாதாரும் தமிழ்ரை எதிர்க்க ஒன்றாவார்கள். இருக்கும் மாகாண சபையையும் புதிய அரசியல் அமைப்பு என்ற பேரில் இவர் மூலம் தீர்த்துக்கட்டிவிடுவார்கள். 1948லிருந்து ஒற்றையாட்சி ஜனநாயகமென்பதே தமிழருக்கு அவர்களை உய்ரோடி கட்டிவைத்து தோல் உரிக்கும் செயல்லினி இல்லை என்று ஒருவர் தமிழரின் நணபராக இருந்தால் அதுதான் அதிகபட்டசம் சிங்கள அரசொன்றால் கொடுக்கத்தக்கது. யார் வந்தும் அடுத்த அரசியல் அமைப்பு ஒன்று வந்தால் தமிழரை வங்க கடலுக்குள் போய் தன்னும் பாய விடமாட்டார்கள். அதுதான் கடைசி. அதற்குள் எந்த பொதியும் இருக்காது. அதில் ஒரு சதியும் இருக்காது.நேரடி கொலை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சேஞ்சுக்கு தேரரை கொண்டுவந்த்தால் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்க்குவாராகும். இல்லையேல் அப்படியான ஒரு அதி உன்னத பதவியில் ஏறுபவர் ஒருவர் ஏந் அந்த பதவியையே இல்லாமல் செய்ய வேண்டும்? அப்படி ஒருவர் செய்வாராகில் அவர் உண்மையான துறவி, அல்லது அங்கொடைக்கிளால் வெளிகிட்டு ஓடியவர்.

 

இது சிங்கள மக்களுக்கு நன்மையாகலாம். எது எது எல்லாம் சிங்கள மக்களுக்கு நன்மையோ அது அது எல்லாம் தமிழ் மக்களுக்கு ஆபத்து. இவர் வந்தால் புத்த வெறியர்களும், அல்லாதாரும் தமிழ்ரை எதிர்க்க ஒன்றாவார்கள். இருக்கும் மாகாண சபையையும் புதிய அரசியல் அமைப்பு என்ற பேரில் இவர் மூலம் தீர்த்துக்கட்டிவிடுவார்கள். 1948லிருந்து ஒற்றையாட்சி ஜனநாயகமென்பதே தமிழருக்கு அவர்களை உய்ரோடி கட்டிவைத்து தோல் உரிக்கும் செயல்லினி இல்லை என்று ஒருவர் தமிழரின் நணபராக இருந்தால் அதுதான் அதிகபட்டசம் சிங்கள அரசொன்றால் கொடுக்கத்தக்கது. யார் வந்தும் அடுத்த அரசியல் அமைப்பு ஒன்று வந்தால் தமிழரை வங்க கடலுக்குள் போய் தன்னும் பாய விடமாட்டார்கள். அதுதான் கடைசி. அதற்குள் எந்த பொதியும் இருக்காது. அதில் ஒரு சதியும் இருக்காது.நேரடி கொலை.

 

காலம் காலமாக நம்பி நம்பி ஏமாந்ததுதான் ஈழத்தமிழர் வரலாறு. அதனை மறுக்கவுமில்லை, மறக்கவுமில்லை. புலிகளின் போராட்டம் நம்பிக்கை தந்தபோது, அவர்களுக்குப் பலம் சேர்ப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வந்தனர், அவ்வேளையில் புலத்தின் சொந்தங்கள் சிலரும் உதவிக்கு வந்தனர். எங்களுக்கு அங்கீகாரம் தரக்கூடிய அரசு உலகில் இல்லாததால், செய்வதனை மறைமுகமாகவே செய்யவேண்டிய தேவை அன்று இருந்தது. அதனால் உதவிக்கு வந்த புலத்தின் சொந்தங்களை உள்வாங்க முடியாது அவர்களை ஒதுக்கினோம். உள்வாங்கியிருந்தால் இன்று பாதிப்புக்குள்ளான எங்களைத் தாங்குவதற்கு அவர்கள் உதவியும் கிடைத்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இன்றுள்ள நிலையில் எதனையும் மறைமுகமாகச் செய்யவேண்டிய தேவை இல்லை. எங்கிருந்தது உதவி வருவதாகத் தெரிந்தாலும் அதனை நம்பி, அதில் முன்புபோல மூழ்கிவிடாமல், வேண்டியதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அறிவை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் புலிகள் பட்டுத்தந்த அனுபவத்தின் மூலமும் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத மூடர்களாகவே வாழ்ந்து அழிந்துபோவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது  பேட்டியில் ரொம்ப  தெளிவாக இருக்கிறார்

நாம் குற்றம் செய்யவில்லை செய்திருந்தாலும் நிரூபிக்கமுடியாது என்று......

மறுத்துக்கொண்டிருந்தால்

வம்பில் மாட்டவேண்டிவரும்

உள்ளே  போய் வலுவற்றவர்களுடன் விளையாடி

வெல்லவதே  சிறந்தது என்கிறார்.....

எங்கும் சிங்களத்தை காட்டிக்கொடுக்கவோ

தமிழருக்கு ஆதரவாக பேசவோ இல்லை

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இந்த பிக்கு புத்த தர்மங்களை மதிப்பவர்போல தெரிகிறது  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

என்னால் ஒரு தீர்வோ, பொதியோ அதை செயல்படுத்துமட்டும் நம்பமுடியாது.

இங்கு ஒருவர் யாழ்பாணத்தில் கே.எப்.சி. பொதி வந்து மக்கள் நிம்மதியாக இருப்பதாக நினைக்கிறார்.

ஏதாவது தீர்வுகள் இப்போது செயல்படுத்தபடுகின்றனவா?

 

மற்றவர்கள் தருவார்கள், அதை அவர்கள் செயற்படுத்தவும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி:

  • ஏன் அவர்கள் இதை செய்வார்கள்?
  • இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்? என்பதாகும்.
  • இலங்கையில் ஒரு தீர்வு திட்டத்தை ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் நடைமுறை படுத்துவதால் அவர்களுக்கு அதிக இலாபமா?
  • அல்லது இன்றைய நிலை தொடர்வதால் அவர்களுக்கு இலாபமா?

நாம் கவனமாக அவதானித்தால் இன்றைய நிலை தொடர்வதே அவர்களுக்கு இலாபமாக அமைகிறது. ஆகவே நாம் எமது முதலாவது முடிவாக, ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் ஒரு தீர்வு திட்டத்தை தரப்போவதில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

 

அடுத்த கேள்வியாக, ஒரு தீர்வு திட்டத்தை யார் முன்னின்று செயற்படுத்த விரும்புவார்கள்? என்று கேட்டால்:

அதனால் அதிக பயன்பெறுபவர்களே அதனை முன்னின்று செயற்படுத்த விரும்புவார்கள் என்பதும் தெளிவாகும். இன்று இவ்வாறான தீர்வு திட்டத்தால் அதிக பயன் பெறவிருப்பவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள். ஆனால்,  இன்று போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தாமாக தயாரித்து தமக்கு பொருத்தமானது என்று முன்வைத்த தீர்வு திட்டம் எதுவென்று தேடினால் எதுவும் இல்லை என்பதை காணலாம். மாகாணசபை தமிழர்களின் ஆதரவின்றி இந்தியாவால் வரதராஜபெருமாள் தலைமையில் உருவாககப்பட்ட ஒரு கட்டமைப்பு. அது இலங்கைக்கு பொருத்தமற்றது மட்டுமல்ல பல ஓட்டைகளையும், தெளிவில்லாத அதிகாரங்களையும், பலவீனங்களையும் கொண்டதாகும்.

  • அதற்கு மாற்றீடாக போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
  • அதற்காக முன்னின்று உழைக்க வேண்டும்.
  • தமக்கு அதிக இலாபம் தரும் ஒரு தீர்வுக்காக, அதனால் பயன் எதுவும் எதிர்பார்க்காத  ஆளும் கட்சி முன்னின்று உழைக்கும் என்று எதிர்பார்ப்பது சாதுரியமானதல்ல.

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலமற்றவர்கள். ஆகவே அவர்களிடம் இவ்வாறு தமக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று பலரும் நினைக்கக்கூடும். இலங்கை இராணுவத்துக்கு எதிராக தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய போது இவர்களின்  பலமற்ற நிலையை "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று விமரிசித்தவர்கள் தமது காலத்தில் உலகின் மிக மோசமான போர்க்களமாக இலங்கையை மாற்றும் அளவுக்கு அந்த இளையோர் பலம் பெற்றதை கண்டார்கள்.

  • போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்று அமரிக்க, ஐரோப்பிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை பெறும் அளவுக்கு பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 
  • ஆகவே அவர்கள் தமக்கான தீர்வு திட்டத்தை வரைந்து முன்வைக்க தேவையான அறிவையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார்கள். 

 போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமக்கான தீர்வு திட்டத்தை வரைந்து முன்வைத்தாலும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்ற கேள்வி எழுகிறது. நடைமுறைப்படுத்துவது இரண்டாவது அடி. முதலாவது அடியை எடுத்து வைக்க முதல்  இரண்டாவது அடியை பற்றி இங்கு பேசுகிறோம். இரண்டாவது அடியை எடுத்து வைக்க முதல் முதலாவது அடியை எடுத்து வைக்க வேண்டும். அதே வேளை  இரண்டாவது அடியையும், முழுமையான பாதையையும் பற்றிய மேலோட்டமான திட்டத்துடனே  முதலாவது அடியை எடுத்து வைப்பதே சாதுரியமானது.

  • அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமக்கான தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கு இலங்கையில் மிகப்பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களின் ஆதரவை கட்டாயமாக தேடிக்கொள்ள வேண்டும்.
  • இந்த  ஆதரவின்றி அமெரிக்கா கூட உதவ முடியாது.

சிங்கள பௌத்தர்களின் ஆதரவை தமது  தீர்வு திட்டத்துக்கு போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?

  • இந்த தீர்வு திட்டம் சிங்கள பௌத்தர்களுக்கும் பெரும் பயனுள்ள ஒரு திட்டமாக அமையும் போது அதற்கு சிங்கள பௌத்தர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
  • அவ்வாறான ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்குவதே தமிழர் தலைமைக்கு முன் உள்ள பெரும் சவாலாகும்.
  • உதாரணமாக தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி பிரதேசத்தை வழங்கும் ஒரு திட்டத்தில் ஒரு புனித சிங்கள பௌத்த சுயாட்சி பிரதேசத்தையும் வழங்கும் வகை அமையுமானால் அவர்களின் ஆதரவு கிடைக்கலாம்.
  • இவ்வாறான திட்டத்தை வரைந்து அதை மகா சங்க மகா நாயக்க பிக்குகளின் முன் கொண்டு சென்று சமர்ப்பிக்கும் துணிச்சல் தமிழர் தலைமைக்கு வர வேண்டும். செய்வார்களா?

எந்த பொதி வந்தாலும் தாம் நினைத்த மாத்திரம் உடனே திருப்பி பறிக்க கூடிய விதத்தில் அமைக்கபட்டிருக்கும். சர்வதேச தலையீடு அதை அமுல்படுத்துவதற்கான சர்வதேச உத்தரவாதம், நடைமுறைப்படுத்துவதை சர்வதேசத்தின் தொடர்ச்சியான  கண்காணிப்பு போன்ற விடயங்கள் இருந்தால் தான் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

 

சர்வதேச தலையீட்டுக்கும், உத்தரவாதத்துக்கும் பலரை ஆண்டுக்கணக்காக வேலைக்கு அமர்த்த வேண்டும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வாகனங்களும் கட்டடங்களும் தேவை. யார் இதற்கான செலவுகளுக்கு பணம் கொடுக்க இருக்கிறார்கள்?

 

சர்வதேச அமைதி படையிலும் போலீசிலும் இணைபவர்கள் பல நாடுகளில் இருந்தும் வருவார்கள். இலங்கை படைகள் ஹையிட்டியில் செய்தது போல, அமரிக்க படைகள் இராக்கில் செய்தது போல, பிரித்தானிய படைகள் ஆப்கனிஸ்தானில் செய்தது போல இந்த சர்வதேச படைகள் இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடலாம்.  இது தீர்வல்ல.

உதாரணமாக தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி பிரதேசத்தை வழங்கும் ஒரு திட்டத்தில் ஒரு புனித சிங்கள பௌத்த சுயாட்சி பிரதேசத்தையும் வழங்கும் வகை அமையுமானால் அவர்களின் ஆதரவு கிடைக்கலாம். -

 

சாடையாய் மூளை எங்கோ செருக்குபட்டு போவிட்டது. துட்டகைமுணு ஏன் எல்லாளனுடன் போர் புரிந்தான் என்றத்தில் இருந்து இவருக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

 

சர்வதேச அமைதி படையிலும் போலீசிலும் இணைபவர்கள் பல நாடுகளில் இருந்தும் வருவார்கள். இலங்கை படைகள் ஹையிட்டியில் செய்தது போல, அமரிக்க படைகள் இராக்கில் செய்தது போல, பிரித்தானிய படைகள் ஆப்கனிஸ்தானில் செய்தது போல இந்த சர்வதேச படைகள் இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடலாம்.  இது தீர்வல்ல

 

 

140,000 மக்களை கொண்டுவிட்டு இன்னும் அதை விட கூட கேடுக்கும் சிங்களத்துடன் இப்படி போலிகளை, ஒப்பிட யூட் மிகவும் பொழுது போகில்லாமல் அவஸ்தைப் படும் ஒருவர் போல காணப்படுகிறார்.  அல்லது அமெரிக்கா சிரியாவில் செய்ததை சிங்களத்துக்கு செய்தால் நமக்கென்ன?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாடையாய் மூளை எங்கோ செருக்குபட்டு போவிட்டது. துட்டகைமுணு ஏன் எல்லாளனுடன் போர் புரிந்தான் என்றத்தில் இருந்து இவருக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

துட்டகைமுணு எல்லாளன் காலத்துடன் மூளை செருக்குபட்டு போவிட்டது.

 

140,000 மக்களை கொண்டுவிட்டு இன்னும் அதை விட கூட கேடுக்கும் சிங்களத்துடன் இப்படி போலிகளை, ஒப்பிட யூட் மிகவும் பொழுது போகில்லாமல் அவஸ்தைப் படும் ஒருவர் போல காணப்படுகிறார்.  அல்லது அமெரிக்கா சிரியாவில் செய்ததை சிங்களத்துக்கு செய்தால் நமக்கென்ன?

அமெரிக்கா - சிரியா ???? இது தான் அவஸ்தை!!

பெரிய பகிடிகள் எழுதி விளையாடமல் அது என்ன பெரிய அமெரிக்க-சிரிய அவஸ்தை என்று கூறமுடியுமா? 

 

1948 ல் தொடக்கம் புத்த மாகாணம் ஒன்றை தமிழர் ஆக்கி சிங்களவர்களுக்கு கொடுக்கவில்லையென்பதால் சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்று பகிடி எழுதும் கருத்தில் அரசியல் இருக்கா? பூனைக்கு மணி கட்டும் கதை படித்திருக்கா?

 

எந்த அரசியல் அமைப்பு ஆக்கும் சபையில் உங்களுக்கும் பங்கு தந்து உங்கள் கருத்தையும் கேட்டார்கள் என்று சொல்ல முடியுமா? இவ்வளவு காலமும் ஏன் தமிழர் சுய நிர்ணய உரிமை பற்றி பேசுகிறார்கள் என்பதை பற்றி சிந்திக்க முடிந்ததா? 

அரசியல் என்றால் என்ன தெரியாதால் சிங்கள ஆங்கில  ஊடகங்கள் மகாநாமவின் மகா வம்சத்தில்த்தான் இருந்துதான் இன்றைய பிரச்சனை எழுகிறது என்று குற்றம் சாட்டுவதை படிக்க கிடைக்கவில்லை போலும். புத்தர் ஒரு மாகாணத்தை இலங்கையில் உருவாக்க இலங்கை வரவில்லை என்றதை இலங்கையின் புத்த சமயத்தை பற்றி தெரிந்து கொள்வத்தால் மட்டும்த்தான் தெரியவரலாம்.  தனக்கே புரியாதா புத்த மாகாண கதையை சிங்களவனுக்கு சொல்ல போவது அபத்தம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.