Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எதிர்க்கட்சி பதவி: அணி திரளும் அதிமுக, திரிணாமுல், பிஜூ ஜனதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளது.

இதற்கிடையே, எதிர்க்கட்சி பதவியில் இருந்தும் காங்கிரசை ஓரம் கட்ட மாநில கட்சிகளான அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த மூன்று கட்சிகளிலும் சேர்ந்து 91 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என இந்த கட்சிகள் நம்புகின்றன. மேலும், எதிர்க்கட்சி தலைவர், துணை சபாநாயகர், நாடாளுமன்ற பொதுக்கணக்குழு தலைவர் போன்ற பதவிகளையும் பெறலாம் என்று அக்கட்சிகள் நம்புகின்றன.

மேலும், காங்கிரஸ் கட்சியை ஓரம் கட்டியதாகவும் இருக்கும். அதேநேரத்தில் மாநில தேவைகளுக்காக குரல் கொடுக்கவும் வசதியாக இருக்கும் என்றும் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் எண்ணுகின்றன.

இதுகுறித்து, மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறுவிதமான உடன்பாடுகள் ஏற்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், வரும் 24ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வீட்டில் இந்த மூன்று கட்சிகளும் ஆலோசனை நடந்த உள்ளன. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் இந்த முயற்சியால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் குரல் எடுபடாது. மாநில கட்சிகளின் குரலே நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.

 

நாங்கள்தான் எதிர்க்கட்சி: காங்கிரஸ்

இதனிடையே ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட  கட்சியே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் என்றும், 55 இடங்களை பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கட்டாயம் இல்லை என்றும், எனவே காங்கிரஸ் கட்சியே எதிர்க்கட்சியாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28235

  • கருத்துக்கள உறவுகள்

பலே ஐடியா..  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சியாக இருக்க 10% வாக்கு தேவை என இந்தியர் ஒருவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சியாக இருக்க 10% வாக்கு தேவை என இந்தியர் ஒருவர் கூறினார்.

 

ஆம்.. ஆனால் எப்படி கூட்டணி அமைத்து ஆளும் கட்சியாக கூட்டணி வரமுடியுமோ, அவ்வாறே கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி கூட்டணியும் அமையலாம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க் கட்சி கூட்டணி அமையுமானால்,
அ.தி.மு.க.(37), திரிணாமுல் காங்கிரஸ் (34), பிஜு ஜனதா தளம் (20) அ.தி.மு.க. மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களை
 வைத்துள்ளதால் எதிர்க் கட்சி தலைமை பொறுப்பு, அ.தி.மு.க, விற்கு சேர வேண்டும்.
 

அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால்.... இந்திய பாரளுமன்றத்தில் தமிழன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தான் என்ற வரலாறு எழுதப்படும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால் இந்திய பாராளமன்றத்தில்  தமிழச்சி எதிர்க்கட்சி தலைவியாக இருந்தாள் என்ற வரலாறு எழுதப்படும்...!

 

திரு . காமராஜர் விட்ட தவறை  ஜெ . ஒருக்காலும் விடமாட்டார்...!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால் இந்திய பாராளமன்றத்தில்  தமிழச்சி எதிர்க்கட்சி தலைவியாக இருந்தாள் என்ற வரலாறு எழுதப்படும்...!

 

திரு . காமராஜர் விட்ட தவறை  ஜெ . ஒருக்காலும் விடமாட்டார்...!

 

ஜெயா அம்மா எல்லாம் எதிர்க்கட்சித் தலைவி பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லி செல்ல மாட்டா . ராகுலை விட்டால்தான் அவரும் அரசியல் படிக்கின்றதாக இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உப்பினர் ஒருவரே எதிர்க்கட்சித்தலைவராகலாம். ஜெயலலிதா ஆவதென்றால் யாராவது உறுப்பினர் பதவி விலகி அந்தப் பாரராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டுமொரு தேர்தல் மூலமாக ஜெயலலிதா பெறவேண்டுமென நினைக்கிறேன்.

கூட்டு அமைத்து எதிர்கட்சி அமைக்க முடியாது என நினைக்கின்றேன் .

 

(இரண்டாவது  கூடிய ஆசனங்கள் எடுத்த கட்சிதான் எதிர்கட்சி அதுவும் 10% ஆசனங்களாவது எடுத்திருக்கவேண்டும் )

  • Criminal-MPs_jpg_1901245g.jpg
    Source: Association for Democratic Reforms
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு அமைத்து எதிர்கட்சி அமைக்க முடியாது என நினைக்கின்றேன் .

 

(இரண்டாவது  கூடிய ஆசனங்கள் எடுத்த கட்சிதான் எதிர்கட்சி அதுவும் 10% ஆசனங்களாவது எடுத்திருக்கவேண்டும் )

 

இது உண்மைதான்.

 

பாராளுமன்றத்தில் தனிப்பட்ட கட்சியின் குறைந்தது 55 தொகுதியாவது கைவசம் இருந்தால்தான் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து கிட்டும். அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்குரிய சகல வசதிகளும், சலுகைகளும் கிடைக்கும். மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டு அமைத்து எதிர்க்கட்சி அந்தஸ்து கோரினால், அவருக்கு எதிக்கட்சிகளின் கூட்டுக் குழுத் தலைவர் என்ற பெயர் கிடைக்குமே தவிர மற்ற அந்தஸ்தோ சலுகைகளோ கிட்டாது. இந்த விடயத்தில் அவை சபாநாயகரே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1950 களில் இப்படி ஒரு நிலைமை  ஏற்பட்டு, எதிர்கட்சி தலைவர் இல்லாமல், எதிர்க்கட்சி கூட்டுக் குழு தலைவர் என்ற பெயரில் பாராளுமன்றம் இயங்கியதாக ஒரு செய்தியில் கேட்டேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் தோலில்... செருப்பு தைத்து போடுவேன் என்று..... தமிழ் இளைஞ்சர்களை உசுப்பேத்திய.... அண்ணன் அமிர்தலிங்கமும், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக.... பம்மிக்  கொண்டிருந்தவர். :D

  • கருத்துக்கள உறவுகள்

10294258_557667401004410_718758029470769

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி  என்றரீதியில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி  வைத்துக்கொண்ட குழு ஒரு கட்சி  என்றே  பார்க்கப்படுமல்லவா?

அப்படிப்பார்த்தால்

காங்கிரசும் அதன் தோழமைக்கட்சிகளும் பத்து வீதத்துக்கும் சிறிது அதிகமாக வென்றிருக்கின்றன தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.