Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களுக்கு 2 வது இடம்:பாராட்டியுள்ள ஊடகங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

familytypesinenglandandwales2011_tcm77-3பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.

இது என்ன பெரிய விடையம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆம் இது ஆங்கிலேயர்களை பொறுத்தவரை நிச்சயம் பெரிய விடையம் தான். ஏன் என்றால் ஆங்கிலேயர்கள் பாய் -பிரன் மற்றும் கேள் பிரன்ஸாக மட்டுமே வாழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் முடிப்பதே இல்லை. திருமணம் முடிப்பது என்பது , ஒரு கைதியைப் போல வாழ நேரிடும் என்றும் அது ஒரு சிறைச்சாலைக்கு செல்வது போன்றது என்பதுமே அவர்கள் கருத்தாக உள்ளது. அத்தோடு திருமணம் முடிக்காமல் இருந்தால், பிரித்தானியாவில் தம்பதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமக்கான சோஷல் காசுகளை பெற்றுகொள்ளலாம். ஆனால் திருமணம் முடித்தால் கணவன் மனைவிக்கு என்று தனி தனியாக காசு கொடுக்க மாட்டார்கள். அதாவது பெனிவிட் காசை நினைத்தே ஆங்கிலேயர்கள் இவ்வாறு திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

எது எவ்வாறாயினும், ஈழத் தமிழர்கள் 84 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்பது பெரிய விடையம் அல்லவா ? தமது சொந்த நாட்டை விட்டு அவர்கள் பிரிந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழ்ந்து வந்தாலும், தமது பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னும் மாற்றவும் இல்லை. அவர்கள் சந்ததிகளும் அதனையே பின் தொடர்கிறார்கள் என்பது பெருமையான விடையம்.

http://www.ons.gov.uk/ons/rel/census/2011-census-analysis/how-do-living-arrangements--family-type-and-family-size-vary-in-england-and-wales-/info-family-types.html

நன்றி முகநூல் தமிழ்மொழிபெயர்ப்பு.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

:D சிறிலங்கன்? ஈழத்தமிழர்? அப்ப இந்தியாவிட 85 வீதமும் ஹிந்திக் காரரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சில சிறிலங்கன்சும், பல இந்தியன்சும் அடக்கி வாசிச்சிருக்கினம் போல கிடக்கு! :o

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் விவாகரத்து வாங்காமல், கொடுக்காமல் கிடந்து புடுங்குப்பட்டு மனுசிமார் பிள்ளயளை கொல்லுற அளவுக்கு குடும்ப வாழ்வில பின்னி பினா எங்கள விட்டா ஆளில்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் மட்டை அடிக்கிறதில என்று :D

நான் நினைச்சன் மட்டை அடிக்கிறதில என்று :D

 

மட்டையடிக்கிறதில ஈழத்தமிழருக்குதான் முதலிடம் சுண்டு.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் லண்டன் டமில்ஸ் அதில கில்லி ........ சும்மா சொல்லி அடிப்பினம்........:D

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் இந்த புடுங்குப்பாட்டிலும் குடும்ப ஒற்றுமை என்பது...

 

1. விசா சார்ந்தது.

 

2. மாடு மாதிரி மனைவிமாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் சேர்த்து..  கேட்டுக் கேள்விக்கு இடமில்லாமல்.. உழைத்து கொடுக்கும் ஏமளாந்தி ஆண்கள் கணவர்களாக உள்ளார்கள்.

 

உதுக்கு வெள்ளைக்காரன் வரட்டாமே..! :lol::D


3. பல தமிழ் பெண்களுக்கு ஆங்கிலம் பிரச்சனை. அதனால் வெளியே சென்று வேலை செய்ய முடியாது. அந்த வகையில்..  கணவனை சார்ந்திருந்து விட்டால்.. வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதோடு.. ரிவி சீரியல்களோடு வாழ்க்கையை இலகுவாகவும் சோம்பேறித்தனத்தோடும் கழிக்கலாம்.

 

(இதுக்கு வெள்ளைக்காரிங்க ஓமாமோ.!! ) :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  செய்தி

அடுத்த  தலைமுறைக்கான 

எம்முன்னோர்களின்  வாழும் முறைச்சான்றிதழ்...

இது தொடரணும்....

நல்ல செய்தி 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கட்டினதும் விட்டதும் புதிதாக கட்டிறதும் விடுவதும்
எனத் தன் இஸ்டத்திற்கேற்றவாறு வாழ்ந்துவிட்டுப் போய்விடுவான்.
பிடிக்கவில்லையென்றால் விவாக ரத்து அல்லது பிரிந்து வாழ்வது என்பது அவர்களுக்கு இயல்பானது.

ஆனால் ஈழத் தமிழர்கள் பிடித்ததோ பிடிக்கவில்லையோ கட்டினால் இறக்கும் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்கின்றனர்.
அந்த வாழ்க்கையில் எத்தனை பொய்கள் மறைந்து இருக்கின்றன?
எத்தனை குடும்ப  வன்முறைகள்  ஒளிந்திருக்கின்றன?
எத்தனை துரோகங்கள் நிகழ்கின்றன?
எத்தனை ஆண்கள் பெண்கள் மன நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் தடைப்பட்டிருக்கின்றது  ?
 என்ற கோணத்திலும் ஒரு கணக்கெடுப்பை நடத்தினால்...
அதிலும் ஈழத்தமிழர்கள் தான் முன்னிலையில் நிற்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கட்டினதும் விட்டதும் புதிதாக கட்டிறதும் விடுவதும்

எனத் தன் இஸ்டத்திற்கேற்றவாறு வாழ்ந்துவிட்டுப் போய்விடுவான்.

பிடிக்கவில்லையென்றால் விவாக ரத்து அல்லது பிரிந்து வாழ்வது என்பது அவர்களுக்கு இயல்பானது.

ஆனால் ஈழத் தமிழர்கள் பிடித்ததோ பிடிக்கவில்லையோ கட்டினால் இறக்கும் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்கின்றனர்.

அந்த வாழ்க்கையில் எத்தனை பொய்கள் மறைந்து இருக்கின்றன?

எத்தனை குடும்ப  வன்முறைகள்  ஒளிந்திருக்கின்றன?

எத்தனை துரோகங்கள் நிகழ்கின்றன?

எத்தனை ஆண்கள் பெண்கள் மன நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?

எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் தடைப்பட்டிருக்கின்றது  ?

 என்ற கோணத்திலும் ஒரு கணக்கெடுப்பை நடத்தினால்...

அதிலும் ஈழத்தமிழர்கள் தான் முன்னிலையில் நிற்பார்கள்

 

அப்படிச்சொல்லமுடியாது வாத்தியார்

ஆபிரிக்க

மத்திய கிழக்கு நாட்டவர்களின் அடாவடிகளும் அடுக்குமுறைகளும்

எம்மை  ஓரங்கட்டிவிடும் 

இன்றும்  ஆண்களுக்கு நாலு திருமணங்களை அது பரிந்துரைக்கிறது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச்சொல்லமுடியாது வாத்தியார்

ஆபிரிக்க

மத்திய கிழக்கு நாட்டவர்களின் அடாவடிகளும் அடுக்குமுறைகளும்

எம்மை  ஓரங்கட்டிவிடும் 

இன்றும்  ஆண்களுக்கு நாலு திருமணங்களை அது பரிந்துரைக்கிறது

 

இந்தக் கொள்கையில் உங்களுக்கு என்ன பிரச்சினை?  :unsure:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொள்கையில் உங்களுக்கு என்ன பிரச்சினை?  :unsure:  :icon_idea:

 

எனக்கு இல்லாத உரிமை மற்றவருக்கு இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் :D :D :lol:

 

இந்தக் கொள்கையில் உங்களுக்கு என்ன பிரச்சினை? :unsure::icon_idea:

துணிஞ்ச கட்டை. ஒண்டோடையே தலை மயிர் எல்லாம் கொட்டி போச்சு.

எம்மவர்களின் இந்த புடுங்குப்பாட்டிலும் குடும்ப ஒற்றுமை என்பது...

1. விசா சார்ந்தது.

2. மாடு மாதிரி மனைவிமாருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் சேர்த்து.. கேட்டுக் கேள்விக்கு இடமில்லாமல்.. உழைத்து கொடுக்கும் ஏமளாந்தி ஆண்கள் கணவர்களாக உள்ளார்கள்.

உதுக்கு வெள்ளைக்காரன் வரட்டாமே..! :lol::D

3. பல தமிழ் பெண்களுக்கு ஆங்கிலம் பிரச்சனை. அதனால் வெளியே சென்று வேலை செய்ய முடியாது. அந்த வகையில்.. கணவனை சார்ந்திருந்து விட்டால்.. வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதோடு.. ரிவி சீரியல்களோடு வாழ்க்கையை இலகுவாகவும் சோம்பேறித்தனத்தோடும் கழிக்கலாம்.

(இதுக்கு வெள்ளைக்காரிங்க ஓமாமோ.!! ) :D

நெடுக்கர்... சுத்த ஞானசூனியமாய் இருக்கிரீங்களே... வெளியில் போய் ஆக்களுடன் பழகுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.