Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி 
[saturday 2014-07-12 09:00]
vali-north-temples-200-news.jpg
உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தைக் காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார். இந்நிலையில், நேற்று) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
  
இதேபோல், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அனுமதியளித்துச் சென்று பார்த்த போது, காணிக்கை மாதா ஆலயம் என்ற ஆலயம் இருந்ததாகவும், தொடர்ந்து கடந்தாண்டு (2013) சென்று பார்த்தபோது, அந்த ஆலயம் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததாக அங்கு சென்று வந்த ஒருவர் கூறினார். மேலும், மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தினைச் சூழவிருந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிக்கப்பட்டு வீடுகள் இருந்த அடையாளமே இல்லாதிருப்பதாக மயிலிட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்தனர்.
 
தற்போது, மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயமும், அதன் அருகிலுள்ள தோப்புப் பிள்ளையார் ஆலயம் மற்றும் முருகன் ஆலயம் ஆகியன மட்டும் எஞ்சியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு நேற்று சுமார் 500 பொதுமக்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
 
30 வருடங்களின் பின்னர் நேற்று அந்த ஆலயங்களுக்குச் சென்ற பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். காலையில் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்த இராணுவத்தினர் தமது பஸ் வண்டிகளில் அந்தப் பொது மக்களை ஆலயங்களுக்கு ஏற்றிச்சென்றனர்.
 
அந்த ஆலயங்களின் சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி தாகசாந்தி தீர்ப்பதற்கு பந்தல் அமைத்து குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள் என்பன வழங்கப்பட்டன. ஆலயங்களின் சுற்றாடல் துப்புரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு இருந்ததன; சேதமடையாத கட்டடங்கள் வர்ணம் பூசப்பட்டிருந்தன. வழிபாட்டுக்குச் சென்ற மக்கள் தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கதிரைகளும் போடப்பட்டிருந்தன. கோயில் பூசை நிறைவு பெற்று திரும்பிய பக்தர்களுக்கு உணவுப் பார்சல்களும் வழங்கப்பட்டன.
 
மயிலிட்டி கண்ணகை அம்மன் கோயில், முருகன் கோயில், தோப்புப் பிள்ளையார் கோயில் ஆகியவற்றுக்கே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=113007&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியிலை பிள்ளையாரையும் காணாமல் போணோர் பட்டியலில் சேர்க்க வைத்துள்ளது இணவாத சிங்கள அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஒரு தேர் சரிஞ்சா பதறிப்போறம். இது.. கோவில் கோவிலா இடிச்சுத்தள்ளுறாங்கள்.. அவங்களுக்கு ஒன்றும் நடக்கல்ல. கோவிலை ஊரை பாதுகாக்க நின்ற பிள்ளைகளை அழிக்குது கடவுள்.

 

உண்மையில்.. கடவுள் இருக்கிறாரோ இல்ல மனித ஆயுத தொழில்நுட்ப பலம் தான் உலகத்தை தீர்மானிக்குதோ..??!

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி

அவரும் வெளிநாட்டில எங்கையாச்சும் அசைலம் அடிச்சிட்டு செட்டிலாகி இருப்பார் வடிவா தேடி பாருங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி

அவரும் வெளிநாட்டில எங்கையாச்சும் அசைலம் அடிச்சிட்டு செட்டிலாகி இருப்பார் வடிவா தேடி பாருங்க.....

 

இருக்கார் இருக்கார் லண்டனில் ஒரு பப்புக்கு பக்கத்தில்.. கோழிக்கடைக்கு நடுவில்.. எழுந்தருளி இருக்கிறார்.  :D:lol:

 

இதே ஊரில என்றால் கலாசார சீர்கேடு என்றிருப்பம். இங்க கவுன்சில்காரனட்ட.. கோவில் கட்ட பெமிசன் எடுக்கப்பட்ட பாடு.. அந்த சித்தி விநாயகனுக்கே வெளிச்சம். :icon_idea::lol:

சிங்களவனிடம் கடவுளே  தோற்று போனான்.. 

 

எங்க ஊரிலும் ஒரு  முருகன் கோவில் , ஒரு வைரவர் கோவில் இல்லாம் போச்சு. குல தெய்வமா கும்பிட்டவர்கள். இப்போ அந்த இடம் எல்லாம்  விமான ஒடு தளம்.  யாரும் கேட்பார் இல்லை.  கடவுளும் கேட்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி 

 

புத்தரும் அரசமரமும் வராதது  அதிர்ச்சி  தராமல் இருந்தால் சரி..

முப்பத்தி நான்கு வருடங்களாக ஊரே இல்லையாம்.  விநாயகரைக் காணவில்லை என்று புகார் கூறுகிறார்கள்.  இன்னும் நாலைந்து வருடங்களில் அந்த ஊரே அந்த மக்களுக்குச் சொந்தமாக இருக்காது.  வசாவிளான் முதல் காங்கேசன்துறை வரை அரசாங்கத்தின் உயர்வலயமாக  இருக்கும்.    :(  :(  :(

விநாயகர் ஆலயத்தை காணவில்லை

 

 

DSC_0143.jpg
-  சொர்ணகுமார் சொரூபன் 

உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார்.

சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (11) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அனுமதியளித்துச் சென்று பார்த்த போது, காணிக்கை மாதா ஆலயம் என்ற ஆலயம் இருந்ததாகவும், தொடர்ந்து கடந்தாண்டு (2013) சென்று பார்த்தபோது, அந்த ஆலயம் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததாக அங்கு வந்த ஒருவர் கூறினார்.

மேலும், மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தினைச் சூழவிருந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிக்கப்பட்டு வீடுகள் இருந்த அடையாளமே இல்லாதிருப்பதாக மயிலிட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்தனர்.

தற்போது, மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயமும், அதன் அருகிலுள்ள தோப்புப் பிள்ளையார் ஆலயம் மற்றும் முருகன் ஆலயம் ஆகியன மட்டும் எஞ்சியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
DSC_0169(1).jpg
 
DSC_0200(2).jpg

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

 

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி 
[saturday 2014-07-12 09:00]
vali-north-temples-200-news.jpg
 

 

புலிகள் அழிவு செய்ததால்தான் அழிந்து போனார்கள்.
உலகம் நல்ல தீர்வை வழங்கி விட்டது. 
  • கருத்துக்கள உறவுகள்

விநாயகரில் கைவைத்தவர்கள் என்ன தண்டனையைப் பெறப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகரில் கைவைத்தவர்கள் என்ன தண்டனையைப் பெறப் போகிறார்கள்?

மோதகம்,கொழுக்கட்டை கிடைக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்.. கடவுள் இருக்கிறாரோ இல்ல மனித ஆயுத தொழில்நுட்ப பலம் தான் உலகத்தை தீர்மானிக்குதோ..??!

சில ஆண்டுகள் பிந்தி இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். உண்மையில் கடவுள் மக்களின் இயலாமையில் உதித்த கற்பனை. இந்த கற்பனையும் இல்லாவிட்டால் மனநோய் பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும்.

 

இல்ல மனித ஆயுத தொழில்நுட்ப பலம் தான் உலகத்தை தீர்மானிக்குதோ..??!

  • மனித பலம் உலகத்தை தீர்மானிப்பது இல்லை. பலம் மிக்க நாடுகளிலும் பார்க்க பலம் குறைந்த நாடுகளிலேயே மக்கள் தொகை அதிகம்.
  • ஆயுத பலம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.
  • தொழில்நுட்ப பலம் பெருமளவில் உலகத்த்தை தீர்மானிக்கிறது.
  • ஆனால் வணிக சந்தை வாய்ப்பும் செல்வமும் தான் உலகத்தை தீர்மானிக்கின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே கொமன்ட் அடித்துக் கொன்டிருக்க ணே்டியது தான்.நாங்கள் எங்கள் நிலத்தை பயன் படத்தாவிட்டால் எல்லாம் கோவிந்தா தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டி இருக்கின்றதே பெரிய விசயம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை பிள்ளையார் கோயிலை காணேல்லை எண்டு சனம் அழுது  .......... :(

 

இஞ்சையெண்டால் இத்தடிக்கு பத்து பிள்ளையார் கோயில் வேறைவேறை பேரிலை எழுந்தருளியிருக்கும். ^_^

 

HOME.jpg

 
                              http://www.eprarthana.com/virtual/vganesh.asp
 

இனி வரும் காலங்களிலை இப்பிடித்தான் சைவசமயம் போகப்போகுது....... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.