Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ் 
[Thursday 2014-07-31 18:00]
game-140514-150.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் ஒரு காரணம் என்று இன்சைட் கேம்ஸ் என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

  

மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப்பு எனும் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக இலங்கை அரசு இயங்கி வருவதோடு அனைத்துலகத்தின் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அழுத்தங்களுக்கும் இலங்கை அரசு முகம்கொடுத்து வருகின்றது.

இலங்கையில் முப்படைகளுக்கும் தலைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான படையினர் இலங்கைத்தீவின் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான இனஅழிப்பினையும் நிலஅபகரிப்பும் மேற்கொண்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக இன்சைட் கேம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=114118&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பனம் பழம் விழுந்ததுக்கு, காக்காய் இருந்ததும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு, ஒன்றும் செய்யவில்லை என்று கூறியவர்கள்.....

இனி முகத்தை எங்கே.... கொண்டு போய் வைக்கப் போகின்றார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின், முதல்வர் உருத்திரகுமாரனுக்கு நன்றி.

பனம் பழம் விழுந்ததுக்கு, காக்காய் இருந்ததும் காரணம்.

Yesterday, 08:00 AM

The secret behind Mahinda not visiting Glasgow

| by Upul Joseph Fernando

( July 30, 2014, Colombo, Sri Lanka Guardian)

The letter sent by the Minister of External Affairs, Prof. G.L. Peiris, citing the reasons for President Mahinda Rajapaksa, the Chairman of Commonwealth, not attending the Commonwealth Games held in Glasgow, Scotland, exposed a hitherto unknown fact. The reason has been cited as the failure on the part of the British Government in suppressing the agitations by Tamil Diaspora against the Sri Lankan President.

Mahinda is the Chairman of the Commonwealth. This is the first time the Commonwealth Games is held sans the participation of its Chairman.

At that moment, Mahinda did not accuse the UK and stated that he would not participate in the Commonwealth Day as he had another foreign engagement. But this time the government announced that the reason for the President's absence at the Commonwealth Games was the failure of the UK Police to suppress Tamil Diaspora.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143490#entry1028999

  • கருத்துக்கள உறவுகள்

உதில நட்டுக்கழண்ட அரசை பற்றி எதுவுமே இல்லையே. உங்களுக்கு ஆங்கிலம் கம்மியா அல்லது எங்களுக்கு கம்மி என்று நினைக்கிறீர்களா?

BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.

எதுவுமே செய்யாத நட்டுகழண்ட அரசு உரிமை கோருவது சுத்த கருநாநிதி ஸடைல் பித்தலாட்டம்.

//BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.//

 

உந்த புலம்பெயர் புண்ணாக்குகளையும் 'காக்காய் இருக்க பனம் பழம் என்று திட்டியதெல்லாம் மறந்து போச்சா ? இப்ப சிறிலங்கா அரசே சொன்னாப் பிறகு பிளேட்ட மாத்தவேண்டியதாப் போச்சா? 

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த பிரிட்டன் செல்லாதது ஏன்? – கெஹலிய வாக்குமூலம்! பிரிட்டனின் பாதுகாப்பு உத்தரவாதம் திருப்தியளிக்காததன் காரணமாகவே கொமன்வெல்த் (பொதுநலவாய) விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கவில்லை என்றும், இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொதுநலவாய அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏன் பங்கேற்கவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய – “பாதுகாப்பு உட்பட பல விடயங்களைக் கருத்திற்கொண்டு கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அத்துடன், அங்கு பாதுகாப்பு திருப்தி இல்லை என ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவும் ஆலோசனை வழங்கியிருந்தது. எனவே, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. கொமன்வெல்த் போட்டிகளின் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது பிரச்சினை அல்ல. இதனூடாக ஜனாதிபதி கொமன்வெல்த் போட்டிகளைப் புறக்கணித்துவிட்டார் என்று கருதக்கூடாது” – என்றார். http://tamilleader.com/?p=38441

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண்ணில் பனம் பழம் விழுந்ததோ!.., மாம்பழம் விழுந்ததோ!... ஆனால் எந்தப்பழமும் நழுவி அங்கு பாலில் விழுந்துவிடக் கூடாது என்பதில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ள கவனத்தை விடவும் அதிகமான கவனத்தை தமிழர்களில் சிலரும் கொண்டுள்ளார்கள்!!. கட்டப்பொம்மன் ஆனாலும் சரி, எட்டப்பன் ஆனாலும் சரி எந்தப் பொம்மனைக் கொண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான தலைமை தோன்றிவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக உள்ளனர்!!!.   

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

//BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.//

 

உந்த புலம்பெயர் புண்ணாக்குகளையும் 'காக்காய் இருக்க பனம் பழம் என்று திட்டியதெல்லாம் மறந்து போச்சா ? இப்ப சிறிலங்கா அரசே சொன்னாப் பிறகு பிளேட்ட மாத்தவேண்டியதாப் போச்சா? 

 

 

வணக்கம் நாரதர்

தமிழ்  மக்களுக்கு ஏதாவது செய்யணும் எனத்துடிக்கும் ஒரு உறவு தாங்கள்

அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி  எழுதலாம் என  நினைக்கின்றேன்

 

 

நான் இதுவரை  இங்கு

எவரையும் துரோகிகள் என்றோ

தமிழினவிரோதிகள் என்றோ

எட்டப்பர்கள் என்றோ  எழுதியதில்லை

காரணம் எனது அனுபவம்

எனது பொதுச்சேவையின்   காலம்....

 

 

இது ஒரு முகமறியாக்களம்

இங்கு எழுதப்படும் கருத்துக்களை  வைத்தே

ஒருவரது கொள்கையை   அல்லது அவரது நோக்கத்தை அறிய  முடியும்

 
 
அந்தவகையில் ஒருவர்
தொடர்ந்து 
தமிழர் அமைப்புக்கள்
தமிழரது இயக்கங்கள்
போராளிகள்
மாவீரர்கள்
புலம் பெயர் அமைப்புக்கள்
என்பனவற்றுக்கு எதிராக
அவற்றை ஒன்றுடன் ஒன்று முரண்பட வைக்கும்படியாக
அல்லது  நேரத்துக்கு ஏற்றது போல் 
ஒன்றை  உயர்த்தி
ஒன்றைத்தாழ்த்தி...
 
என்றுமே தமிழருக்கான தீர்வு பற்றி  எழுதாது
சிங்களத்தினது  அராயகங்களை கேள்வி கேட்காது

சிங்களத்தின் இந்த நிலைக்கு தமிழர்  தான் காரணம்  என்பது போன்று தொடர்ந்து எழுதுவார்களாயின்

அவர்களைப்பற்றி  எம் மனதில் என்ன  விம்பம் ஏற்படும்........???

 

சிலரது எழுத்துக்களை

உதாசீனங்களை

முட்டையில் மயிர் பிடுங்குதல்களை  பார்த்தாலே புரியும்

அவர்களது வாழ்வில் 

அவர்கள் எந்தவித பொதுக்காரியங்களிலும் உழைத்திருக்க வாய்ப்பில்லை  என்று.

எனக்கு இங்கு சிலர் மீது இவ்வாறானதொரு கருத்து உள்ளது.

மற்ற  யாழ் உறவுகளுக்கு வேறு கருத்து இருக்கலாம்......

 

இங்கு தமிழச்சி  பற்றி  எழுதணும்

அவர் இங்கு சில  கருத்துக்களுக்கு விருப்பு வாக்கு போட்டுள்ளதால்....

 

 

தாயகப்பற்றுள்ள

ஏதாவது செய்தாகவேண்டும் எம்மவருக்கு என்ற தூரநோக்குள்ள

துடிப்புள்ள

இன்றைய  தலைமுறைப்பெண் ...

 

எம்மவரின் தூக்கம் கண்டு கொதித்துப்போயுள்ளார்

அவரது புரிதலை  நானும் விளங்கிக்கொள்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்னை வெளிப்படையாகவே துரோகி என்று கூப்பிடுங்கள். ஆனந்தராஜா, நீலன், இன்னும் பல நல்ல மனிதர்களுடன் ஒப்பிட்ட புண்ணியமாவது கிடைக்கும்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை. அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் - பூமி தட்டை அல்ல. கடலின் நிறம் நீலம். பிள்ளைகள் தாய் வயிற்றிலேதான் பிறப்பர்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்னை வெளிப்படையாகவே துரோகி என்று கூப்பிடுங்கள். ஆனந்தராஜா, நீலன், இன்னும் பல நல்ல மனிதர்களுடன் ஒப்பிட்ட புண்ணியமாவது கிடைக்கும்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை. அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் - பூமி தட்டை அல்ல. கடலின் நிறம் நீலம். பிள்ளைகள் தாய் வயிற்றிலேதான் பிறப்பர்?

 

சமஷ்டி (Federalism) முறையிலும் பல படிமானங்கள் உள்ளன. உதாரணமாக, கனடாவில் உள்ள சமஷ்டி முறை. மற்றது இந்தியாவில் உள்ளது. நாம் எல்லோரும் அறிந்தது.. இந்தியாவில் உள்ளதை விட கனடாவில் கூடுதல் சுதந்திரத்துடன் மக்கள் வாழ வழி உண்டு என்பது.

 

இப்போது இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கி, புதியதொரு யாப்புடன் சமஷ்டிக்கு வரமுடியும். ஆனால் எத்தகைய அதிகாரங்களை இந்த மாகாணங்கள் அனுபவிக்கப் போகின்றன என்பது யாப்பின் உள்ளடக்கையைப் பொறுத்தது.

 

ஏற்கனவே இலங்கைச் சிங்கள எதேச்சாரிகளின் வண்டவாளங்கள் நாம் அறிந்ததே.. :D இந்த நிலையில் இவர்கள் ஒரு சமஷ்டியை கொண்டுவந்தாலும் எந்த அளவுக்கு அதில் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கும் என்பதை நாம் எல்லோரும் ஊகிக்க முடியாதவர்கள் அல்லர்.

 

மேலும், தற்காலிகமாக சமஷ்டிக்கு வந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் மீண்டும் ஒற்றையாட்சி முறைக்குள் அவர்கள் போகமாட்டார்கள் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அங்கே நீதித்துறையின் செயற்பாடுகள் ஏற்கனவே நகைப்புக்கு உரியதாக மாறிவிட்டன. அவ்வாறு மீண்டும் ஒற்றையாட்சிக்குள் சென்றால், மீண்டும் சுழியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டி வரும். :D

 

*எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.*

Edited by இசைக்கலைஞன்

மிக துரிதமாக செயற்பட்டு இங்கு இடப்பட்ட கண்ணியக்குறைவான பதிவை நீக்கி யாழ் களத்ததின் தரத்தை உயர்த்திய மட்டுறுத்தினருக்கு மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானும் தின்னது தள்ளியும் படுக்காது என்பது போல தான் சிலரின் கருத்து ... 

 

இதெல்லாம் தமிழருக்குள் சகஜம் 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அத்தனையும் நூத்தில் ஒரு வார்த்தை இசை.

இதை விட மேலே போய் பிரிந்து போகும் உரிமை கொண்ட confederacy கூட சில நாடுகளில் இருக்கு.

அதேபோல் ஒற்றையாட்சி நாடாக அறியப்படும் யூகேயில் ஸ்காட்லாந்து அனுபவிக்கும் சுயாட்சி, சமஸ்டிநாடான அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவுகோ, தமிழ்நாட்டுக்கோ இல்லை.

தெற்கில் ஒரு மாற்றம் வரவேண்டும். வராவிட்டால் மீண்டும் சுழியம்தான். ஆனால் தெற்க்கில் மாற்றம்வராமல், அங்கு இனவாதிகள் மீளவும் மீளவும் ஆட்சியமைக்க வடக்கின் தனிநாட்டுப் பூச்சாண்டியும் ஒரு பெரும் காரணி.

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை.

அரசு செய்வது அரசியல். மற்ற அமைப்புகள் செய்வது ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை. அரசுகளுக்கும் அரசியலுக்கும் அறிக்கைகள் முக்கியம். மற்றவைக்கு அவை முக்கியமல்ல.

 

அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

தனி நாட்டு கோரிக்கை தமிழ் மக்களின் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்தது. இன்றும் இருக்கலாம், ஆனால் ஒரு சுயாதீனமான வாக்கெடுப்பே அதை தெளிவுபடுத்தும். ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மதிப்பவராக நீங்கள் இருந்தால் அந்த உரிமைக்காக இன்று உள்ள பிரதிநிதிகளான நாடு கடந்த அரசை நீங்கள் மதித்திருப்பீர்கள்.

 

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் -

இப்படி சொன்ன நீங்கள், இப்படியும் சொல்கிறீர்கள்.

 

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

மிகமோசமான இனவாத பாசிச அரசில் சமஸ்டி அமைப்பை எமது மக்களுக்கு தீர்வு என்கிறீர்கள். இவை உங்களின் வார்த்தைகள். என்னுடையதல்ல. அதுவும் எமது மக்களின் பெரும்பாலானவர்களின் அரசியல் உரிமையை ஏளனம் செய்து இந்த தீர்வை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண்ணில் பனம் பழம் விழுந்ததோ!.., மாம்பழம் விழுந்ததோ!... ஆனால் எந்தப்பழமும் நழுவி அங்கு பாலில் விழுந்துவிடக் கூடாது என்பதில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ள கவனத்தை விடவும் அதிகமான கவனத்தை தமிழர்களில் சிலரும் கொண்டுள்ளார்கள்!!. கட்டப்பொம்மன் ஆனாலும் சரி, எட்டப்பன் ஆனாலும் சரி எந்தப் பொம்மனைக் கொண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான தலைமை தோன்றிவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக உள்ளனர்!!!.   

 

பாஞ்ச்,

தமிழனை பற்றிய, உங்களது கருத்து, நூற்றுக்கு.... நூறு சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

1958ம் ஆண்டு கலவரத்துக்கும் 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டத்துக்கும் 1972ம் ஆண்டு பௌத்த நாடாக இலங்கை மாற்றப்பட்டு பெயர் சிங்களத்தில் உள்ள ஸ்ரீ லங்கா என்று ஆனதற்கும் தனிநாட்டுவாதிகள் தான் காரணமா? உண்மையில் உங்களுக்கு இலங்கையில் தமிழர் வரலாறு பற்றி தெரியுமா? தெரியாது என்றே உங்கள் கருத்துகள் காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் இலங்கை அரசு என்பது government எனும் அர்தத்தில் சொன்னது. State எனும் அர்த்தத்தில் அல்ல. அரசாங்கம் என்று சொல்லியிருந்தால். பொருத்தமாயிருந்த்ஹிருக்க்கும்.

தற்போதய யாப்பினை மாற்றி, இனவாதமற்ற அல்லது இனவாத தாக்கம் குறைந்த ஒரு புதிய சமஸ்டி அலகை நாம் எமெக்கென உருவாக்க முயற்சிக்கலாம். கிட்டத்தட்ட நீலனும் பீரிசும் 1995இல் சமர்ப்பித்த முதல் தீர்வுபொதிபோல.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அத்தனையும் நூத்தில் ஒரு வார்த்தை இசை.

இதை விட மேலே போய் பிரிந்து போகும் உரிமை கொண்ட confederacy கூட சில நாடுகளில் இருக்கு.

அதேபோல் ஒற்றையாட்சி நாடாக அறியப்படும் யூகேயில் ஸ்காட்லாந்து அனுபவிக்கும் சுயாட்சி, சமஸ்டிநாடான அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவுகோ, தமிழ்நாட்டுக்கோ இல்லை.

தெற்கில் ஒரு மாற்றம் வரவேண்டும். வராவிட்டால் மீண்டும் சுழியம்தான். ஆனால் தெற்க்கில் மாற்றம்வராமல், அங்கு இனவாதிகள் மீளவும் மீளவும் ஆட்சியமைக்க வடக்கின் தனிநாட்டுப் பூச்சாண்டியும் ஒரு பெரும் காரணி.

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

 

தெற்கில்.... மாற்றம் என்றால்....

ரணில்... வர வேணுமா?  கோசான்.

நீங்கள், அரசியலுக்கு புதுசா?

ரணில், வருவதிலும் பார்க்க.... மகிந்த ஜனாதிபதியாய்.... இருப்பதே திறம். :)

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு பெரும் காரணி" என்றேனே ஒழிய தனிபெரும் காரணி என்று சொல்லவில்லை. அன்றும் கூட இனவாதம் கக்காத கம்யூ இஸ்டுகளை தவிர்த்து, பொன்னம்பலம் போனார் போலி இனமானிகளுக்கு பின்னால் வடக்குப் போனது, தெற்க்கில் இனவாதம் மேலும் கூர்மையடய காரணமாயிற்று.

இனவாதிகள் அன்றும், ஆங்கிலேயருடன் சேர்ந்து சிங்களரை வதைத்த தமிழ் துரைமாரை காட்டித்தான், படம் ஓட்டினார்கள்.

இன்று அந்த இடத்தை புலம்பெயர் தமிழர் நிரப்புகிறார்கள்.

இரு பகுதியிலும் இனவாதிகள், மறு பகுதி இனவாதிகளிடம் தங்கியே இருக்கிறார்கள்.

நிச்சயமாய் ரணில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது.. சிங்களவருடன் செல்லம் கொஞ்சி அவர்களின் நன்மதிப்பை முதலில் பெற்றுக்கொள்ள வேணும் (நல்லிணக்கம்). :huh: பிறகு படிப்படியாக அவர்களின் இனவாத எண்ணத்தை மாற்றி, ஃபெடரல் அமைப்பை வாங்கிவிட வேண்டும்.. :D அதே நேரத்தில் ஒரு கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடித்து கறி ஆக்கி விருந்தும் சாப்பிட வேணும்..  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.