Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது பாலகி வன்புணர்வின் பின் கொடூரக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார்.

இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. பொலிஸார் குறித்த சந்தேக நபரின் சகோதரியின் வீட்டை உடைந்து பார்த்த போது பை ஒன்றில் சிறுமியின் கை,கால் மற்றும் வாய் கட்டப்பட்டு கட்டிலுக்கு கிழே மயக்கமான நிலையில் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடனடியாக சிறுமி காத்தான்குடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காத்தான்குடி பொலிஸார் இன்று அதிகாலை செங்கலடி பதுளை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்

 

பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் முன்பாக இன்று நண்பகல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

IMAGE%201.JPG

 

IMAGE%203.JPG

 

140911094251_batticalao_child_sex_abuse_
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=169293419611300282#sthash.Xcj2l2PM.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை.. உதவி செய்யப்போய் உபத்திரமாகிவிட்டது..

ஆஆஆ இது என்ன அநியாயம்??? இவர்களை எல்லாம்............................. :huh::(

அந்த சிறுமிக்கு ஆழ்ந்த இரங்கல்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நல்ல மனிதர்

உதவி  செய்ய தனது மகளையே  அனுப்பியிருக்கிறார்

 

எருமை மாடு

கட்டி வைச்சு எரிக்கணும் :(  :(

 

 

இப்படியானவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையாக மரண தண்டனையை கொடுக்க  வேண்டும். வெறும் DNA test ஒன்றே போதும் இந்த வக்கிர மனிதனை குற்றவாளியாக்க. அதை விட்டு விட்டு வழக்கு, சாட்சிகள், நீதி மன்றம்  என்றெல்லாம் இழுத்தடித்து கால அவகாசத்தினைக் கொடுப்பது இந்த மனிதனின் வாழ்நாட்களை நீட்டிக்க வைக்க மட்டுமே உதவும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

 
court(48).jpg-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியொருவரை புதன் கிழமை(10) துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த  சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டகளப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா இன்று வியாழக்கிழமை(11) உத்தரவிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குறைந்த பட்சமே மரணதண்டனை எண்டா அதிக பட்சமாக எதைக் கொடுப்பீர்கள்?

சட்டத்தின் பிரகாரம், தீரவிசாரித்து, நாட்டில் இப்படியான குற்றங்களுக்கு நடைமுறையில் உள்ள தண்டனையை கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
இக்குற்றத்தை செய்த நபர் தனக்கு மனநோய் பிடித்ததுபோல ஆடைகளை பிய்த்துக்கொண்டு இன்று தெருவில் ஓடித்திரிவதாக அறியவருகிறது. மனநோயாளிக்கு தண்டனையையும் அதேபோல கொடுப்பதே பொருத்தம். 
 
தென்னிலங்கையில் 5சிறுமிகளை இதேபோன்று இன்னொரு குழு பாலியல் வல்லுறவு புரிந்துள்ளது.பாலியல் வல்லுறவு புரிவோருக்கு கருணையில்லாது மரண தண்டனை அதுவும்  மக்கள் முன்னிலையில் கொடுக்கப்படல் வேண்டும்.
 
மனநோய் என நடித்து தப்ப நினைக்கிறவர்களுக்கும் தண்டனை பொதுவானதாக அமைய வேண்டும்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியானவர்களுக்கு எமது முன்னோர்கள் ஒரு சிறு தண்டனைதான் கொடுப்பார்கள்: அதன் பின் அந்த சந்ததியே இப்படியான வேலைகளை சிந்தித்தும் பார்க்காது. :icon_idea:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமை...! :o

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

எவ்வளவு நல்ல மனிதர்

உதவி  செய்ய தனது மகளையே  அனுப்பியிருக்கிறார்

 

எருமை மாடு

கட்டி வைச்சு எரிக்கணும் :(  :(

 

 

பாவம்.... அந்தத் தந்தையின், மனம் எவ்வளவு வேதனைப் படும்.

இனி.... அவரும் ஒரு, நடைப் பிணம் தான்.

 

அந்த குற்றவாளியை....  அடித்தே கொன்றிருக்க வேண்டும்.

இந்த ஜென்மங்களுக்கெல்லாம் மரணதண்டனையே மிக குறைவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.