Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள்

Featured Replies

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள் JAN 13, 2015 | 11:51by கார்வண்ணன்in செய்திகள்

Refugees-300x200.jpgசிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியகம் இன்று வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான அகதிகள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த 1,23,028 பேர், அகதிகளாக உள்ள அதேவேளை,மேலும், 16,190 பேர் புகலிடம் கோரிகளாகவும் இருக்கின்றனர். 30,847  பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு அகதிகளாக உள்ள கவலைக்குரிய இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 1,71,645 பேர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டுக்கான அகதிகள் பற்றி தரவுகளின் படி, அகதிகளாக உள்ள கவலைக்குரியவர்களின் எண்ணிக்கை 2,36,444 ஆக இருந்தது.

http://www.puthinappalakai.net/2015/01/13/news/2868

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல லுச்சா தனமான செய்தி. நாங்கெல்லாம் இப்ப பொறின் சிட்டிசன், அகதியாவது மண்ணாவது என்கிறனர் புலம்பெயர் புண்ணியவான்கள்.

இலங்கையில் இருக்கும் 31 ஆயிரமும், இந்தியாவில் முகாமில் வாடுபவர்களும்தான் அகதிகள்.

உந்த எண்ணிக்கையை டபிள் ஆக்கமுதல் முடித்துவிட்டது சர்வதேசம் .பலருக்கு அதில் இங்கு மனவருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்... அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, சித்தப்பா, சித்தாப்பாவின் மனைவியின் மச்சான் என்று எல்லாரையும், கூப்பிட்டாச்சு - அக்கா புருசன் மட்டும்தான் மிச்சம் அதுக்குள்ள அவசரப்பட்டு போர்நிறுத்தத்தை அறிவிசிசிட்டார் தலைவர் என்று 2002 ஒருவர் என்னிடம் விசனப்பட்டார் :)

ஓமோம்... அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, சித்தப்பா, சித்தாப்பாவின் மனைவியின் மச்சான் என்று எல்லாரையும், கூப்பிட்டாச்சு - அக்கா புருசன் மட்டும்தான் மிச்சம் அதுக்குள்ள அவசரப்பட்டு போர்நிறுத்தத்தை அறிவிசிசிட்டார் தலைவர் என்று 2002 ஒருவர் என்னிடம் விசனப்பட்டார் :)

இப்படி ஆயிரம் கதை இருக்கு நாட்டில .

 

முக்கால்வாசி தேசியம் தேன் ஒழுக பேசுபவர்கள்  :o

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் தங்கள் குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூப்பிடல

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் அடக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் தங்கள் குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூப்பிடல

அவர்களுடைய குடும்பம் பிள்ளைகள் எல்லோரும் இங்குதான் இருக்கிறார்கள்.
 
ஆனால் அவர்கள் மட்டும்தான் நீதி பேசலாம்.
மற்றவர்களுக்கு அது தடை.
அதுதான் இப்பிடி மணலில் கயிறாக திரிக்கிறார்கள்.
 
சூரியனில் வாழாதவர்கள் வேறு யாரும் சூரியன் பூமிக்கு நன்மை பயக்கிறது என்று சொல்ல கூடாது.
அப்படி சொல்வது என்றால் நீங்கள் சூரியனில் போய்  இருந்துகொண்டுதான் சொல்ல வேண்டும்.
 
சூரியனால் மத்திய கிழக்கில் ஒரு மரம் செடியும் முளைக்கவில்லை என்பதால் சூரியன் தவறானது என்று  .......
எந்த திரி திறந்தாலும் ....... வந்து நீதி எழுதிவிட்டு போவார்கள். 
 
அதை அவர்கள் குதைகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
 
உங்களுக்கு சூரியன் பற்றி எழுத வேண்டும் என்றால் ... முதலில் சூரியனுக்கு போகும் வழியை பாருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் தங்கள் குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூப்பிடல

 

 

கோவிக்கக்கூடாது

அவர்கள் காரணத்தோடு தான் பேசுகிறார்கள்

 

புலிக்கு உதவினாயா?

தமிழீழம் கேட்டாயா?

அப்படியென்றால் நீங்கள் தாயகத்தில் தான் இருக்கணும்..

சரி தானே

 

அவர்கள் தமிழீழமும் கேட்கவில்லை

புலிக்கும்  உதவவில்லை

அப்புறம் நீங்கள் ஏன்  புலத்துக்கு வந்தீர்கள்

குட்டி போட்டீர்கள்?

இதை நீங்கள் கேட்கக்கூடாது

ஏனெனில் சிங்களத்தால் அல்ல என பதில் வரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதால் சொல்கிறேன், நான் புலம் பெயர்ந்ததுக்கு சாமி சத்தியமா ஆமியும் காரணமில்லை, புலியும் காரணமில்லை.

சாமி, சாமி - சோறு, சோறு.

கேட்டதால் சொல்கிறேன், நான் புலம் பெயர்ந்ததுக்கு சாமி சத்தியமா ஆமியும் காரணமில்லை, புலியும் காரணமில்லை.

சாமி, சாமி - சோறு, சோறு.

இப்படி சொல்லுறது இப்ப ரொம்ப ஃபாஷனா போச்சுதைல்ல. அப்ப நானும் அப்படித்தான்.

மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் தங்கள் குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூப்பிடல

நான் இயக்கத்திற்கு போகும் போது எனது முழுகுடும்பமும் அப்பா தவிர்த்து வெளிநாட்டில் தான் .(அம்மா பிளஸ் ஏழு சகோதரங்கள் ).

சும்மா இணையத்தில் கதைவிடும் ஆளில்லை நான் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

கோவிக்கக்கூடாது

அவர்கள் காரணத்தோடு தான் பேசுகிறார்கள்

 

புலிக்கு உதவினாயா?

தமிழீழம் கேட்டாயா?

அப்படியென்றால் நீங்கள் தாயகத்தில் தான் இருக்கணும்..

சரி தானே

 

அவர்கள் தமிழீழமும் கேட்கவில்லை

புலிக்கும்  உதவவில்லை

அப்புறம் நீங்கள் ஏன்  புலத்துக்கு வந்தீர்கள்

குட்டி போட்டீர்கள்?

இதை நீங்கள் கேட்கக்கூடாது

ஏனெனில் சிங்களத்தால் அல்ல என பதில் வரும்.....

அண்ணை இந்த விடயத்தில் ஓடிவந்ததே அவர்களுக்கு உதவத்தான் என்று எவரும் தப்பமுடியாது .சுயநலம் என்று நேரே சொல்லத்தான் வேணும் .நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை . :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுண் உங்கட குடும்பத்தில ஒருத்தரும் வெளிநாட்டில் இருப்பதற்காக நாட்டுப் பிரச்சனையை உபயோகபடுத்தவில்லையா?

ஏற்கனவே வேற விசாவில் வெளிநாட்டுக்கு வந்து ------------

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியான கேள்விகள் ஏன்? மேற்கில் வாழும் 90 வித தமிழ் புலம்பெயர் மக்கள் அகதி அந்தஸ்து மூலம் குடியேறியவர்களே.

அதில் தப்பேதும் இல்லை. வசதி இருந்தவன் ஸ்டூடன் விசாவில் வந்தான். முடியாதவன் ஏஜென்சி மூலம் வந்தான்.

ஆனால் மிகச்சொற்பமனோரே உயிருக்கு பயந்து ஓடி வந்தோர் - மிகுதி எல்லாம் பொருளாதார அகதிகளே.

இந்த பொருளாதார அகதிகள், இப்போ வெளிநாட்டுப் பிரசைகள். சிலருக்கு ஊருக்குப் போனா செருப்பு போடாமல் நடக்க முடிவதில்லை.

சிலர் ஏசி, ஏசி என்று அங்கலாய்ப்பர். இவர்களை, இவர்கள் வெளிநாட்டில் போட்ட குட்டிகள் ( பிரான்ஸ் என்றால் கட்டாயம் மூன்று பிள்ளை இருக்கும் - அப்பதான் அதிகம் சோசல் காசு வரும்) எல்லாத்தையும் சேர்த்து அகதி என்று கணக்கெடுப்பது நகைபிக்கிடமனது. இதுவே நான் சொல்ல வருவது.

அர்சுண் உங்கட குடும்பத்தில ஒருத்தரும் வெளிநாட்டில் இருப்பதற்காக நாட்டுப் பிரச்சனையை உபயோகபடுத்தவில்லையா?

ஏற்கனவே வேற விசாவில் வெளிநாட்டுக்கு வந்து ------------

நீங்கள் முதல் கேட்ட கேள்விக்குத்தான் எனது பதில் அமைத்திருந்தது .நீங்கள் முதல் கேட்ட கேள்வியை திருப்பி வாசிக்கவும் . ^_^

  • கருத்துக்கள உறவுகள்
இன பிரச்சனைதானே பொருளாதார பிரச்சனையையும் பலருக்கு உண்டு பண்ணியது 
அப்பிடி பார்கையில் .... எல்லோரும் அகதி தானே ? 
தவிர 1986இலேயே விமான தாக்குதல் தொடங்கி விட்டது 
விமானம் யாருக்கு குண்டு  போடும் என்பது யாருக்கும் போட முன்பு தெரியாது தானே ? 
 
எல்லோருக்கும் கொலை அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் இருந்தது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறுவீதம் பொருளாதார அகதிகள் என்பதை கோசான் கண்டுபிடித்துவிட்டார்.. ஆனால் வெள்ளைக்காரனுக்கு இது விளங்கவில்லையே.. இவனெல்லாம் சந்திரனுக்கு எப்பிடி ராக்கட் விட்டான் என்பதுதான் விளங்கவில்லை.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலெக்சன் முடிஞ்சு இப்பத்தானே சிங்களம் புது முகமூடியோடை வந்திருக்கு....

அதுக்கிடையிலை ஏனப்பா புடுங்குப்படுறியள்..... :D

வாறமாசம் விட்டு அடுத்த மாதத்துக்குப்பிறகு சோறு/கறியள் என்ன சொல்லீனம் எண்டு பாப்பம்... :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் காணப் போறம் என்று கிளம்பிட்டு.. இடையில எல்லாத்தையும் விட்டிட்டு.. இட்டுக்கதை எழுதி.. அசைலம் அடிச்சாக்கள் இங்க இப்ப அகதிகள் பற்றி அவதூறா எழுதிற ஆக்கள்.

 

நாங்களும் அகதிகள் வழங்கிய பொய் சாட்சியங்களை வெறுக்கிறம். சுயநலத்துக்காக போராட்டத்தை தவறான நோக்கில் காட்டி.. நலம் பெற்றவர்களில் அநேகர் மேற்கு நாடுகளில் உள்ளனர்.

 

அண்மையில் ஒரு சிங்களவர் வந்தார்.... தானும் அகதியாம். புலி... இராணுவத்தால் பாதிக்கப்பட்டவராம். இப்ப அசைலம் அடிக்கிறதில 40% சிங்களவர்களும்.. மலையாளிகளும்.. தமிழ் நாட்டுக்காரர்களும்...!! :lol::icon_idea:

எலெக்சன் முடிஞ்சு இப்பத்தானே சிங்களம் புது முகமூடியோடை வந்திருக்கு....

அதுக்கிடையிலை ஏனப்பா புடுங்குப்படுறியள்..... :D

வாறமாசம் விட்டு அடுத்த மாதத்துக்குப்பிறகு சோறு/கறியள் என்ன சொல்லீனம் எண்டு பாப்பம்... :lol:

அடுத்தமாசத்துக்கு அடுத்தமாசம் வந்தால் நாக்கள் போனமாசத்துக்கு முதல் மாசம் என்று கருத்து எளுதுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் காணப் போறம் என்று கிளம்பிட்டு.. இடையில எல்லாத்தையும் விட்டிட்டு.. இட்டுக்கதை எழுதி.. அசைலம் அடிச்சாக்கள் இங்க இப்ப அகதிகள் பற்றி அவதூறா எழுதிற ஆக்கள்.

 

நாங்களும் அகதிகள் வழங்கிய பொய் சாட்சியங்களை வெறுக்கிறம். சுயநலத்துக்காக போராட்டத்தை தவறான நோக்கில் காட்டி.. நலம் பெற்றவர்களில் அநேகர் மேற்கு நாடுகளில் உள்ளனர்.

 

அண்மையில் ஒரு சிங்களவர் வந்தார்.... தானும் அகதியாம். புலி... இராணுவத்தால் பாதிக்கப்பட்டவராம். இப்ப அசைலம் அடிக்கிறதில 40% சிங்களவர்களும்.. மலையாளிகளும்.. தமிழ் நாட்டுக்காரர்களும்...!! :lol::icon_idea:

 

100% உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 90% எண்டு சொன்னா இசை நக்கலடிப்பார் ஆனா நெடுக்கர் 40% எண்டா ஒண்டும் சொல்லார். ஏனெண்டா இதுதான் இன ஒற்றுமை.

அதுக்க சாத்து 100% வரை போட்டார் -:)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயக்கத்திற்கு போகும் போது எனது முழுகுடும்பமும் அப்பா தவிர்த்து வெளிநாட்டில் தான் .(அம்மா பிளஸ் ஏழு சகோதரங்கள் ).

சும்மா இணையத்தில் கதைவிடும் ஆளில்லை நான் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

அண்ணை இந்த விடயத்தில் ஓடிவந்ததே அவர்களுக்கு உதவத்தான் என்று எவரும் தப்பமுடியாது .சுயநலம் என்று நேரே சொல்லத்தான் வேணும் .நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை . :blink:

 

 

ஏன் அண்ணையின் அம்மா சகோதரர்கள் தமிழர்கள் இல்லையோ??..

 

எனது குடும்பமும் கொழும்பில்தான்....

1983 கலவரம் வரை எமக்கு  உள்ளூரிலேயே எல்லாம் இருந்தது....

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.