Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புத் தலைமையை குழப்பும் விக்கினேஸ்வரனின் அதிரடி நகர்வுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை வருசக்கணக்காக எழுதுறார் ஆனால் லிஸ்ட் வராது. பாவம் அவரும் என்ன செய்கிறது வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றாறு.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப நண்பர் ஒருவர் புலியை எதிர்க்கிறன் எனும் சவுண்டு பார்ட்டிகளில் இவரும் ஒருத்தர். இப்பவும் புலி, புலிக்கொடி என்றால் உதறல் எடுக்கும் தென்னாலி, அடிக்கடி குலபெருமை பேசும் ஆள் , பரந்தன் சண்டையில் புலியின் பல்லை பிடிங்கி எடுத்தனான்  என உதார் விடுவார் இது எல்லாம் தண்ணியை போட்டபின்.

 

 

 

 

 

 

இந்த தொப்பிக்கு பொருத்தமாய் யாழில் ஒருவர் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண்,

 

அந்த முன்னாள் அவர்களில் உங்களுக்குத் தெரிந்தவர்களது பெயர்களைப் பொதுவெளியில் வெளியிடவும், கனடாவில் சட்டவிரோதமாக வருமானத்துக்குப் புறம்பாக காசு சம்பாதித்தல் சொத்துக்கள் சேர்த்தல் இன்னபிற விடையங்கள் தண்டனைக்குரிய குற்றம்.

 

தாங்களும் கனடாப்பிரசையே ஆகவே உங்களுக்கும் தார்மீகப்பொறுப்பு இருக்கின்றது உங்களுக்குத் தெரிந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் தகுந்த சாட்சியங்களுடன் அவர்களை அதிகாரவர்க்கத்துக்குத் தெரியப்படுத்தவும்

 

அவன் அடிச்சான் இவன் அடிச்சான், என்னால் அடிக்கமுடியாமல்போச்சே எனும்பாணியில் இங்கு கருத்தெழுதவேண்டாம்.

 

தவறு செய்தவனை சட்டத்தின்முன்பு காட்டிக்கொடுக்கவும் இதில் யாருக்கும் மன்னிப்பே கிடையாது.

 

 

நீங்க வேற....

அப்படி அடிச்சவர்களை வெளியில் தெரியப்படுத்தணும் என்பது தான் எல்லோரது விருப்பமும்..

ஆனால் அண்ணையின் நோக்கம் அதுவல்ல

எல்லாப்புலிகளையும்  ஆதரவாளர்களையும் அதற்குள் வைத்து மடக்குவது..

பாவம்

அந்த உண்மை பட்டியலை வெளியிட்டு விட்டால்

என்னை வேறு எவ்வாறு பின்னர் அவர்  திட்டுவதாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எல்லோரும் எதிர்தபோது விக்கியின் வரவை வரவேற்றவர்கள் நானும், அர்ஜூனும், சபேசனும் தென்னாலியும்.

இப்ப விக்கியை பற்றி எங்களுக்கே பாடம் எடுக்கிறியள்.

பிரபாவை ஏற்றிய அதே தனிமனிததுதி பப்பா மரத்தில் விக்கியரையும் ஏற்றாமல் விட்டாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியை முதலமைச்சர் தெரிவுக்கு கொண்டு வந்த போது யாழில் 100% உறவுகளும் வரவேற்றார்கள். காரணம்.. அவர் மீதான தனிப்பட்ட நம்பிக்கையை விட.. அவரின் அனுபவம் மக்களுக்கு சரியாகப் போய் சேரும் என்பதும்.. சர்வதேசம் அவரின் குரலை மதிக்கும் என்றே.

 

இன்று சிலர் அதற்கும் தாம் தாம் என்று உரிமை கோருவது வேடிக்கையிலும் வேடிக்கை.

 

விக்கி விமர்சனத்துக்கு அப்பால் இல்லை. அவர் மீதான விமர்சனங்களும் தான் அவரை சரியான பாதையில் நிறுத்தச் செய்கிறது. பாதை மாறின் அவர் மீது மக்கள் விமர்சனம்.. வெறுப்பை கொட்ட அதிக நேரம் எடுக்காது. 

 

மக்களுக்காகத் தான் தலைவர்கள். தலைவர்களுக்காக மக்கள் அல்ல.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

மாவையா?

விக்கி ஐயாவா? என்ற நிலை வந்தபோது

மாவை அவர்கள் விட்டுக்கொடுக்கணும் என எழுதிய நாங்க.............??? :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எல்லோரும் எதிர்தபோது விக்கியின் வரவை வரவேற்றவர்கள் நானும், அர்ஜூனும், சபேசனும் தென்னாலியும்.

இப்ப விக்கியை பற்றி எங்களுக்கே பாடம் எடுக்கிறியள்.

பிரபாவை ஏற்றிய அதே தனிமனிததுதி பப்பா மரத்தில் விக்கியரையும் ஏற்றாமல் விட்டாலே போதும்.

 

இதை பார்க்கும் பொழுது எனக்கு யாழ் நகரில் ஆஸ்பத்திரி பின்வீதியில் ஒட்டப்படிருந்த சுவரொட்டியின் வாசகம் ஞாபகத்திற்க்கு வருகின்றது.......மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு உரிமை கோரி மாபெரும் சுரொட்டி ஒட்டியிருந்தார்கள்......உரிமை கோருவதிலும் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்..:D

அப்போ

நாங்க.............??? :(  :(  :(

 

நீங்கள் ,நாங்கள் எல்லாம் புலிவால்கள் ....அரசியல் அறிவிலிகள்....புலவியாபாரிகள் ...மொத்தத்தில் சிறிலங்காவுக்கு துரோகிகள்.. பாடசாலைக்கு .......:D

அப்ப சிரிச்சுக் கொண்டே அழுங்க

ஏனுங்க அழுதுகிட்டே சிரிச்சா தப்புங்களா? 

இதை பார்க்கும் பொழுது எனக்கு யாழ் நகரில் ஆஸ்பத்திரி பின்வீதியில் ஒட்டப்படிருந்த சுவரொட்டியின் வாசகம் ஞாபகத்திற்க்கு வருகின்றது.......மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு உரிமை கோரி மாபெரும் சுரொட்டி ஒட்டியிருந்தார்கள்......உரிமை கோருவதிலும் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்.. :D

 

நீங்கள் ,நாங்கள் எல்லாம் புலிவால்கள் ....அரசியல் அறிவிலிகள்....புலவியாபாரிகள் ...மொத்தத்தில் சிறிலங்காவுக்கு துரோகிகள்.. பாடசாலைக்கு ....... :D

 

பட்டம் கொடுக்கிறது வாங்கறது எல்லாம் அவர்கள்தான் .

ஒருமுறை பார்ட்டி அவர்கள் கொடுத்து வாங்கும் பட்டங்களை பற்றி பகிடி விட்டே முடிந்துவிட்டது .இப்ப நினைத்தாலும் புரை ஏறுது :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சிங்கள அரசில் நீதிபதியாய் இருந்து தமிழ் இளைஞர்களை உள்ளே தள்ளியவர். இவர் பதவியில் இருந்தபோது தமிழர்க்கு என்ன செய்தார். கம்பன் கழகப் பேர்வழி. பிரேமாநந்தா பக்தன். கொழும்பு மேட்டுக்குடி இப்படி எல்லாம் திட்டினீங்களே ராசாமார் ?

மாவைதான் சரியான தெரிவு என்று எழுதி, மாவை விலகியபின் அதை வரவேற்று எழுதினீர்களே தவிர விக்கியை புலவாலுகள் யாரும் ஆதரிக்கவில்லை என்பது வெள்ளிடமலை.

பார்வையை மாற்றலாம் - தப்பில்லை ஆனால் அதை ஏற்கும் நேர்மை அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி 

 

1. சிங்கள நீதி நிர்வாகக் கட்டமைப்பின் நீதிபதியாக இருந்தவர் - 100% உண்மை.

 

2.சிறீலங்காவின் சட்டத்திட்டத்திற்கு அமைய.. விக்கியின் தீர்ப்பிற்கு அமைய எமது போராளிகள் பயங்கரவாதிகளாகி சிறை சென்றது - 100% உண்மை.

 

3. விக்கி வடக்குக் கிழக்கு மக்களின் போர்க்கால துயரை நேரிடையாக அறியாது மேட்டுக்குடி சார்ந்த ஒருவராக வாழ்ந்தது - 100% உண்மை.

 

4. விக்கி தானே பிரமானந்தாவின் பக்தன் என்றது - 100% உண்மை

 

5. கம்பன் கழகம்... உட்பட கொழும்பு தமிழ் சங்க நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஒருவர்- சைவத் தமிழ் விரும்பி - 100% உண்மை.

 

விக்கி அரசியலுக்கு புதிது. அவர் இந்தப் 100% உண்மைப் பின்னணிகளில் வந்த ஒருவர். அந்த வகையில் அவர் மீதான நம்பிக்கைகளோடு அவநம்பிக்கைகளும் மக்களிடம் இருந்தன. 

 

இப்போது அவரே தன்னுடைய பல கருத்துக்களில் மக்களின் மனதறிந்து மாற்றி வருகின்ற நிலையைப் பார்க்கிறோம். தன்னை ஒரு மக்கள் நலன் விரும்புகிற தலைவராக ஆக்கிக் கொள்ள அவர் விளைகிறார் என்று அதனை எடுத்துக் கொள்ளலாம். அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் கருதாமல்.. உரிமைகள் இழந்து தவிக்கும் ஒரு மக்களின் உண்மைப் பிரதிநிதியாக.. அந்த மக்களின் குரலாக சிங்கள ஆட்சியாளர்களின் முன்னும்.. சர்வதேசத்தின் முன்னும் நிற்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அதற்கமைய அவரின் செயற்பாடுகள் உள்ள போது கடந்த கால அவரின் உண்மைகளைக் கடந்து அவரை மக்கள் நம்ப வேண்டிய சூழல் உள்ளமை சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப விக்கியும் தன்னை மாற்றிக் கொண்டு வருவதன் பலாபலனாக இருக்கலாம்.

 

இருந்தாலும்.. விக்கி 100% மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் என்றோ.. அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் நடவடிக்கைகளை செய்கிறார் என்றோ இவை பொருள் தரா..! விக்கியும் தொடர்ந்து மக்களால் கண்காணிக்கப்படும் தலைவராகவே இருப்பார். பாதை தவறாத வரை மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கும். 

 

சிலருக்கு இந்த உண்மையின் புரிதல் இல்லாமல்.. ஏதேதோ.. பார்வை மாற்றம் என்று கடந்த கால உண்மைகளை திரையிட்டு மறைக்க முனைகிறார்கள்.. என்பது வெள்ளிடைமலை.  :icon_idea:  :)

ஏனுங்க அழுதுகிட்டே சிரிச்சா தப்புங்களா?

அது தானே அப்படியும் செய்யலாம் என்ன.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி மீதான உங்கள் வி(ஷ)மர்சன பார்வை மாறியுளது என்று ஒரே வரியில் நேர்மையா ஒத்துகொள்ளலாம் தானே?

இப்படி பந்தி பந்தியா சடையாம :)

சரியான வழியை அவர் அந்த மக்களின் கண்ணீரை பார்த்த பிறகு தேர்வு செய்துள்ளார் . முதலில் சிங்களம் சொல்லை கேட்கும் என்றுதான் அவரும் நினைத்தவர் , மற்றது சம்பந்தன் நினைத்தது இவர் புலிகளின் எதிராளி என்று .
 
ஆனால் சிங்களம் திரும்பவும் இவர்களுக்கு நல்ல பாடம் எடுத்து விட்டது . தமிழர்கள் யார் எப்பவும் அடிமைகள்  என்பதை . 
 
அடி வாங்கி தான் அவரும் பாதையை மாற்றினவர் . இவர்கள் எல்லாரும் நினைத்தது படிக்காத பிரபாகரன் பிழை விட்டுட்டார் என்று ஆனால் இப்பதான் அவர்களுக்கு புரிந்தது எங்கள் தேசியத்தலைவர் ஒரு மேதை என்று .
 
வெளிப்படையாக ஒத்துக்கொள்ள அவர்களின் கௌரவம் விடுதில்லை .....
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்ளுக்குத்தான் படம் போடத்தெரியுமாக்கும்.

இந்தாங்கோ அடுத்த படம் ஆதரத்துடன்  சுமன்திரனின் அடுத்த தில்லுமுல்லு  :icon_idea:

C_6363.jpg

http://www.jaffnamuslim.com/2015/03/blog-post_671.html

அடுத்த தேர்தலில்  ஒரு வழியாலும் வரமுடியாது என்று தெளிவாக தெரிந்து விட்டது  உள்வீட்டுகுள்ளும் எதிர்ப்பு,

வேறு வழி நரிக்கு சாயம் வெளுத்துவிட்டது . :lol:  :lol:

சுமந்திரனின் மனசாட்சி சொல்கின்றது .....
இன்னுமா மக்கள் என்னை நம்புகிறார்கள் ........இல்லை இல்லை கோசன் மட்டுமே  

 

சுமந்திரனின் மனசாட்சி சொல்கின்றது .....
இன்னுமா மக்கள் என்னை நம்புகிறார்கள் ........இல்லை இல்லை கோசன் மட்டுமே  

 

 

இல்லை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தூற்றலாம்.
ஆனால் கூட்டமைப்பை, தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய சிலரில் சுமந்திரன் முக்கியமானவர். இப்போதுள்ள மற்றவர்கள் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் மட்டுமே.
 
நிச்சயம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,

இனிமேல் வரும் சொத்து, உயிர் நற்பெயர் சேதாரத்துக்கு நானோ யாழ் நிர்வாகமோ பொறுப்பில்லை :)

 

சரியான வழியை அவர் அந்த மக்களின் கண்ணீரை பார்த்த பிறகு தேர்வு செய்துள்ளார் . முதலில் சிங்களம் சொல்லை கேட்கும் என்றுதான் அவரும் நினைத்தவர் , மற்றது சம்பந்தன் நினைத்தது இவர் புலிகளின் எதிராளி என்று .
 
ஆனால் சிங்களம் திரும்பவும் இவர்களுக்கு நல்ல பாடம் எடுத்து விட்டது . தமிழர்கள் யார் எப்பவும் அடிமைகள்  என்பதை . 
 
அடி வாங்கி தான் அவரும் பாதையை மாற்றினவர் . இவர்கள் எல்லாரும் நினைத்தது படிக்காத பிரபாகரன் பிழை விட்டுட்டார் என்று ஆனால் இப்பதான் அவர்களுக்கு புரிந்தது எங்கள் தேசியத்தலைவர் ஒரு மேதை என்று .
 
வெளிப்படையாக ஒத்துக்கொள்ள அவர்களின் கௌரவம் விடுதில்லை .....

 

 

நிச்சயமாக..3 லட்சம் சனத்தை முள்ளிவாய்க்காலுக்க கூட்டிக்கொண்டு போய் பலி குடுக்க வேற யாரால முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக..3 லட்சம் சனத்தை முள்ளிவாய்க்காலுக்க கூட்டிக்கொண்டு போய் பலி குடுக்க வேற யாரால முடியும்?

3 லட்சம் சனம் முள்ளிவாய்க்காலிலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இல்லை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தூற்றலாம்.
ஆனால் கூட்டமைப்பை, தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய சிலரில் சுமந்திரன் முக்கியமானவர். இப்போதுள்ள மற்றவர்கள் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் மட்டுமே.
 
நிச்சயம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

ஜீவன்,

 

போச்சு! இருக்கிற நற்பெயரை கெடுத்துக் கொண்டீர்களே... கருத்து 100% சரி. கோசான் சொன்னதுபோல சேதாரம் ஏற்படும். 100% உத்தரவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.