Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!!

Featured Replies

முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!!

Mavai.JPGவடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பினில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன்  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.இதனை அனுமதிக்கமுடியாது.அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் நீக்கப்பட்டுள்ளமையினை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.பதிவு இணைய செய்தி

கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் தமிழரசுக்கட்சி பின்னடித்துவருகின்ற நிலையினில் ஏனைய கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினை கட்சிகளின் கூட்டாக முதலில் பதிவு செய்ய முற்பட்டுள்ளன.பதிவு இணைய செய்தி

இதனால் தமிழரசுக்கட்சி அச்சங்கொண்டுள்ளது.அண்மையினில் திருகோணமலையினில் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பங்கெடுப்பின்றி பதிவு சாத்தியமில்லையென கருத்து வெளியிடடிருந்தார்.அதன் தொடர்ச்சியாகவே தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாயும் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்   http://www.pathivu.com/news/38831/57//d,article_full.aspx. பதிவு இணைய செய்தி

ஏனப்பு இந்த வெறி , யாராவது தமிழனுக்கு நல்லது செய்தால் உங்களுக்கு .....வந்திடுமே .
அடுத்த தேர்தலில் ஒன்றுமில்லாமல் வீட்டுக்கு தான் அனுப்ப வேண்டி வரும் ......
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானால் மாவையையும்,சம்பந்தர்,சுமத்திரனுடன் சேர்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் இனி வாக்கு புறக்கணிப்பு செய்தால் தான் சரிப்பட்டு வரும்போல கிடக்கு, காலில் விழும் போட்டி கடுமையாகத்தான் சூடு பிடிக்கிறது  

சுமந்திரனின் மடத் தனமான நடவடிக்கைகள் கூட்டமைப்பை உடைத்து தமிழார் வாக்கைச் சிதைக்கவே உதவும். சுமந்திரனை ரணில், சந்திரிகா நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.

இந்த செய்தி திரிக்கபட்ட செய்தி என்றே நான் நம்புவதால் கருத்தெழுத விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை ஒரு மதில் மேல் பூனை. இப்ப அவர் கூனிக்குறுகிற நடவடிக்கைகளைப் பார்க்கத் தெரியுது.. பூனை எங்காலப் பக்கம் பாயத் தயாராகிட்டு என்று.

 

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய அதிக காலம் நேராது போல. தேசிய தலைவர் தமிழ் மக்களின் நன்மைக்காகக் காட்டிய அரசியல் ஒற்றுமையின் அடையாளமான.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளம் இன்றி எவர் வந்தாலும்.. தமிழ் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர். மாவையும் அதைப் படிக்கப் போறார் மிக விரைவில்.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

மாவை ஒரு மதில் மேல் பூனை. இப்ப அவர் கூனிக்குறுகிற நடவடிக்கைகளைப் பார்க்கத் தெரியுது.. பூனை எங்காலப் பக்கம் பாயத் தயாராகிட்டு என்று.

 

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய அதிக காலம் நேராது போல. தேசிய தலைவர் தமிழ் மக்களின் நன்மைக்காகக் காட்டிய அரசியல் ஒற்றுமையின் அடையாளமான.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளம் இன்றி எவர் வந்தாலும்.. தமிழ் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர். மாவையும் அதைப் படிக்கப் போறார் மிக விரைவில்.  :icon_idea:  :)

 
ஆமாம் நெடுக்கர். சம்பந்தர் சுமந்திரன் மாவையை துரத்திவிட்டு கஜேந்திரகுமாரை மீண்டும் சேர்த்து 
கொள்ளவேண்டும். :)
  • கருத்துக்கள உறவுகள்

நரி ரணிலுக்கு கிடைத்த வெற்றி........

 

உதுகள் திருந்தாதுகள்..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட சந்திப்பில் மாவை சொன்னார்.

சுமந்திரன் குளியறையில் முணுமுணுத்தார்.

இப்படி கேனைத்தனமா செய்தி போட ஒரு இணையதளம் - அதையும் சீரியசாக எடுத்து அப்செட் ஆக ஒரு பத்துப் பேர்.

ஒரே கூத்துத் தான் :)

அண்மையில் சுமந்திரன் ரணில் சி வி பிணக்குப் பற்றி கனடாவில் வழங்கிய செட் அப் பேட்டியில் சொல்லி இருந்தவற்றின் அடிப்படையிலே நான் எழுதிய கருத்து. மேல் உள்ள செய்தில் மட்டும் அல்ல. 

தேசியத்தலைவர்  வழிகாட்டி  போன  கூட்டமைப்பை  எவர்  விமர்சனம்  செய்தாலும்  அவர்கள்  தேசியத்தலைவரை  விமர்சிப்பதுக்கு  சமன் .... :unsure:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது.
ஆனால் விக்கியரின் திடீர் அரசியல் வளர்ச்சி
SMS ஆகியோரின் அரசியல் எதிர்காலத்திற்கு

அச்சமூட்டும் வகையில்  உள்ளது மட்டும் உண்மை.
 

  • கருத்துக்கள உறவுகள்

உருவாக்கியவரையே

பயங்கரவாதி என்ற கூட்டமைப்பின் தலமை உலமெல்லாம் சொல்லும் போது.... :(  :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் வழிகாட்டி போன கூட்டமைப்பை எவர் விமர்சனம் செய்தாலும் அவர்கள் தேசியத்தலைவரை விமர்சிப்பதுக்கு சமன் .... :unsure:

கூட்டமைப்பு தலைவரை பயங்கரவாதி என விமர்சித்த போதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என சிலரை வெளியில் விடும் போதும் தூங்கியா இருந்தார்கள்.

இதுக்கு பச்சை வேற.

  • கருத்துக்கள உறவுகள்

வைரத்தை வைரத்தால் மட்டுமே வெட்ட முடியும். அதுபோல் தமிழனைத் தமிழனால் மட்டுமே அழிக்க முடியும். சும்மா இந்தியா, சிங்களவன் என்றெல்லாம் புலம்புவதில் ஒன்றுமில்லை. :(   

கூட்டமைப்பு தலைவரை பயங்கரவாதி என விமர்சித்த போதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என சிலரை வெளியில் விடும் போதும் தூங்கியா இருந்தார்கள்.

இதுக்கு பச்சை வேற.

கூட்டமைப்பில் தமிழரசு கட்சிதான்  பிரச்சினை  என்றால்  அவர்களை  எல்லா  பிற  தலைவர்கள்  சேர்த்து  ஒரு  தீர்மானம்  போட்டு  நிக்கி  விட்டு  அவர்கள்  தொடர்த்து  கூட்டமைப்பை  வழிநடத்தலாம்  அதுதான்  ஜனாயகம்  ஆக்கும் ...........

 

அதை  விடுத்து  வசைபாடல்  அல்ல  மக்கள்  தெளிவா  உள்ளார்கள்  அடுத்த  தேர்தல்  அதுக்கான  முடிவை   எழுதும் ...

 

 

கிளிநொச்சியில்  சிறிதரன் எம்பி  ஆடும் ஆட்டம்  அதிகமா  போயிட்டு  இருக்காம் அதனால்  அங்கு  உள்ள  மலையாக  தமிழர்கள்  சிறிதரனில்  இருந்து  பிரிந்து  சந்திரகுமார் தலைமையில்  ஒரு  மலையாக  கட்சி  ஆரம்பிக்க  போவதா  தகவல் ஆகவே எம்பிடம் அதிகாரம்  வந்தால்  நாங்களும்  சும்மா  வலை  வைத்துக்கொண்டு  இருபது  இல்லை ..

 

குறிப்பு..  வன்னியில்   மலையக தமிழரே  அதிகம் .

தனிப்பட்ட சந்திப்பில் மாவை சொன்னார்.

சுமந்திரன் குளியறையில் முணுமுணுத்தார்.

இப்படி கேனைத்தனமா செய்தி போட ஒரு இணையதளம் - அதையும் சீரியசாக எடுத்து அப்செட் ஆக ஒரு பத்துப் பேர்.

ஒரே கூத்துத் தான் :)

நாட்டை விட்டு ஓடி வந்ததே அதற்கு தானே . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கொழும்பிலிருந்து தொடர்புகொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரிடமே இவ்வாறு சிரித்துக்கொண்டு தெரிவித்தார் விக்கினேஸ்வரன்.

எனினும் மற்றொரு சுயாதீன தகவல், பதிவு இணையத்தில் வெளியதான செய்தி தொடர்பில் முதலமைச்சர் மாவையுடன் தொடர்பு கொண்டதாகவும் தான் பொதுவாகவே கட்சியின் கட்டுப்பாட்டை எவர் மீறினாலும் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்ததாகவும் தங்களுடைய பெயரை குறிப்பிடவில்லையென சமாளித்தது பதிலளித்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது.

முன்னதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற மற்றொரு பாடசாலை நிகழ்விலும் இதே கருத்தினை வெளியிட்ட மாவை குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்தவர்களிற்கு யதார்த்தம் தெரியாதென குறை சொல்லியுள்ளார். அப்போது மற்றொரு கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கிருந்ததுடன் அவரும் அதனை ஆமோதித்துள்ளார்.

முன்னதாகவே முதலமைச்சர் கனவிலிருந்த மாவை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அழைப்பின் பின்னர் ஞானோதயம் பெற்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டது தெரிந்ததே.

இந்நிலையில் இன அழிப்பு பிரேரணை, ரணில் தலைமையிலான அரசை புறக்கணித்துவருகின்றமை, சோரம் போகாது நிஜத்தை பேசிவருகின்றமை போன்றவை என்றுமில்லாத அளவில் முதலமைச்சரது செல்வாக்கினை அதிகரிக்க வைத்துள்ளது.

கூட்டமைப்பிலுள்ள பிறகட்சிகளும் அண்மைக்காலமாக முதலமைச்சர் தொடர்பில் முன்வைக்கின்ற கடுமையான விமர்சனங்களை தவிர்த்துவருவதுடன் மென்போக்கையே கடைபிடிக்கின்றன.

மாவை சேனாதிராசா முதலமைச்சர் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலான செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் பதிவு தனது செய்தி மூலங்கள் தொடர்பிலும் கூடிய அக்கறை கொண்டு செயற்படுகின்றதென்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றது.

மாவை கடந்த மூன்று நாட்களினில் நடத்திய சந்திப்புக்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் தெரிந்தேயுள்ளதென்பதையும் அறியத்தருகின்றது.http://www.pathivu.com/news/38855/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ

இப்ப பதிவு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி தொலைபேசியில் விக்னேஸ்வரன் சொன்னார் என்று செய்தி போடுது.

இருந்து பாருங்கோ அடுத்ததா ஓபாமா SMS அனுபினார் எண்டும் சொல்ல்லும்.

இதெல்லாம் ஒரு ஊடகம் ....த்தூ....

இதுக்கு டக்கியோட சேர்ந்து மாமா வேலை பார்கலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியது உண்மைத்தன்மை பற்றிய கேள்வி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும், தவிர தற்போதைய தமிழ்த் தலைவர்களது செயற்பாடுகள் ஒரு தலைமையது கட்டுக்கோப்புக்குள் இல்லாது தறிகெட்டு ஓடுவதாக தெரிகின்றது. இந்திய ஊடகவியலாளர் ஒருவரது நேற்றைய கருத்துப்படி வடக்கு முதல்வரது தற்போதைய நடவடிக்கைகள் வரையறுக்கப்படல்வேண்டும் எனும் பொருள் பட பத்தி எழுதியிருக்கிறார்.

 

தமிழர் கூட்டமைப்பு இந்தியாவின் தெற்குமாடத்தினர் தீர்மானிக்கும் விடையங்களை வடக்குக் கிழக்கில் செயற்படுத்தும் தொண்டர்படையாக மாறிவருகின்றது. ஒத்துவராதவர்களை ஓரம்கட்டுவதில் இவர்கள் தற்போது முண்ணணியில் நிற்கிறார்கள்.

 

சுமந்திரன் கனடாவில் பத்திரிகையாளர் சந்திப்பு(?) எனும் பெயரில் கொடுத்த செவ்வியில் கூட்டமைப்பை நாம் எப்போதோ அரசியல் கட்சியாகப் பதிவுசெய்தாயிற்று எனக்கூறியது உண்மைக்குப் புறம்பான செய்தி என சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இப்போது கூறியிருக்கிறார்.

 

அனேகமாக விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட எவையும் இனிமேல் மீசமிருக்கக் கூடாது அவை யாவும் மாவீரர் துயிலுமில்லங்கள்போல் அழித்தொழிக்கப்படல்வேண்டும் எனும் தமிழர் விரோத தேசம் இந்தியாவினதும் அதன் கைக்கூலி சிங்களத்தினதும் விருப்பத்தை தமிழர்களது தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சிலர் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

 

இதன்மூலம் தங்கள் தலையிலேயே அவர்கள் மண்ணை வாரிப்போடுகிறார்கள். தமிழர் தரப்புக்கு எதுவித இழப்புகளும் ஏற்படப்போவதில்லை.

 

முள்ளிவாய்க்கலுக்குப் பின்பு எல்லாமே முடிந்துவிட்டது என எமது எதிரிகள் அனைவரும் நினைத்ததுக்கு மாறாக மீண்டும் தமிழினம் தழைத்து நிற்பதிலிருந்தே இதை யாரும் உணர்ந்துகொள்ளலாம்.

 

தவறுகளே எதிர்காலத்தில் எமது சரியான பாதையினை இனம்காட்டி நிற்கும் அவ்வகையில் இன்னமும் மூர்க்கமாக விடுதலை நோக்கிய பயணத்தில் எமதினத்தின் மேய்ப்பர்கள் எனக்கூறுவோரது தவறுகளே இன்னுமொரு சீரிய தலைமையை தமிழினம் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்

 

அத்தலைமை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் விஞ்சிய ஒரு தலைமையாகவும் இருக்க வாய்ப்புண்டு.

 

சிலருக்கு நான் கூறுவதில் அதீத கற்பிதம் எனும் கருத்துரு இருக்கலாம் வரலாறு எப்போதும் ஒன்றைவிட இன்னுமொன்று பெரிதெனவே எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

 

அப்படியான தலைவன் உனது கொல்லைப்புறத்து அரசியற் பட்டறையிலிருந்தும் உருவாக்கப்படலாம், அதுவரை பசித்திரு தமிழா.

நாட்டை விட்டு ஓடி வந்ததே அதற்கு தானே . :icon_mrgreen:

நீங்க மட்டும் தான் நடந்து வந்ததது. மத்தவங்க எல்லாம் ஓடி வந்தாங்க.

ஐயோ ஐயோ

இதுக்கு டக்கியோட சேர்ந்து மாமா வேலை பார்கலாம் :)

நீங்க இருக்கேக்க ஏன் டக்கியோட சேர்ந்து அந்த வேலை பார்க்கணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.