Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார், அனந்தி தரப்பை எம்.பியாக்குங்கள் சுவிஸ் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கெஞ்சல்

Featured Replies

சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. ( இந்த தமிழர் தரப்பு யார் என்பதை சில காரணங்களுக்காக தற்போது வெளியிடவில்லை)

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினரால் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு கோரப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இணங்கவில்லை என்றும் தெரியவருகிறது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் எனக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியை இங்கே தருகிறேன்.

இச்சந்திப்பு பற்றிய முழுமையான தகவல்கள் தற்போது வெளியிடுவதை சில காரணங்களுக்காக தவிர்த்திருக்கிறோம். எனினும் விரைவில் இது பற்றிய முழுமையான தகவல்களை வெளியிட உள்ளோம். அப்போது பலரின் முகமூடிகள் கிழியும்.

இரா.துரைரத்தினம்

http://www.thinakkathir.com/

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

தினக்கதிர் ஜால்ரா போடதுவங்கிவிட்டது TNAக்கு . :D

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே தப்பு

 

 

இது போன்ற வியாபாரங்கள்

புலத்தையும் தாயகத்தையும் பிரிக்கவே உதவும்

புலம் பெயர் தமிழர்கள் எவரிடமும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை...

அது தாயக தமிழரையே பாதிக்கும்........  :(  :(  :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தினக்கதிர் சுவிஸ் தமிழரை கேவலப்படுத்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல் ஜோக்குத்தான்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பே தப்பு

 

 

இது போன்ற வியாபாரங்கள்

புலத்தையும் தாயகத்தையும் பிரிக்கவே உதவும்

புலம் பெயர் தமிழர்கள் எவரிடமும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை...

அது தாயக தமிழரையே பாதிக்கும்........  :(  :(  :(

 

கவலையே வேண்டாம் சுமந்திரன் கிட்டடியிலை பிரிச்சு காட்டுவார்.

இவர்களை எல்லாம் விலத்திவைத்து ஒரு ஆரோக்கியமான அரசியலை கூட்டமைப்பு உருவாக்கவேண்டும் ,அதுவும் குறிப்பாக தமிழர்களிடம் உறிஞ்சிய பணத்தை வைத்து ஜி ஜி பரம்பரையே தமிழர்களுக்கு கெடுதல் தொடர்ந்தும் செய்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எல்லாம் விலத்திவைத்து ஒரு ஆரோக்கியமான அரசியலை கூட்டமைப்பு உருவாக்கவேண்டும் ,அதுவும் குறிப்பாக தமிழர்களிடம் உறிஞ்சிய பணத்தை வைத்து ஜி ஜி பரம்பரையே தமிழர்களுக்கு கெடுதல் தொடர்ந்தும் செய்கின்றார்கள் .

 

அதுசரி கொழும்புத் தெருவில் குமார் பொன்னம்பலம் தமிழரிட்டக் காசை அடிச்சுக்கொண்டு ஓடேக்கதான் புலியள் அவரைச்சுட்டவையள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் விலத்தி சித்தாத்தனை கூட்டமைப்பில் இணைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களை கூடிய அளவில் விலத்தி கூத்தமைப்பு 
கூத்து கட்டவேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம் போல் இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் கெஞ்சாமல் கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தேர்தலில் வெல்லுவதற்கான வழிவகைகளைத் தேடவேண்டும். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தமிழர்களுக்கு நல்லது செய்கின்றோம் என்று சொல்லித் தமது வாழ்நாளைப் போக்கிக்கொண்டிருக்கும் நந்திகளை அடையாளம் கண்டு அகற்றாவிட்டால் தமிழர்களுக்கு விமோசனம் கிட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுக்காசும் தேறாது! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியை மக்களே தெரிவு செய்தார்கள். எனியும் செய்வார்கள். அதேபோல் கஜேந்திரனும் மக்களால்.. தெரிவு செய்யப்பட்டு சிங்களப் பாராளுமன்றம் போனவர் தான். உண்மையில்.. இங்கு கெஞ்ச வேண்டியது மக்களை நாடியே வர முடியாது.. கொழும்பில் பதுங்கிக் கிடக்கும்.. பின் வாசல்.. சுமந்திரன் கும்பலினர் தான்..! :D:lol:

என்னத்திக்கு இந்த சுமந்திரன் சம்பந்தனிடம் கெஞ்சுவான் . மக்கள் தாமாகவே தெரிவு செய்வார்கள் .
திருந்தாத அந்த இருவருக்கும்  இம்முறை தேர்தல் நல்ல பாடம் சொல்லும் ....
 
சம்பந்தன் விரைவில் சங்கரியரையும் சேர்ப்பார் ... சித்தார்த்தனை சேர்த்ததும் அர்ஜுனுக்கு எங்கையோ துள்ளி இருக்குமே ....
 
இவனும் புலிகள் அழிந்ததில்  சந்தோசம் என்றவன் தானே ... இப்ப மக்களிடம் தலைவரினை சொல்லி ஆதரவு தேடி அலைகின்றார் ..... வெட்கமில்லை ....
  • கருத்துக்கள உறவுகள்

 

என்னத்திக்கு இந்த சுமந்திரன் சம்பந்தனிடம் கெஞ்சுவான் . மக்கள் தாமாகவே தெரிவு செய்வார்கள் .
திருந்தாத அந்த இருவருக்கும்  இம்முறை தேர்தல் நல்ல பாடம் சொல்லும் ....
 
சம்பந்தன் விரைவில் சங்கரியரையும் சேர்ப்பார் ... சித்தார்த்தனை சேர்த்ததும் அர்ஜுனுக்கு எங்கையோ துள்ளி இருக்குமே ....
 
இவனும் புலிகள் அழிந்ததில்  சந்தோசம் என்றவன் தானே ... இப்ப மக்களிடம் தலைவரினை சொல்லி ஆதரவு தேடி அலைகின்றார் ..... வெட்கமில்லை ....

 

அது மனிதர்களுக்கு மட்டுமே உரியது !

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எல்லாம் விலத்திவைத்து ஒரு ஆரோக்கியமான அரசியலை கூட்டமைப்பு உருவாக்கவேண்டும் ,அதுவும் குறிப்பாக தமிழர்களிடம் உறிஞ்சிய பணத்தை வைத்து ஜி ஜி பரம்பரையே தமிழர்களுக்கு கெடுதல் தொடர்ந்தும் செய்கின்றார்கள் .

தமிழர்களின் உயிரை உறிஞ்சிய சித்தர் வாழ்க.

கஜேந்திரன் ,அனந்தி ஆகியோர் தமிழர்களுக்கு செய்த கெடுதல்கள் கொஞ்சமா?

  • தொடங்கியவர்

தலைப்பே தப்பு

 

 

இது போன்ற வியாபாரங்கள்

புலத்தையும் தாயகத்தையும் பிரிக்கவே உதவும்

புலம் பெயர் தமிழர்கள் எவரிடமும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை...

அது தாயக தமிழரையே பாதிக்கும்........  :(  :(  :(

2010இல் கனடாவில் கஜேந்திரகுமார் கூட்டத்தை ஆதரித்தவர்கள் கனடா TNA இடம் கெஞ்சினவர்கள் ,அதுவும் குதிரை கஜேந்திரனுக்கு மட்டும் சந்தர்ப்பம் கொடுங்கள் தாங்கள் எல்லா விதமான உதவிகளும் TNA க்கு செய்கின்றோம் என்று .

  • தொடங்கியவர்

எல்லோரையும் விலத்தி சித்தாத்தனை கூட்டமைப்பில் இணைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம்.

மண்டையன்குழு சுரேஷ் ,அடைக்கலநாதனை விட்டுட்டீங்க .

  • கருத்துக்கள உறவுகள்

2010இல் கனடாவில் கஜேந்திரகுமார் கூட்டத்தை ஆதரித்தவர்கள் கனடா TNA இடம் கெஞ்சினவர்கள் ,அதுவும் குதிரை கஜேந்திரனுக்கு மட்டும் சந்தர்ப்பம் கொடுங்கள் தாங்கள் எல்லா விதமான உதவிகளும் TNA க்கு செய்கின்றோம் என்று .

 

 

தயவு செய்து இது போன்று கெஞ்சினார்கள் என்ற பதத்தை பாவிக்காதீர்கள்....

 

எமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம்

ஆனால் ஆகக்குறைந்தது 

சுய கௌரவங்களைப்பாதிக்காத சொற்களாவது வேண்டும்.

நன்றி

வடக்கில் அனத்தி மட்டும் இல்லை  வானதி என்று ஒராள்  நின்றாலும் அவருக்கு  அதிக வாக்கு விழுந்தே  இருக்கும் ஏனெனில்  தமிழர்கள் ஒரு தலைவனை ஏற்றவர்கள் ....

 

அது  தெரியாமல்  இவர்கள் அரசியல் இலாபம்  அடைய  நினைத்தால் வரும் காலத்தில்  காணாமல்  போவர்கள்  மக்கள் மத்தியில் .

தலைப்பே தப்பு

 

 

இது போன்ற வியாபாரங்கள்

புலத்தையும் தாயகத்தையும் பிரிக்கவே உதவும்

புலம் பெயர் தமிழர்கள் எவரிடமும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை...

அது தாயக தமிழரையே பாதிக்கும்........  :(  :(  :(

 

இது போன்ற நடத்தையால் தான் லிபரலின் கோட்டையாகிய ஸ்காபுரோ தொகுதியை புலம் பெயர் தமிழர்களின் மூலம் மூன்று பிரிவுகளாக சிதறடித்து வைத்துள்ளார்கள்.இப்போ இதற்கு எதிர் கருத்து எழுதாமல் தேர்தல் வரையும் பொறுத்திருந்து பாருங்கள்.வந்தேறு குடிகளுக்கு எதிரான கனடிய கன்சவேட்டிக் கட்சியின் கை டொரொன்டோவில் இன்று பலம் பெற்றுள்ளது தான் உண்மை.இதேவழியில் தான் ஈழத்தமிழர்களும் காழ்புணர்வாகிய கருத்துக்களால் உடைக்கப்படுகின்றனர்.அதைவிட உண்மையான செயல்பாட்டாளர்களுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள உறவுகளைக்குறிவைத்து அனாமதேய தொலைபேசி மிரட்டல்கள் வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன்குழு சுரேஷ் ,அடைக்கலநாதனை விட்டுட்டீங்க .

கூட்டமைப்பு என்டால் தமிழரசு கட்சி தான் என்ற நினைப்பு.

கூட்டமைப்பு எப்படி தோற்றம் பெற்றது என்டு கனபேருக்கு தெரியவில்லை.

2010இல் கனடாவில் கஜேந்திரகுமார் கூட்டத்தை ஆதரித்தவர்கள் கனடா TNA இடம் கெஞ்சினவர்கள் ,அதுவும் குதிரை கஜேந்திரனுக்கு மட்டும் சந்தர்ப்பம் கொடுங்கள் தாங்கள் எல்லா விதமான உதவிகளும் TNA க்கு செய்கின்றோம் என்று .

எதிர் கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தர் கெஞ்சிற மாதிரியா?

அல்லது கிழக்கு மாகாண சபைக்கு சம்பந்தர் கெஞ்சின மாதிரியா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் மட்டும் அனந்திக்கு சீட்டே கொடுபடாதாம். இதுக்க எம் பி ஆவது மண்ணாவது.

கஜேந்திரகுமார், அனந்தி நல்லா வந்திருக்க வேண்டிய அடுத்த தலைமுறை தலைவர்கள்.

புல வாலுகளின் எடுப்பார் கைபுள்ள ஆகியதால் இப்போ சீந்துவாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் மட்டும் அனந்திக்கு சீட்டே கொடுபடாதாம். இதுக்க எம் பி ஆவது மண்ணாவது.

கஜேந்திரகுமார், அனந்தி நல்லா வந்திருக்க வேண்டிய அடுத்த தலைமுறை தலைவர்கள்.

புல வாலுகளின் எடுப்பார் கைபுள்ள ஆகியதால் இப்போ சீந்துவாரில்லை.

சிரிப்பு வருது உங்கள் கருத்தை பார்த்து நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் மட்டும் அனந்திக்கு சீட்டே கொடுபடாதாம். இதுக்க எம் பி ஆவது மண்ணாவது.

கஜேந்திரகுமார், அனந்தி நல்லா வந்திருக்க வேண்டிய அடுத்த தலைமுறை தலைவர்கள்.

புல வாலுகளின் எடுப்பார் கைபுள்ள ஆகியதால் இப்போ சீந்துவாரில்லை.

நல்லவன் ஒருவன் இனி தலை தூக்கவே முடியாது ....
உங்கள் திருப்திக்கு பழியை யார் மீதாவது போட்டுகொள்ளலாம்.
 
சுமந்திரன் போன்று இனத்தை விற்பவர்கள் 
சம்மந்தர் போல நேரம் ஒரு பேச்சு பேசும் பிசான்கிகள்தான் 
இனி ஊர்வலம் வரலாம்.
 
யாரவது தமிழ் அது இது என்று சவுண்டு விட்டால்.
மூதேவிகளே கவனித்து கொள்வார்கள். 
சிங்களவன் இந்தியன் எல்லாம் இனி இந்த சின்ன மாட்டருக்கு 
ஒரு நிமிடம் கூட யோசிக்க போவதில்லை. 
 
முதல்வர் சி வி அவர்கள் 
என்ன ஆவார் என்பது ?
 
தேர்தல் முடிய தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.