Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு செய்திருக்கும் வேலையைப் பாருங்க!

Featured Replies

திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! :shocked:

 

 லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான்.

ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்களாம் பலரும். அதாவது திண்ணையில் இரும்புக் கம்பியை பதித்து வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களாம் பலர்.

உலகப் பொது எண்ணம் நம் ஊர்களில் பார்த்திருக்கலாம். அடுத்தவர் வந்து நம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடக் கூடாது என்பதற்காக சிலர் முள்ளைப் போட்டு வைப்பார்கள், சிலர் எதையாவது சும்மாவாவது போட்டு வைத்திருப்பார்கள். சிலர் கல்லைக் கொட்டி வைப்பார்கள்.
 
பஸ் ஸ்டாப்களில் அதேபோல பஸ் ஸ்டாப்களில் ரொம்ப நேரம் உட்கார்ந்து கடலை போடுவோரை விரட்டுவதற்காகவே சீட்டை மட்டும் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். வெறும் இரும்புக் கம்பி மட்டும் இருக்கும். ஆனால் அதிலும் கூட சில விடலைகள் தங்களது சீட்டை படு லாவகமாக வைத்துக் கொண்டு அமர்ந்து கடலையைத் தொடர்வதும் உண்டு.
24-1437731716-brutal-anti--homeless-spik
லண்டன் குசும்பர்கள் லண்டனிலும் இதேபோன்ற குசும்புத்தனம் அதிகரித்துள்ளதாம். வீடுகளின் முன்புறங்களில் வீடு இல்லாதவர்கள் வந்து முகாமிட்டு விடக் கூடாது என்பதற்காக விதம் விதமான வில்லத்தனங்களை செய்கிறார்களாம் அவர்கள்.
 
திண்ணைகளில் இரும்பு முள் வீட்டின் முன்புறம் உள்ள திண்ணை போன்ற பகுதிகளில் இரும்பு முள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி வைக்கிறார்களாம். இதற்கு டிபன்சிவ் ஆர்க்கிடெக்சர் என்று பெயர் வேறு சூட்டிக் கொள்கிறார்கள்.
 
சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு இத்தகைய செயலுக்கு சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஆர்க்கிடெக்சர் இல்லை. மனிதாபிமானமுற்ற குறுகிய புத்தி கொண்ட செயல் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
 
யாழ் திண்ணையை மோகன் அண்ணா இடித்து தள்ளி விட்டார்.:shocked::(

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா பிரதமர் யாழ்ப்பாணம் சென்ற பொழுது அங்கு எங்கன்ட ஆட் கள் மதிலின் மேல் உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்திருப்பதை பார்த்த பின்பு தான் இப்படியான ஐடியா அவருக்கு வந்து அதை அங்கு அமுல்படுத்துகிறார்.......கி...கி...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் திண்ணையை பறித்தவை கற்களல்ல

கல் மனங்கள்.......:(:(:(

யாழின் பழைய திண்ணையை மிஸ் பண்ணுறம் நிர்வாகமே 

யாழ் திண்ணையை பறித்தவை கற்களல்ல

கல் மனங்கள்.......:(:(:(

 

அபாண்டம் அபாண்டம்

யாழ் திண்ணை இப்பவும் வேலை செய்யுது... முன்னர் மாதிரி விளம்பரப் பலகையாக அதை பயன்படுத்த முடியாதபடி,மறைந்து இருந்து பார்க்காதபடி, உரையாடலில் முன்னர் கலந்து கொள்ளாதவர்கள் பிறகு வந்து விடுப்பு பார்க்காதபடி மென்பொருள் வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர்..அதுதான் ஒரே மாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

 

அபாண்டம் அபாண்டம்

யாழ் திண்ணை இப்பவும் வேலை செய்யுது... முன்னர் மாதிரி விளம்பரப் பலகையாக அதை பயன்படுத்த முடியாதபடி,மறைந்து இருந்து பார்க்காதபடி, உரையாடலில் முன்னர் கலந்து கொள்ளாதவர்கள் பிறகு வந்து விடுப்பு பார்க்காதபடி மென்பொருள் வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர்..அதுதான் ஒரே மாற்றம்

இப்படியாக ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்தும் போது ஒரு அவசரம் அந்தரத்திற்கு கூட திண்ணையில் யாரும் எதையும் பதிவிட முடியாது என்பதையாவது புரிந்து கொள்வீர்களா..ஏதோ நடக்கட்டும்..

 

  • தொடங்கியவர்

 

அபாண்டம் அபாண்டம்

யாழ் திண்ணை இப்பவும் வேலை செய்யுது... முன்னர் மாதிரி விளம்பரப் பலகையாக அதை பயன்படுத்த முடியாதபடி,மறைந்து இருந்து பார்க்காதபடி, உரையாடலில் முன்னர் கலந்து கொள்ளாதவர்கள் பிறகு வந்து விடுப்பு பார்க்காதபடி மென்பொருள் வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர்..அதுதான் ஒரே மாற்றம்

அது திண்ணையா? சட் ரூமா ?:grin:

ஹஹா  உண்மைதான் இந்த விடயங்களால் இப்போ நிர்வாகத்திற்கு ஒரு பிரச்சனை குறைவு. நாங்களும் புதிய திண்ணை அல்லது சட் ரூமை பழகி கொள்ள வேண்டியதுதான்.:)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எழுத்தில வரகேக்க சரிதான்,

உங்க, கடையலுக்கு முன்னால, சின்னப்பிள்ளையள் விளையாடுற பார்க்கில வந்து, படுத்தெழும்பி, மூச்சா, பீச்சா எல்லாம் போற, ஈஸ்ரேன் ஜரோப்பாவில இருந்து வந்து இருக்கிற கூட்டம் பத்தி தெரியுமே?

இந்தியாவில, ஊரில எண்டால், ஆள் வைச்சு, போலீசை வைத்து திரத்தலாம். உங்க தொட ஏலாது. தொட்டால் நாம தான் உள்ள போகனும்.

அதிலும் பார்க உது சரியான வேலை தானே!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழ் தற்போதைய திண்ணை பிடிச்சிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

பாசக்காரபயபுள்ளைக திண்ணையில தனிய புலம்ப வச்சிட்டங்களே:(

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவர்கள் வந்து தங்கி திண்ணையைப் பழுதாக்காமல் இருக்காமல் இப்படியான ஏற்பாடுகள் செய்வது வழமைதானே. இப்போது மதில் சுவரில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் எல்லாம் ஒட்டமுடியாது. முள்ளுக்கம்பி அடித்தால், கள்ளன் உள்ளே வரும்போது அவனை முள்ளுக்கம்பி கிழித்தாலும் வீட்டுக்காரர் மீது கள்ளன் வழக்குப் போடலாம்!

ஆனால் நல்ல முள்ளுள்ள மரங்களை வேலியோரமாக நாட்டி அதன் முள்ளுக் கீறினால் ஒரு வழக்கும் போடமுடியாது. இப்படி இருக்கு நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேல காட் போட்டை போட்டிட்டு அதுக்கு மேல குயில்ட்டை அடுக்கிப் போட்டு சனம்.. நல்ல பெட் செய்து படுக்குதுங்க. தரையில படுக்கிறதை விட இது சோக்கா இருக்காம். இஞ்ச புறாவுக்கும் வந்து குந்தாமல்.. முள்ளு வைச்சவை.. அது அதிலையே கூடு கட்டி குடும்பம் நடத்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.