Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துக்ளக் ஆசிரியர் சோ கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1443163381-931.jpg
 
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து ஆபத்தான நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tughluq-editor-cho-health-serious-condition-115092500030_1.html

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் உன்னை நெருங்கும்போது... என்ன செய்ய வேண்டும் என்று பகவத் கீதை மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கின்றது!

மரணத் தறுவாயில் ... நீ என்ன மன நிலையிலிருக்கிறாயோ... அந்த மனநிலையே உனது.. அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றது!

சாந்தமும்.. அமைதியும்.. உன்னை ஆட்கொள்ளட்டும்!

யாரையெல்லாம் துச்சமாக மதித்தாயோ..அவர்களின் மண்ணே உனக்கு வாழ்வையும், வசதிகளையும் அள்ளித் தந்தது என்பதையும் மறந்து விடாதே  ....அவர்களும் உன்னை மன்னிக்கட்டும்!

அடுத்த பிறவியிலாவது ஆணவத்துக்கு விடை கொடு!

எல்லோருக்குள்ளும்  உறைந்திருப்பது..ஒரே ஜீவாத்மாவே! அதையும் உனது கீதை தான் சொல்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கிட்டடியில நல்ல செய்தி வரும் என்கிறீர்கள்.

 

சிலர் என்னை மிருகத்த்னமாகப் பதிவிடுகிறீர்கள் என முணுமுணுப்பது தெரியுது, என்னை மிருகமாக்கியதே இவர்கள்போன்றோர்தானே.

தமிழ் நாட்டின் மிக சிறந்த பத்திரிகையாளர் .

கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று அனைவரினது ஆட்சியையும் துணிந்து விமர்சித்த ஒரே பத்திரிகையாளர்.

அதே போல  எமது ஆயுத போராட்டத்தையும் தொடர்ந்து விமர்சித்தார் (அது எங்களுக்கு பிடிக்காதே தேவாரம் பாடித்தானே பழக்கம்) .

இருக்கும் போதே ஒரு நாடக இயக்குனராக நடிகராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக  நிறைய சாதித்துவிட்டார் .இனி விடைபெற்றாலும் பரவாயில்லை .

தமிழ் நாட்டின் மிக சிறந்த பத்திரிகையாளர் .

கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று அனைவரினது ஆட்சியையும் துணிந்து விமர்சித்த ஒரே பத்திரிகையாளர்.

அதே போல  எமது ஆயுத போராட்டத்தையும் தொடர்ந்து விமர்சித்தார் (அது எங்களுக்கு பிடிக்காதே தேவாரம் பாடித்தானே பழக்கம்) .

இருக்கும் போதே ஒரு நாடக இயக்குனராக நடிகராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக  நிறைய சாதித்துவிட்டார் .இனி விடைபெற்றாலும் பரவாயில்லை .

அவர் ஆயுதப் போராட்டத்தினை விமர்சித்தது தவறில்லை. ஆனால் மிக மோசமான மனிதப்படுகொலைகளை செய்த இலங்கை அரசினையோ அல்லது இந்திய அரசின் கபடத்தனத்தினையோ ஒரு போதும் கடுமையாக  விமர்சித்தது இல்லை. தன்  பார்ப்பன கொள்கையுடனேயே எல்லாவற்றினையும் அணுகியவர். இந்திய படைகள் செய்த எந்த ஒரு அட்டூழியத்தினையும் செய்ததாக ஏற்றுக்கொள்ளாதவர். இவரது பெண் அடிமைத்தனமான கருத்துகள்  மிக மோசமானவை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சோ வை எனக்கு மிகவும் பிடிக்கும். பின்பு அறிவுஜீவி என எல்லோரும் அழைக்கத் தொடங்க அந்தக் கர்வத்தை தலையின் மேல் ஏற்றிக் கொண்டார். எம்.ஜி. ஆர் , கருணாநிதி எல்லாம் அவரை அவருக்குரிய இடத்தில் வைத்திருந்தனர். அம்மையார்தான் அவரை அடுப்படிவரை உலவ விட்டவர்.

நல்ல அறவாளி, என்ன எமக்கு எட்டிக் காயாகப் போயிட்டார்...!

மாஹா பாரதம் புத்தகத்தில் இடையிடையே தனது கருத்துக் களையும் குறிப்பிட்டிருப்பார். அழகாய் இருக்கும்.

எங்கே பிராமணன் எல்லாம் நல்ல விடயங்கள்...!

எப்படியாயினும் அவர் குணமடைந்து வர வேண்டும்.

 

அவர் ஆயுதப் போராட்டத்தினை விமர்சித்தது தவறில்லை. ஆனால் மிக மோசமான மனிதப்படுகொலைகளை செய்த இலங்கை அரசினையோ அல்லது இந்திய அரசின் கபடத்தனத்தினையோ ஒரு போதும் கடுமையாக  விமர்சித்தது இல்லை. தன்  பார்ப்பன கொள்கையுடனேயே எல்லாவற்றினையும் அணுகியவர். இந்திய படைகள் செய்த எந்த ஒரு அட்டூழியத்தினையும் செய்ததாக ஏற்றுக்கொள்ளாதவர். இவரது பெண் அடிமைத்தனமான கருத்துகள்  மிக மோசமானவை

 

 

அவர் எவ்வளவு கீழ்தரமாக மோசமாக நடந்து கொண்டாலும் பரவாயில்லை. புலிகளை திட்டி திரிந்தாரே அது போதும் திரு அர்ஜீன் அவர்களுக்கு. உலகில் எந்த மோசமாக கெட்டவனும் புலிகளை திட்டினால் அவர் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது ஒன்றும் புதுமையில்லயே.  வழமையானது தானே நிழலி. யாழ்கள வாசகர்கள் அறிந்ததே.

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சோ வை எனக்கு மிகவும் பிடிக்கும். பின்பு அறிவுஜீவி என எல்லோரும் அழைக்கத் தொடங்க அந்தக் கர்வத்தை தலையின் மேல் ஏற்றிக் கொண்டார். எம்.ஜி. ஆர் , கருணாநிதி எல்லாம் அவரை அவருக்குரிய இடத்தில் வைத்திருந்தனர். அம்மையார்தான் அவரை அடுப்படிவரை உலவ விட்டவர்.

நல்ல அறவாளி, என்ன எமக்கு எட்டிக் காயாகப் போயிட்டார்...!

மாஹா பாரதம் புத்தகத்தில் இடையிடையே தனது கருத்துக் களையும் குறிப்பிட்டிருப்பார். அழகாய் இருக்கும்.

எங்கே பிராமணன் எல்லாம் நல்ல விடயங்கள்...!

எப்படியாயினும் அவர் குணமடைந்து வர வேண்டும்.

உண்மை.

பலருக்கு நடந்த பல விடயங்கள் தெரியாது .எழுதியும் பிரயோசனமில்லை .

சோ என்ற பிராமணன் மாத்திரம் அல்ல ஜெயகாந்தனும் அதையே தான் செய்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

சோ நல்ல திறமைசாலியாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழருக்கு எதிராக செயற்படுபவர். இவர் இருந்தால் என்ன இல்லாமல்போனால் என்ன டோண்ட் கெயார். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எவ்வளவு கீழ்தரமாக மோசமாக நடந்து கொண்டாலும் பரவாயில்லை. புலிகளை திட்டி திரிந்தாரே அது போதும் திரு அர்ஜீன் அவர்களுக்கு. உலகில் எந்த மோசமாக கெட்டவனும் புலிகளை திட்டினால் அவர் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது ஒன்றும் புதுமையில்லயே.  வழமையானது தானே நிழலி. யாழ்கள வாசகர்கள் அறிந்ததே.

அது தேவாரத்திட்குள் வரவில்லைதானே ....?
அது திருவாசகம் காவடி ஆட்டங்களுக்குள்    வருவதால் அது பரவயில்லை. 

சோ ராமசாமி நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர் தகவல்

 

cho%20-%20modi%20400.jpgசென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சுவாசக்கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும், உடல் நலம் தேறி வீடு திரும்புவதுமாக இருந்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம்  பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து சென்றார் மோடி. அதேப்போல் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சோவை சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றார்.

இந்நிலையில் ஓரளவு உடல் நலம் தேறியதை தொடர்ந்து வீடு திரும்பிய சோ ராமசாமிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  சமூக வலைத்தளங்களில் வேறுவிதமாக செய்தி பரவியது.

இந்நிலையில் சோ நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குடும்ப மருத்துவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=52921

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோ ராமசாமி காலமானதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

சென்னை: சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார் நடிகை குஷ்பு. வலைத்தளவாசிகளின் எதிர்ப்பினை அடுத்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு. நடிகரும், ‘துக்ளக்' ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக சில மணி நேரங்களுக்கு முன்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 

http://tamil.oneindia.com/news/tamilnadu/kushboo-1000-apologies-cho-ramasamy-death-news-236508.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் மிக சிறந்த பத்திரிகையாளர் .

கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று அனைவரினது ஆட்சியையும் துணிந்து விமர்சித்த ஒரே பத்திரிகையாளர்.

அதே போல  எமது ஆயுத போராட்டத்தையும் தொடர்ந்து விமர்சித்தார் (அது எங்களுக்கு பிடிக்காதே தேவாரம் பாடித்தானே பழக்கம்) .

இருக்கும் போதே ஒரு நாடக இயக்குனராக நடிகராக எழுத்தாளராக பத்திரிகை ஆசிரியராக  நிறைய சாதித்துவிட்டார் .இனி விடைபெற்றாலும் பரவாயில்லை .

 

அர்சுன் அண்ணா நேற்று அவர் போட்டார் என்று பதிவு இட்டார். நானும் தேடித் பார்த்தேன். வேறு எங்கும் இருக்க வில்லை.

பலரும் அனுதாபப் பதிவு போட்டு இருந்தார்கள். இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று வியந்தேன்.

குஸ்புவை ட்வீட்டர்ல அர்சுன் அண்ணா தொடர்கிறாரு மக்களே...

ஐயோ, அண்ணா... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சோ நல்ல திறமைசாலியாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழருக்கு எதிராக செயற்படுபவர். இவர் இருந்தால் என்ன இல்லாமல்போனால் என்ன டோண்ட் கெயார். 

யதார்த்தமான உண்மை. வாலியின், கருத்தே எனதும்.

சோ ராமசாமி காலமானதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

சங்கு ஊதுற சத்தம், எங்களுக்கு கேட்க, ஆவலாக இருப்பது போல...  
குசுப்புவுக்கும் கேட்டுட்டுது... எல்லாம், ஆர்வக் கோளாறு. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.