Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு

Featured Replies

ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு
 

article_1465279061-aaaaaaaaaaaaaaa.jpg

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் ஆலயங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.

இந்நிலை குறித்து பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம், பொதுமக்களின் நலன்கருதி ஒலிபெருக்கியின் சத்தத்தை மட்டுப்படுத்துமாறு அறிவித்திருந்தார்.

மாவட்டச் செயலாளரின் சுற்று நிரூபத்துக்கமைவாக நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், இது குறித்து சகல ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/174126#sthash.ZrCaVX5V.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் அமைதியையே கெடுக்கிறது. நாலு அருகருகே உள்ள கோயில்களில் ஒலிபெருக்கியின் ஒலியை கூட்டிப்போட்டால்  சத்தம் காதைப்பிழக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் யார் திருவிழாக்காறர்களோ அவர்களின் ஏரியாபக்கம் இரன்டு கோன் ஸ்பீக்கர் கட்டப்படும். :rolleyes:இப்ப அதுக்கும் ஆப்பா.(ஆனால் நல்ல விடையம்):)

11 hours ago, நவீனன் said:

ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.

அட பாவியளா !!

லவுட் ஸ்பீக்கர்ல என்ன பாட்டு எண்டு கண்டு பிடிக்கேலாமல் சத்தம் வந்தாத்தான் அது திருவிழா. இப்பவெல்லாம் 8 மணிக்கு கோவில பூட்டீற்று அது திருவிழா எண்டால் நான் நம்ப மாட்டன். விடிய விடிய லவுட் ஸ்பீக்கர் கத்தணும், கண்ணன் கோஷ்டி வந்து ரூப்புதேரா மஸ்தானா எண்டு விடிய 4 மணிக்கு பாடணும் மண்டுகளே - அதுதான் திருவிழா.

அந்த காலத்தில எங்கட படிப்பு ஒண்டும் நாசமா போகவில்லைதானே. அப்புறம் இப்ப மட்டும் எப்படியாம். உந்த இளஞ்செழியன் யாழ்பாணத்தை 70ம் ஆண்டு மாதிரி ஆக்குவன் எண்டு சொன்னவரெல்லெ. அவற்ற காதில இதையும் ஒருக்கா போட்டு விடுங்கோவன்.

இந்தக் கட்டுப்பாடு சகல வணக்கத் தலங்களுக்கும் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த) விதிக்கப்படுமானால் வரவேற்கத்தக்கது. மிகவும் அவசியமானதும். வருடாந்த விசேட பண்டிகை தினங்களில் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கலாம்.

தற்போது யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் மதம்மாற்றும் கும்பலின்  லவுட் ஸ்பீக்கர் கத்தலை தினசரி காலை 10, 11 மணிவரை கேக்கலாம். இவர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, நவீனன் said:

ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.

அதென்ன இவ்வளவுகாலமும் இல்லாமல் இப்பமட்டும் இடையூறு வருது...ஆரோக்கியம் கெடுது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலான தமிழ் மக்கள் வாழும் இடங்களில்....
ஒலி பெருக்கி மூலம், விக்காரையில் இருந்து  பிரித் ஓதுவதையும், மசூதிகளில் இருந்து வரும் ஓசைகளையும் 
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர்... முதலில் நடவடிக்கை எடுத்து விட்டு, கோயிலில் ஒலி பெருக்கி கட்டுப்பாட்டை கொண்டு வரட்டும். தமிழன் என்றால்... எல்லாருக்கும், கிள்ளுக் கீரையாக போய் விட்டது.:mellow:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கூடுதலான தமிழ் மக்கள் வாழும் இடங்களில்....
ஒலி பெருக்கி மூலம், விக்காரையில் இருந்து  பிரித் ஓதுவதையும், மசூதிகளில் இருந்து வரும் ஓசைகளையும் 
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர்... முதலில் நடவடிக்கை எடுத்து விட்டு, கோயிலில் ஒலி பெருக்கி கட்டுப்பாட்டை கொண்டு வரட்டும். தமிழன் என்றால்... எல்லாருக்கும், கிள்ளுக் கீரையாக போய் விட்டது.:mellow:

இந்த விடயத்தில் நீங்கள் சொல்வதும் நியாயம் தான். கொழும்பில் கூட சில புத்த கோவில்களில் பெளர்ணமி தினங்களில் விடிய விடிய... பிரித் ஓதுவதும் குடு மாத்தையாக்கள்.. அரசியல் பேசுவதும்.. எப்பப்பா.. மனுசர் நித்திரை கொள்ள ஏலாது.

அதே போல் வெள்ளிக்கிழமைன்னா.. காணும்.. பள்ளிகளில் ஓதிற சத்தம் காதைப் பிளக்கும்.

தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றால் போதும் காலையில் இருந்து மாலை வரை கூச்சல் தான்.

கோவில்களில் திருவிழாக் காலம் என்றால்.. ஒரு டெசபல் அளவுக் கட்டுப்பாடும் இல்லாமல்.. ஒரே கூச்சல் கும்மாளம்.

இதுக்கு மேல சில இடங்களில் இராணுவம்.. அரசியல் கட்சிகள் ஒழுங்கமைக்கும் பைலா.. மற்றும் களியாட்ட நிகழ்வுகளில்.. சத்தம் வானை முட்டும். 

இவற்றால்.. மாணவர்கள் நோயாளிகள் பொதுமக்கள் அசெளகரியங்கள் சந்திக்கின்றனர் என்பதும் பெருத்த உண்மை.

கட்டுப்பாடு..இந்து ஆலயங்களுக்கு என்றில்லாமல்.. நாடளாவிய ரீதியில்.. பொது நிகழ்வுகள் எங்கனும் என்று அமையனும். அது தான் நல்லது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

 

கட்டுப்பாடு..இந்து ஆலயங்களுக்கு என்றில்லாமல்.. நாடளாவிய ரீதியில்.. பொது நிகழ்வுகள் எங்கனும் என்று அமையனும். அது தான் நல்லது. :rolleyes:

நான் சொல்ல வந்ததும் இதுவே சட்டம் சகலருக்குமாக அமைய  வேண்டும் 

12 hours ago, போல் said:

 

தற்போது யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் மதம்மாற்றும் கும்பலின்  லவுட் ஸ்பீக்கர் கத்தலை தினசரி காலை 10, 11 மணிவரை கேக்கலாம். இவர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை.

யாழ் குடா நாட்டிலுமா இங்கே அம்பாறையில் குளனி ( கொலனி) என்ற ஊரில் கிறிஸ்தவ சமயத்தில்  மாறியதால் ஆத்திரமடைந்த தாயார் பிள்ளையை அடித்து கொலைசெய்து புதைத்து விட்டார பொலீஸ் விசாரிக்க உன்மை வெளிவந்தது. 

இந்த கும்பல் ஏழை எளிய மக்களை இனங்கண்டு மதம் மாற்றி விடுகிறது இதனால் குடும்ப பிரச்சனைகள் மறைமுகமாக ஏற்பட்டு பின்னர் பாரியை பிரச்சனையாக உருவாகி விடுகிறது ??

27 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த கும்பல் ஏழை எளிய மக்களை இனங்கண்டு மதம் மாற்றி விடுகிறது இதனால் குடும்ப பிரச்சனைகள் மறைமுகமாக ஏற்பட்டு பின்னர் பாரியை பிரச்சனையாக உருவாகி விடுகிறது ??

உண்மைதான் முனிவர்!
பல குடும்பங்களில் பிரச்சனைகளை உருவாக்கி, அதிலும் அறுவடை செய்து குளிர் காய்வதில் அவர்களுக்கு ஒரு குரூர திருப்தி.
ஆனால் RC இப்படி செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

இந்தக் கட்டுப்பாடு சகல வணக்கத் தலங்களுக்கும் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த) விதிக்கப்படுமானால் வரவேற்கத்தக்கது. மிகவும் அவசியமானதும். வருடாந்த விசேட பண்டிகை தினங்களில் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கலாம்.

தற்போது யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் மதம்மாற்றும் கும்பலின்  லவுட் ஸ்பீக்கர் கத்தலை தினசரி காலை 10, 11 மணிவரை கேக்கலாம். இவர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை.

ஏன் வெளிநாடுகளிலும் இது தானே நிலை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

உண்மைதான் முனிவர்!
பல குடும்பங்களில் பிரச்சனைகளை உருவாக்கி, அதிலும் அறுவடை செய்து குளிர் காய்வதில் அவர்களுக்கு ஒரு குரூர திருப்தி.
ஆனால் RC இப்படி செய்வதில்லை.

ம் இதில் பல பிரிவுகளாக இருக்கின்றனர் R. C , N. R. C இன்னும் பலர்  ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பூராகவும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

பி.கு: நான் நிற்கும் இந்நாட்களில் கேட்டது வெளியே தெரியாத விகாரையில் இருந்து வந்த பிரித் ஓதும் சத்தம் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.