Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன்

Featured Replies

புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன்
 
 
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன்
சுவிட்சர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட, வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தின் சபாநாயகரை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்
 
சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ள அரசியல்யாப்பு அனைத்து சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியிருக்கிறது.இதன் ஊடாக அந்த நாடு முன்னோக்கி பயணிக்கின்றது.
 
அதற்கமைய இலங்கையின் அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/18640

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்களும் "சும்" உம் ஸ்கொட்லாந்து வந்தது ஏனோ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 10:21 PM, MEERA said:

அப்ப நீங்களும் "சும்" உம் ஸ்கொட்லாந்து வந்தது ஏனோ? 

வாற வருச கடைசியிலை  ஸ்கொட்லாந்து அரசியல்யாப்பை கொண்டு வரவேணும் எண்டு சொல்லுவினம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிஞ்சுது .............
வெளியிட்டு விழாவிட்கு தேதி எடுப்பதுதான் பாக்கி 


இந்த நேரம் எழுக தமிழ் செய்தால் எல்லாம் குழாமிப்பிடும் 
எண்டு காட்டு காத்து கத்தினார்கள் .......

இப்ப திரும்ப சானும் இல்லை இஞ்சியில் இருந்து தொடன்கிறார் தலைவர் .....
இப்பதான் நாட்டு செலெக்ச்சனே நடக்குது ..........?

சிங்களவன் அதிர்ஸ்ட்ட சாலி .....
எங்களுக்கு வரிசையாய் பிறந்து வந்திருக்கு !

18 minutes ago, Maruthankerny said:

 

 

சிங்களவன் அதிர்ஸ்ட்ட சாலி .....
எங்களுக்கு வரிசையாய் பிறந்து வந்திருக்கு !

உதுகளுக்கு வோட்டு போட்ட மகா அறிவாளிகளை என்னவென்று சொல்வது???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

உதுகளுக்கு வோட்டு போட்ட மகா அறிவாளிகளை என்னவென்று சொல்வது???

 நீங்கள் மட்டுமல்ல, இங்க  கனபேர்இன்னும் அப்பிடித்தான் நினைக்கினம்.

3 hours ago, Dash said:

உதுகளுக்கு வோட்டு போட்ட மகா அறிவாளிகளை என்னவென்று சொல்வது???

உங்களையும் என்னையும்விட மிகச்சிறந்த அறிவாளிகள் என்று சொல்லலாம்.

9 minutes ago, satan said:

 நீங்கள் மட்டுமல்ல, இங்க  கனபேர்இன்னும் அப்பிடித்தான் நினைக்கினம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 உண்மையாகவே மக்கள் வாக்குப்போட்டு இவர்கள் தேர்தலில் வென்றிருந்தால், அந்த மக்களுக்காகவே, அவர்களின் விடியலுக்காகவே உழைப்பார்கள். அதை விட்டு, நல்லிணக்கம், நம்பிக்கை என்று மக்களை ஏமாற்றி சிங்களவன் மனம் கோணாமல், நோகாமல் உள்ளதையும் காட்டிக்குடுத்து ஏன் அவர்களை பூசி, மெழுகி காப்பாற்றவேண்டும்? ஏன் அவனுக்கு பயப்பிடுகினம்?

4 minutes ago, satan said:

 உண்மையாகவே மக்கள் வாக்குப்போட்டு இவர்கள் தேர்தலில் வென்றிருந்தால், அந்த மக்களுக்காகவே, அவர்களின் விடியலுக்காகவே உழைப்பார்கள். அதை விட்டு, நல்லிணக்கம், நம்பிக்கை என்று மக்களை ஏமாற்றி சிங்களவன் மனம் கோணாமல், நோகாமல் உள்ளதையும் காட்டிக்குடுத்து ஏன் அவர்களை பூசி, மெழுகி காப்பாற்றவேண்டும்? ஏன் அவனுக்கு பயப்பிடுகினம்?

இதை பற்றி அடுத்த வருடம் கதைப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 07/10/2016 at 0:51 PM, நவீனன் said:
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன்
 
 
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன்
சுவிட்சர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட, வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தின் சபாநாயகரை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்
 
சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ள அரசியல்யாப்பு அனைத்து சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியிருக்கிறது.இதன் ஊடாக அந்த நாடு முன்னோக்கி பயணிக்கின்றது.
 
அதற்கமைய இலங்கையின் அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அப்போ

எல்லாம்  தயார்  குழப்பாதீர்கள் என்று நீங்க இதுவரை விட்டுவந்த  அறிக்கைகள்???

இன்னும் தொடங்கவே இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

 உண்மையாகவே மக்கள் வாக்குப்போட்டு இவர்கள் தேர்தலில் வென்றிருந்தால், அந்த மக்களுக்காகவே, அவர்களின் விடியலுக்காகவே உழைப்பார்கள். 

அப்படி உழைப்பதால் தானே அந்த மக்கள் அவர்களுக்கு வாக்கு போட்டு அவர்களை திரும்ப திரும்ப தெரிவு செய்து இருக்கிறார்கள்.

அதை விட்டு, நல்லிணக்கம், நம்பிக்கை என்று மக்களை ஏமாற்றி சிங்களவன் மனம் கோணாமல், நோகாமல் உள்ளதையும் காட்டிக்குடுத்து ஏன் அவர்களை பூசி, மெழுகி காப்பாற்றவேண்டும்? ஏன் அவனுக்கு பயப்பிடுகினம்?

அவர்கள் தம்மை ஏமாற்றுவதாக மக்கள் நினைக்கவில்லை - நீங்கள் தான் அப்படி நினைக்கிறீர்கள். உங்கள் வாக்கு இந்த அரசியல் தலைவர்களின் தெரிவை தீர்மானிக்கும் பலம் அற்றதால் மக்கள் அவர்களை தெரிவு செய்வதை உங்களால்தடுக்க முடியவில்லை.

9 hours ago, விசுகு said:

அப்போ

எல்லாம்  தயார்  குழப்பாதீர்கள் என்று நீங்க இதுவரை விட்டுவந்த  அறிக்கைகள்???

இன்னும் தொடங்கவே இல்லையா???

முள்ளிவாய்க்கால் போல முடியக்கூடாது அல்லவா? ஆகவே கவனமாக செய்கிறார்கள். தொடங்குவது, தொடங்காதது எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் முள்ளிவாய்க்கால் போல ஆகிவிடும் என்ற பயம் இருப்பதால் எல்லாம் எல்லோருக்கும் தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.10.2016 at 10:11 PM, Jude said:

முள்ளிவாய்க்கால் போல முடியக்கூடாது அல்லவா? ஆகவே கவனமாக செய்கிறார்கள். தொடங்குவது, தொடங்காதது எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் முள்ளிவாய்க்கால் போல ஆகிவிடும் என்ற பயம் இருப்பதால் எல்லாம் எல்லோருக்கும் தெரிவதில்லை.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்/இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் பல இனக்கலவரங்களும் இன அழிப்புகளும் எல்லைமீறிய குடியேற்றங்களும் நடந்தனவே. அப்போதும் இதே அரசியல் தலைகள் பாராளுமன்றத்தில்தானே  இருந்தார்கள். ஏதாவது செய்தார்களா? அல்லது எதையாவது தடுத்து நிறுத்தினார்களா? இல்லையேல் ஒரு சிறிய பிரச்சனைக்கு தானும் தீர்வு கண்டார்களா?

சம்பந்தன் மாவை போன்றவர்களின் பழைய தவறுகளை மறைக்க முள்ளிவாய்க்கால் எனும் அவலக்கொடியை தூக்கி அசைத்து நீங்களும் உங்களைப்போன்றவர்களும் சிங்களத்தின் நிழலில் குளிர் காய்பவர்கள்.
அதுசரி.....உள்ள உரிமையை கேட்பதற்கு ஏன் சிங்களத்திற்கு பயப்பிட வேண்டும்.

9 minutes ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்/இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் பல இனக்கலவரங்களும் இன அழிப்புகளும் எல்லைமீறிய குடியேற்றங்களும் நடந்தனவே. அப்போதும் இதே அரசியல் தலைகள் பாராளுமன்றத்தில்தானே  இருந்தார்கள். ஏதாவது செய்தார்களா? அல்லது எதையாவது தடுத்து நிறுத்தினார்களா? இல்லையேல் ஒரு சிறிய பிரச்சனைக்கு தானும் தீர்வு கண்டார்களா?

சம்பந்தன் மாவை போன்றவர்களின் பழைய தவறுகளை மறைக்க முள்ளிவாய்க்கால் எனும் அவலக்கொடியை தூக்கி அசைத்து நீங்களும் உங்களைப்போன்றவர்களும் சிங்களத்தின் நிழலில் குளிர் காய்பவர்கள்.
அதுசரி.....உள்ள உரிமையை கேட்பதற்கு ஏன் சிங்களத்திற்கு பயப்பிட வேண்டும்.

நானும் இதை முன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன், முள்ளிவாய்க்காலை மேற்கோள் காட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று.

தமிழர் உரிமை பற்றி கதைத்தால் உடனே முள்ளிவாய்க்காலை காட்டுவது இவர்களுக்கு , பயமுறுத்துவது வேலையாய் போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் உள்ள அரசியலமைப்பைத் தானே விடுதலைப் புலிகளும் கேட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதுசரி.....உள்ள உரிமையை கேட்பதற்கு ஏன் சிங்களத்திற்கு பயப்பிட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் போல அவலமாக முடியகூடாது அல்லவா? அதற்காக தான் பயப்பட வேண்டும்.

2 hours ago, Dash said:

தமிழர் உரிமை பற்றி கதைத்தால் உடனே முள்ளிவாய்க்காலை காட்டுவது இவர்களுக்கு , பயமுறுத்துவது வேலையாய் போய் விட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் பயப்பட வேண்டிய ஒன்று தானே? மீண்டும் அது வேண்டாம் என்ற பயம் தான்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவிசில் உள்ள அரசியலமைப்பைத் தானே விடுதலைப் புலிகளும் கேட்டார்கள்.

அவர்கள் கேட்ட விதத்தில் கிடைக்கவில்லை - இப்போது வேறு விதமாக கேட்கிறார்கள். கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.  விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறோம். இவர்களுக்கு கொழும்பு ஐரோப்பா என்று கொடுத்து பார்ப்பது பாதகம் குறைவான வழி தானே?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Jude said:

 

அவர்கள் கேட்ட விதத்தில் கிடைக்கவில்லை - இப்போது வேறு விதமாக கேட்கிறார்கள். கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.  விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறோம். இவர்களுக்கு கொழும்பு ஐரோப்பா என்று கொடுத்து பார்ப்பது பாதகம் குறைவான வழி தானே?

பட்ட மரத்தில் பால் எடுக்கும் உங்கள் ஆசையை நான் குழப்பவா போறன்?

  • கருத்துக்கள உறவுகள்

 16 ம் ஆண்டு தொடங்கும் போது இந்த வருட இறுதியில் தீர்வு என்று புலுடா விட்டார்கள், 17 ம் ஆண்டை நெருங்கும்போது அரசியல் யாப்பு  தயாரிப்பு பற்றி கதைக்கிறார்கள், சிங்களவனை மாற்ற முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அவனை மாற்றிக்காட்டவேண்டும். அதை விட்டிட்டு    குழப்பிப் போடாதேங்கோ, பொறுமையாய் இருங்கோ என்று எங்களை அடக்குவதை நிப்பாட்ட வேண்டும். எங்களை அடக்கிறதுக்கே மக்கள் வாக்குப்போட்டது உவைக்கு? நான் சொல்லவில்லை, மக்கள் வாக்குப் போட்டவை எண்டு. நம்புறவையை கேக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து ஒருத்தரும் குழப்பாதேங்கோ........

அவையள் நல்லத்துக்குத்தான் சொல்லீனம் visaran.gif

8 hours ago, satan said:

 16 ம் ஆண்டு தொடங்கும் போது இந்த வருட இறுதியில் தீர்வு என்று புலுடா விட்டார்கள், 17 ம் ஆண்டை நெருங்கும்போது அரசியல் யாப்பு  தயாரிப்பு பற்றி கதைக்கிறார்கள், சிங்களவனை மாற்ற முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அவனை மாற்றிக்காட்டவேண்டும். அதை விட்டிட்டு    குழப்பிப் போடாதேங்கோ, பொறுமையாய் இருங்கோ என்று எங்களை அடக்குவதை நிப்பாட்ட வேண்டும். எங்களை அடக்கிறதுக்கே மக்கள் வாக்குப்போட்டது உவைக்கு? நான் சொல்லவில்லை, மக்கள் வாக்குப் போட்டவை எண்டு. நம்புறவையை கேக்கிறேன். 

 

24 minutes ago, குமாரசாமி said:

தயவு செய்து ஒருத்தரும் குழப்பாதேங்கோ........

அவையள் நல்லத்துக்குத்தான் சொல்லீனம் visaran.gif

நாங்களும் எத்தனை தைப்பொங்கலுக்கும், வருஷப்பிறப்புக்கும் தழிழீழம் கிடைக்குமென்று காத்திருந்தோம் 
 

Giggle animated emoticon

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் மனம்மாறி தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வந்தாலும்.... தமிழரோடு சேர்ந்திருக்கும் பினாமிகள் விடமாட்டுதுகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டிய நேரத்தில் இவர்களுடைய ராயதந்திரத்தை உபயோகித்திருந்தால் வருடப்பிறப்புக்கும், தைப்பொங்கலுக்கும்,தமிழீழத்துக்கும் காத்திருந்து இவ்வளவு உயிர்களை காவு கொடுத்திருக்க வேண்டியதில்லை. இனிமேல் இவர்களின் தந்திரம் வெல்லும் என்கின்ற நம்பிக்கையுமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.