Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மையின மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் : கோத்தா

Featured Replies

பெரும்பான்மையின மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் : கோத்தா

 

koththa.jpg

அமெ­ரிக்காவின் பெரும்­பான்மை மக்கள் குழு­வினர் ஒன்­றி­ணைந்து டொனால்ட் டிரம்பின் வெற்­றியை உறு­தி செய்­துள்­ளனர். எனவே இலங்­கையின் பெரும்­பான்மை மக்­களும் இதனை பாட­மாகக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அதே­நேரம், ஒபா­மாவின் காலத்தில் ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வை­யினால் இலங்கை மீது விடுக்­கப்­பட்ட  அழுத்­தங்கள் குறை­வ­தற்கும் டிரம்பின் வெற்றி பங்­க­ளிப்புச் செய்யும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

பேரா­சி­ரியர் நவீன் டி சில்­வாவின் எனது உல­கத்தில் 30 வரு­டங்கள் என்று நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலின் போது தனது வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்­துக்­கொண்­டி­ருந்த டொனால் ட்ரம்­பிற்கு தடை­யாக எதி­ரணி வேட்­பா­ன­ள­ருடன் தொக்கி நின்ற சிறு­பான்­மை­யி­னரே இருந்­தனர்.அதனால் அவர் வெற்றி பெரு­வாரா என்­பது கேள்­விக்­கு­ரி­யாக இருந்­தது.

இருப்­பினும் தற்­போது அவர் வெற்றி பெற்­றுள்ள நிலையில் அவ­ரது கொள்­கை­களை வெ ளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின் அர­சியல் கொள்­கைகள் வர­வேற்­கத்­தக்­கவை. குறிப்­பாக இலங்கை போன்ற சிறிய நாடு­க­ளுக்கு இதனால் எந்த பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது.

இந்­நி­லையில் இலங்கை சந்­தர்ப்­பத்தில் உரிய விதத்தில் பய­ன­டைய வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­கும். ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்­தர்ப்­பத்தில் பய­ன­டையும் வகையில் அமை­யுமா என்­பது கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

அத்­துடன் அமெ­ரிக்க வாக்­க­ளர்­களின் பக்­கத்­தி­லி­ருந்து பார்க்­கை­யிலும் அந்­நாட்டு புத்­தி­ஜீ­விகள் கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போதும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த பராக் ஒபா­மாவின் ஆத­ரவு ட்ரம்­பிற்கு கிடைக்­க­வில்லை. எனவே அவர் தோல்வி அடை­யப்­போது உறுதி என்று குறிப்­பி­டப்­ப­டி­ருந்­தது. அதே­நேரம் கறுப்­பினத்­த­வர்­களின் ஆத­ரவும் இவ­ருக்கு கிடைக்­காது என்ற கருத்­துக்கள் மிகவுத் வலுப்­பெற்­றி­ருந்­தன.

ஆனால் அந்­நாட்டு வெள்ளையின பெரும்­பான்­மை­யினர் ஒன்று திரண்டு டொனால் ட்ரம்­பிற்கு வாக்­க­ளித்தன் கார­ண­மாக அவர் சுல­ப­மாக வெற்­றி­பெற்றார். இதனை இந்­நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் ஒரு பாட­மாக கொள்ள வேண்டும். இதனால் உரு­வாக்­கப்­பட்ட கருத்­தி­யலே மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

பெரும்­பான்மை ஆத­ர­வினால் மாத்­திரம் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டார். அது சிறு­பான்­மை­யி­னரின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது என்­பதை நாம் உணர்ந்­துக்­கொள்ள வேண்டும். பெரும்­பான்மை வலுப்­பெற்றால் மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யி­னரும் வலுப்­பெ­றுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்­போது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது.

அதே­நேரம் ட்ரம்ப் என்­பவர் சாதா­ர­ண­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் போக்­கி­லி­ருந்து விடு­பட்ட ஒருவர். அமெ­ரிக்­கா­விலும் மக்கள் அர­சியல் வாதி­க­ளிடத்­தி­லி­ருந்து தூரம் செல்­கின்­றனர். காரணம் அர­சியல் தலை­வர்கள் மக்­களை ஏமாற்றி ஆட்­சியை கைப்­பற்ற முனை­கின்­றனர். மக்­களை முட்­டா­ளாக்­கி­வி­டு­வது இல­கு­வா­னது என்று எண்ணி அடுக்­காக பொய்­களை கூறி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

இன்று எமது நாட்­டி­லுள்ள அமைச்­சர்கள் கூறும் கருத்­துக்­களும் கூட எந்த வித அடித்­த­ள­மற்­ற­தா­கவும் வேடிக்­கை­யா­ன­தா­க­வுமே உள்­ளன.அதனால் மக்கள் அர­சியல் வாதிகள் என்­றாலே வெறுப்­ப­டையும் நிலை தோன்­றி­யுள்­ளது.

மேலும் மனித உரிமை தொடர்பில் மாறு­பட்ட கருத்­துக்கள் பேசப்­ப­டு­கின்­றன. மனித உரி­மைகள் என்­பதை மக்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்க தேவை­யில்லை. எமது நாட்டு மக்­க­ளி­டத்தில் மனித உரி­மைகள் இயல்­பாவே நிறைந்­துள்­ளன. ஆனால் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை இல்­லாத பல விட­யங்­களை மனித உரி­மைகள் என்ற பேரில் எமது நாட்­டினுள் புகுத்த பார்க்­கின்­றது. அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க கூடாது.

அத்­துடன் இன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால் ட்ரம்பின் வெற்றி அமையும். ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம். அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/13363

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, சிங்கன் பெரிய பிளான் போடுறார்.

பெரும் செல்வந்தர் டிரம்ப் எங்கே?

இந்த வெள்ளைவான் கிரிமினல் எங்கே?

ஐனாதிபதிக் கனவு !

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பெரும்­பான்மை ஆத­ர­வினால் மாத்­திரம் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டார். அது சிறு­பான்­மை­யி­னரின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது என்­பதை நாம் உணர்ந்­துக்­கொள்ள வேண்டும். பெரும்­பான்மை வலுப்­பெற்றால் மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யி­னரும் வலுப்­பெ­றுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்­போது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது.

 

Image result

 

 

வள்\ளலார்  போட்டோவை மாட்டி கொண்டு கறி கடை நடத்துவது போல கிடக்கு..:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் சொறீலங்காவுக்குள் எதுவும் புடுங்கலாம். வெளில வெளிக்கிட்டால்.. அமுங்கி.. ஒடுங்கி போக வேண்டியான். கோத்தாவும் அவரின் அமெரிக்கப் பிரஜா உரிமையும் போல. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

பெரும்பான்மையின மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் : கோத்தா

18 hours ago, நவீனன் said:

பெரும்­பான்மை வலுப்­பெற்றால் மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யி­னரும் வலுப்­பெ­றுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்­போது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது.

தத்துவமாம்.....:cool:

 

உலக / சமூக மாற்றங்களுக்கேற்ப தகவுறுவதும், தம்மை மாற்றிக் கொண்டு தம் அரசியலில் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சென்று நிலைத்து நிற்பதும் சிங்கள மக்களின் / சிங்கள தலைவர்களின் பழக்கம். வீம்புடன் நின்று கொண்டு "நாமார்க்கும் குடியல்லோம்" என்று சாதிச்சுக் கொண்டு எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நாசமாக போவது எம் வழக்கம்.

சிங்கள பெளத்த பேரினவாதம் ட்றம்ப் பினால் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை தனக்கு சாதகமாக கண்டிப்பாக மாற்ற முனையும். நாமோ சிங்களவர்கள் முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டு விறைச்சுக் கொண்டு நிற்பம்.

எஸ்.ஜே செல்வநாயகம் அவர்கள் சொல்லியது தான் இங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, நிழலி said:

நாமோ சிங்களவர்கள் முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டு விறைச்சுக் கொண்டு நிற்பம்.

அங்கை ஒரு கோஷ்டி சொட்டு விறைப்புமில்லாமல் 60/70 வருசமாய் பட்டுவேட்டி....கோட்டுசூட்டு...நஷனல் ...வெள்ளை வேட்டியோடை சிங்களவனுக்கு பின்னாலையும் முன்னாலையும் அலைஞ்சுகொண்டு திரியுறது டம்பியருக்கு தெரியாது போலை கிடக்கு.

1 hour ago, குமாரசாமி said:

அங்கை ஒரு கோஷ்டி சொட்டு விறைப்புமில்லாமல் 60/70 வருசமாய் பட்டுவேட்டி....கோட்டுசூட்டு...நஷனல் ...வெள்ளை வேட்டியோடை சிங்களவனுக்கு பின்னாலையும் முன்னாலையும் அலைஞ்சுகொண்டு திரியுறது டம்பியருக்கு தெரியாது போலை கிடக்கு.

அண்ணே தெரியும்.... இளைஞர்களை உசுப்பேத்தி இவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு முன் விட்ட பம்மாத்துகளை அறிவேன் நான்

ஆனால் இன்றைய நிலையில், உயிரும் உணர்வுமான புலிகளும் அழிந்து எவரும் இல்லா நாதி அற்ற நிலையில்

இவர்களை என்ன செய்யச் சொல்றியள்?

இவர்கள் இன்றைய அரசியலில் இன்னும் எவ்வளவோ செய்யலாம்...ஆனால் செய்யவில்லை.

எம் கேள்விகள் "ஏன் செய்ய வேண்டியதை செய்யவில்லை" என்றுதான் இருக்க வேண்டும்.

மாறாக, "இதைச் செய்ய உனக்கு என்ன வக்கு இருக்கு" என்று கேட்டால், இதுவும் இல்லாமல் நாதி இன்றித்தான் போவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு விறைச்சு கொண்டு நின்றாலும் நாதியில்லை ,விறைப்பிண்றி நின்றாலும் நாதியில்லை......அது சரி சிறிலங்கா தலைவர்கள் இப்ப இந்தியாவுக்கு அதிகம் செல்வது தாங்களும் இந்தியர்கள் என்று அவையளுக்கு காட்டவோ

  • தொடங்கியவர்
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி சிங்களவர்களுக்கு பாடமாக அமையட்டும்-கோத்தா
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி சிங்களவர்களுக்கு பாடமாக அமையட்டும்-கோத்தா
அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, இலங்கையின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த, பேராசிரியர்  நளின்  டி சில்வா எழுதிய, “ எனது உலகத்தில் 30ஆண்டு கள்“  என்ற நூல் வெளியீட்டு விழாவில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
“அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த டொனால்ட்  ட்ரம்பிற்கு, எதிரணி வேட்பாளருடன் தொக்கி நின்ற சிறுபான்மையினரே தடையாக இருந்தனர்.அதனால் அவர் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
 
ஆனாலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரின் அரசியல் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை. இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் எந்த பாதிப்புக்களும் ஏற்படாது.இலங்கை இந்தச் சந்தர்ப்பத்தை உரிய விதத்தில் பயன்படுத்த வேண்டியது காலத்தின் தேவை.
 
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்தர்ப்பத்தில் பயனடையும் வகை யில்  அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 
அமெரிக்க வாக்காளர்களின் பக்கத்திலிருந்து பார்க்கும் போதும்,  அந்நாட்டு புத்திஜீவிகள் கருத்துக்களின் அடிப்படையில் இருந்து பார்க்கும் போதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவு ட்ரம்பிற்கு கிடை க்கவில்லை. எனவே அவர் தோல்வி அடையப்போவது உறுதி என்று கூறப்பட்டது.
 
அதேநேரம் கறுப்பினத்தவர்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்காது என்ற கருத்துக்கள் மிகவும் வலுப்பெ ற்றிருந்தன.ஆனால் அந்நாட்டு வெள்ளையின பெரும்பான்மையினர் ஒன்று திரண்டு டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களித்ததன் காரணமாக அவர் சுலபமாக வெற்றிபெற்றார்.
 
இதனை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களும் ஒரு பாடமாக கொள்ள வேண்டும். இதனால் உரு வாக்கப்பட்ட கருத்தியலே மிக முக்கியமானதாகும்.
 
பெரும்பான்மையினரின் ஆதரவினால் மாத்திரம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால்,  அது சிறுபான்மையின ரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பா ன்மை வலுப்பெற்றால் மாத்திரமே சிறுபான்மையினரும் வலுப்பெறுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்போது அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
 
அதேநேரம் ட்ரம்ப் என்பவர் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் போக்கிலிருந்து விடுபட்ட ஒரு வர்.
 
மனித உரிமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன.  மனித உரிமைகள் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை.  எமது நாட்டு மக்களிடத்தில் மனித உரிமைகள் இயல்பாவே நிறைந்துள்ளன.
 
ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இல்லாத பல விடயங்களை மனித உரிமைகள் என்ற பேரில் எமது நாட்டினுள் புகுத்த பார்க்கின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
 
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்த ங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால்ட்  ட்ரம்பின் வெற்றி அமையும்.
 
ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம்.
 
அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர்  தற்போது இள நீரை குடிக்கட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.onlineuthayan.com/news/20016

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொருத்தவரை சிறுபான்மை நினத்தால்தான் பெரும்பான்மயினருக்கு ஆட்சி அமைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

„கோத்தபாய' என்ற ஒரு இனப்படுகொலையாளனின் கூற்றாக இதைப்பார்க்காது அறிவார்ந்து சிந்திக்க வேண்டியவிடயமாகும். 225 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திலே, சிறுபான்மை அல்லது தமிழ்பேசும் மக்களுக்கான பிரதிநிதித்துவமாகப் 18ஐத்தான் (த.தே.கூ:16, சி.மு.கா:1, ஈ.ம.ஜ.க:1) பெறமுடிந்திருக்கிறது. பெரும்பான்மைகள் ஒன்றுதிரண்டால் தனிச்சிங்கள நாடாளுமன்றத்தை அமைக்கமுடியாதென்றில்லை. ஆனால் தென்னாசிய வட்டகையில் ஒரு சிறிய பொருண்மிய வளம் கொழிக்காத நாடு „பௌத்தம்' என்ற ஒன்றைவைத்து உள்ளநாட்டில் இனவாத நெருப்பை மூட்டி குளிர்காயும் அதேவேளை வெளிநாடுகளுக்குப் பஞ்சசீலக் கொள்கையை முன்னிறுத்தி தம்மை மிகச்சிறப்பாகத் தகவமைத்துக் கொள்வதில் சிங்களத்தின் வல்லமை மிகப்பலமானது மட்டுமல்ல மிகப்பழைமையானதும். (2500 ஆண்டுகள்) ஆனால் நாமிதை ஏற்கமாட்டோம் என்பதே உண்மை. முதலில் எமது இன்றைய நிலையை மதிப்பீடு செய்து படித்தஇளயதலைமுறையைக்கொண்டு  ஒருதலைசிறந்த வெளிவிகாரக்குழுவை அமைத்து இதுபோன்ற அரசியல் ஆட்சிமாற்றங்களின்போது குறைந்தது ஒரு வாழ்த்தையாவது பகிர்வதன் ஊடாக குறைந்தபட்ச அவதானிப்பையாவது பெற முயலவேண்டும். அதைவிடுத்து யரையாவது நம்பியிருப்பின்.................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

அதேவேளை வெளிநாடுகளுக்குப் பஞ்சசீலக் கொள்கையை முன்னிறுத்தி தம்மை மிகச்சிறப்பாகத் தகவமைத்துக் கொள்வதில் சிங்களத்தின் வல்லமை மிகப்பலமானது மட்டுமல்ல மிகப்பழைமையானதும்.

தேடிப்பார்த்தால் இதன் பின்னால் ஒரு தமிழன்அல்லது தமிழ்க்  குழு (பணம், பொருள், யோசனை,ராயத்தந்திரம்)  ஒன்று முண்டு கொடுக்க   இருக்கும். சேர். போன். இராமநாதன் காலத்திலிருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

தேடிப்பார்த்தால் இதன் பின்னால் ஒரு தமிழன்அல்லது தமிழ்க்  குழு (பணம், பொருள், யோசனை,ராயத்தந்திரம்)  ஒன்று முண்டு கொடுக்க   இருக்கும். சேர். போன். இராமநாதன் காலத்திலிருந்து.

இது இன்றுவரை தொடர்கிறது. இறுதியாக எதிர்க்கட்சிவடிவிலே. இதுதான் எமக்கான இறுதி இருப்பாகுமோ. எல்லாம் இனவாதிகளுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11.11.2016 at 5:00 AM, நிழலி said:

அண்ணே தெரியும்.... இளைஞர்களை உசுப்பேத்தி இவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு முன் விட்ட பம்மாத்துகளை அறிவேன் நான்

ஆனால் இன்றைய நிலையில், உயிரும் உணர்வுமான புலிகளும் அழிந்து எவரும் இல்லா நாதி அற்ற நிலையில்

இவர்களை என்ன செய்யச் சொல்றியள்?

இவர்கள் இன்றைய அரசியலில் இன்னும் எவ்வளவோ செய்யலாம்...ஆனால் செய்யவில்லை.

எம் கேள்விகள் "ஏன் செய்ய வேண்டியதை செய்யவில்லை" என்றுதான் இருக்க வேண்டும்.

மாறாக, "இதைச் செய்ய உனக்கு என்ன வக்கு இருக்கு" என்று கேட்டால், இதுவும் இல்லாமல் நாதி இன்றித்தான் போவோம்

 

இந்த நிமிடத்தை பொறுத்த வரையிலும் இவர்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. இவர்களை வீட்டுக்குள் அமரச்சொல்லுங்கள்

ஆயுதம் இருக்கும் போது செய்து காட்டப்பட்டது.

வக்கு இல்லாமலா ஒரு அரசாட்சியிடம் சர்வதேச பிரதிநிதிகள் வந்து பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.