Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் - சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

Featured Replies

பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்...

 

புதிய புத்தகத்தில் பரபர தகவல் பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சித்தது என்றும் இதற்காக இலங்கையை மிரட்டவும் செய்தது எனவும் புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 

 டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக தலைவர்களும் ஆதரித்தனர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேமன் தம்முடைய புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

New Book also confirsm US attempt to Save Prabhakaran

 

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவருமான டயா கேமேஜ் "Tamil Tigers' Debt to America: US Foreign-Policy Adventurism & Sri Lanka's Dilemma" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்களின் போது பிரபாகரன் மற்றும் தளபதிகளைக் காப்பாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்தது குறித்து இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மண்டலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

 

ஒருகட்டத்தில் இலங்கை மீது சர்வதேச நிதியம் மூலமான நெருக்கடி தடைகளையும் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்படுத்தி பணிய வைக்கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் என்னதான் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தாலும் அந்த அமைப்பினால் அமெரிக்காவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கருதியது. அதே நேரத்தில் இலங்கையை இரண்டாக பிரிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை. தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்பியது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/new-book-also-confirsm-us-attempt-save-prabhakaran-269734.html
 

  • கருத்துக்கள உறவுகள்

என்னாங்கடா .....வெளையாடுறீங்களா 
ஆயுத கப்பல் வரும் வழியை காட்டிகுடுப்பினமாம் ...பிறகு இயக்கம் உயிர்ப்புடன்  இருக்கவேண்டும்  என்றும் விரும்புவினமாம் 
உந்த கிந்திய ,இலங்கை லூசுப்பேர்வழிகள் விஜயக்காந் படம் பார்த்து கெட்டுப்போய்ட்டினம் ...அந்தாளிண்ட படத்தில தான் வெள்ளைக்காரனை லூசனாக காட்டியிருப்பார் ...பிறகு விஜயகாந்த் வந்து உண்மையை கண்டுபிடிப்பார்  

  • தொடங்கியவர்

பிரபாகரனை காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய அமெரிக்கா

01-19daab62b94169cd73c4886480a4cb4dba81743f.jpg

 

புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
பிர­பா­க­ரனைக் காப்­பாற்ற அமெ­ரிக்கா பெரும் முயற்­சித்­தது என்றும் இதற்­காக இலங்­கையை மிரட்­டவும் செய்­தது எனவும் புதிய புத்­தகம் ஒன் றில் பர­ப­ரப்பு தகவல் வெளி­யாகி யுள்­ளது.

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக் கத் தலைவர் பிர­பா­கரன் மற்றும் தள­ப­திகளை யுத்த களத்தில் இருந்து பாது­காப்­பாக வெளி­யேற்ற கடைசி நேரங்­களில் 

அமெ­ரிக்கா போராட்டம் நடத்­தி­ய­தா­கவும் இந்தப் புத்­த­கத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­பா­கரன் உள்­ளிட்ட தள­ப­தி­களை காப்­பாற்ற அமெ­ரிக்­காவும் நோர்­வே யும் முயற்­சித்­தன. இதை இந்­தியா எதிர்

த்­தது. இந்­தி­யாவின் எதிர்ப்பை தமி­ழக தலை­வர்­களும் ஆத­ரித்­தனர் என்று இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு செயலர் சிவ்­சங்கர் மேனன் தம்­மு­டைய புத்­த­கத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில் அமெ­ரிக்கா வெளி­யு­ற­வுத்­துறை அதி­கா­ரியும் கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூது­ர­கத்தில் பணி­யாற்­றி­ய­வ­ரு­மான

டயா கேமேஜ் “Tamil Tigers’ Debt to America: US Foreign – Policy Adventurism & Sri Lanka’s Dilemma” என்ற தலைப்பில் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளார்.

அதில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தொடர்­பான அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு விரி­வாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த நாட்­களின் போது பிர­பா­கரன் மற்றும் தள­ப­தி­களைக் காப்­பாற்ற அமெ­ரிக்கா பெரும் முயற்சி எடுத்­தது குறித்து இந்த நூலில் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு வல­யங்கள் என அறி­விக்­கப்­பட்ட பகு­தி­களின் மீது இலங்கை இரா­ணுவம் தொடர்ந்தும் தாக்­குதல் நடத்தக் கூடாது எனவும் அமெ­ரிக்கா எச்­ச­ரித்­த­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

ஒரு கட்­டத்தில் இலங்கை மீது சர்­வ­தேச நிதியம் மூல­மான நெருக்­கடி தடை­க­ளையும் அப்­போ­தைய வெளி­யு­றவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஏற்­ப­டுத்தி பணிய வைக்­கவும் முனைந்தார் எனவும் அந்த நூலில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் என்­னதான் விடு­தலைப் புலி­களை பயங்­க­ர­வாத அமைப்­பாக தடை செய்­தி­ருந்­தாலும் அந்த அமைப்­பினால் அமெ­ரிக்­கா­வுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கரு­தி­யது. அதே நேரத்தில் இலங்­கையை இரண்­டாகப் பிரிக்­கவும் அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை. தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் உயிர்ப்­புடன் இருக்க வேண்டும் எனவும் அமெ­ரிக்கா விரும்­பி­யது எனவும் அந்தப் புத்­த­கத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இந்­திய முன்னாள் பாது­காப்பு ஆலோ­சகர் சிவ் சங்கர் மேனனின் Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலில் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது பிர­பா­க­ரனை காப்­பாற்ற அமெ­ரிக்­காவும் நோர்­வேயும் முயற்­சித்த போது அதனை இந்­தியா எதிர்த்­தது என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் எதிர்ப்­பினை தமி­ழக அர­சியல் தலை­வர்கள் தனிப்­பட்ட ரீதியில் வர­வேற்­றனர். இந்­தி­யாவில் வாழும் தமிழ்த் தலை­வர்­களை பௌதீக ரீதியில் இல்­லாமல் செய்­வதன் மூலமே பிர­பா­கரன் தமி­ழீ­ழத்தை உரு­வாக்­குவார் என்­ப­தனை தமி­ழக அர­சியல் தலை­மைகள் புரிந்து வைத்­தி­ருந்­தனர்.

இலங்­கையில் தமிழ் அர­சியல் தலை­மை­களை புலிகள் கொலை செய்­தி­ருந்­தனர். இலங்கை விவ­கா­ரத்தில் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திற்கும் தமி­ழக மாநில அர­சியல் தலை­மை­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக வெளியில் தென்­பட்­டாலும், இரண்டு தரப்­புக்­களும் ஒரே வித­மான கொள்­கை­களை பின்­பற்­றின .திரா­விட முன்­னேற்றக் கழ­கமும் அனைத்து இந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கமும் ஒரே வித­மான கொள்­கை­க­ளையே பின்­பற்­றின. ராஜீவ் காந்­தியின் கொலையின் பின்னர் ஒட்டு மொத்த இந்­தி­யாவும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் தொடர்பில் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுடன் செயற்­பட்­டது.

 வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் காணப்­பட்ட தரு­ணத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலித் தலை­மை­களை பாது­காப்­பாக வெளி­யேற்­று­வ­தற்கு மஹிந்த ராஜ­பக்ஸ இணங்­க­வில்லை. மேற்­கு­லக நாடுகள் அதற்கு முயற்­சித்­தன.

பிர­பா­கரன் நடை­முறைச் சாத்­தி­ய­மில்லா கொள்­கை­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளையும் பின்­பற்­றிய கார­ணத்தால் புலிகள் இயக்கம் அழிந்­த­துடன் அவரும் உயி­ரி­ழக்க நேரிட்­டது.

இறுதிக் கட்ட யுத்தம் இன்னும் தாம­த­மா­கி­யி­ருந்தால் உயிர்ச் சேதங்கள் மேலும் உயர்­வ­டைந்­தி­ருக்­கலாம். பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை குறித்து விமர்­ச­னங்கள் எழுந்­தாலும், இவ்­வா­றான யுத்­தங்­களின் போது உயிர்ச் சேதங்­களை தவிர்க்க முடி­யாது.

200 பில்­லியன் டொலர் செலவு

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்­திற்­காக 200 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வி­டப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டில் நிறை­வ­டைந்த உள்­நாட்டு யுத்­தத்­திற்­காக இந்­த­ளவு தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளது. இந்த செல­வு­க­ளுக்குள் சந்­தர்ப்ப செலவு பற்­றிய விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

தெற்­கா­சி­யாவின் மிகவும் வேக­மாக அபி­வி­ருத்தி அடைந்து வரும் பொரு­ளா­தா­ரங்­களில் ஒன்­றாக இலங்­கையின் பொரு­ளா­தாரம் காணப்­பட்­டது .

இடம்­பெற்ற மோதல்­களில் போரா­ளிகள் உள்­ளிட்ட இரண்டு தரப்­பிலும் 100,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இதில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்களாவர், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினராவர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்ததிருந்தன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-15#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தயா கேமேஜ்? :rolleyes: ஒரு சிங்களப் பெயரை ஒழுங்காக மொழி பெயர்க்கத் தெரியாமல் இந்திய ஊடகம் செய்தி போடுது, அதை சிறிலங்காவில் இருந்து வெளியாகும் வீரகேசரி அப்படியே போடுது. தயா கமகே இலங்கைச் சிங்களவர். இப்போது ஏசியன் ட்ரிபியூனுக்கு எழுதி வரும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவன் கூட கவலைப்பட்டிருக்கமாட்டான், 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! வீரகேசரி தன் தகுதியிழந்து குட்டிச் சுவர் தனமாகச் செய்தி போட்டால் சிங்களவன் ஏன் கவலைப் பட வேண்டும்? தமிழன் தான் கவலைப் பட வேணும்!

  • தொடங்கியவர்

justin இந்த தவறை நானும் அவதானித்து இருந்தேன்.

காரணம் சிவசங்கர் மேனனின் புத்தக செய்தியும் வந்து இருந்த நிலையில், இது யார் எழுதிய புத்தகம் என்று அறிவதுக்காக...

ஆனால் செய்தியை இணைக்கும் போது எந்த திருத்தமும் நான் செய்ய விரும்புவது இல்லை.

5 hours ago, Justin said:

தயா கேமேஜ்? :rolleyes: ஒரு சிங்களப் பெயரை ஒழுங்காக மொழி பெயர்க்கத் தெரியாமல் இந்திய ஊடகம் செய்தி போடுது, அதை சிறிலங்காவில் இருந்து வெளியாகும் வீரகேசரி அப்படியே போடுது. தயா கமகே இலங்கைச் சிங்களவர். இப்போது ஏசியன் ட்ரிபியூனுக்கு எழுதி வரும் ஒருவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

justin இந்த தவறை நானும் அவதானித்து இருந்தேன்.

காரணம் சிவசங்கர் மேனனின் புத்தக செய்தியும் வந்து இருந்த நிலையில், இது யார் எழுதிய புத்தகம் என்று அறிவதுக்காக...

ஆனால் செய்தியை இணைக்கும் போது எந்த திருத்தமும் நான் செய்ய விரும்புவது இல்லை.

 

நீங்கள் சொல்வது சரி, செய்தியைச் சரி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கில்லை.

சிங்களப் பெயர்கள் தெரியாத இந்திய ஊடகத்திடம் கொப்பி பண்ணும் போது கூட தயா கமகே யாரென்று தெரியாமல் பிரதி பண்ணிப் போடும் அளவுக்கு தமிழ் ஊடகங்கள் இருப்பதையே சுட்டிக் காட்டினேன். வழமை போல நான் சிங்கள அபிமானத்தினால் பெயரைத் திருத்தியதாக மீரா கவலைப் படுகிறார். Who cares!:cool:

  • தொடங்கியவர்

தமிழ் ஊடகங்களின் நிலைமை கவலைக்குஇடம்தான்..:(

இன்று கூட ஏதோ ஒரு செய்தியில் விளக்குமாறு என்பதை "விலக்­கு­மா­றினால்" என்று எழுதிருந்தார்கள்.

37 minutes ago, Justin said:

நீங்கள் சொல்வது சரி, செய்தியைச் சரி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கில்லை.

சிங்களப் பெயர்கள் தெரியாத இந்திய ஊடகத்திடம் கொப்பி பண்ணும் போது கூட தயா கமகே யாரென்று தெரியாமல் பிரதி பண்ணிப் போடும் அளவுக்கு தமிழ் ஊடகங்கள் இருப்பதையே சுட்டிக் காட்டினேன். வழமை போல நான் சிங்கள அபிமானத்தினால் பெயரைத் திருத்தியதாக மீரா கவலைப் படுகிறார். Who cares!:cool:

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெயர் எப்படி வந்தால் என்ன??? Who cares.

 

  • கருத்துக்கள உறவுகள்

கமகே என்பதை ஆங்கிலத்தில் "Gamage" என்று எழுதிய முறையில்தான் தவறு உள்ளது. அதை மொழி பெயர்த்த வகையில் ஊடகத்தில் தவறேதும் இல்லை. Gamage என்பதை ஆங்கில முறையில் வாசித்தால் கேமெஜ் என்பதுபோலத்தான் வரும் (Damage என்பதுபோல). tw_blush: இது பொதுவாகவே தெற்கு ஆசியர்கள் செய்யும் தவறு. ஆகவே இனிமேல் கமகே என்பதை Gum-eh-Gay என்று எழுதுமாறு பரிந்துரைக்கிறேன் யுவர் ஆனர்.. :D:

  • 2 weeks later...

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் - சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

26 வருடங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க இலங்கை இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள், அமெரிக்காவின் வெளிநாடுகள் தொடர்பான கொள்கையற்ற செயற்பாடுகள் காரணமாக வீணாகி போனதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க அமெரிக்க எடுத்த முயற்சி காரணமாக இலங்கை பாரதூரமான பிரச்சினை எதிர்நோக்கிய விதம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர் விபரமாக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புலிகள் போரில் தோற்காது போயிருந்தால், புலம்பெயர் தமிழர்களை சர்வதேச ராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு தேவையான வகையில் மாற்றியதாக புத்தக ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த புத்தகம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் வைத்து கொண்டு அவர்களை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக பயன்படுத்த அமெரிக்கா இறுதி வரை முயற்சித்தது எனவும்,

புலம்பெயர் தமிழர்களுக்கு உயிரூட்டியதாக விமர்சித்துள்ள நூல் ஆசிரியர் , அமெரிக்கா எப்போதும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க புலிகளின் பெயரில் சர்வதேச இராஜதந்திர அமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்க அமெரிக்க முயற்சித்தது.

நந்திக்கடல் களப்பில் சிக்கியிருந்த பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்களை காப்பற்றி அவர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லும் திட்டமும் அமெரிக்காவிடம் இருந்தது. இதற்கான அவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பையும் பயன்படுத்தினர்.

இந்த புத்தகத்தை எழுத அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தனக்கு நெருக்கமான சிலரும் அக்கறை காட்டியதாக கூறியுள்ள நூல் ஆசிரியர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடப்பவற்றையும் விமர்சித்துள்ளார்.

போருக்கு பின்னர் இலங்கையின் பயணத்தில் முன்னோடிகளாக புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்கள் விரும்பியபடி ஈழத்தை உருவாக்கி கொடுக்க அமெரிக்கா முயற்சித்தது.

இலங்கை இராணுவம் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்ததால், புலம்பெயர் புலிகளை சர்வதேச இராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியது.

மேற்குல நாட்டு அரசாங்கங்களில் உதவியுடன் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைத்து நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் சக்தியாக உருவாக்கும் ஆரம்ப முயற்சித்து தோற்று போனது.

புலிகள் தோல்வியடைந்தன் காரணமாக 26 வருடங்களாக நாட்டை காப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்த இராணுவ தலைவர்களையும் நாட்டு மக்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என முத்திரை குத்த அமெரிக்கா முயற்சித்ததாகவும் நூல் ஆசிரியர் கூறியுள்ளார்.

இதற்காக அமெரிக்கா சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பெயரில் செயற்பட்டு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை போல், இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்களை துரும்புச் சீட்டாக பயன்படுத்திக்கொண்டதாகவும் தயா கமகே தனது நூலில் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தை இலங்கையில் உள்ள விஜித யாப்பா அச்சகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/special/01/129507?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிங்களம் தான் காலம் காலமாக அமெரிக்காவுக்கு பூ போட்டு கும்பிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா விரும்பியது 

சிறிலங்கனின் அடியை  பார்த்துபோட்டு உவங்களோடை ஏன் கொழுவுவான் என்று விட்டு விட்டார்கள்.tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சிறிலங்கனின் அடியை  பார்த்துபோட்டு உவங்களோடை ஏன் கொழுவுவான் என்று விட்டு விட்டார்கள்.tw_blush:tw_blush:

"ரண களத்துக்குள்ளேயும்.... ஒரு கிளுகிளுப்பு" எண்டு உதைத்தான் சொல்லுறது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2016 at 9:57 AM, இசைக்கலைஞன் said:

கமகே என்பதை ஆங்கிலத்தில் "Gamage" என்று எழுதிய முறையில்தான் தவறு உள்ளது. அதை மொழி பெயர்த்த வகையில் ஊடகத்தில் தவறேதும் இல்லை. Gamage என்பதை ஆங்கில முறையில் வாசித்தால் கேமெஜ் என்பதுபோலத்தான் வரும் (Damage என்பதுபோல). tw_blush: இது பொதுவாகவே தெற்கு ஆசியர்கள் செய்யும் தவறு. ஆகவே இனிமேல் கமகே என்பதை Gum-eh-Gay என்று எழுதுமாறு பரிந்துரைக்கிறேன் யுவர் ஆனர்.. :D:

இசை நீங்கள் ஒரு காணா கடியன், உங்கட  மொழி பெய்ர்ப்பு பரிந்துரையை அற்புதம் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லாத இலங்கையில் பாலும் தேனும் ஓடும் என்று நம்ப வைக்கபட்ட சாதரான அடித்தட்டு சிங்களவனுக்கு புலிகள் முடிந்து எழுவருடமாக இன்னும் வாழ்க்கை சிலவு கூடுவதுக்கு காரணம் சொல்ல ஒரு பொது எதிரி தேவை அதுதான் மாறி மாறி us ஐ போட்டு தாக்கினம் போல் உள்ளது...........................................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கப்பல் வரும் என்று வன்னியில் வந்த கதையை உண்மையாக்க தயா கமகே புத்தகம் விட்டிருக்கின்றார். 

“He who controls the past controls the future. He who controls the present controls the past.”

From George Orwell's 1984 book

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.