Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவுக்கு திமுக செய்த துரோகங்கள்

 

  • Replies 3k
  • Views 276.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை காவலன் கடலோரப் பகுதியில் பனை விதைகள் நடுதல் நிகழ்வு! | தமிழ் திருநாடு

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி விலக ஒரு கிழமை முதல் சாதிய அடிப்படையில் புறகணிக்க படுவதாக சொல்லி நாம் தமிழரில் இருந்து விலகினார்.

காணொளியை முழுமையாக பார்க்காமல் அரைகுறையாக பார்த்தால் இப்படிதான் கருத்துகள் வரும்
 

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

இன துரோகிகள் வேறுயாரும் இல்லை Including சீமான் - சொன்னது நாம் தமிழர் கட்சியில் அதிகம் வாக்குகள் பெற்ற  பிரியா பிரபாகரன் 😂

சின்ன புள்ளைகளுக்கு இனிப்பு கிடைத்த மகிழ்ச்சி இது - சிறிது காலத்திற்கு சந்தோஷப்படுங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சாகுல் ஹமீது மற்றும் ஐயா இரா.பத்மநாபன் இருவருக்கும் நினைவேந்தல் வீரவணக்கம்! 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் விவசாய பொருளாதார கொள்கை சரியா ? பிஜேபியின் விவசாயக் கொள்கை சரியா ?

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பேச்சு வேலை செய்ய துவங்கிவிட்டது பனை விதைகள் நடவு பசுமை அறக்கட்டளை! தமிழ் திருநாடு

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் முதல் முறை மாற்றுத்திறனாளிகளுக்காக பாசறை தொடங்கிய நாம் தமிழர் கட்சி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை விமர்சிப்பவர்கள் இந்த காணொளியை முழுமையாக பார்க்கனும். எந்த இடத்தில் எப்படி கதைக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியவேண்டும், அதைவிட்டு தானும் பெரிய கருத்தாளன் என்ற மாமதையில் திரிவது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழனை தமிழன் ஆழ வேண்டும் அதுதான் நாம் தமிழரின் கொள்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

SPB ஒரு தெலுங்கர் | அயோக்கியனின் பார்வை | இதிலும் கேவலமான அரசியல் செய்யும் திராவிடம்

பாடும் நிலா SBP மக்களுடன் இரண்டற கலந்த ஒரு கலைஞர். அவரை தெலுங்கர் கூறும் மூடர்களுக்கு நமது கண்டனம். இதில் கூட அரசியல் ஆதாயம் தேடும் திராவிடம்.

 

மேட்டுக்குடி  இன சாதி பிரதேசவாதிகள்தான் இப்படிப்பட்ட அயோக்கியதானமான அரசிலை இழவு வீட்டில் செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

காணொளியை முழுமையாக பார்க்காமல் அரைகுறையாக பார்த்தால் இப்படிதான் கருத்துகள் வரும்
 

சின்ன புள்ளைகளுக்கு இனிப்பு கிடைத்த மகிழ்ச்சி இது - சிறிது காலத்திற்கு சந்தோஷப்படுங்கள்😂

காணொலியில் தெளிவாக பல காரணங்களை சொல்லும் அவர் சாதியும் ஒரு காரணம் என சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

 

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி விலக ஒரு கிழமை முதல் சாதிய அடிப்படையில் புறகணிக்க படுவதாக சொல்லி நாம் தமிழரில் இருந்து விலகினார்.

 

இன்னும் முழுமையாக பார்க்கவில்லை

3 minutes ago, goshan_che said:

காணொலியில் தெளிவாக பல காரணங்களை சொல்லும் அவர் சாதியும் ஒரு காரணம் என சொல்கிறார்.

சாதி... இதை ஒரு போதும் நாம்தமிழர் ஆதரிக்கவில்லை, இதை சொல்லிதான் அனுதாபம் தேடனுமென்றில்லை. உங்களுக்கு கிடைத்த துருப்பு சீட்டு அதை எப்படி பாவிக்னுமென்ற பக்குவமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, உடையார் said:

இன்னும் முழுமையாக பார்க்கவில்லை

சாதி... இதை ஒரு போதும் நாம்தமிழர் ஆதரிக்கவில்லை, இதை சொல்லிதான் அனுதாபம் தேடனுமென்றில்லை. உங்களுக்கு கிடைத்த துருப்பு சீட்டு அதை எப்படி பாவிக்னுமென்ற பக்குவமில்லை

அவர் சொல்லியதை சொல்கிறேன். இதில் இதை பாவித்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

பாடும் நிலா SBP மக்களுடன் இரண்டற கலந்த ஒரு கலைஞர். அவரை தெலுங்கர் கூறும் மூடர்களுக்கு நமது கண்டனம்.

இது தெலுங்கர் என்று தமிழ்நாட்டில் இனவெறி  பேசும் சீமானின் நாம் தமிழர்கள் கட்சிக்கு அல்லவா பொருந்தும் 👍

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது தெலுங்கர் என்று தமிழ்நாட்டில் இனவெறி  பேசும் சீமானின் நாம் தமிழர்கள் கட்சிக்கு அல்லவா பொருந்தும் 👍

🤔எனக்கும் விளங்கவில்லை: திடீரென்று திராவிடர் குழு தான் தெலுங்குவழி வந்தோரை வந்தேறிகள் என்று விழிப்போர் என்கிறார்கள்?ராதாரவி இப்போது வந்தேறி, அவரே அமரர் ஆனால் (அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்!) சாதனைத் தமிழர் என்பார்கள் போல!

இவிங்கட கொள்கை தான் என்ன?

1985  காலப்பகுதியில் தமிழ் நாட்டில் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்து பல இசைநிகழ்வுகள் நடத்தபட்டன. அதில் தமிழ் திரையுலகின் நட்சத்திர கலைஞர்கள் உட்பட பல மொழி பேசும் நடிக நடிகைகள் கலந்து கொண்டு தாமும்  தமிழர்கள் தான் என்ற உணர்வுடன் பல ஆயிரக்கணக்கான பணத்தை வாரி வழங்கியிருந்தனர். அப்போதெல்லாம் மக்களிடையே இந்த இனவெறியை காண்பது அரிது. இப்போது சமூக வலைத்தளங்களில்  இனவெறியை தலைவிரித்து ஆட செய்த பெருமை  `நா(ம்)(சி) தமிழர் கட்சியையே சேரும். இருப்பினும் தமிழ் நாட்டில்   இனவெறி கூட்டத்தை ஒரு அளவுக்கு மேல் வளர்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

1985  காலப்பகுதியில் தமிழ் நாட்டில் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்து பல இசைநிகழ்வுகள் நடத்தபட்டன. அதில் தமிழ் திரையுலகின் நட்சத்திர கலைஞர்கள் உட்பட பல மொழி பேசும் நடிக நடிகைகள் கலந்து கொண்டு தாமும்  தமிழர்கள் தான் என்ற உணர்வுடன் பல ஆயிரக்கணக்கான பணத்தை வாரி வழங்கியிருந்தனர். அப்போதெல்லாம் மக்களிடையே இந்த இனவெறியை காண்பது அரிது. இப்போது சமூக வலைத்தளங்களில்  இனவெறியை தலைவிரித்து ஆட செய்த பெருமை  `நா(ம்)(சி) தமிழர் கட்சியையே சேரும். இருப்பினும் தமிழ் நாட்டில்   இனவெறி கூட்டத்தை ஒரு அளவுக்கு மேல் வளர்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

சிங்களம் இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது எனலாம் பிரெஞ்சுக்காரர்கள் பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கே சொந்தமானது எனலாம் ஆனால் தமிழ் நாடு தமிழருக்கு சொந்தமானது என்றால் தமிழரான உங்கள் போன்றோருக்கு எரிச்சல் ஏற்படுவது தான் தமிழரின் இன்றைய வந்தாரை வாழ வைத்து துண்டையும் இழந்து நிற்கும் இழி நிலைக்கு காரணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது தெலுங்கர் என்று தமிழ்நாட்டில் இனவெறி  பேசும் சீமானின் நாம் தமிழர்கள் கட்சிக்கு அல்லவா பொருந்தும் 👍

சீமான் ஒருபோதும்  இனவெறி பேசியதில்லை.
என் மொழி என் தேசம்.
மற்றவர்கள் வாருங்கள் வாழுங்கள். அனுபவியுங்கள்.
தமிழ்நாடு தமிழருக்கு மட்டுமே.

இது ஏன் உங்களுக்கு இடிக்கிறது?

9 hours ago, Justin said:

🤔எனக்கும் விளங்கவில்லை: திடீரென்று திராவிடர் குழு தான் தெலுங்குவழி வந்தோரை வந்தேறிகள் என்று விழிப்போர் என்கிறார்கள்?ராதாரவி இப்போது வந்தேறி, அவரே அமரர் ஆனால் (அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்!) சாதனைத் தமிழர் என்பார்கள் போல!

இவிங்கட கொள்கை தான் என்ன?

நாம் தமிழர் கொள்கைகளை ஒழுங்காக வாசிக்கா விட்டால் இப்படித்தான் எழுதித்தொலைக்க்கவேண்டும்.

13 minutes ago, குமாரசாமி said:

சீமான் ஒருபோதும்  இனவெறி பேசியதில்லை.
என் மொழி என் தேசம்.
மற்றவர்கள் வாருங்கள் வாழுங்கள். அனுபவியுங்கள்.
தமிழ்நாடு தமிழருக்கு மட்டுமே.

இது ஏன் உங்களுக்கு இடிக்கிறது?

நாம் தமிழர் கொள்கைகளை ஒழுங்காக வாசிக்கா விட்டால் இப்படித்தான் எழுதித்தொலைக்க்கவேண்டும்.

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

தமிழ்நாட்டில் கன்னடர்/தெலுங்கர் உரிமைப்போராட்டம் எல்லாம் நடக்கின்றனவே ஏன் எதற்கு?
இவ்வளவு கத்தும் நீங்கள் சிறிலங்காவிலும் பிரச்சனை இல்லையென்று நிறுவ வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

On 25/9/2020 at 20:02, ராசவன்னியன் said:

உதாரணமாக செயலலிதா இறந்து ஓபிஎஸ் பதவி ஏற்றதுமே மத்திய அரசின் அழுத்தத்தால் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் திரைமறைவில் அரங்கேறியது. அது தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களும் பங்குபெறலாம் என்பது. தமிழ்நாடு மின்வாரியத்தில் இதன்மூலம் பிற மாநிலத்தவர்கள் தற்போது நுழைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களின் அஞ்சல் துறை வேலைகளில் சொந்த மாநில மக்களைவிட பஞ்சாப் அரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கியதாக காட்டப்பட்டது.

அதேபோல திருச்சி பொன்மலை ரயில்வே வேலைகளிலும் உள்ளடி வேலைகளால் தமிழர்கள் உரிமைகள் பறிபோயுள்ளது.

தற்பொழுது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கே 90 சதவீதம் வேலை வாய்ப்பில் உரிமை என உரிமைக் குரலோடு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளன / கொண்டு வரப்போகிறது இன்னும் சிலவற்றில். 

துல்பன் 5 நுhற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் அவரவர் வீடுகளில் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தந்த மொழிகளிலேயே கதைத்து பேசுகிறார்கள்.அதாவது தங்கள் தாய்மொழியைத் தான் பேசுகிறார்கள்.இதுவரை ஆண்டவர்களும் இவர்களைப் போலவே இருப்பதனால்த் தான் தமிழ் வாழ்ந்தால் என்ன விட்டால் என்ன நாம் வாழ வேண்டுமென்று நடந்தார்கள் நடக்கிறார்கள்.
மேலே வன்னியன் எழுதியதை ஒரு தமிழனாக இருந்து கொஞ்சம் சிந்தியுங்களேன்.
எங்களுக்கென்ன உங்களுடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று விருப்பமா?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

5 நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களுக்கு சீமானுக்கு இருக்கும் அதே உரிமை உள்ளது. அவர்களை பார்த்து இங்கு அனுபவியுங்கள் ஆள உரிமையில்லை  என்று கூற சீமானுக்கு எந்த உரிமையோ அருகதையோ  இல்லை. சீமானும் அந்த மக்களை போல ஒரு சாதாரண தமிழக பிரஜை தான். சீமானை விட திறமை சாலிகளை மக்கள் தெரிவு செய்தால் அவர்கள் ஆளலாம் என்பதே நியதி.  

உங்கள் Logic 🤔......

இதே நியதி இலங்கைக்கும் பொருந்துமா அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டும்தானா 🤔

அமெரிக்கக் கண்டத்திலுள்ள பூர்வ குடிகள், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ....... 🤥

26 minutes ago, ஈழப்பிரியன் said:

துல்பன் 5 நுhற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் அவரவர் வீடுகளில் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தந்த மொழிகளிலேயே கதைத்து பேசுகிறார்கள்.அதாவது தங்கள் தாய்மொழியைத் தான் பேசுகிறார்கள்.இதுவரை ஆண்டவர்களும் இவர்களைப் போலவே இருப்பதனால்த் தான் தமிழ் வாழ்ந்தால் என்ன விட்டால் என்ன நாம் வாழ வேண்டுமென்று நடந்தார்கள் நடக்கிறார்கள்.
மேலே வன்னியன் எழுதியதை ஒரு தமிழனாக இருந்து கொஞ்சம் சிந்தியுங்களேன்.
எங்களுக்கென்ன உங்களுடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று விருப்பமா?

ஐயா ....

முயலுக்கு மூன்றுகால். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள். 😜

என்னை மாற்ற உங்களால் முடியுமா 🤔

முயற்சித்துப் பாருங்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் நடப்பட்ட மரக்கன்றுகள் இந்த வருடம் மரமாக மகிழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் உறவு!

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் நான் பதிந்த கருத்தை (கவிதை?) தலைப்பு பொருத்தம் கருதி இங்கே மீள் பதிவு செய்கிறேன்.

பாலா, 


பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 

எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 


யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 


போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 

தமிழா,
 

உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை .

 

கீழே இருப்பது 

இரெண்டாம் உலக யுத்ததின் பின் ஜேர்மானியரான பாதிரியார் மார்டின் நீம்லெர் எழுதிய உரைவடிவிலான மன்னிப்பு கவிதையின் ஆங்கில வடிவம்.

இதை மொழி பெயர்த்து வீரியம் இழக்க செய்ய விரும்பாதபடியால் அப்படியே பதிகிறேன்.

First they came for the socialists, and I did not speak out—
     Because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—
     Because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—
     Because I was not a Jew
.

Then they came for me—and there was no one left to speak for me.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.