Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல்

Featured Replies

சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல்

 

வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கில் வாழும் இளைஞர்களின் மனதில் யுத்தம் சார்ந்த மனநிலையை ஏற்படுத்தி இந்த பேஸ்புக் குழு செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக ஆவா குழு உறுப்பினர்கள் பலர் தொடர்பில் தகவல் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவு, பாதாள குழு தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல்

http://www.tamilwin.com/security/01/154736

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி வித்தியா படுகொலையுடனும் சுவிஸ் தொடர்பு,வாள் வெட்டு குழுவுக்கும் சுவிஸ் தொடர்பு   ....என்னதான் நடக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

மாணவி வித்தியா படுகொலையுடனும் சுவிஸ் தொடர்பு,வாள் வெட்டு குழுவுக்கும் சுவிஸ் தொடர்பு   ....என்னதான் நடக்குது.....

சுவிஸ் நாட்டின் நல்ல இமேஜை சிலர் தவறாக பயன் படுத்த நினைக்கலாம்.ஆனால் நிலைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவிஸ் நாட்டின் நல்ல இமேஜை சிலர் தவறாக பயன் படுத்த நினைக்கலாம்.ஆனால் நிலைக்காது.

அப்போ வாள்  வெட்டு குழு ராணுவம் இல்லையா அண்ணை 

தமிழின அழிப்புக்கு துணைபோன, பலபடுகொலைகள் செய்த ஒட்டுண்ணிகள் பலரை சுவிஸ் முதலிய  ஐரோப்பிய நாடுகளுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் அனுப்பிவைத்ததை பலர் அறிவார்கள்.

நிர்மலராஜன், அற்புதராஜன் ஆகியோரின் நெப்போலியன் உட்பட்ட கொலையாளிகள், யாழில் பலகொலைகளை செய்த சுவிஸ்குமார் உட்பட்ட கொலையாளிகள், அண்மையில் கருணா போன்றவர்களை வேறுபெயர்களில் அலுவலக கடவுச்சீட்டுக்கள் மூலம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளே அனுப்பிவைத்ததை பலர் அறிவார்கள். இவர்கள் இங்கிருக்கும்போதே பலவித கெட்ட பழக்கங்களுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இதில் இரண்டு நோக்கங்கள் இருந்தது. ஒன்று இனங்காணப்பட்ட கொலையாளிகளை பாதுகாப்பது, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகளை குழப்புவது.

அண்மையில் சிங்கள-பௌத்த 'நல்லாட்சி' அரச பயங்கரவாதிகள் குறிப்பாக சுவிஸில் இருப்பவர்களை திரும்பவருமாறு அழைத்ததையும் மறந்திருக்க முடியாது. தாங்கள் அனுப்பிய சமூகவிரோதிகளை சர்வதேசம் இனம்கண்டால் அதன் மூலம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம்.  
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனி ஒருவன் said:

அப்போ வாள்  வெட்டு குழு ராணுவம் இல்லையா அண்ணை 

முப்படையினரின் ஒரு பகுதியினர் அரசின் தேவை கருதி செய்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கத்தான் செய்கின்றது.அதாவது பொலிஸில் கைவைத்தவுடன் இந்த குழுவை ஒரு கிழ்மையினுள் கைது செய்ய பொலிஸாரால் முடியும் என்றால், பொதுமக்கள் அவதிப்படும் பொழுது ஏன் கைது செய்யமுடியவில்லை.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

முப்படையினரின் ஒரு பகுதியினர் அரசின் தேவை கருதி செய்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கத்தான் செய்கின்றது.அதாவது பொலிஸில் கைவைத்தவுடன் இந்த குழுவை ஒரு கிழ்மையினுள் கைது செய்ய பொலிஸாரால் முடியும் என்றால், பொதுமக்கள் அவதிப்படும் பொழுது ஏன் கைது செய்யமுடியவில்லை.:rolleyes:

தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாதல்லவா தற்போதய நிலையில் அப்படி கைது செய்தாலும்  அப்பாவி இளைஞன்  ராணுவத்தால் கைது  என் செய்தி  வெளியீட்டு இருப்பார்கள் வடக்கு  கிழக்கில் சகலரும் கண்காணிக்கப்படுகிறார்கள்  தற்போது 

637 வாள்கள் 376 கத்திகள் 123 கம்பிகள் 67 மோட்டார் சைக்கிள்கள்   அனுமதி பத்திரம் இன்றி அத்தனையும் புதிய ரக பைக்குகள்  கைப்பற்றப்பட்டுள்ளன  ஆனால் தற்போது அவர்களை அரசு அடக்குவதற்க்கான காரணம் ஒன்று அவர்களை இல்லாமல் ஆக்குவது மற்றது நீதிபதி மீது தாக்குதல் இன்னும் பல கொள்ளகை சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில்  தங்களது தேவைக்காக் பயன்படுத்தி விட்டு பாவித்து விட்டு அவர்களை தூக்கி கடாசிவது  அவர்கள் தந்திரம் இது நாம் நடைமுறையில்  கண்ட உன்மை ஏன் அப்படியும் இருக்கலாம்  தானே புத்தன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாதல்லவா தற்போதய நிலையில் அப்படி கைது செய்தாலும்  அப்பாவி இளைஞன்  ராணுவத்தால் கைது  என் செய்தி  வெளியீட்டு இருப்பார்கள் வடக்கு  கிழக்கில் சகலரும் கண்காணிக்கப்படுகிறார்கள்  தற்போது 

637 வாள்கள் 376 கத்திகள் 123 கம்பிகள் 67 மோட்டார் சைக்கிள்கள்   அனுமதி பத்திரம் இன்றி அத்தனையும் புதிய ரக பைக்குகள்  கைப்பற்றப்பட்டுள்ளன  ஆனால் தற்போது அவர்களை அரசு அடக்குவதற்க்கான காரணம் ஒன்று அவர்களை இல்லாமல் ஆக்குவது மற்றது நீதிபதி மீது தாக்குதல் இன்னும் பல கொள்ளகை சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில்  தங்களது தேவைக்காக் பயன்படுத்தி விட்டு பாவித்து விட்டு அவர்களை தூக்கி கடாசிவது  அவர்கள் தந்திரம் இது நாம் நடைமுறையில்  கண்ட உன்மை ஏன் அப்படியும் இருக்கலாம்  தானே புத்தன் 

இப்போ மட்டும் ஆதராம் கிடைத்தா அடக்கப்பட்டார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாதல்லவா தற்போதய நிலையில் அப்படி கைது செய்தாலும்  அப்பாவி இளைஞன்  ராணுவத்தால் கைது  என் செய்தி  வெளியீட்டு இருப்பார்கள் வடக்கு  கிழக்கில் சகலரும் கண்காணிக்கப்படுகிறார்கள்  தற்போது 

637 வாள்கள் 376 கத்திகள் 123 கம்பிகள் 67 மோட்டார் சைக்கிள்கள்   அனுமதி பத்திரம் இன்றி அத்தனையும் புதிய ரக பைக்குகள்  கைப்பற்றப்பட்டுள்ளன  ஆனால் தற்போது அவர்களை அரசு அடக்குவதற்க்கான காரணம் ஒன்று அவர்களை இல்லாமல் ஆக்குவது மற்றது நீதிபதி மீது தாக்குதல் இன்னும் பல கொள்ளகை சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில்  தங்களது தேவைக்காக் பயன்படுத்தி விட்டு பாவித்து விட்டு அவர்களை தூக்கி கடாசிவது  அவர்கள் தந்திரம் இது நாம் நடைமுறையில்  கண்ட உன்மை ஏன் அப்படியும் இருக்கலாம்  தானே புத்தன் 

நீங்கள் சொல்வதை தான் நானும் சொல்கின்றேன்....நான் நேற்று விக்கிரம் வேதா  திரைப்படம் பார்த்தேன் ...அப்படியே எனது கற்பனையை சிறிலங்கா அரசியல்/பாதுகாப்பு என்ற கோணத்தில் தட்டிவிட்டேன்...

இராணுவமும் உத்தமர்கள் அல்ல, வாள்வெட்டுக்காரர் தமிழர் என்றபடியால் உத்தமர்கள் என்றும் சொல்ல வரவில்லை....ஆனால் அரசு தொடர்ந்து தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை நிருத்த வேண்டும் .....

சாதரணமாக இவ்வளவு ஆயுதங்கள் அனுமதிபத்திரம் அற்ற மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் 20,23,  வயது பெடியளுக்கு இலகுவில் எப்படி கிடைத்தது....இவ்ர்களின் பின்புலம் என்ன என்பதை பகிரங்கப்படுத்துவார்களா?நிச்சயமாக பெரிய ஒரு பின்புலம் இருக்க வேண்டும்....

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இப்போ மட்டும் ஆதராம் கிடைத்தா அடக்கப்பட்டார்கள் ?

ஆதாரங்கள் வைத்தே கைதுகள் தொடர்கின்றன 

 

6 hours ago, putthan said:

சாதரணமாக இவ்வளவு ஆயுதங்கள் அனுமதிபத்திரம் அற்ற மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் 20,23,  வயது பெடியளுக்கு இலகுவில் எப்படி கிடைத்தது....இவ்ர்களின் பின்புலம் என்ன என்பதை பகிரங்கப்படுத்துவார்களா?நிச்சயமாக பெரிய ஒரு பின்புலம் இருக்க வேண்டும்...

வித்தியா என்ற மாணவியின் பாலியல் வல்லுறவு , கொலைக்கு என்ன காரணம்  பின் புலம் இருப்பது போல வே இதற்கும் பின்புலம் இல்லாமலா இருக்கும்  வெளிவரலாம் அல்லது இன்னும் இழுபட்டு செல்லலாம் ஆனால் கைதானவர்களின் நிலை  குற்றம் நிருப்பிக்கப்படுமாயின் அவர்கள் குற்ற வாளியே

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இராணுவம் பொலிஸ் வடக்கு கிழக்கில் இருந்தும் இப்படியான சம்பவங்கள் இராணுவம்' பொ;லிசுக்கு தெரியாமல் நடக்கும் என்று நம்பவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

முப்படையினரின் ஒரு பகுதியினர் அரசின் தேவை கருதி செய்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கத்தான் செய்கின்றது.அதாவது பொலிஸில் கைவைத்தவுடன் இந்த குழுவை ஒரு கிழ்மையினுள் கைது செய்ய பொலிஸாரால் முடியும் என்றால், பொதுமக்கள் அவதிப்படும் பொழுது ஏன் கைது செய்யமுடியவில்லை.:rolleyes:

அரச படைகள் அல்லது புலானாய்வுப் பிரிவு இவர்களை இயக்குது என்பதை விட  இப்படியான குற்றங்களை இவர்கள் தமக்கு கிடைக்கம் லாபங்களுக்காக(லஞசம்)கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதே ஓரளவு உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

அரச படைகள் அல்லது புலானாய்வுப் பிரிவு இவர்களை இயக்குது என்பதை விட  இப்படியான குற்றங்களை இவர்கள் தமக்கு கிடைக்கம் லாபங்களுக்காக(லஞசம்)கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதே ஓரளவு உண்மை.

 

14 hours ago, தனி ஒருவன் said:

ஆதாரங்கள் வைத்தே கைதுகள் தொடர்கின்றன 

 

வித்தியா என்ற மாணவியின் பாலியல் வல்லுறவு , கொலைக்கு என்ன காரணம்  பின் புலம் இருப்பது போல வே இதற்கும் பின்புலம் இல்லாமலா இருக்கும்  வெளிவரலாம் அல்லது இன்னும் இழுபட்டு செல்லலாம் ஆனால் கைதானவர்களின் நிலை  குற்றம் நிருப்பிக்கப்படுமாயின் அவர்கள் குற்ற வாளியே

குற்றவாளிகள் தண்டிகப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.....கொள்ளை ,கடத்தல் போன்ற செயல்களை செய்வதற்காக பொலிசாரையும்,இராணுவத்தையும் வாளாலும், துப்பாக்கியாலும் பயம்காட்டுவதற்கு இடமளிக்க முடியாது.பயம் காட்டிவிட்டு அதை தமிழர் நலனுக்காக செய்தோம் என்று குற்றவாளிகள் மறைந்து திரிவதற்கும் இடமளிக்க முடியாது.

அதே போன்று பொலிசும் குற்றங்களை தங்களது நலனுக்காக‌ செய்து போட்டு முன்னாள் புலிகள் என்று கூறி கேசை மறைக்க கூடாது

11 hours ago, சுவைப்பிரியன் said:

அரச படைகள் அல்லது புலானாய்வுப் பிரிவு இவர்களை இயக்குது என்பதை விட  இப்படியான குற்றங்களை இவர்கள் தமக்கு கிடைக்கம் லாபங்களுக்காக(லஞசம்)கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதே ஓரளவு உண்மை.

 லஞ்சம் வாங்குவதில்  ஒரளவு உண்மை உள்ளது போன்று ....புலனாய்வுபிரிவினர் இயக்குவதிலும் ஒரள்வு உண்மை உண்டு...ஒரளவு காணும் ஒரு பிர்தேசத்தை நாசமாக்க...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகையா குழுக்களினால் தாங்களுக்கு உயிரச்சம் இருப்பதாக காட்டி, இவர்களுக்கும் இரணுவத்திருக்கும் தொடர்பு இருப்பதாக முடிச்சுபோட்டு பலர் வெளினாடுகளில் அசூல் அடிக்கவும் கூடும். 
இந்த‌ கோணத்திலும் இவை நோக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, colomban said:

இத்தகையா குழுக்களினால் தாங்களுக்கு உயிரச்சம் இருப்பதாக காட்டி, இவர்களுக்கும் இரணுவத்திருக்கும் தொடர்பு இருப்பதாக முடிச்சுபோட்டு பலர் வெளினாடுகளில் அசூல் அடிக்கவும் கூடும். 
இந்த‌ கோணத்திலும் இவை நோக்கப்பட வேண்டும்.

இப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களை, வெளிநாடுகள் கண்ணை மூடிக்கொண்டு அகதிகளாக ஏற்றுக்கொள்வதில்லை. முன்போல் இராணுவத்தினரையும் காரணம்காட்ட முடியாது. தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இராணுவத்தினர் நிரந்தரமாகவே தமிழர் நிலங்களில் தங்குவதற்குத் தமிழ் அமைச்சர் ஒருவரே.... பல மில்லியன்களை ஒதுக்கி வருவதையும்..... அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழர் ஒருவரைத் தலைவரைக் கொண்ட எதிர்க்கட்சியினரையும், வெளிநாட்டு அரசுகள் நன்றாகவே அறிந்து கொண்டுள்ளன..... :shocked: 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இத்தகையா குழுக்களினால் தாங்களுக்கு உயிரச்சம் இருப்பதாக காட்டி, இவர்களுக்கும் இரணுவத்திருக்கும் தொடர்பு இருப்பதாக முடிச்சுபோட்டு பலர் வெளினாடுகளில் அசூல் அடிக்கவும் கூடும். 
இந்த‌ கோணத்திலும் இவை நோக்கப்பட வேண்டும்.

உது ரொம்ப பழயை குற்றச்சாட்டு ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.