Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ் மன்­னார் ஆயர் தெரி­விப்பு

Featured Replies

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

மன்­னார் ஆயர் தெரி­விப்பு

 
 
கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“புதிய அர­ச­மைப்­பில் அதி உச்ச அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­டமை எமக்­குக் கிடைத்த இறை­வ­னின் கொடை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கிடைக்­காத ஒன்­றைக் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்”
இவ்­வாறு மன்­னார் மறை­மா­வட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்­டகை தெரி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
புதிய அர­ச­மைப்­பில் அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­ட­மை­யா­னது எமக்கு கிடைத்த இறை­வ­னின்.

நான் ஒரு அர­சி­யல்­வாதி அல்ல. நாட்­டில் உள்ள அனைத்து மக்­க­ளும் அமை­தி­யு­ட­னும் மகிழ்­சி­யு­ட­னும் வாழ­வேண்­டும் என்று நினைக்­கிற ஒரு­வன்.

இது­வரை கால­மும் தனி நாடு கோரி போராடி வந்­தா­லும் நாம் அத­னைத் தற்­போது கேட்க முடி­யாது. அத­னைக் கேட்­டா­லும் இவர்­கள் தரப்­போ­வ­தில்லை. இந்த நிலை­யில் தற்­போது கிடைக்க உள்ள அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்வை நாம் ஒரு இறை­வ­னின் கொடை­யா­கப் பார்க்க வேண்­டும்.

அதி­கா­ரங்­களை வழங்­கி­விட்டு பின்­னர் அவர்­க­ளுக்­குத் தேவை­யா­ன­வாறு அத­னைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளா­த­வாறு திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கிடைக்­காத ஒன்றை கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார் – என்­றார்.

http://newuthayan.com/story/31978.html

முன்பிருந்த நல்ல ஆயர்களுக்கு இழுக்கை ஏற்படுத்த ஒரு களை கிளம்பியுள்ளது.

தற்போதைய மன்னார் ஆயரின் சில நடவடிக்கைகளைப் பார்க்கும் போது டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி  போலவே தமிழினப் படுகொலைகளை செய்த அரச பயங்கரவாதிகளின் கைக்கூலியாக செயற்பட முனைவது தெரிகிறது.

maxresdefault-6.jpg

அரசாங்கம் தருவது இறைவன் நமக்களித்த கொடையென அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமென மன்னார் மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் யாப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் காணப்பட்டமை இறைவன் நமக்குக் கொடுத்த கொடை.

நான் அரசியல்வாதியல்ல. இந்த நாட்டில் அனைத்து மக்களும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவேண்டுமென நினைப்பவன்.

நாம் இதுவரை காலமும் தனிநாடு கோரிப் போராடி வந்தோம். தற்போது அதனைக் கேட்கமுடியாது. கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இந்த நிலையில் தற்போது கிடைக்கவுள்ள அதிகாரப்பகிர்வை இறைவனின்கொடையெனக் கருதவேண்டும்.

அதிகாரங்களை வழங்கிவிட்டு மீண்டும் அவர்கள் பறிக்காதவாறு திருத்தம் செய்யப்படவேண்டும். வடமாகாண முதலமைச்சர் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=79748

 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

இயேசு நாதர் சிலுவையில் ஏறினார்!

இந்தாள்....அரச மரத்தில தான் ஏறுவன் எண்டு பிடிவாதம் பிடிக்குது!

இனத்தின் பெயரால்....தமிழினம் அழிந்ததை விடவும்...மதத்தின் பெயரால் அழிந்தது தான் அதிகம்!

இந்துமதம் முதல்.....கிறிஸ்தவம்...இஸ்லாம் வரை இதைத் தான் செய்தன!

தவிக்கிற முயலை அடிக்கிறதிலை....இவைக்கு நிகரேயில்லை!

சில நல்ல கிறிஸ்தவர்களை நான் அறிவேன்...அவர்கள் இப்படியான விடயங்களிள் தலையை நுழைப்பதே இல்லை!

 

ஆபிரிக்காவில் இருந்த போது...,

இயேசுவின் சிலைகளைப் பார்த்தேன்!

அவர்களின் மூக்கு..,

தட்டையாக இருந்தது!

 

எமது தேசத்தின்,

இயேசு நாதர்களைப் பார்த்தேன்!

அவர்கள்  இன்னும்.....,

வெள்ளைக்காரராகவே இருந்தனர்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

8 hours ago, nedukkalapoovan said:

தாங்கள்.. ஜேசுவின் போதனைகளோடு நின்று கொள்வது நல்லம்.

யாழ் குடா நாடு ஆக்கிரமிக்கப்பட்ட பின்.. யாழ் பேராயர் அரசாங்க பிரதிநிதி போல கருத்துக்கள் வெளியிட்ட காலங்களையும் மறக்க ஏலாது.

ஜேசு கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயத்திற்காகத்தான் பாடுபட்டார். சிலுவை சென்றார்.

நீங்கள் என்னடான்னா.. மக்களை துன்புறுத்துவனின் காலடியில் ஜேசுவை சரணடையச் சொல்கிறீர்கள். கேட்டால்.. ஜேசுவின் சேவகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஜேசுவை இதனால்.. கொச்சைப்படுத்தும் நீங்கள் எல்லாம்... தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்ல அருகதை அற்றவர்கள். :rolleyes:

மிகச் சரியான கருத்து!

மன்னார் ஆயருக்கு மகிந்த சிந்தனைதான் பைபிள் என்று விளங்குது.
ஜேசுநாதரை விட மகிந்த மிக உயர்ந்தவர் என்று நல்லா விளங்கி வைச்சிருக்கிறார்.

இவர் இந்த அறிக்கையோட நீண்டுவிடக் கூடாது.
மன்னாரில் உள்ள ஜேசு, மேரி சிலைகளை அப்புறப்படுத்தி மகிந்தவின் சிலைகளை வைக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

 

விக்னேஸ்வரனை ஒரு இந்துவாக கருதி மதமாற்றங்களில் ஈடுபட்டுவரும் இந்த மன்னார் கிறீஸ்தவ குழுக்கள் கொஞ்சகாலமாக கழுதைபடாதபாடாக கத்தி வருவதை அறிய முடிகிறது.

இந்தப் போக்கு ஆரோக்கியமானது இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தேவாலயத்திற்குப் போனமா ஆராதனை செய்தமா என்று உங்க சொந்த வேலையப் பாருங்க.(நான் நினைக்கிறேன் கருணா பிரிவின் போது இவர்தான் மட்டக்களப்பு ஆயராக இருந்து அவருக்கு சப்போட் பண்ணிணவர் என்று நினக்கிறேன்)

2 hours ago, vanangaamudi said:

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

ஆயரை ஒரு தனிமனிதனாக ஏற்றுக்கொகொண்டு, அதனால் அவருக்கு எந்த சிறப்பு தகுதிகளும் கவுரவமும் வழங்க முடியாது என்பதையும் ஏற்றுக்கொண்டு, மேலும் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஒரு அரைவேக்காடு என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மத சாயம் பூசக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vanangaamudi said:

ஆயரும் ஒரு தனிமனிதன்  என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 
அத்துடன்அவரின் கருத்துக்கு நாங்கள் மதமுலாம் பூசுவதையும் தவிர்க்கவேண்டும்.

ஒரு தனிமனிதன் ஆயராகலாம்.

ஒரு ஆயரைத் தனிமனிதனாகக் கொள்ள முடியாது.

கிறிஸ்தவர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்­டகையின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

இவர் தொடர்ந்து கைக்கூலிகள் போன்று அறிக்கைகள் விடுவாரானால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விற்று ஈனப்பிழைப்பு நடத்துபவர்களின் பட்டியலில் இணைந்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2017 at 9:45 AM, நவீனன் said:

இது­வரை கால­மும் தனி நாடு கோரி போராடி வந்­தா­லும் நாம் அத­னைத் தற்­போது கேட்க முடி­யாது. அத­னைக் கேட்­டா­லும் இவர்­கள் தரப்­போ­வ­தில்லை. இந்த நிலை­யில் தற்­போது கிடைக்க உள்ள அதி­யுச்ச அதி­கா­ரப் பகிர்வை நாம் ஒரு இறை­வ­னின் கொடை­யா­கப் பார்க்க வேண்­டும்.

இலனகையில் இருப்பதால் ஆயருக்கு கொஞ்சம் விளங்குது ஆனால் அதுவும் கிடைக்குமா பிதாவே என்பதுதான் மக்கள் எண்ணம் 

அந்த ஏசு நாதருக்கே ஸ்தோத்திரம் tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26.9.2017 at 6:15 AM, நவீனன் said:

கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

மன்­னார் ஆயர் தெரி­விப்பு

 
 
கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ்

ஆண்டவரே! தாங்களே இதை சொல்லலாமா?

இல்லாத இடத்திற்கு...இருக்குமிடத்தில் இருந்து பிரித்து கொடுப்பதுதானே நியாயம்.


போதனைகள் போதிக்கும் வாயால் போதிமரத்தவர்களின் சிந்தனைகளை உதிர்க்கலாமா?

கருவறுப்பை கடுமையாக எதிர்க்கும் வத்திக்கானும் இன அழிப்பை ஏற்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.