Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம்   மக்கள்  அரசினால் வழங்கப்படும்  வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து   போராட்டம்  ஒன்றினை  யாழ் மாவட்ட  செயலக வாயிலில் நடாத்தினர்.    யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில்  இன்று(26) வியாழக்கிழமை   காலை 8  மணி முதல் 10  மணிவரை   இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு   பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை  அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே   இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த  மக்களுக்கு வழங்கவில்லை எனவும்  2017ம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

எனவே தான்  இந்த அநீதிக்கு எதிராக நாம் குரல்கொடுப்பதாகவும்  எமது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றும் அராஜகத்தை சில  அரச  அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். எனவே தான் எமது கோரிக்கை   மக்களுக்காக வழங்கப்பட்ட 200 வீடுகளும்  முழுமையாக வழங்கப்படல் வேண்டும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில்  உயர் அதிகாரிகளுடன் பேசினோம் ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த  அமைதியான அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டோம் என கூறினர்.

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

mus4.jpg

mus3.jpg

mus2.jpg

 

mus1.jpg

mus6.jpg

 


முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=178617 .

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆர்ப்பாட்டம்...தமிழரே எமது இதய பூமியை விட்டு வெளியேறு....இது விரைவில் யாழ் கச்செரிக்கு முன்பாக...

இவர்கள் இடையில் வந்தவர்கள்.
கிழக்கில், மன்னாரில் பெருமளவு கள்ளக்காணிகளை கைப்பற்றியது போல ஏனைய வடக்கு பிரதேசங்களில் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 

இவர்களுக்கு வீடுகள் வழங்குவது தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

2 hours ago, போல் said:

இவர்கள் இடையில் வந்தவர்கள்.
கிழக்கில், மன்னாரில் பெருமளவு கள்ளக்காணிகளை கைப்பற்றியது போல ஏனைய வடக்கு பிரதேசங்களில் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 

இவர்களுக்கு வீடுகள் வழங்குவது தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

மன்னாரில் கள்ள காணி கைபற்றினால் அதை நாம் சட்ட ரீதியாக மீட்க முடியாதா ??

நான் அவதானித்தவரை 1981 இல் 25% இருந்து 2012இல் 5% குறைவாக  இருந்து 2016இல் மன்னாரில் இவர்களது சன தொகை 46%க அதிகரித்து இருக்கின்றது

Edited by Dash

8 hours ago, Dash said:

மன்னாரில் கள்ள காணி கைபற்றினால் அதை நாம் சட்ட ரீதியாக மீட்க முடியாதா ??

மீட்க முடியும்.

ஆனால் எங்கள் பெரும்பாலான மக்கள் திருந்த வேண்டும். அவர்களுக்கு தாங்கள் முயற்சி செய்யாமல் வேறு யாராவது தான் மீட்டு தரோணும் என்ட நினைப்பிருக்கு. அவரவர் தங்கள் காணிகளை மீட்க முன்வந்தால் இலகுவில் மீட்டு விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
இதற்குள் கள்ளத்தோணித் தமிழர் முஸ்லிம்களுடன் யார் முதலில் கள்ளக்காணி பிடித்தது என்று அடிபாடு!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
இதற்குள் கள்ளத்தோணித் தமிழர் முஸ்லிம்களுடன் யார் முதலில் கள்ளக்காணி பிடித்தது என்று அடிபாடு!

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

இந்த சரித்திரம் தெரியாத ஆட்களால்தான் தமிழனுக்கு தரித்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
 

இலங்கையில் பல தீவுகள் உள்ளன. பாரதியார் எந்தத் தீவைக் குறித்துப் பாடினாரோ.......?? சில வேளை நயினா தீவுப்பக்கம் அவர் வந்தபோது சிங்களப் புத்த துறவிகளைக் கண்டிருக்கலாம், பாடியிருக்கலாம்.!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பாரதியார் இந்தோனேசியா ?
மலேசியாவுக்கு பாலம் அமைக்கவேண்டும் என்று பாடவில்லை ?

சிங்களத்திகள் என்ன 
பாரதியாரின் சின்ன வீடோ ? 

யாரோ எங்கோ வாழ்ந்த தீவுக்கு 
பாலம் அமைக்கும் வேலை எதற்கு பாரதிக்கு ??

எமை இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார்.
இதுக்குள்ள .... இனத்துக்குள் வந்து புகுந்தவர்கள் 
இனி பாரதியையும் பிரிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

3 hours ago, Maruthankerny said:

ஏன் பாரதியார் இந்தோனேசியா ?
மலேசியாவுக்கு பாலம் அமைக்கவேண்டும் என்று பாடவில்லை ?

சிங்களத்திகள் என்ன 
பாரதியாரின் சின்ன வீடோ ? 

யாரோ எங்கோ வாழ்ந்த தீவுக்கு 
பாலம் அமைக்கும் வேலை எதற்கு பாரதிக்கு ??

எமை இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார்.
இதுக்குள்ள .... இனத்துக்குள் வந்து புகுந்தவர்கள் 
இனி பாரதியையும் பிரிக்கலாம் 

சிங்களத் தீவில் வாழ்ந்த எங்களை  இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

சிங்களத் தீவில் வாழ்ந்த எங்களை  இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

உங்களின் அறிவுக்கு நீங்கள் எங்கயோ இருக்க வேண்டிய ஆள் ...

பாரதி என்ன கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டளவிலா பாடினார் ?
பாரதி பாடினது இப்போது எமது அப்பப்பா காலத்தில் 
அப்போ சிங்கள தேசம் ... சிங்கள மன்னர் ஆட்சி எல்லாம் இருந்து கொண்டுதான் 
இருந்தது அப்போது இலங்கை தீவில் பெரும்பான்மை சிங்களவர்கள்தான்.
கண்டி ராச்சியம் (தமிழ்) தெலுங்கு நாயக்கர் இடத்தில் இருந்தது. 

நல்ல வேளை .....
நீங்கள் கண்ணதாசன் பாடினார் ..
"அன்பு தெய்வம் கௌதமனின் அருள் மிகு ஆலயங்கள்" என்று (இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ எனும் பாடலில்) 
ஆதலால் சைவமதம் வந்தேறு குடி என்று எழுதவில்லை என்று 
ஆச்சரியமாக இருக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

பூச்சியம்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0082.jpg

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

 

பாரதி பாடினது இப்போது எமது அப்பப்பா காலத்தில் 
அப்போ சிங்கள தேசம் ... சிங்கள மன்னர் ஆட்சி எல்லாம் இருந்து கொண்டுதான் 
இருந்தது அப்போது இலங்கை தீவில் பெரும்பான்மை சிங்களவர்கள்தான்.

நீங்களே சொல்லிவிட்டீர்களே?

7 hours ago, MEERA said:

பூச்சியம்

சைவர் இல்லையா?  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Jude said:

 

சைவர் இல்லையா?  

பாரதி தானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நீங்களே சொல்லிவிட்டீர்களே?

 

 

நீங்களே வாசித்து விட்டீர்களே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.10.2017 at 9:47 AM, பெருமாள் said:

இந்த சரித்திரம் தெரியாத ஆட்களால்தான் தமிழனுக்கு தரித்திரம் .

அவைக்கு சிங்களத்தின்ரை உடம்புச்சூடு வேணும் போலை கிடக்கு....அதுதான் குத்திமுறியினம். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.