Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

Featured Replies

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம்  அனுஸ்டிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துதலும், நினைவுத்தூபி திறப்புவிழாவும் இடம்பெற்றது.

இந்த நினைவுதினத்தில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த குடும்பங்களின் உறவுகள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆத்ம ஈடேற்றத்திற்காக பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

அதன்பின்பு உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் 11பேருக்கும் உறவினர்களால் சுடரேற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன், பிரபல வர்த்தகர் கே.ரஞ்சிதமூர்த்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இராஜபுத்திரன்-சாணாக்கியன், குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய அதிபர் கே.சத்தியமோகன் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.பவளேந்திரன், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பிரதிகள், உட்பட நூற்றுக்கான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/30-th--Memorial-Day-in-Kalawanchikudy

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 14 உறவுகளின் நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

ஹிந்திய அரச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு  அஞ்சலி!

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவம்  மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 பேரின் உருவப்படத்துக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (05)  அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு வீதி ரோந்துக்குச் சென்ற இந்திய இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலைத் தொடர்ந்து,  இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

30 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவம்  மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 பேரின் உருவப்படத்துக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (05)  அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு வீதி ரோந்துக்குச் சென்ற இந்திய இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலைத் தொடர்ந்து,  இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

30 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image_3cafdb3de5.jpg

image_e67d1ceeaa.jpg

image_becd507f67.jpg

image_40ff74ad3d.jpg

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

இந்திய இராணுவத்தினால் படுகொலைசெய்யப்பட்டவர்கள் 30வருடத்திற்கு பின்னர் நினைவுகூரப்பட்டனர்

 

 

இந்திய இராணுவத்தினால் படுகொலைசெய்யப்பட்டவர்கள் 30வருடத்திற்கு பின்னர் நினைவுகூரப்பட்டனர்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம்  மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 உறவுகளின் நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.


களுவாஞ்சிகுடியில் 1987ம் ஆண்டு வீதி ரோந்து சென்ற இந்தியன் இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலை தொடர்ந்து  இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட பதினான்கு பேரை படுகொலை செய்தார்கள்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட பதினான்கு பேரினுடைய ஞாபகார்த்தமாக களுவாஞ்சிகுடி மக்களினாலும் முன்னாள் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து அமைத்தள்ள நினைவுத்தூபி திறப்பு விழாவும் உயிர் நீர்த்தவர்களின் நினைவு தினமும்  அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி  செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் குடும்பத்தின் உறுப்பினர்கள்  உயிரிழந்தவர்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

30வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC08386DSC08403DSC08416DSC08432DSC08441DSC08444

http://www.samakalam.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகள்வுகள் தொடர  வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்!

இரத்தம் தோய்ந்த இந்தியாவின் அகிம்சை முகமூடியை...இப்படியான நினைவு கூரல்கள் நிச்சயம் கிழித்தெறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

DSC08403

அசோகச் சக்கரவியூகத்துள்
சிதையுண்டது ஈழம் மட்டுமா
ஈழமக்கள் இதயமுமே
கோளைத்தனமான செயல்களிலே
கொடிவிடும் வடவர் நாடு
வாழாவெட்டியாகி 
வரலாற்றில் பதிவாகும்
சிங்களத்தின்
ஒருமைப்பாட்டைக்காத்து நிற்கும்
உன் சுயநல அரசியலுள்
இந்தியாவே இல்லாது போகின்ற
வேளையிலே உணர்வாய் நீ
வீழ்தவர் உயிர்மூச்சு அணலாகி 
உன்னைச் சுட்டெரிக்கட்டும்
உன்னைச் சுட்டெரிக்கட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவு அஞ்சலிகள்.

நினைவு அஞ்சலிகள்!

12 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான நிகள்வுகள் தொடர  வேண்டும்.

நிகழ்வுகள் தொடரவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அஞ்சலிகளும் உள்ளத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

நினைவு அஞ்சலிகள்!

நிகழ்வுகள் தொடரவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அஞ்சலிகளும் உள்ளத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும்!

அஞ்சலிகள் செலுத்தப்படுவது இறந்தவர்களுக்கு உள்ளத்தினாலேயே

 

கண்ணீர் அஞ்சலிகள்  இன்னும் பல் நிகழ்வுகள் கிழக்கில் இந்தியராணுவத்தால் நட்ந்தது தடயங்கள் அற்று போய்விட்டது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.