Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்!

Featured Replies

சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்!

 

 
Image

சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவுசெய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். இதுவரை காலம் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கொடை நிலையம் ஒன்றை நடத்தி அதனூடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகிறார். அதாவது கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு வடக்கில் 300 இற்குமேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்வதற்கான மாதாந்த பணத்தினை வழங்கி வருகிறார்.

மேலும் கணவனை இழந்து குடும்ப தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வயது முதிர்ந்தவர்களுக்கு மாதாந்த பணக்கொடுப்பனவையும் இலவச மருத்துவ முகாமையும் நடத்தி வருகிறார். வருடத்தில் 6கோடி பணத்தை மக்களுக்கு வழங்கிவரும் இவர் வீட்டுத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.

தான் பிறக்கும் போது ஒன்றுமே இல்லாது பிறந்ததுபோல தான் இறக்கும் போதும் தன்னிடம் ஒன்றுமே இல்லாது இறக்க வேண்டும் என்று சொல்லும் இவர் தனது தொழிலில் வரும் வருமானம் முழுவதையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவேன் என்று உறுதி பூண்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/103809

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா. தீ மிதித்து, நேர்த்திகடன் வைத்த்து, பாலபிஷேகம் செய்து பணம் விரயமாக்குவதிவிட இது எவ்வளவோ உயர்ந்த செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக  நல்லவிடயம்

எமது  அரசியல்வாதிகள் குறுக்கீடு  செய்யாமல் இருக்கக்கடவது..

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ள பணக்கார  தமிழ் நிறுவனங்கள் செய்ய முன்வராத விடயத்தை,
தனி ஒருவராக... சுவிஸில் இருக்கும்  வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின்,
இந்தப்  பெரிய, அரிய  பணியை... பாராட்ட வார்த்தைகளே இல்லை. 
உங்களின் நல்ல உள்ளத்திற்கு, வாழ்த்துக்கள் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக  நல்லவிடயம் வாழ்த்துக்கள் .

தியாகி அறக்கட்டளை நீண்டகாலமாக இயங்கி வருகிறது என நினைக்கிறேன், முன்னரே சில செய்திகள் படித்திருக்கிறேன் இதுபற்றி 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகிறேன் ஐயா உதவ முன் வந்ததற்கு அதையும் தடுக்க நினைப்பார்கள் விடாதீர்கள் செய்து காட்டுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

திரு.வாமதேவனை முன் உதாரணமாகக் கொண்டு வசதி படைத்த ஏனைய நாட்டில் வாழ் தமிழர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்.

திரு வாமதேவனும் அவர் குடும்பமும் நீண்ட ஆயுள் பெற்று தொடர்ந்தும் இப்படிப்பட்ட உதவிகள் செய்ய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீடமைப்பு திட்டத்தைஇந்தியாவுக்கு குடுங்கோஎன்றும்இல்லை சீனாவுக்குத்தான்என்றும் சில அரசியல்வாதிகள் குழப்பிக் கொண்டிருக்கும்  வேளையில் இவரது சேவை மிக மிக பாராட்ட வேண்டியது.??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.