Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த

Featured Replies

நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த

 

 
 

சமாதான தீர்வை காண்பதற்காக  விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம்  நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம்  எழுதினேன்  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

mraugu.jpg

நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் அப்பாவிகளை கொல்லவேண்டாம்,படையினரை தாக்கவேண்டாம், நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை கொலைகள் தற்கொலை தாக்குதல்கள் படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/38326

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஆனால் அதிகார போதை தலைக்கேறி வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்.

அவருடைய குடும்பத்தினர் மீண்டும் சிறிலங்கா அரச அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒடுக்கத்தான் போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவருடைய குடும்பத்தினர் மீண்டும் சிறிலங்கா அரச அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒடுக்கத்தான் போகின்றனர்.

மகிந்த வந்தால்த் தான் தமிழரின் பிரச்சனை எடுபடும்.வெளிநாடுகளுக்கு உள்நுழைய தமிரின் பிரச்சனை ஒன்றே தெரிவாக இருக்கும்.

தமக்கு விரும்பிய நல்லாட்சி அரசென்றால் என்ன வேணுமானாலும் செய்துவிட்டு போகட்டும் என்றிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மகிந்த வந்தால் தான் தமிழரின் பிரச்சனை எடுபடும்.வெளிநாடுகளுக்கு உள்நுழைய தமிரின் பிரச்சனை ஒன்றே தெரிவாக இருக்கும்.

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னர், அதாவது காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளில் உள்ள இனங்கள், அடுத்தவர்கள் உதவியின்றிப் போராடிச் சுதந்திரமடைந்தது பற்றிய விபரம் ஒன்றையேனும் அறியத் தருவீர்களா...? 

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் இவர் அப்ப சொல்லேல்ல. இப்ப யாரும் கண்முன்ன இல்லை என்ற துணிவில்.. ஆளாளுக்கு கதையளந்து திரிகிறார். எங்களில் கொஞ்சப் பேர் தொடர்கள் எழுதிக் கொண்டு திரிவது போல. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கிருபன் said:

மகிந்த சொன்னதைச் செய்து காட்டிவிட்டார்.

என்னப்பா ஆளாளுக்கு....நேரத்துக்கு நேரம் மாத்தி மாத்தி கதைக்கிறியள்?
ஒருங்கால் சொல்லிச்சினம்  பூகோள அரசியலின் படி இந்தியா ஒரு நாளும் தனிநாடு அமைக்க விடாது அதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டு..
பிறகு ராஜீவ் காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்
பிறகு சர்வதேசம் தான் பயங்கரவாதிகளை அழிச்சது எண்டிச்சினம்
அங்காலை கொஞ்சச்சனம் சகோதரபடுகொலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்.
இந்தியாதான் கெல்ப் பண்ணினது எண்டு கோத்தவாயர் எங்கையோ சொன்ன ஞாபகம்
இப்ப மகிந்த செய்து காட்டிட்டார் எண்டுறியள்.
எனக்கு ஒரு கோதாரியும் விளங்கேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய வியாக்கியானங்கள் சொல்லலாம். ஆனால் புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ற உண்மை ஒன்றுதானே. அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த இருந்ததால்தான் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டபோது மனிதாபிமானம் காட்டாமல் தொடர்ந்தும் முன்னேறி முழுவதுமாக முடித்தனர்.

தமிழின படுகொலைகளை தொடர்ந்தது மட்டுமல்ல பல பில்லியன்களை கொள்ளையடித்த சிங்கள-பௌத்த பயங்கரவாதி மகிந்த ராஜபக்ச சொல்வதை இந்தக் கும்பல்களுக்கு வால்பிடிக்கும் எட்டப்பர்களைத் தவிர வேறு யார் தான் நம்பப் போகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2018 at 12:21 PM, Jude said:

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

தமிழ் மக்களுக்கு தேர்வு அல்லது தீர்வு  அவர்கள் தரமாட்ட்டார்கள் 
பிராந்திய அரசியல் ஆதிக்கம் என்றுவரும்போது 
யார் இலங்கை சார் நிலம் கடலை ஆளுமை கொள்ளவது என்ற 
போட்டி அவர்கள் இடத்தே வரும் 
அமேரிக்கா ... இந்தியா ... சீனா மூன்றும் 
ஒரு கோட்டில் இருக்க வாய்பில்லை இந்தியா அமெரிக்க 
சார்பு நிலைகொண்டு இந்தியாவை சுத்தி உள்ள அனைத்து நாடுகளுடனும் 
பகைமை காட்டி வருகிறது.

பாகிஸ்தான் சீன உறவு நாளும் நாலு பலம் அடைகிறது 
இப்போ திடீரென இம்ரான் கான் தேர்தலில் வெற்றி ஈட்டி உள்ளதால் 
அங்கும் சில சிக்கல்கள் வரப்போகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.