Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு!

Featured Replies

 

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முடிவெடுப்போம்.

கூட்டமைப்பின் ஆதரவு என்பது எமது கோரிக்கைகளை ஏற்று அதற்கான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் தலைமைத்துவத்தினைப் பொறுத்தே அமையும்.

எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துடனும், இந்தியாவுடனும் கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இந்தியாவுடன்-கலந்துரையா/

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

இலங்கையில் இருக்கும் ஒரே பிடிமானம் நீங்கதான் .. எவ்வளவு கேட்டாலும் கொடுப்பினம். பல்கா ஒரு அமொன்ட் கேளுங்க .?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இறைமையையும்...தன்னாதிக்கத்தையும்...பாதுகாப்பதாச் சத்தியப் பிரமாணம் எடுத்து...பாராளுமன்றத்தில்...அங்கத்துவம் வகிக்கும்...நீங்கள்...எதற்காக...இந்தியாவிடம் அறிவுரை கேட்கிறீர்கள்?

சர்வதேசம்...தமிழருக்கு...இதுவரை...என்னத்தை..வெட்டிப் பிடுங்கியுள்ளது?

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

இந்தியா சொல்லிப் போட்டுது என்று சொல்லி....நீங்கள் அனைவரும்...மகிந்தவுக்கே....ஆதரவளிக்கப் போகின்றீர்கள் என்பது உறுதியாகி விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இவர்களை கால் தூசிக்கும் மதிக்கவில்லை என்பது, 
இவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான்.. இவர்களின்  முட்டாள்  தனம். 

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைகளுக்கு முடிவெடுக்கும் உரிமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சிங்களத்தின் இறைமையையும்...தன்னாதிக்கத்தையும்...பாதுகாப்பதாச் சத்தியப் பிரமாணம் எடுத்து...பாராளுமன்றத்தில்...அங்கத்துவம் வகிக்கும்...நீங்கள்...எதற்காக...இந்தியாவிடம் அறிவுரை கேட்கிறீர்கள்?

சர்வதேசம்...தமிழருக்கு...இதுவரை...என்னத்தை..வெட்டிப் பிடுங்கியுள்ளது?

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

இந்தியா சொல்லிப் போட்டுது என்று சொல்லி....நீங்கள் அனைவரும்...மகிந்தவுக்கே....ஆதரவளிக்கப் போகின்றீர்கள் என்பது உறுதியாகி விட்டது!

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragunathan said:

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

இந்த முறை....மகிந்தர்...இந்தியா போனபோது....அவற்றை தலயில அடிச்சி....இந்தியா சத்தியம் வாங்கி இருக்காம்!?

முக்கிய காரணம்....போர்க்குற்ற விசாரணை...மீண்டும் கிளறப் பட்டால்....இந்தியா...தலைப்பாயும்  இல்லாமல்...கோவணமும் இல்லாமல் ....உலக அரங்கில் நிற்க வேண்டி வரலாம்!

ரணில்..ஒரு வேளை... விசாரணைக்கு இணங்கினாலும்....மகிந்த கடைசி வரையும் இணங்க மாட்டார் என்ற காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்!

கமலஹாசன் அண்மையில்....கூறியதைக் கணக்கிலெடுக்கும் போது....ஒன்றும்...ஒன்றும்...கூட்ட....இரண்டு வருகின்றதே!?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவே...மகிந்தவைக் கொண்டு வர முயல்வது...உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை!

கிந்தியா இதில் விருப்பமிலை என்பதை காட்டிக் கொண்டு, எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நாமும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற யதார்த்தத்தை பின்னிரு உருவாக்க முனைகிறது.

ஆனால், மகிந்தவும், சீனாவும் கொடுக்கும் குளிசையில் கிந்தியா முடமாக்கினாலும் வியப்பில்லை.

மகிந்த குடுப்பதிற்க்கு கிந்தியா மேல்   ஓர் ஆத்திரம் உண்டு. அது மகிந்த வெளியில் கூறும் அதிபர் தேத்தலில் கிந்தியா குள்ள நாரி வேலை செய்தது அல்ல.

கிந்தியாவின் யுத்தத்தை தானே நடத்தினேன் என்பதன் பின்பும், 2012 UNHRC பிரேரணனிக்கு கிந்தியா ஆதரவு வழங்கியதும் அதன் மூலம் OISL அறிக்கை 100 மேற்ப்பட்டவர்களில் யுத்த குற்றசாட்டை சுமத்தி தயாரிக்கப்பட்டதும்.

அதிகாரத்தில் ஏறி, தக்க தருணத்திக் மகிந்த கிந்தியாவின் கழுத்தை அறுபதத்திற்கு தகுந்த வாய்ப்பு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

இந்த முறை....மகிந்தர்...இந்தியா போனபோது....அவற்றை தலயில அடிச்சி....இந்தியா சத்தியம் வாங்கி இருக்காம்!?

முக்கிய காரணம்....போர்க்குற்ற விசாரணை...மீண்டும் கிளறப் பட்டால்....இந்தியா...தலைப்பாயும்  இல்லாமல்...கோவணமும் இல்லாமல் ....உலக அரங்கில் நிற்க வேண்டி வரலாம்!

ரணில்..ஒரு வேளை... விசாரணைக்கு இணங்கினாலும்....மகிந்த கடைசி வரையும் இணங்க மாட்டார் என்ற காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன்!

கமலஹாசன் அண்மையில்....கூறியதைக் கணக்கிலெடுக்கும் போது....ஒன்றும்...ஒன்றும்...கூட்ட....இரண்டு வருகின்றதே!?

கமல் என்ன சொன்னார்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ragunathan said:

கமல் என்ன சொன்னார்?

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-முன்னைய-ஆ/

5 hours ago, ragunathan said:

புங்கை, இந்தியா மகிந்தவைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பியதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

மகிந்த சீனாவின் செல்லப்பிள்ளையாச்சே?!

அது வெரி சிம்பிள்!

சீனா பில்லியன் கணக்கில அள்ளி கொட்டுது. மகிந்தடையும் பில்லியன் கணக்கில கொள்ளையடிச்ச காசு இருக்கு. அப்ப இந்தியன் கண் வேறெங்கே போகப்போது?

சூப்பிரசுவாமி நேரடியா கையை நீட்டி அள்ளி வாங்கிக்கொண்டு போறார்.
மற்றாக்கள் இராசதந்திர பொதிக்குள்ள ஒளிச்சு ஒளிச்சு கொண்டு போக்கினம்.
இவ்வளவு தான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது தான் சுயமாக சிந்திக்கப் போகிறீர்கள்?

இப்போது தானே பேரம்பேச நல்ல சந்தர்ப்பம்.எமது பிரச்சனைகள் ஒன்றா இரண்டா?இரண்டு பேரிடமும் தூக்கி போடலாமே?நல்லாட்சியில் விட்ட தவறை மீண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அறியப்படுவது என்னவெனில் சுயமாய் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறார்கள். இவர்களால் எப்போதுமே தெளிவாக உறுதியாக பேசமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்திக்கடன் வைக்கிறது இந்தியா விரதமிருந்து செடில் குத்தி பறவைகாவடி எடுக்கிறது சம்சும்சேனா கோஸ்டி. இது வழமைதானே. சொந்த புத்தி இல்லாத வேஸ்ட்டு பேர்வழிகள் . மைத்திரியும் ரணிலும் ஒண்ணா இருக்கையிலை எதிர்கட்சி அரியாசனத்திலை இருந்து புடுங்க முடியாததை மகிந்த வந்தபிறகு புடுங்கமுடியுமெண்டு இவை நினைத்தால் இவையிடை தலைக்குப்பின்னாலை ஒரு ஒளிவட்டம் தெரிந்தால்தான் உண்டு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முன்னரே மகிந்தவை பிரதமராக எப்படி நியமிக்கமுடியும்? மகிந்த ஆட்சியமைத்தால்  எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து  சம்பந்தன் உடனடியாக விலகி ரணிலுக்கு வழி விடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.