Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்!

maxresdefault-15.jpg

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.

ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/சமஷ்டியை-ஒருபோதும்-வழங்க/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரிடம் அதிகாரம் என்பது எனி நிரந்தரமில்லை. இவர் மட்டுமல்ல.. எந்தச் சிங்களவனும்.. தமிழர்களுக்கு ஒரு உருப்படியான தீர்வு தரமாட்டான்.

சிங்களங்கள் மோதும் இந்தச் சூழலில்.. தமிழர்கள்.. சர்வதேசத்தை இதற்குள் இழுத்து விடுவது தான்.. இவர்களிடம் இருந்து தீர்வுகளைப் பெற இருக்கும்.. ஒரே சிறந்த வழி.

அதில் தான் தமிழர்கள் ஒற்றுமையாக.. முனைய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இவரிடம் அதிகாரம் என்பது எனி நிரந்தரமில்லை. இவர் மட்டுமல்ல.. எந்தச் சிங்களவனும்.. தமிழர்களுக்கு ஒரு உருப்படியான தீர்வு தரமாட்டான்.

சிங்களங்கள் மோதும் இந்தச் சூழலில்.. தமிழர்கள்.. சர்வதேசத்தை இதற்குள் இழுத்து விடுவது தான்.. இவர்களிடம் இருந்து தீர்வுகளைப் பெற இருக்கும்.. ஒரே சிறந்த வழி.

அதில் தான் தமிழர்கள் ஒற்றுமையாக.. முனைய வேண்டும். 

சும்மா... போங்க நெடுக்ஸ்.
அறிவுரை கூறுவது எல்லாம், புத்தி உள்ள மனிதருக்கு தான்.
எங்களுடைய.. வெங்காய  அரசியல் வாதிகளுக்கு, சுயநலம் ஒன்றே... முக்கியம்.  

2 hours ago, கிருபன் said:

நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. 

தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே சாத்தியமான ஒரேயொரு அரசியல் தீர்வு என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தமிழர்களுக்கு ஒரே நாட்டினுள் எந்தவொரு நியாயமான தீர்வையும் தரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

சும்மா... போங்க நெடுக்ஸ்.
அறிவுரை கூறுவது எல்லாம், புத்தி உள்ள மனிதருக்கு தான்.
எங்களுடைய.. வெங்காய  அரசியல் வாதிகளுக்கு, சுயநலம் ஒன்றே... முக்கியம்.  

உங்கள் ஆதங்கம் புரிகிறது சிறியர்.

உலகின் எந்த பாகத்திலும், தனி நாடு என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரல், அவர்களது தேவை போன்றவைகளை வைத்தே உருவாகின்றன.

இந்த தேவைக்கு, நிகழ்ச்சி நிரலுக்கு முன்னாள், மைத்திரி, சம்பந்தர் எல்லோரும் அடிபட்டு விலத்தப்  படுவார்கள்.

ராஜராஜ சோழன் முதல், முகலாயர்கள், விஜய நகர பேரரசர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்கள் அனைவருமே, தம்மை அசைக்க முடியாது என்றே சொன்னார்கள். மைத்திரி வீர வசனம் பேசலாம்.... ஆனால்.... அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் தான்.

தமிழர்களுடன் நாட்டினை பகிர விரும்பாத சிங்களம், சீனாவுடன், இந்தியாவுடன் பகிர தயாராகின்றது. இதுவே சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் அதனை இழுத்து விடும்.

இன்று சீனா தவிர வேறு எந்த நாடுமே மகிந்தவை வரவேற்காமல் இருப்பது உண்மையில் எமக்கு சிறப்பானது.

சிங்களவர்களை நம்ப முடியாது, ஒருபோதும் தீர்வினை தர மாட்டார்கள் என்று நாம் சொன்னதை அவர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்.

இந்த சமயத்தில், தமிழர் தரப்பு, இந்த நிலைமையினை, சிங்களத்தின் பிரச்சனையாக சொல்லாமல், தீர்வு தராமல் இழுத்தடிக்கவே, அவர்கள் திட்டமிட்டு இந்த நாடகத்தினை நடத்தி உள்ளனர் என சர்வதேசத்துக்கு உரக்க சொல்ல வேண்டும்.   

5 minutes ago, Nathamuni said:

இன்று சீனா தவிர வேறு எந்த நாடுமே மகிந்தவை வரவேற்காமல் இருப்பது உண்மையில் எமக்கு சிறப்பானது.

சிங்களவர்களை நம்ப முடியாது, ஒருபோதும் தீர்வினை தர மாட்டார்கள் என்று நாம் சொன்னதை அவர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்.

இந்த சமயத்தில், தமிழர் தரப்பு, இந்த நிலைமையினை, சிங்களத்தின் பிரச்சனையாக சொல்லாமல், தீர்வு தராமல் இழுத்தடிக்கவே, அவர்கள் திட்டமிட்டு இந்த நாடகத்தினை நடத்தி உள்ளனர் என சர்வதேசத்துக்கு உரக்க சொல்ல வேண்டும்.    

இந்த அடிப்படை யதார்த்தங்கள் சம்மந்தன், சுமந்திரன், உட்பட களத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போவதில்லை!

தற்போது அரங்கேறும் அரசியல் கூத்தினால் தங்களுக்கேற்பட்ட தற்காலிக வரவேற்பில் சம்சும் கும்பல் மதிமயங்கியுள்ளதாக தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

உங்கள் ஆதங்கம் புரிகிறது சிறியர்.

உலகின் எந்த பாகத்திலும், தனி நாடு என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரல், அவர்களது தேவை போன்றவைகளை வைத்தே உருவாகின்றன.

இந்த தேவைக்கு, நிகழ்ச்சி நிரலுக்கு முன்னாள், மைத்திரி, சம்பந்தர் எல்லோரும் அடிபட்டு விலத்தப்  படுவார்கள்.

ராஜராஜ சோழன் முதல், முகலாயர்கள், விஜய நகர பேரரசர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்கள் அனைவருமே, தம்மை அசைக்க முடியாது என்றே சொன்னார்கள். மைத்திரி வீர வசனம் பேசலாம்.... ஆனால்.... அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் தான்.

தமிழர்களுடன் நாட்டினை பகிர விரும்பாத சிங்களம், சீனாவுடன், இந்தியாவுடன் பகிர தயாராகின்றது. இதுவே சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் அதனை இழுத்து விடும்.

இன்று சீனா தவிர வேறு எந்த நாடுமே மகிந்தவை வரவேற்காமல் இருப்பது உண்மையில் எமக்கு சிறப்பானது.

சிங்களவர்களை நம்ப முடியாது, ஒருபோதும் தீர்வினை தர மாட்டார்கள் என்று நாம் சொன்னதை அவர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்.

இந்த சமயத்தில், தமிழர் தரப்பு, இந்த நிலைமையினை, சிங்களத்தின் பிரச்சனையாக சொல்லாமல், தீர்வு தராமல் இழுத்தடிக்கவே, அவர்கள் திட்டமிட்டு இந்த நாடகத்தினை நடத்தி உள்ளனர் என சர்வதேசத்துக்கு உரக்க சொல்ல வேண்டும்.   

அனைவரும் எதிர் பார்க்கும்... ஆறுதலான பதிவு நாதமுனி. 

கிழக்கு ஆசியாவை... கைப்பற்றிய,  ராஜ ராஜ  சோழன்.. கோயில் கட்டாமல், 
தமிழ் மொழியை... முன் நிலைப் படுத்தியிருந்தால்....
இன்று... நீங்களும், நானும்... குளிர் நாட்டில், வாழ்ந்திருக்க வேண்டி வந்திருக்காது.

என் வாழ், நாளில்... ஈழத்தை  காண வேண்டும், என்று ஆசைப் பட்டேன்.
இனி... அது,  நடக்குமா.. என்று எனக்குத் தெரியவில்லை.
நாதமுனியர்... உங்கள் கருத்து,  மேலும்.. ஆவலைத் தூண்டுகின்றது.  ☝️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, போல் said:

இந்த அடிப்படை யதார்த்தங்கள் சம்மந்தன், சுமந்திரன், உட்பட களத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போவதில்லை!

தற்போது அரங்கேறும் அரசியல் கூத்தினால் தங்களுக்கேற்பட்ட தற்காலிக வரவேற்பில் சம்சும் கும்பல் மதிமயங்கியுள்ளதாக தெரிகிறது. 

அவையள் இன்னும் ஏக்கிய ராஜ்ஜியத்துக்கையே நிப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, போல் said:

இந்த அடிப்படை யதார்த்தங்கள் சம்மந்தன், சுமந்திரன், உட்பட களத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போவதில்லை!

தற்போது அரங்கேறும் அரசியல் கூத்தினால் தங்களுக்கேற்பட்ட தற்காலிக வரவேற்பில் சம்சும் கும்பல் மதிமயங்கியுள்ளதாக தெரிகிறது. 

Image may contain: 1 person, text

 சா நக்கிய...  மதி மயக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, போல் said:

இந்த அடிப்படை யதார்த்தங்கள் சம்மந்தன், சுமந்திரன், உட்பட களத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போவதில்லை!

தற்போது அரங்கேறும் அரசியல் கூத்தினால் தங்களுக்கேற்பட்ட தற்காலிக வரவேற்பில் சம்சும் கும்பல் மதிமயங்கியுள்ளதாக தெரிகிறது. 

அது அவர்கள் வேலை மட்டுமல்ல, நமது வேலையும் கூட.

GTF, TGTE ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இந்த அடிப்படை யதார்த்தங்கள் சம்மந்தன், சுமந்திரன், உட்பட களத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போவதில்லை!

விளங்கபோவதில்லை என்று சொல்ல முடியாது அவைக்கு எல்லாம் விளங்கும் அவை அரசியல் வியாபாரிகள் இவ்வளவு காலமும் பதவியில் இருந்த காலம் பணம் சேர்ப்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள் மற்றும்படி தமிழருக்கு தீர்வை பெற்றுகொடுத்தால் சிங்களவர்கள் எறியும் எலும்புத்துண்டு கிடைக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இவரிடம் அதிகாரம் என்பது எனி நிரந்தரமில்லை. இவர் மட்டுமல்ல.. எந்தச் சிங்களவனும்.. தமிழர்களுக்கு ஒரு உருப்படியான தீர்வு தரமாட்டான்.

சிங்களங்கள் மோதும் இந்தச் சூழலில்.. தமிழர்கள்.. சர்வதேசத்தை இதற்குள் இழுத்து விடுவது தான்.. இவர்களிடம் இருந்து தீர்வுகளைப் பெற இருக்கும்.. ஒரே சிறந்த வழி.

அதில் தான் தமிழர்கள் ஒற்றுமையாக.. முனைய வேண்டும். 

கடந்த தேர்தலிலேயே மைத்திரியை விட மகிந்த வந்தால்த் தான் தமிழருக்கு நல்லது என்று சொல்லியிருந்தேன்.மேற்குலகுக்கு பிடிக்காத ஒருவர் ஆட்சி செய்தால் அவர்களுக்கு தமிழர் பிரச்சனையை வைத்து தான் உள்நுழையலாம்.இப்ப கூட மகிந்த ஆட்சியிலிருப்பதே தமிழருக்கு நல்லது.

இதனால்த் தான் கஜேந்திரகுமாரின் கட்சியும் கடந்த தேர்தலை தமிழ்மக்கள் விருப்பப்படி வாக்களிக்கட்டும் என்று சொல்லியிருந்தனர்.

இனி தமிழ் தலைமைகள் என்று தம்மைத்தாமே கூறிக் கொள்பவர்கள் இனியாவது தமிழர்களுக்காக செயல்படுகிறார்களா பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

உலகின் எந்த பாகத்திலும், தனி நாடு என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரல், அவர்களது தேவை போன்றவைகளை வைத்தே உருவாகின்றன.

18ம் நூற்றாண்டு வரைக்கும் நாடுகளின் தோற்றம் பொதுவாக அந்தந்த பிராந்திய சக்திகளால் தீர்மானிக்கப்பட்டது.

19ம் நூற்றாண்டில் இருந்து, அதாவது ஓர் தேச-அரசு எனும்  Clausewitz இன் கோட்பாடு, பிரஷ்யா உடைவை நிரந்தரமாக்கியதும், கடல் சார் காலனித்துவ அரசுகளின் தோற்றமும், நாடுகளின் தோற்றத்தை சர்வதேமயப்படுத்திவிட்டது.  

சொறி லங்காவின் தோற்றம்,  தனிப்பட்ட மவுண்ட் பட்டன் உடனான உறவும்  பிரித்தானியருக்கு  பொன், பொருள், மாது, ஆண் என்பவை கொடையாக வழங்கப்பட்டாலும், திருகோணமலையை பிரித்தானியாவின் கையில் விடுவது என்ற பேரமே நிரந்தரமாகியது.

ஆனால், சொறி லங்கா பிரித்தானியாவை ஏமாற்றிவிட்டது என்பதை பிரித்தானியாவிற்கு ஏற்றுக்கொள்ள விருமமில்லை.

தற்போது, வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும் போது ஏற்றப்படும் நுண்ணதிர்வு, பெரும் பிரளத்தை உலகின் எந்த பகுதியிலும் ஏற்றப்படுத்தலாம் என்பதாகவே நாடுகளின் தோற்றம் தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக, சீனாவின் வளர்ச்சியே தென் சூடானை நிரந்தரமாகியது. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை.

அதனால், நேரம் சொறி லங்காவின் கைகளில் இல்லை.  

இதனால் தான், ஈழத்து தமிழர் உணர்ச்சி அரசியலை குறைத்து, உலகின் எந்தெந்த மூலைகளில் வல்லாதிக்க சக்திகள் எந்தெந்த காரணத்துக்கு உள்வர  எத்தனிக்கிறார்கள் என்பதை ஆராயவும், அத்தகைய நிலைகள் இம்மைக்கும் வருவதத்திற்கு வாய்ப்புகள் உண்டா என்பதை தீர்மானிக்கவும், சாதாரண பொதுமக்களுக்கு அறிவூட்டவும் ஓர் நிறுவனமயப்பட்ட முயதர்சி தேவை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

அனைவரும் எதிர் பார்க்கும்... ஆறுதலான பதிவு நாதமுனி. 

கிழக்கு ஆசியாவை... கைப்பற்றிய,  ராஜ ராஜ  சோழன்.. கோயில் கட்டாமல், 
தமிழ் மொழியை... முன் நிலைப் படுத்தியிருந்தால்....
இன்று... நீங்களும், நானும்... குளிர் நாட்டில், வாழ்ந்திருக்க வேண்டி வந்திருக்காது.

என் வாழ், நாளில்... ஈழத்தை  காண வேண்டும், என்று ஆசைப் பட்டேன்.
இனி... அது,  நடக்குமா.. என்று எனக்குத் தெரியவில்லை.
நாதமுனியர்... உங்கள் கருத்து,  மேலும்.. ஆவலைத் தூண்டுகின்றது.  ☝️

இன்னும் 2 வருடங்களில் யாழ்ப்பாண ராசதானி, 1520ல் போர்த்துக்கேயரால் வீழ்த்தப்படட 500ம் ஆண்டு நிறைவு வரப்போகிறது.

இதனை இப்போதிருந்தே count down ஆக உலகுக்கு சொல்ல வேண்டும்.

அதன் மூலம் எமக்கென தனி ராஜ்ஜியம் இருந்தது. அதை ஐரோப்பியர்கள் பறித்து சிங்களவர்களிடம் தாரை வார்த்து  கொடுத்து விட்டார்கள் என சொல்ல முடியம்.

அதுமட்டுமல்ல 1799ல் பிரிட்டிஷாரால் வீழ்த்தப்படட வன்னி, 1815ல் வீழ்த்தப்படட கண்டி போன்ற விபரங்களும் அதனூடே தெரிய வரும்.

GTF, நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவை இதில் கவனம் செலுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜனாதிபதி மட்டும் அல்ல ஒரு சிங்களவரை கூப்பிட்டு கேட்டால் கூட சொல்லுவார் இப்படித்தான் இது தெரியாமல அவர்களுடன் சேர்ந்து மாவரைத்து மக்களுக்கு தீர்வு என்று சொல்லி திரியும் மதி கெட்ட மந்திகளை சொல்ல வேண்டும்  தான் வாழும் வரைக்கும் லாபமே 

1 hour ago, Nathamuni said:

இன்னும் 2 வருடங்களில் யாழ்ப்பாண ராசதானி, 1520ல் போர்த்துக்கேயரால் வீழ்த்தப்படட 500ம் ஆண்டு நிறைவு வரப்போகிறது.

Bilderesultat for à®à®®à¯à®à¯à®à®°à¯ வரலாற௠மà¯à®à¯à®à®¿à®¯à®®à¯

அதுக்காக இப்படி பண்ணக்கூடாது 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.