Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

800x-1-720x450.jpg

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

‘வியாத்மக’ என்ற சிங்களப் பெயரிலான அமைப்பின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த போதும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அது கைவிடப்பட்டதாக அந்தப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வியாத்மக’ என்பதை ஆங்கிலத்தில் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு ‘என்று குறிப்பிடுகின்றனர். கோட்டாபய ஏற்கனவே ‘எலிய’ என்ற அமைப்பின் மூலம் கடந்த பலமாதங்களாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமைச்சராவதில்-நான்-விரும/

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கோத்தவின்ர தகுதி அவருக்கே தெரியவில்லை என்பேன் . ?

CbBxMVVUsAAkTAL.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2-BAD7-D2-A-906-B-4248-9747-A162973-A22-

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஜனாதிபதி ஆனால்.. மீண்டும் ஒரு இடியமீன் ஆட்சிக்கு வந்த மாதிரி ஆகிடும். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

இவர் இப்பவே சனாதிபதி ஆகிறதுக்கு ரோட்டுகள் பாலங்கள் போட வெளிக்கிடுறார்.?

  • கருத்துக்கள உறவுகள்

அத்தத்தின் மிடுக்கில, கறுவலிற்ற, வெள்ளை பெண் கேட்ட மாதிரி இருக்கு இவர் கதை.

வெள்ளை வான் விசாரணை தொடங்கி சகல மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கும் நாயகன் இவர் தான்.

ஆடான ஆடெல்லாம், குலைக்கழ, சொத்தி ஆடு, கிடாயாட்டை தேடி அழுத கதையா எல்லா கிடக்குது.

நிணைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம். தமையனே எம்பிமாரை விலை பேசுறார்.

இவரோ, மூன்றில் இரண்டு பெருமான்மையுடன், இரட்டைக்குடியுரிமைகாரர் போட்டியிடலாம் எண்டு சட்டத்தை மாத்தி, அமெரிக்காவுக்கு கடுக்காய் கொடுப்பாராம்.

11 hours ago, தமிழ் சிறி said:

நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் கோட்டா

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் விருப்புக்குரிய தலைவர் யார்?

அனுர குமார - 65.32%
ரணில் - 49.32%
சஜித் - 30.13%
மைத்திரி - 12.56%
கோட்டபாய - 5.38%

இன்றைய மவ்பிம (தாய்நாடு) சிங்களப் பத்திரிகையில்

image.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

ஏன் கடந்த தேர்தலில் துவக்கு இருந்ததா????

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்கள் வாயால் தான் பிரச்சனை தேடுவார்கள்.

மகிந்த, தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக நினைப்பதால், குழப்பி அடித்து தேர்தல் நடாத்தும் நிலையை வரவைக்கவே இப்போதைய அரசியல் செய்கிறார்.

இதுவே அவருக்கு ஆள் பிடிப்பதில் சிக்கல். ஏனெனில் கட்சி பாய்ந்து விட்டு, தேர்தல் வந்தால், அங்கும் இல்லை, இங்கும்  இல்லை நிலை.

இருபது கோடி, முப்பது கோடி பேசினாலும், முன்பணம் ஜந்து இலட்சம் மட்டும் தான்.

வியாளேந்திரன் சுயாதீனமாக வெல்லக்கூடிய அளவு தொகுதியில் வேலை செய்திருக்கிறார். கிழக்கு நிலைமையால், இனி எந்த அரசு அமைந்தாலும் இணைந்து வேலை செய்ய நிணைக்கிறார். ஆகவே போனார்.

எதுவாயினும் அடுத்த ஜனாதிபதி ரணில்.

அனுரவுக்கும், ரணிலுக்கும்  உள்ள வித்தியாசம் தமிழ் பேசும் மக்களால் நிரப்பப்படும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி உங்கள் குடும்ப சண்டையை முடித்துக்கொண்டு தேர்தலில் குதியுங்கோ. இந்தமுறை துவக்கில்லை ஆகவே தமிழர் வாக்களிப்பார்கள் 

யார் ஜனாதிபதி என்று மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

இராணுவத்திடம் துவக்கிலாமல்  வேறென்ன இருக்கிறது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.