Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

625.500.560.350.160.300.053.800.900.160.90-1-720x450.jpg

யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பணம் பெற்றுள்ளார்.

குறித்த நபரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் நோயாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும் சிலர் தமது பொருளாதார நிலைகளைக் கூறி ஒரு இலட்சத்துக்கு அண்மித்த தொகையை வழங்கியுள்ளனர்.

நோயாளர்கள் சார்பில் அவர்களது உறவினர்களை யாழ்-திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து இந்தப் பணம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவரால் நிர்ணயிக்கப்பட்ட பணம் அவரது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்ட பின்னரே சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டோரில் பெண் நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார் எனஅறியமுடிகிறது.

வைத்தியரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிந்த ஏனைய வைத்தியர்கள் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் பணிப்பாளரிடம் கோரினர்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக அண்மைக்காலங்களில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளர்களின் விபரங்களைச் சேகரித்து அவர்களுடன் தொடர்பை வைத்தியசாலை தரப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மருத்துவருக்கு வழங்கப்பட்ட பணத்தை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீளப் பெற்றுத் தருவதாகவும் பாதிக்கப்பட்டோரிடம் வைத்திய சாலை தரப்பு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/யாழில்-நோயாளர்களிடம்-பணம/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் நோயாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

.............

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் பணிப்பாளரிடம் கோரினர்.

பாதிக்கப் பட்டவர்கள் இந்த மருத்துவரிடம் போகாத காரணத்தால் மருந்து கிடைக்காதவர்களா அல்லது மருந்து கிடைத்து குணம் பெற்றவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பாதிக்கப் பட்டவர்கள் இந்த மருத்துவரிடம் போகாத காரணத்தால் மருந்து கிடைக்காதவர்களா அல்லது மருந்து கிடைத்து குணம் பெற்றவர்களா?

அதென்ன வைத்தியசாலையில் கிடைக்காத மருந்து ஆனால் சத்திர சிகிச்சை மட்டும் வைத்திய சாலையில்? வைத்தியசாலையில் கிடைக்காதவற்றை நோயாளர்களையே நேரடியாக வாங்கி வர சொல்வார்கள்.

அந்த வைத்தியர் மருந்தை சாட்டி காசு வாங்கி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பொது மருத்துவமனை இப்படிக்கேவலமாக வைத்திருக்கவேண்டும் என அங்குள்ள வைத்தியர்கள்தான் திட்டமிட்டு இந்தவேலைகளைச் செய்கிறார்கள் காரணம் இப்படியான மோசமான செயல்பாடுகளுடஙூடிய மருத்துவமனையாக இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனையிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் நடாத்தும் டிஸ்பென்சரிகளிலும் காசுபாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் மயம் ..

 

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவர் கொழும்பில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறவேண்டி இருந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபா செலவாகியது. இதுவே யாழ்ப்பாணமாக இருந்திருந்தால் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறினார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிசெய்யும் பெரும்பாலான வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்கு, பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெரிந்தது. அங்கு நடக்கும் திருவிளையாடல்களுக்கு யார் பொறுப்பு.?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திருவிளையாடல்கள் நடப்பது நிர்வாகத்தினருக்கு தெரியாதா என்ன?:35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான மருந்து ஒன்று வாங்குவதாக கூறி நோயளர்களின் குடும்பத்தினரை நம்பவைத்து இல்லாத ஒரு மருந்தை சாட்டாக வைத்து பணம் பெறப்பட்டதன் மூலம் இலஞ்சம் வாங்கப்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியமென்பது இன்று ஒரு வியாபாரமாகிவிட்டது.

இன்றைய வைத்தியர்கள் பெரும்பாலானவர்கள் பணம் பறிக்கும் ரவுடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும் உள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.