Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

by in செய்திகள்

DIG-Premadasa-Udugampola-300x200.jpg

வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார்.

உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது.

இதன்போது, ஈவிரக்கமற்ற சித்திரவதைகளையும், மோசமான மனித உரிமை மீறல்களையும் புரிந்ததாக உடுகம்பொல மீதும் சிறிலங்கா காவல்துறை மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், இவருக்கு எதிராக எந்த நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

40 ஆண்டுகாலம் சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய இவர், தனது 83 ஆவது வயதில் நேற்று மரணமானார்.

 

http://www.puthinappalakai.net/2019/01/02/news/35711

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழர்களை ஒன்றும் செய்யமாட்டார் என்று 
அப்ப அப்ப ஆட்கள் உறுதிமொழி தந்தாலும் 

89-90 களில் கொழும்புக்கு போனால் 
இவரின் பெயர் ஞாபகத்தில் வரும்போதெல்லாம் 
ஒரு மாதிரி அடி  வயிறு கூசும்.

இவர் செய்த கொலைகளும் சித்திரவைகளும் அப்படியானவை. 
ஒரு மிருகம்! 

சிலகாலம் இலங்கையை விட்டு தப்பிச்சென்று அயலகத்தில் குப்பை கொட்டியவர்!

  • கருத்துக்கள உறவுகள்

TIME Magazine: The man with an open license to kill in Sri Lanka

இவருக்கு லைசென்ஸ் கொடுத்த பிரேமதாச கடைசியில், வெடியினால் மாண்டார்.

659-premadasa-udugampola-deputy-inspector-general-of-kandy-sri-lanka---image-F252_SN10_DVD0090.jpg

Premadasa Udugampola Deputy Inspector General of Kandy Sri Lanka.

கையில் கைத்துப்பாக்கி, பக்கத்தில் இயந்திர துப்பாக்கி.

வடக்கில் தமிழர்கள் அனுபவித்ததைக் காட்டிலும், மிக மோசமான அனுபவத்தினை சிங்களவர்களுக்கு கொடுத்த நபர்.

தமிழர்களுக்கு, கடைசி வரை புலிகள் பாதுகாப்பு இருந்தது. அவர்களுக்கோ, சாக்குமூட்டையில் உயிருடன் கட்டி, எரியும் டயரினுள்ளும், அல்லது ஓடும் ஆறினுள்ளும் தள்ளி விடப்பட்டனர்.

https://www.csmonitor.com/1989/0811/o1lanka.html

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்த ஜேவிபி கிளர்ச்சி ஏற்பட்டது? அதன் மூலகாரணம் என்ன என்பது பற்றி விளக்கமான நூல்கள் உள்ளனவா  ?

Edited by பெருமாள்

இவரது இரண்டு சித்திரவதைகள் பிரசித்தமானவை. ஒன்று ஒரு காதுக்குள் பென்சிலை அல்லது பேனாவை செலுத்தி அறைவது. அடுத்தது லாச்சிக்குள் ஆண் குறியை வைத்து சாத்துவது.

மோசமனான படுகொலையாளர் கூட 83 வயது வரைக்கும் உயிர் வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

அறம் பலவீனமானவர்களுக்கு மட்டும் தான் கூற்றாகும்

 

49 minutes ago, பெருமாள் said:

ஏன் அந்த ஜேவிபி கிளர்ச்சி ஏற்பட்டது? அதன் மூலகாரணம் என்ன என்பது பற்றி விளக்கமான நூல்கள் உள்ளனவா  ?

தமிழில் விளக்கமான புத்தகம் வந்ததா என தெரியாது. சிங்களத்தில் பல நூல்கள் உள்ளன.

என் நினைவில் இருந்து ....:

முதலாவது கிளர்ச்சி: 1971 இல் ஜேவிபி ஆயுத கிளர்ச்சிக்கு தயாராகுது என்று கேள்விப்பட்டு சிறிமா அதன் தலைவரான ரோகண விஜேவீரவை கைது  செய் து யாழ்ப்பாண சிறையில் போட்டார்.  அதற்கு எதிராக ஜேவிபியினால் பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட சிறிமா இறுதியில் இந்தியாவின் உதவியையும் நாடி முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின் 1987 இல் இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜே.ஆர்.  இன் முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும் இரண்டாவது கிளர்ச்சி ஜேவிபியால் நிகழ்த்தப்பட்டது. முதல் மாதிரி இல்லாமல் இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர்ந்தது. பிரேமதாசாவின் கொடூரமான அடக்கு முறைகளுக்கு சளைக்காமல் ஜேவிபியும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். கடைசியில் பிரேமதாசா புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதே காலப்பகுதியில்  இலங்கை படைகளை தெற்கில் குவித்து மோசமான முறையில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

1988 இல் ஜேவிபியால் விஜய குமாரணதுங்க படுகொலை செயப்பட்டார். பின் அவரது துணைவியார்  1995 இன்  பின் ஜேவிபியின் துணியுடன் ஆட்சி செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

இவரது இரண்டு சித்திரவதைகள் பிரசித்தமானவை. ஒன்று ஒரு காதுக்குள் பென்சிலை அல்லது பேனாவை செலுத்தி அறைவது. அடுத்தது லாச்சிக்குள் ஆண் குறியை வைத்து சாத்துவது.

மோசமனான படுகொலையாளர் கூட 83 வயது வரைக்கும் உயிர் வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

அறம் பலவீனமானவர்களுக்கு மட்டும் தான் கூற்றாகும்

 

தமிழில் விளக்கமான புத்தகம் வந்ததா என தெரியாது. சிங்களத்தில் பல நூல்கள் உள்ளன.

என் நினைவில் இருந்து ....:

முதலாவது கிளர்ச்சி: 1971 இல் ஜேவிபி ஆயுத கிளர்ச்சிக்கு தயாராகுது என்று கேள்விப்பட்டு சிறிமா அதன் தலைவரான ரோகண விஜேவீரவை கைது  செய் து யாழ்ப்பாண சிறையில் போட்டார்.  அதற்கு எதிராக ஜேவிபியினால் பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட சிறிமா இறுதியில் இந்தியாவின் உதவியையும் நாடி முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின் 1987 இல் இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜே.ஆர்.  இன் முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும் இரண்டாவது கிளர்ச்சி ஜேவிபியால் நிகழ்த்தப்பட்டது. முதல் மாதிரி இல்லாமல் இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர்ந்தது. பிரேமதாசாவின் கொடூரமான அடக்கு முறைகளுக்கு சளைக்காமல் ஜேவிபியும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். கடைசியில் பிரேமதாசா புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதே காலப்பகுதியில்  இலங்கை படைகளை தெற்கில் குவித்து மோசமான முறையில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

1988 இல் ஜேவிபியால் விஜய குமாரணதுங்க படுகொலை செயப்பட்டார். பின் அவரது துணைவியார்  1995 இன்  பின் ஜேவிபியின் துணியுடன் ஆட்சி செய்தார்.

1971 ல் அனுராதபுரம் காட்டுப்பகுதியில் ஜேவிபி போராளிகள் மறைந்து இருப்பதாக தகவல் வர, ஒரு காமண்டரின் கீழ் பெரிய இராணுவ படையணி சுத்தி வளைக்கின்றது.

ஆயிரத்துக்கு கிட்டிய அளவில் போராளிகள் சரணடைகின்றனர்.

கொழும்புவுக்கு தகவல் போகின்றது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இருந்து அவரது செயலாளர் மூலமாக தகவல் வருகிறது.

YOU ARE ASKED TO TAKE NOTE THAT NO PRISINERS SHOULD BE TAKEN.

அவ்வளவு பேரும் கொன்று எரிக்கப்பட்டனர்.

ஸ்ரீமாவின் மகன் அரசியலில் இருந்தும் வீணாய் போய், இறந்தார்.

அதே போல, பிரேமதாச காலத்தில், ஒரு படையணி, மத்திய மலைப்பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் விஜயவீராவை தேடி செல்கிறது. போகும் வழியில் வழியினை தவற விட, கொமாண்டர் அருகில் உள்ள வீட்டில் வழி கேட்க செல்கிறார்.

அங்கே  கண்டுபிடிக்க முடியாத மாறுவேடத்தில் இருந்தவர் தான் விஜயவீர. 

ஆமி வருவதைக்  கண்டு, தன்னை கண்டுபிடித்து விட்டார்கள் என்ற பதட்டத்தில் .... என்னை சுட்டு விடாதீர்கள், சரண்டர் என்று கையை தூக்க, அட நீங்கள் தான் விஜயவீரவா என்று ஆச்சரியத்துடன் அவரை அழைத்து சென்று உடுகம்பொலவிடம் கையளிக்கிறார் அவர்.

போலீசாரின் துப்பாக்கியினை பறித்து தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என கொழும்பு உத்தரவில் செயல்பட்ட கொலையாளிகள் பின்னர் சொன்னார்கள்.   

தனக்கு போட்டியாக  வளர்ந்து வந்த விஜய குமாரணதுங்க பிரேமதாசாவினால் தான் கொல்லப்பட்டார். ஜேவிபி கணக்கில் போடப்பட்டது. அதுபோல காமினி, லலித் அவரால் கொல்லப்பட்டனர். புலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டனர்.

பிரேமதாச பின்னர் கொல்லப் பட்டார். இந்த 83 வயது நபர் தனது அடுத்த பிறவியில் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கக் கூடும். 

உண்மையில் நினைத்துப் பார்க்கையில், இலங்கை ஒரு பாவ பூமி தான். சோழ படை எடுப்புகள், ஐரோப்பியர் படை எடுப்புகள், சிங்கள, தமிழ் அரசர்கள் படை ஒருவர், அடுத்தவர் மீதான படை எடுப்புகள், அண்மைய, ஜேவிபி - அரச, புலிகள் -வேறு இயக்க, புலிகள் - அரச என, இந்த தீவில் கொலைகளுக்கு குறைவில்லை.

Edited by Nathamuni

11 minutes ago, Nathamuni said:

 

தனக்கு போட்டியாக  வளர்ந்து வந்த விஜய குமாரணதுங்க பிரேமதாசாவினால் தான் கொல்லப்பட்டார். ஜேவிபி கணக்கில் போடப்பட்டது. அதுபோல காமினி, லலித் அவரால் கொல்லப்பட்டனர். புலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டனர்.

 

விஜய குமாரணத்துங்க வை படுகொலை செய்தது ஜேவிபி என சந்திரிகாவும் பல தடவை கூறியிருக்கின்றார். ஆனால் பிரேமதாசா தான் செய்தது என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் காமினி திசனாயக்க பிரேமதாசாவினால் கொல்லப்படவில்லை. காமினி இறந்தது 1994 இல். பிரேமதாசா இறந்தது 1993 மே முதலாம் திகதி. இருவரும் தற்கொலைப் படைத் தாக்குதலில் தான் கொல்லப்பட்டனர். காமினி கொல்லப்படும் போது அவருடன் மேடையில் இருந்த ஒசி அபேசேகர உட்பட பல ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
94 ஆம் ஆண்டு ஐ.தே.க வின் சனாதிபதி வேட்பாளராக காமினி தெரிந்தெடுக்கப்பட்ட பின் தான் பெண் தற்கொலை படையாளி மூலம் கொல்லபட்டார். (அதன் பின் அவர் மனைவி ஐ.தே.க வேட்பாளராக நியமிக்கப்பட்டு சந்திரிகா மூலம் தோற்கடிக்கப்பட்டார்).

லலித்தை கொன்றது பிரேமதாசா தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அவரை கொன்றவர் என்று கொழும்பு மகலன் வீதியில் ஒர் அப்பாவி தமிழ் இளைஞரை சுட்டு போட்டு விட்டு பிடிக்க போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என கதை விட்டு இருந்தனர்.

 

39 minutes ago, Nathamuni said:

 

பிரேமதாச பின்னர் கொல்லப் பட்டார். இந்த 83 வயது நபர் தனது அடுத்த பிறவியில் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கக் கூடும். 

 

பாவம், மறுபிறப்பு,தண்டனை....  ஹிஹிஹிஹி...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

விஜய குமாரணத்துங்க வை படுகொலை செய்தது ஜேவிபி என சந்திரிகாவும் பல தடவை கூறியிருக்கின்றார். ஆனால் பிரேமதாசா தான் செய்தது என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் காமினி திசனாயக்க பிரேமதாசாவினால் கொல்லப்படவில்லை. காமினி இறந்தது 1994 இல். பிரேமதாசா இறந்தது 1993 மே முதலாம் திகதி. இருவரும் தற்கொலைப் படைத் தாக்குதலில் தான் கொல்லப்பட்டனர். காமினி கொல்லப்படும் போது அவருடன் மேடையில் இருந்த ஒசி அபேசேகர உட்பட பல ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
94 ஆம் ஆண்டு ஐ.தே.க வின் சனாதிபதி வேட்பாளராக காமினி தெரிந்தெடுக்கப்பட்ட பின் தான் பெண் தற்கொலை படையாளி மூலம் கொல்லபட்டார். (அதன் பின் அவர் மனைவி ஐ.தே.க வேட்பாளராக நியமிக்கப்பட்டு சந்திரிகா மூலம் தோற்கடிக்கப்பட்டார்).

லலித்தை கொன்றது பிரேமதாசா தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அவரை கொன்றவர் என்று கொழும்பு மகலன் வீதியில் ஒர் அப்பாவி தமிழ் இளைஞரை சுட்டு போட்டு விட்டு பிடிக்க போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என கதை விட்டு இருந்தனர்.

சரிதான்.... காமினியை அல்ல..

நான் சொல்ல வந்தது. ரஞ்சன் விஜேரத்ன.

இவர்தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக முழு ஜேவிபி கொலைகளின் சூத்திரதாரி.

தன்னை பிறகு பிளாக்மெயில் செய்யலாம் என அவர் கதையினை புலிகள் ஸ்டைலில் முடித்தவர் பிரேமர். 

11 hours ago, நிழலி said:

பாவம், மறுபிறப்பு,தண்டனை....  ஹிஹிஹிஹி...

Kennedy, Neru, SWRD Banda  குடும்பங்களில் அவலங்களின் காரணம் பாவம் என்பேன்.... நீங்கள் இல்லை..... வேறு காரணம் என்று சொல்லக் கூடும்.

பிரேமதாச இறந்ததும் பதவிக்கு வந்தவர் விஜயதுங்க. அவரிடம் யாழ்ப்பாண ஆமி கொமாண்டர் வந்தார். ஐயா,  புலிகள் மறைந்து இருக்கும் பிரதேசம் எமக்கு தெரியும். முழுவதுமாக அழித்து துடைத்து எறிய  முடியும். ஆனாலும் 15,000 அப்பாவி மக்கள் மரணிக்கலாம். அதற்கு அனுமதிப்பீர்களா என்றார்.

நான் உண்மையான பௌத்தன். எனது உத்தரவில், ஒரு அப்பாவி கூட இறக்க அனுமதிக்க மாட்டேன், மீண்டும் இவ்வாறு கேட்டுக் கொண்டு வராதே என்றார்.

அவர் தனது கடைசி காலத்தினை அமைதியாக வாழ்ந்து மறைந்தார்.

அவர் நிராகரித்த செயலைத்தான், மகிந்த செய்து முடித்தார் என்பது வேறு கதை. 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் காதினுல் பென்சில் வைத்து அடிப்பதை பற்றி சிங்கள நண்பர்கள் கூறியுள்ளார்கள். இவரது முழு குடும்ப‌மும் JVP யினால் கொல்லப்பட்டார்கள் என சொல்லப்படுகின்றது, இதனாலெயே இவர் இவ்வ்வாறு மாறினார். 

இந்திய அமைதிக்காகும்படை(?) வெளியேறி சென்றதற்கு இவர்களிம் ஒர் காரணமா என தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நான் சொல்ல வந்தது. ரஞ்சன் விஜேரத்ன.

இவர்தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக முழு ஜேவிபி கொலைகளின் சூத்திரதாரி.

தன்னை பிறகு பிளாக்மெயில் செய்யலாம் என அவர் கதையினை புலிகள் ஸ்டைலில் முடித்தவர் பிரேமர்

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

இது கரும்புலி தாக்குதல் இல்லையே. ரிமோட் கொன்றோல் மூலம் நடந்ததே.

 

The Havelock Road Bombing was the detonation of a remote controlled car bomb on March 2, 1991, during rush hour in Thimbirigasyaya (also known as Havelocktown) a suburb of Colombo, Sri Lanka. According to Jane's Information Group it was carried out to assassinate Ranjan Wijeratne, the Sri Lankan Foreign Minister and Minister of State for Defense (deputy defense minister). The bomb was detonated as the Minister's armored car passed it, killing 19 people including the minister, five security personal and 13 civilian by standers. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இது கரும்புலி தாக்குதல் இல்லையே. ரிமோட் கொன்றோல் மூலம் நடந்ததே.

 

The Havelock Road Bombing was the detonation of a remote controlled car bomb on March 2, 1991, during rush hour in Thimbirigasyaya (also known as Havelocktown) a suburb of Colombo, Sri Lanka. According to Jane's Information Group it was carried out to assassinate Ranjan Wijeratne, the Sri Lankan Foreign Minister and Minister of State for Defense (deputy defense minister). The bomb was detonated as the Minister's armored car passed it, killing 19 people including the minister, five security personal and 13 civilian by standers. 

 

ஒரு காலத்தில் கூகிளும், வி்க்கிபீடியாவுமே எங்கள் வரலாறை எழுதி முடிக்கும். மறைமுக கரும்புலிகளின் தியாகங்கள் இப்படியே மறக்கடிக்கப்படும்.

4 hours ago, நந்தன் said:

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

நந்தன், தகவலுக்கு நன்றி

ரஞ்சன் கொல்லப்பட்டது ஹவ்லொக் வீதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில். இவருடன் 6 அல்லது 7 விசேட அதிரடிப்படையினரும், 25 மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டு இருந்தனர். காரில் இருந்த குண்டை ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்க வைத்தமைக்கான சான்றுகளை அன்று காட்டியிருந்தனர். தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது கிடைக்கும் தற்கொலையாளியின் உடலோ உடல் பகுதிகளோ கிடைக்கவில்லை அன்று.


குண்டு வெடிக்க முன் அப் பிரதேசங்களில் இருந்த சில முக்கியஸ்தர்களுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அவ்விடதுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அப்ப செய்திகள் வந்து இருந்தன.


இவற்றுக்கு அப்பால் கொழும்பின் கசினோ விளையாட்டு மீதான தடைக்கு இவரும் காரணம் என்று ஒரு சீன கசினோ புள்ளிதான் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டியும் இருந்தனர். அந்த சீன பிரஜை ரஞ்சன் கொல்லப்பட்டு 10 நாட்களின் பின் நாடு கடத்தப்பட்டு இருந்தார். ரஞ்சனின் கொலைக்கு பின் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டு இருந்தாலும் எவரும் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை. அனைவரும் விடுதகை செய்யப்பட்டனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு... மறதி அதிகம் என்பதை, இந்தத்  தலைப்பில் இருந்து மீண்டும் அறிந்து கொண்டேன்.
நாம் வாழ்ந்த நாட்களில் நடந்த, மிக முக்கியமான பிரதான  தலைப்பு செய்திகளை  கூட...  மறந்து விட்டோம்.
இப்போ... தலைப்பில் கருத்து எழுதியவர்களின் மூலமாக, மீண்டும் மனம் அந்தக் காலப் பகுதிக்கே சென்றது உண்மை.
இவை... எல்லாம், புத்தக வடிவில் வராவிட்டால்...  வருங்கால சந்ததிக்கு தெரியாமல் போகும் என்ற அச்சம்  உள்ளது.
இதற்காகத் தன்னும்,  இப்படியான உண்மைகளை.. தமிழ் / ஆங்கில  புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்.

1 hour ago, தமிழ் சிறி said:

மனிதனுக்கு... மறதி அதிகம் என்பதை, இந்தத்  தலைப்பில் இருந்து மீண்டும் அறிந்து கொண்டேன்.
நாம் வாழ்ந்த நாட்களில் நடந்த, மிக முக்கியமான பிரதான  தலைப்பு செய்திகளை  கூட...  மறந்து விட்டோம்.
இப்போ... தலைப்பில் கருத்து எழுதியவர்களின் மூலமாக, மீண்டும் மனம் அந்தக் காலப் பகுதிக்கே சென்றது உண்மை.
இவை... எல்லாம், புத்தக வடிவில் வராவிட்டால்...  வருங்கால சந்ததிக்கு தெரியாமல் போகும் என்ற அச்சம்  உள்ளது.
இதற்காகத் தன்னும்,  இப்படியான உண்மைகளை.. தமிழ் / ஆங்கில  புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்.

தமிழில் நீங்கள் சில வரலாற்றுப் புத்தகங்களை எழுதலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

தமிழில் நீங்கள் சில வரலாற்றுப் புத்தகங்களை எழுதலாமே!

பகிடி... விடாதீர்கள், போல்.
புத்தகம் எழுதுவது என்பது, இலேசாசன விடயம் அல்ல.
எங்களுக்கு..  அரசியலைப் பற்றி,   இரண்டு வரி.... எழுதினாலே, மூச்சு வாங்குது.
அவ்வளவிற்கு...  தற்போதையை அரசியலை, சம்பந்தன், சுமந்திரன் கும்பல் கெடுத்து  வைத்திருக்கிறார்கள்.
யாழ்.களத்தில்  உள்ள யாராவது  இந்த முயற்சியை... முன் எடுத்தால், எனது  பங்களிப்பும்... இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நந்தன் said:

ஒரு காலத்தில் கூகிளும், வி்க்கிபீடியாவுமே எங்கள் வரலாறை எழுதி முடிக்கும். மறைமுக கரும்புலிகளின் தியாகங்கள் இப்படியே மறக்கடிக்கப்படும்.

உண்மைதான்.   நானும் விக்கிபிடியா,கூகிள் தரும் தகவல்களை பல வருடங்களாக  பார்ப்பதுமில்லை.நம்புவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், நிழலி எந்த கோயிலில் போய் சத்தியம் செய்தால் நம்புவீங்க,( எனக்கும் கடவுளுக்கும் ஆகாது அது வேற விசயம்.) மறைமுக கரும்புலிகளின் நிலை  அரசியல், இராணுவ அரைவேக்காட்டு கட்டுரை எழுததாளர்களையே கூகிளும் விக்கிபீடியாவும் நம்பும் நிலையிலயே இருக்கின்றது. பிறேம் குடும்பத்தை எனக்கு 90களில் இருந்தே தெரியும். முடிந்தால் கேணல் சாள்ஸ் பற்றி பொட்டம்மான் எழுதிய வரலாற்றை படியுங்கள் தெளிவு கிடைக்கும்.அத்துடன் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் அம்மான் எழுதிய குருதிச்சுவடுகளில் ஒரு மெல்லிய அம்மா வந்து போவார். அவர் பிறேமின் அம்மாவே

10 hours ago, நிழலி said:

நந்தன், தகவலுக்கு நன்றி

ரஞ்சன் கொல்லப்பட்டது ஹவ்லொக் வீதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில். இவருடன் 6 அல்லது 7 விசேட அதிரடிப்படையினரும், 25 மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டு இருந்தனர். காரில் இருந்த குண்டை ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்க வைத்தமைக்கான சான்றுகளை அன்று காட்டியிருந்தனர். தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது கிடைக்கும் தற்கொலையாளியின் உடலோ உடல் பகுதிகளோ கிடைக்கவில்லை அன்று.


குண்டு வெடிக்க முன் அப் பிரதேசங்களில் இருந்த சில முக்கியஸ்தர்களுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அவ்விடதுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அப்ப செய்திகள் வந்து இருந்தன.


இவற்றுக்கு அப்பால் கொழும்பின் கசினோ விளையாட்டு மீதான தடைக்கு இவரும் காரணம் என்று ஒரு சீன கசினோ புள்ளிதான் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டியும் இருந்தனர். அந்த சீன பிரஜை ரஞ்சன் கொல்லப்பட்டு 10 நாட்களின் பின் நாடு கடத்தப்பட்டு இருந்தார். ரஞ்சனின் கொலைக்கு பின் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டு இருந்தாலும் எவரும் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை. அனைவரும் விடுதகை செய்யப்பட்டனர்.

 

கொழும்பில் நடந்த முதல் கரும்புலி தாக்குதல் எப்படி ஒப்புகெகொள்வார்கள். ஊடகவியலில் அனுபவம் உள்ள உங்களிடமே தெரிவை விட்டுவிடுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.